Monday 24 August 2015

சேலம்: கழகக் கூட்டு மூட்டும் ஜனநாயகத் தீ, பரவட்டும்!

சேலம் அரங்கக் கூட்டக் காட்சிகள்! 
கழகக் கூட்டு மூட்டும் ஜனநாயகத் தீ, பரவட்டும்!

நிலப்பறிப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் , சாதி தீண்டாமை கொடுமைகளை எதிர்த்தும், சாதிவெறியன் ராமதாஸ் மற்றும் யுவராஜ் கும்பலை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் ,மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தலைமையில் , 

சாதி ஒழிப்பு முன்னணி,மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,சமாஜ்கட்சி,மக்கள் விடுதலை முன்னணி,சமூக அறிவியல் கல்வி இயக்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மனித நேய மக்கள் கட்சி,ஆதித் தமிழர் கட்சி,தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ் நாடு மக்கள் உரிமை இயக்கம், மக்கள் தேசம் கட்சி,ஆதித் தமிழர் பேரவை ஆகிய
13 அமைப்புகள் இணைந்து 
22.8.15 அன்று 
சேலம் மரவனேரியில் காலை அரங்ககூட்டமும், மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் 
மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. 

நூற்றுக் கணக்கான மக்கள், கூட்டு ஜனநாயக அமைப்புகள் சார்ந்த தோழர்கள், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு 
 கூடி முழங்கினர்....!


சேலம் அரங்கக் கூட்டக் காட்சிகள்








கழகக் கூட்டின் கண்டன ஆர்ப்பாட்டக் காட்சிகள்!




சா"தீ"க்கு எதிரான இந்த புரட்சிகர தீ நாடு முழுதும் பரவட்டும் !!

No comments:

Post a Comment