Friday 23 December 2011

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!


TEXT
முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!


தமிழக கேரள அரசுகளே!

* இருமாநிலங்களின் நீர்ப்பாசன, நீர் மின் திட்டங்கள் உருவாக்குவதற்கான புதிய ஒப்பந்தம் காண பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்!

* தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை தமிழகத்தோடும், மலையாளிகள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை கேரளத்தோடும் இணைக்கப் போராடுவோம்!

* இரு தேச மக்களின் ஒற்றுமைக்காகவும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு
டிசெம்பர் 2011

Tuesday 11 October 2011

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!


உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!


உலகமயக் கொள்கைகளால் வரும் தீமைகளைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!


அன்பார்ந்த விவசாயிகளே, தொழிலாளர்களே, ஜனநாயகவாதிகளே!


மத்திய, மாநில அரசுகள் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திவரும் இன்றைய சூழலில்; நிலம், நீர், கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், டாட்டா, பிர்லா, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளிடமும் தாரைவார்க்கும் சூழலில்; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகளை கைவிட்டு இவற்றை தனியார்மயம், வணிகமயமாக்கிவரும் சூழலில் மாநகராட்சியிலிருந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முடியுமா?


நிலம், நீர், கனிம வளங்களை சமூக உடைமையாக்கப்படும் போது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகப் பூர்வமாக – மக்களுக்காக செயல்படமுடியும். கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம், வணிகமயம் ஒழிக்கப்படும்போது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்காக செயல்படும் அமைப்புகளாகத் திகழும்.

உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு மூலம் பொறுப்புக்கு வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களை உயர்சாதி ஆதிக்க சக்திகள் சுயேச்சையாக செயல்பட அனுமதிப்பது இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு எனும் பேரில் பொறுப்புக்கு வரும் பெண்களின் கணவன்மார்களே நடைமுறையில் செயல்படுகின்றனர். எனவே நிலப்பிரபுத்துவ சாதிமுறைகள் மற்றும் ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் கிடைக்கும். இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.


தேர்ந்தெடுக்கப்படாத அரசு அதிகார அமைப்புகளான காவல்துறை, நீதிதுறை மற்றும் பிற அதிகாரவர்க்க அமைப்புகளை ஒழித்துக்கட்டி; திட்டங்களைத் தீட்டவும் செயல்படுத்தவும், தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவலான மக்கள் கமிட்டிகளே உண்மையில் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும்.


எனவே பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு உழைக்கும் மக்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.


• பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!


• மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவிலான மக்களாட்சிக்காகப் போராடுவோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு 

அக்ரோபர் 2011

Sunday 25 September 2011

பரமக்குடியில் 7 பேர் படுகொலை - சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!


ரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது தமிழக அரசு. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒழிந்து கொண்ட இருவர் பாம்புகடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குமுன் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருவோரை அச்சுறுத்தும் விதமாக முதுகுளத்தூர் வட்டார பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரை உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் படுகொலை செய்தனர். மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தமிழகக் காவல்துறையின் அரசுபயங்கரவாதமும், உயர்சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிச நடவடிக்கைகளேயாகும்.

சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படைக்காரணம்:

பரமக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் ஒரு தனித்த போக்கு அல்ல. மாறாக தென் தமிழகத்தின் பலபகுதிகளில் தேவர்சாதி மற்றும் உயர்சாதியினருக்கும், தேவேந்திரகுல வேளாளர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான பூசல்கள் நீறுபூத்த நெருப்பாக எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலவரம் வெடிக்கும் என்ற நிலைமை கடந்த பலமாதங்களாக தொடர்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், அதிகாரவர்க்க அரசு இயந்திரமே சாதிவெறியோடு செயல்படுவது போன்ற காரணங்களே சாதிக் கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ளன. உள்ளாட்சியிலும் கூட பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள உயர்சாதியைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு, தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தல் போன்ற காரணங்களே சாதியப் பூசல்களுக்கும் மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.

பார்ப்பனிய வெறிகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணம், பள்ளப்பச்சேரியைச் சார்ந்த பழனிகுமார் என்ற மாணவன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவாக சுவற்றில் எழுதியதே  என்று கூறுகிறார். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது மட்டுமல்ல நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே பழிபோடுகிறார். ஆனால் உண்மை வேறாகும்.

பள்ளப்பச்சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் விருதுநகருக்கோ, கமுதிக்கோ செல்ல வேண்டுமானால் மண்டலமாணிக்கம் ஊர் வழியாகத்தான் போகவேண்டும் பள்ளப்பச் சேரியிலிருந்து மண்டலமாணிக்கத்திற்குள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பாதையை அமைக்க  உயர்சாதி ஆதிக்க சக்திகள் கடந்த 30 ஆண்டுகளாக அனுமதி மறுக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளின்  ஆட்சி மாறி மாறி வந்தபோதும் பள்ளப்பச்சேரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோயினர். அதிகார வர்க்கத்திடமும், மாவட்ட ஆட்சியினரிடமும் மனுக்கொடுத்தும் அம்மக்களின் துயரம் நீக்கப்படவில்லை. அன்றாடம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உயர்சாதி ஆதிக்கத்தின் இழிவுக்குள்ளாக்கப்படாத நாட்களே இல்லை.

இத்தகைய நிலைமைகளில்தான் பழனிகுமார் தேவரைப் பற்றி தவறாக எழுதினான் என்று கொல்லப்படுகிறான். அவன் எழுதினானா என்பது நிரூபிக்கப்படவில்லை. அப்படியே அவன் எழுதியிருந்தாலும் அதற்காக கொலை செய்வது நியாயமானதுதானா? அதைத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நியாயப்படுத்தலாமா? இது உயர்சாதி ஆதிக்க சக்திகளின் சாதிவெறிக்கு துணைபோவது அல்லாமல் வேறு என்ன? தங்கநாற்கர சாலை அமைத்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்காதது ஒரு மாபெரும் குற்றமே. குற்றவாளிகளாக ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளி என்பது ஒரு வன்கொடுமையேயாகும்.

தமிழக காவல்துறையின் சாதிவெறி

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைக்கு தமிழக காவல்துறை தொடர்ந்து உதவிசெய்தே வந்துள்ளது. தற்போது தமிழக காவல்துறையே சாதிவெறிக்கு உள்ளாகி உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியனை, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதித்தால் அவர் பழனிகுமாருக்கு அஞ்சலி செலுத்த செல்வார். அவ்வாறு சென்றால் அது பெரும் கலவரமாக மாறும். எனவேதான் அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவானது என்று காவல்துறையின் கட்டுக்கதையை ஜெயலலிதா வழிமொழிகிறார்.

அப்படியே வன்முறை ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டுமே ஒழிய பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் தலைவர்களையும் கைது செய்வது எப்படி நியாயமாகும். எனவே வன்முறையைக் காரணம் காட்டி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் கலந்து கொள்வதை தடை செய்வதற்கோ, பழனிகுமாரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதையே தேவர் பூஜையின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனக் காரணம்காட்டி ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு தடைவிதித்து அவர்களை காவல்துறை கைது செய்திருக்குமா.

ஜான்பாண்டியனின் கைதைக் கண்டித்து சுமார் 500 பேர்தான் மறியல் செய்ததாக காவல்துறையே கூறுகிறது. பல்லாயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் வெறும் 500 பேரைக் கலைப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதேன்? துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் இரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்துவது, வானை நோக்கி சுட்டு மக்களை எச்சரிப்பது அதற்கும் கலையவில்லை எனில் முட்டிக்கும் கீழே சுடவேண்டும் என்ற விதிமுறைகளை காவல்துறை கடைபிடிக்காதது ஏன்? எடுத்த உடனேயே தலையைக் குறிவைத்து தாழ்த்தப்பட்ட மக்களை காக்கை குருவிப்போல் சுட்டுத்தள்ளியது காவல்துறையின் உயர்சாதி வெறியைத்தானே நிரூபித்துள்ளது.

மேலும் சென்னை மாநகரத்திலும், தமிழக அரசின் முக்கிய பதவிகளிலும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. பிற உயர்சாதி அதிகாரிகளும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை. அத்துடன் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவீதம் பேர் முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாது. இவ்வாறு தமிழகக் காவல்துறை மெல்ல, மெல்ல உயர்சாதி ஆதிக்க சக்திகளாலேயே தலைமை தாங்கப்பட்டு சாதிவெறிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் பரமக்குடி சம்பவம்.

உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோகும் முதலாளித்துவ அரசியல்கட்சிகள்

உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் துணைபோகின்றன. தமிழகத் தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு முக்குலத்தோர் சாதி வெறிக்கு சேவை செய்கின்றன. ஜெயலலிதா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டையும், உயர்சாதி ஆதிக்க வெறியையும் சட்டசபையில் ஆதரித்துப் பேசுகிறார். கருணாநிதியோ காவல்துறைக்கு `துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்`, என ஆலோசனை வழங்குகிறார். உயர்சாதி ஆதிக்க சக்திகளையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டிக்கவில்லை. கிராமப்புற பெரும்பான்மை மக்களாக உள்ள முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்காக மட்டுமல்ல. அக்கட்சிகளில் உள்ள கிராமப்புற நிலப்பிரபுத்துவ ஆதிக்க வர்க்கங்கள் கட்சி வித்தியாசம் பாராமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கூட்டு சேர்ந்து கொள்ளுகிறது. அண்மையில் குஜராத் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா அதிமுக பிரதி நிதிகளை அனுப்பி வாழ்த்துச் சொல்லுகிறார். கருணாநிதியோ மோடியை ஆதரித்து அறிக்கை விடுகிறார். இவ்வாறு இவ்விருக் கட்சிகளும் இந்து மதவெறி பாசிசத்திற்கும், உயர் சாதி வெறிப் பாசிசத்திற்கும் சேவை செய்யும் பிற்போக்குக் கட்சிகளாக மாறி விட்டதன் விளைவுதான் தென் மாவட்ட சாதிக்கலவரங்கள்.

ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின்போதுதான் கள்ளர், மறவர், தேவர் என்ற சாதிகளை ஒன்றிணைத்து முக்குலத்தோர் எனப்பட்டம் சூட்டப்பட்டது. முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செலவிலேயே சென்னையில் சிலைவைத்தனர். 1991லும், 2001லும் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது தேவர் இன மக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டது. தேவர் சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தில் பெருபங்கு வகித்தனர். மேலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், உயர்சாதி ஆதிக்க வெறியர்களும், அதிகார வர்க்கத்தில் உள்ள முக்குலத்தோரைச் சார்ந்த அதிகாரிகளும் உத்வேகம் அடைகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர். இவ்வாட்சியை தங்களது ஆட்சியாகவே கருதுகின்றனர்.

தன்னை சமூக நீதிக் காவலன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்றும், சமத்துவமே தமது மூச்சு என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சியின்போதுதான் முத்துராமலிங்கத் தேவரின் 100ஆம் ஆண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்பட்டது. 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்போடு அரசு இயந்திரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி படு விமரிசையாக இவ்விழா நடத்தப்பட்டது. தேவர் சாதி ஆதிக்க சக்திகளும், அரசும் கூட்டுசேர்ந்து நடத்தினர். ஜெயலலிதா அதற்கிணையாக மதுரையில் தேவருக்கு 100 அடி உயர சிலை வைக்கவும், ‘இரண்டாம் படைவீடுஎன்ற பேரில் தேவருக்குச் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், தன்பங்கிற்கு காணிக்கை செலுத்தினார்.

அதே நேரத்தில் அன்று பா.ம.கவில் இருந்த ஜான்பாண்டியன் அவர்கள், இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கோரி மறியல் செய்ததற்காக, துப்பாக்கி சூடு நடத்தி 4 தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றது, அன்றைய கருணாநிதி ஆட்சி. அத்துடன் 1999-ல் தாமிரபரணி ஆற்றங்கரையில் 17 தாழ்த்தப்பட்ட மக்களை கருணாநிதி ஆட்சி சுட்டுக் கொன்றதையும் மக்களால் மறக்க முடியாது.

பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவிடக் கூடாது பண்ணையடிமை முறையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் உயர்சாதி ஆதிக்க சக்திகளோடு அதிகார வர்க்கத்தினரும், ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. தேவர் பெயர் சூட்டுவதும், மணிமண்டபம் கட்டுவதும், பொதுப்பெயர் சூட்டி ஒரு குறிப்பிட்ட சாதியை வலிமைப் படுத்துவதில் அதிமுக, திமுகவின் போக்கிற்கு எதிராகவே தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். தங்கள் தலைவன் இம்மானுவேல் சேகரனை கொலை செய்வதற்குக் காரணமான முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக, தங்கள் தலைவனுக்கு சிலை வைக்கவும், விழாக் கொண்டாடவும் தொடங்கினர். கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு விழாக் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நிலைமைகளே காரணமாகும். ஆனால் உயர்ந்தசாதி ஆதிக்க சக்திகளுக்கு இது கோபத்தை உருவாக்குகிறது. இனி தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி விழா எடுப்பதையும், அவர்கள் அமைப்பாக அணிதிரள்வதையும் தடுக்கும் பொருட்டுத்தான் இன்று காவல்துறை ஊர் ஊராக தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களை நரவேட்டையாடுகிறது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை பொய்வழக்கில் கைது செய்துவருகிறது. காவல் படையைக் குவித்து அம்மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் துப்பாக்கிச் சூட்டை பெயரளவில் கண்டிக்கின்றன. உண்மையில் உயர் சாதி ஆதிக்கத்திற்கு துணை போகின்றன. தான் மட்டும்தான் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று கூறிக்கொண்ட விஜயகாந்த் கட்சி  இந்த காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக விசாரணை கமிசனே தேவையில்லை என்று சட்டசபையிலேயே வாதிட்டது. நேற்று பெய்த மழையில் முளைத்து, திடீர் விபத்தால் எதிர்க்கட்சியாகிவிட்ட அந்தக் கட்சிக்கு எத்தனை சாதிவெறி பாருங்கள்?

எனவே, பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும்; தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதோடு காவல்படையினரையும் திரும்பப் பெறக் கோரியும்; காவல்துறையில் மலிந்துவரும் உயர்சாதிவெறியைப் போக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் கோரியும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5லட்சமும். காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சமும் நட்ட ஈடு கோரியும்; கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் கோரியும்; துப்பாக்கிச் சூட்டிற்கும்; தடியடிக்கும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1999, 1995 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும் எனப் போராடுவது உடனடிப்பணியாக அமைந்துள்ளது.
அதேசமயம், சாதிய பூசல்களுக்கும் மோதல்களுக்கும் முடிவுகட்ட நிலப்பிரபுத்துவ பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பொது உரிமை, வழிபாட்டு உரிமை போன்ற சம உரிமைக்காக அனைத்து சாதிகளிலுமுள்ள  உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதற்கு தயாராக வேண்டும். உயர்சாதி ஆதிக்க வெறியர்களையும், உயர் சாதி வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கும், சாதிக்கலவரங்களை முற்றாக ஒழிப்பதற்கும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்.


பழனிக்குமார் படுகொலையும், இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் சாதிவெறிப் பாசிசமே!

* பார்ப்பனிய ஜெயாவே! உயர்சாதி ஆதிக்கவெறிப்பிடித்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்குப் பரிந்துபேசாதே!

* துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்!

* தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பொய்வழக்குகளை திரும்பப்பெறு! தேடுதல்வேட்டையை நிறுத்து! காவல் படையைத் திரும்பப்பெறு!

* தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நிலப்பிரபுத்துவ பொருளாதார ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளுமே சாதிப் பூசல்களுக்கும், மோதல்களுக்கும் காரணம்!

* பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, சமத்துவம் பேசிக்கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!

தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், ஜனநாயக சமூக உரிமைகளுக்காகவும் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளஞர் கழகம் - தமிழ்நாடு                     செப்டெம்பர் 2011


Tuesday 13 September 2011

தியாகிகள் தினப் பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக சிறப்புப் பேச்சாளர் தோழர் மனோகரன் உரை






இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் இதர இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.

தியாகிகள் தினப்பொதுக்கூட்டதில் ம.ஜ.இ.கழக மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் உரை



இப்பதிவில் இணைந்துகொண்டிருக்கும் இதர இணையத்தொடுப்புகள் எம்முடன் சாராதவை.

Sunday 4 September 2011

செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!


செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!  ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

செப்டம்பர் 12 தர்மபுரி நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட நாள். அன்றைய தினத்தை, 1947 போலி சுதந்திரத்தையும், அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி உயிர்த் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாண்டு தியாகிகள் நினைவு நாளில் இராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம் என தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

சோனியா, மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரித்துவிட்டார். பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு என நாளும் குறிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்தது. காஞ்சியில் ’செங்கொடி` என்ற இளம் பெண் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். தமிழகம் கொந்தளித்தது. இவர்களின் தூக்குத்தண்டனைக்குத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று 8 வார காலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்துள்ளது.

ஆனால் சோனியா, மன்மோகன் கும்பலோ பேரறிவாளன் உள்ளிட்ட இம்மூவரின் கருணை மனுக்களை கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது அவசர அவசரமாகவும் சட்ட விரோதமாகவும்

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்தக் கும்பல் துடிப்பது ஏன்?

கருணை மனுவிற்கு இரண்டு ஆண்டிற்குள் குடியரசுத் தலைவர் பதிலளிக்காவிட்டால் மரணத்தண்டனை தானாகவே ஆயுள் தண்டனையாக மாறிவிடும்.

மேலும் ராஜீவ் கொலையில் உள்ள சர்வதேச சதிகளையும், சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் மீதான குற்றச்சாட்டு மர்மங்களையும் தீர்க்காமலே, விசாரணை முடியாமலே சட்ட விரோதமாக இம்மூவரையும் அவசர கதியில் தூக்கிலிடுவதற்கு சோனியா மன்மோகன் கும்பல் கொலைவெறியோடு துடிப்பது ஏன்?

ஈழத்தமிழின அழிப்புப் போரின் தொடர்ச்சியே இம்மூவரின் தூக்கு:

சிங்கள இனவெறிப் பாசிச ராஜபட்சே கும்பல் ஈழத்திற்கு எதிரான நான்காம் கட்டப்போர் எனும் பேரில் ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது. இப்போரில் ஈழத்தழிர்கள் 1 லட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ராஜபட்சே கும்பல் இப்போரை நடத்தியது. ராஜபட்சே கும்பல் இப்போரில் கடும் போர்க் குற்றங்களை புரிந்தது. இந்திய அரசு இப்போரை ராஜபட்சே கும்பலுடன் கூட்டாகவே நடத்தியது.
போருக்குப் பின்பும் இராஜபட்சே கும்பல் ஈழப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகளை மறுத்து இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. எனவே உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் ராஜபட்சே கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்தும், இன அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் போராடினர். ஐ.நா பொதுச் செயலாளர் நிபுணர்குழுவை அமைத்தார். இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மையே என்று இக்குழுவும் கூறியது. சேனல் 4 போர்க்குற்றக் காட்சிகளை ஒளிபரப்பியது. அது உலகத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது. சர்வதேச அரங்குகளில் இராபட்சே கும்பல் மீது கண்டனம் குவிந்தது. தமிழகத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் இராஜபட்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.


இந்திய அரசு இராஜபட்சே கும்பலை சர்வதேச அரங்குகளில் பாதுகாத்துவருகிறது.

தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கை அரசுடன் கூடிக்குலாவுகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகியது. எனவே இத்தகைய சூழலில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும், ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் இம்மூவரின் தூக்குத் தண்டனையை அவசரமாக செயல்படுத்த துடிக்கிறது. இந்தத் தூக்கு ஈழத்தமிழின அழிப்புப்போரின் தொடர்ச்சியேயாகும்.

இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கைக்கு கொடுத்த விலைதான் ராஜீவ் படுகொலை

அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு சேவை செய்வதுடன் இந்தியத் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவும் திகழ்கிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சட்டவிரோதமாக்கியுள்ளது. காஷ்மீர், அசாம், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் மக்களின் தேசிய இனப் போராட்டங்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் இந்திய அரசு, இந்திய ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களிலிருந்து தென் ஆசியாவில் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கிறது. தமது விரிவாதிக்க நலன்களிலிருந்து அண்டை நாடுகளின் மீது தமது மேலாதிக்கத்தைத் திணிக்கிறது. இலங்கையில் நடக்கும் இனப்பூசலை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்விவகாரங்களில் தலையிட்டது. இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து வருகிறது. இந்திராகாந்தியின் காலத்தில் இலங்கை அரசை பணிய வைப்பதற்காக ஈழப்போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது. இலங்கை அரசுடன் மோதவிட்டது. ராஜீவ் காலத்தில் இலங்கை அரசு பணிந்தவுடன் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு ஈழவிடுதலைப் போருக்குத் துரோகம் செய்தது. ஈழப் போராளிகள் அமைப்புகளை பணியவைத்தது. புலிகள் அமைப்பு மட்டும் பணிய மறுத்தது.

1987ல் ராஜீவ் மேற்கண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்று கூறி ‘அமைதிப்படை’ எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை அனுப்பிவைத்தார். அந்தப்படை ஈழத்தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளையும் வேட்டையாடியது. பல்லாயிரம் பேர் இப்போரில் இந்தியப் படையால் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அந்தப்படை ஈழமக்களை சூறையாடியது. இந்திய ‘அமைதிப்படையால்’ பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த அநீதிப் படையின் தலைவன் என்ற முறையில் ராஜீவ் காந்தியை தற்கொலைப் படையாய்மாறி கொன்றாள். எனவே ராஜீவ் படுகொலை கிரிமினல் நடவடிக்கை அல்ல. அது ஒரு அரசியல் படுகொலையே.

இதற்குத் தீர்வு இம்மூவரையும் தூக்கில் ஏற்றுவதல்ல. மாறாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும், ஈழமக்களுக்கு இந்திய அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதுமே தீர்வாகும்.

இந்திராகாந்தியை கொன்றவனை தூக்கிலிட்டதால், ராஜீவ் காந்தியை காக்க முடியவில்லை. எனவேதான் இம்மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.

போலி மோதலும் மரணதண்டனையே!

இந்திய அரசு மரணதண்டனையை அரிதிலும் அரிதாகவே பயன்படுத்துவதாகக் கூறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனை அத்தகையதுதான் என்று கூறுகிறது. ஆனால் இந்தியா முழுதும் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்களையும், மாவோயிஸ்டுகள் போன்ற புரட்சியாளர்களையும் போலீசுடன் மோதல் எனும் பேரில் சுட்டுத்தள்ளுகிறது. வழக்குகளின்றி, விசாரணை இன்றி பல்லாயிரக்கணக்கான பேர் இவ்வாறு இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் அனைத்து மோதல் படுகொலைகளும் சட்டவிரோதமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமாகும்.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாகாணங்களிலும் நடப்பில் உள்ள `ஆயுதப்படை சிறப்புச் சட்டங்கள்` இராணுவத்தினருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குகின்றன. அவர்கள் நினைத்தால் எவரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம். நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கமுடியாது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றவர்களின் தூக்குதண்டனையை இரத்து செய்யச் சொல்வது எந்த அளவிற்கு நியாயமானதோ, அதே அளவிற்கு போலி மோதல் மூலம் அன்றாடம் இராணுவமும், காவல்துறையினரும் செய்யும் கொலைகளை தடுத்து நிறுத்தப் போராடுவதும் சிறப்பு இராணுவச் சட்டங்களை ரத்துச் செய்யப் போராடுவதும் அவசியமாகும்.

பறிபோகும் மாநில அதிகாரங்கள்

ஜெயலலிதா அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்வதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும், குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பிரச்சினை தொடர்பாக கருணை மனுவை மாநில ஆளுனர் பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசு கோர முடியாது என 1991ஆம் ஆண்டு மத்திய அரசு 161 சட்டப்பிரிவிற்கு தெளிவுரை எழுதியுள்ளது என்று கூறியுள்ளார். எனினும் சட்டமன்றத் தீர்மானம் மூலம் குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் மத்திய அரசு இலங்கை அரசுடன் கூடிக் குலாவுவதை கண்டிக்கவில்லை. ஜெயலலிதா அரசாங்கம் இலங்கைப் பிரச்சனையிலும் மூவரின் தூக்கு தண்டனைக் குறித்த பிரச்சனையிலும் கொண்டுவந்துள்ள சட்டமன்றத் தீர்மானங்கள் வரவேற்கத் தகுந்ததே. எனினும் இவையெல்லாம் தீர்மானங்களாகவே இருந்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க போன்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமையை ஏற்காத கட்சிகள், மாநில உரிமை, சுயாட்சி பேசும் கட்சிகளே. தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு இலங்கை அரசோடு கூடிக் குலாவுவதை ஜெயலலிதா கண்டிக்கவில்லை. மாநில சுயாட்சி பேசிய கருணாநிதியோ தமது குடும்ப ஆட்சி பற்றியே கவலைப்படுகிறார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தூக்குதண்டனையை இரத்து செய்வது பற்றியும் மத்திய அரசிற்கும் கடிதம் எழுதுவதோடு சரி. ஆனால் கனிமொழியை விடுவிப்பதற்கு, சொத்து அபகரிப்பு வழக்குகளிலிருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே துடிக்கிறார். எனவே இவ்விருக் கட்சிகளும் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூட காப்பாற்றுமா என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சினையாக இருப்பினும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினையாயினும் நதிநீர் பிரச்சினையாக இருந்தாலும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழக அரசின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்ற சோனியா குமபலின் மத்திய அரசு மறுக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறது. தமிழினத்தின் மீது பகைமையை கக்குகிறது.

இந்தியாவில் ஏற்படும் இத்தகைய தேசிய இனச்சிக்கல்களுக்கு அனைத்து தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து இந்திய அரசை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்று கருதுகிறோம். அதுவே இத்தகைய போராட்டங்களுக்கு பலமளிக்கும் என்றும் கருதுகிறோம்.


எனவேதான் இவ்வாண்டு தியாகிகள் நினைவுநாளில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குதண்டனையை இரத்துச் செய்யவும், தமிழினத்துரோகி சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சியை தூக்கியெறியவும் தமிழ்மக்கள் அனைவரும் ஓரணியில் திரள அறைகூவி அழைக்கிறோம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்துசெய்யப் போராடுவோம்!
*  மூவரையும் தூக்கிலிடத் துடிக்கும் தமிழினத்துரோகி சோனியா, மன்மோகன் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்


குறிப்பு:  அழுத்தம் எமது

Thursday 1 September 2011

ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!



*  புதிய காலனிய ஆட்சிமுறையைப் பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு கொடுக்கும் விலையே ஊழல்!

*  ஊழலுக்கு ஊற்றுக்கண்ணான உலகமய, தனியார்மய கொள்கைகளைக் கைவிடு!  ஊழல் செய்யும் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

*  நிதிமூலதனத்திற்கும், தரகுமூலதனத்திற்கும் சேவை செய்யும் சட்டங்களை எதிர்ப்போம்! தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப் போராடுவோம்!

*  ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!

*  கதர்ச் சட்டைகளின் ஊழலைக்காட்டி, காவிச்சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகங்களைக் கண்டு ஏமாறாதீர்!

*  ஆளும் ‘கதரும்’ பாசிசமே! எதிர்க்கும் ‘காவி’யும் பாசிசமே!

*  ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!

*  ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

======= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ========= 02-09-2011

Thursday 25 August 2011

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - சமரன் தொகுப்பு நூல்

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திர செயல்தந்திர அரசியல் விஞ்ஞானம் பற்றி.

சமரன் தொகுப்பு (1985  ஆங்கிலம் -1988 தமிழ்)
=============================================
மேற்கோள் அட்டவணை

மேற்கோள்-34
கட்சி கட்டும் முறை - ஸ்டாலின் 357

மேற்கோள்-33
கம்யூனிஸ்டை அறிமுகம் செய்தல் -மாவோ 340

மேற்கோள்-32
பிற்சேர்க்கை: நமது கட்சியின் வரலாற்றில் சில பிரச்சனைகள் பற்றிய தீர்மானம்— சீனப் பொதுவுடமைக் கட்சி, 1945. 275

மேற்கோள்-31
இராணுவப் பாதை-கட்டுரைப் பகுதிகள்

* செம்படையைக் கட்டுவது மற்றும் செம்படையின் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் -ஹோகான்சி. 258

* ஆயுதம் ஏந்திய மக்கள் ஆயுதம் ஏந்திய எதிர்ப்புரட்சியை எதிர்த்து நிற்கின்றனர்.-மக்கள் தினசரி. 266

மேற்கோள்-30
மாவோவின் கட்டுரைப் பகுதிகள்

* பாட்டாளி வர்க்கக் கட்சியின் இராணுவப் பாதை -239

* சீனப் புரட்சிப் போரின் பண்பியல்புகள் எவை? -242

* இந்தப் பண்பியல்புகளிலிருந்து பிறக்கும் எமது போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும் 247

* “சுற்றிவளைத்து அடக்குதலும்” அதற்கு எதிரான நடவடிக்கைகளும் சீனாவின் உள்நாட்டுப் போரின் தலையாய வடிவம் 249

* சீனப்புரட்சிப் போரின் தனிப்பண்பியல்புகள் 251

* சீனப் பொதுவுடமைக் கட்சியின் போர் வரலாறு. 256

மேற்கோள்-29
பொருளாதாரம் மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்கள் -228

மேற்கோள்-28
தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் பற்றி ஆலை முதலாளிகள் -227

மேற்கோள்-27
வர்க்கப்போராட்டத்தைப் பற்றிய தாராளவாத கருத்துக்களும் மார்க்சியக் கருத்துக்களும்

மேற்கோள்-26
ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் வேறுபாடுகள் -லெனின் 210

மேற்கோள்-25
இயக்கத்தின் உயர்ந்த அலையும் தணிந்த அலையும்

மேற்கோள்-24
சீனப்புரட்சியின் தணிந்த அலை – புரட்சிகரத் தளங்களை நிறுவுதலும் மேம்படுத்துதலும்

மேற்கோள்-23
புரட்சிகர நிலைமையில் சமமற்ற வளர்ச்சி -மாவோ 177

மேற்கோள்-22
சீனப்புரட்சிக்கான நமது பொது வேலைத்திட்டமும் குறிப்பான வேலைத்திட்டமும்

மேற்கோள்-21
மாவோ மற்றும் லெனினின் மேற்கோள்கள்

குறிப்பு மேற்கண்டவை அச்சில்.
மேற்கோள்- 20
லெனின் மேற்கோள்கள்

மேற்கோள்-19
லெனினியத்தின் அடிப்படையான மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள் – ஸ்டாலின்


மேற்கோள்-18 
அரசியல் செயல் தந்திரங்கள், முழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் - லெனின் 146


மேற்கோள்-17
திட்டத்திற்கும் செயல்தந்திரத்திற்கும் இடையே உள்ள உறவு -லெனின் 144


மேற்கோள்-16
ஒரு பார்வையாளரின் அறிவுரைகள்- வி.ஐ.லெனின்

மேற்கோள்-15
தோழர்களுக்குக் கடிதம் வி.இ.லெனின்

மேற்கோள்-14
போல்சுவிக்குகள் அரசு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா?
வி.இ.லெனின்

மேற்கோள்-13
மார்க்சியமும் புரட்சி எழுச்சியும் வி.இ.லெனின்

மேற்கோள்-12
தொழிலாளர் கட்சியின் விவசாய வேலைத்திட்டத்தின் மாற்றம் குறித்து
வி.இ.லெனின்


மேற்கோள்-11
சமூக சனநாயகத்தின் விவசாய வேலைத்திட்டம் வி.இ.லெனின்

மேற்கோள்-10
சீனப்புரட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும்

மேற்கோள்-9
மாவோவின் மேற்கோள்கள்

மேற்கோள்-8
ஜனநாயகப் புரட்சியில் சமூக-சனநாயகத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்
(நூலிலிருந்து)

மேற்கோள்-7
அடித்தளமும் மேற்கட்டுமானமும், எங்கெல்ஸ் மேற்கோள், கோனிக்ஸ்பேர்க்கிலிருந்த ஜோசப் பிளாச்சுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து.

மேற்கோள்-6
அடித்தளமும் மேற்கட்டுமானமும், மார்க்ஸின் மேற்கோள், அரசியல் பொருளாதாரவிமர்சனத்துக்கு ஒரு கருத்துரையில் இருந்து.

மேற்கோள்-5
எழுச்சியும் போரும் குறித்து- லெனின்

மேற்கோள்-4 

மேற்கோள்-2
  

பாட்டாளிவர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றி - சமரன் தொகுப்பு நூல்

இந்நூலின் முதல் ஆங்கிலப்பதிப்பு 1985 அக்டோபரிலும், இரண்டாம் பதிப்பு தமிழில் 1988 டிசெம்பரிலும் அச்சுப் பிரதிகளாக வெளிவந்தன.

இந்நூலை இணையப் பதிப்பாக வெளியிட `மார்க்சிய அறிவக ஆக்கக் குழு` முயல்கின்றது.

இந்நூல் புரட்சியை எவ்வாறு விஞ்ஞான வழியில் நடத்துவது பற்றிய மார்க்சிய விஞ்ஞானத்தின் ஒரு பகுதி - ( தன்னியல்புக்கு மாற்றான அரசியல் போர்த்தந்திரப் பாதை) - குறித்த தொகுப்பாகும்.

இரண்டு பக்கங்களுக்கு கீழான மேற்கோள்களில் இருந்து இருபத்தைந்து பக்கங்களுக்கு மேற்பட்ட மேற்கோள்கள் வரையில் மார்க்சிய மூலவர்களான ஐம்பெரும் தலைவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய சுமார் 362 பக்கங்களுடைய நூலாகும் இது.

இந்நூலில் 34 மேற்கோள்கள் உள்ளன.

நாம் ஒவ்வொரு மேற்கோளாக அச்சிட்டு வெளியிட முனைகின்றோம்.

இதுவரையில் நாம் அச்சேற்ற முடிந்தது ஒரே ஒரு மேற்கோளே ஆகும்.

இத்தொடர் பணியில் படிப்படியாக இதரவற்றை அச்சேற்றுவது நமது திட்டமாகும்.

இப்பணியில் ஊக்கத்துடன் இணையுமாறு தோழர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

இந்நூலை மார்க்சிய அறிவகத்தில் இணைக்கவும், இப்பதிப்புரையை பிரசுரிக்கவும் அநுமதித்தமைக்கு,  என்றும் எமது நன்றி.

மார்க்சிய அறிவக ஆக்கக் குழு
25-08-2011
=========================================================== 

Thursday 4 August 2011

சமச்சீர்க் கல்விக்கான மக்கள் போராட்டங்கள் வெல்க!

தமிழக அரசே!
 சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உடனே அமூல்படுத்து!

*
பொதுப் பாடத்திட்டம் – சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் ஒரு அம்சமே!
முழுமையான சமச்சீர்க் கல்விக்காகப் போராடுவோம்!

*
கல்வித் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை எதிர்ப்போம்!   
அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமை ஆக்கப் போராடுவோம்!

*
சமச்சீர்க் கல்வியை எதிர்க்கும் பன்னாட்டு, உள்நாட்டு கல்வி முதலாளிகளையும், மதவாதப் பிற்போக்கு சக்திகளையும் முறியடிப்போம்!

*
புதியகாலனிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
தேசிய, ஜனநாயக கல்விக்காகப் போராடுவோம்!

  00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பொதுக்கூட்டம்

13.08.2011
சனிக்கிழமை மாலை 6.00 மணி
அம்பாள் நகர் கடை வீதி,
ஈக்காட்டுதாங்கல்,
கிண்டி, சென்னை

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்    தமிழ்நாடு

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தொடர்புக்கு: டேவிட் செல்லப்பா
3/20, அண்ணா தெரு, மேட்டுக்குப்பம், வானகரம், சென்னை-98 தொலைபேசி 9382815231 / 8098538384/ e-mail samaran1917@gmail.com
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அணிதிரளுங்கள்!                                                                         ஆதரவு தாருங்கள்!
======================================================================

Wednesday 27 July 2011

இந்திய அரசே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!

* ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தாக்குதல், ஈழத் தமிழின மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு
நடத்தப்பட்டதால், அது இனப் படுகொலை குற்றமாகும். இனப்படுகொலைகளுக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே வழியில்லை.

*  ஈழத்தமிழர்களின் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுத்து, அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு தமிழீழ இன அழிப்புப் போரை நடத்தியது. அதன் எதிர் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் படையாகத் தோன்றி 30 ஆண்டுகளாக இனத் தற்காப்புப் போரில் ஈடுபட்டனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் ஒரு தேசிய இன விடுதலைப் போரே ஆகும்.



இராசபட்சேவுடன் இணைந்து ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது இந்திய அரசு


விடுதலைப் புலிகளுடன் (UPA) அரசாங்கம் செய்துகொண்ட 2002ஆம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தை இராசபட்சே எதிர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் இராசபட்சே அந்த போர் ஓய்வு ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பாசிச இன ஒழிப்புப் போரில் முழு மூச்சாக ஈடுபட்டார். இந்த இனப் படுகொலை யுத்தத்தை நடத்துவதற்கு துணைக்கு வருமாறு இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளை அழைத்தார். இந்த போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்து மீறி நடந்து கொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானிக்கப்படும் நிலைவந்தால், இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது


போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டில் ஏற்றும் போராட்டம் இலங்கையை எதிர்த்தது மட்டுமல்ல இந்திய அரசை எதிர்த்ததும்தான்.

ஏனெனில் இந்தப் போரை சிங்கள அரசுடன் இந்திய அரசும் சேர்ந்தே நடத்தியது. இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை. மேலும் தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உளப்பூர்வமாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், வார்த்தைகளையும் நம்ப இயலாது. எனவே ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசோடு மேற்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்த்துதான் போர்க்குற்றவாளி என்ற கோரிக்கையை வெல்ல முடியும்.

தமிழகத்தில்  ஈழ அகதிகளின் அரசியல் உரிமை

தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு ஜெயலலிதா இலங்கைப் பிரச்சினையில் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தத்தான் முடியுமே தவிர வேறு
எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதே அதன் பொருள். அது முடியாவிட்டாலும் கூட, தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளும் சிறை போன்ற வதைமுகாம்களில்தான் வசித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இப்பிரச்சினையில் அவர்களை சுதந்திரமாக அனுமதித்து பிற நாடுகளில் அகதிகளுக்கு உள்ளது போன்ற அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு

இராசீவ் படுகொலை என்பது இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களின் எதிர்விளைவாகும். இந்தியாவின் விஸ்தரிப்புவாத
நலன்களிலிருந்து, இலங்கை சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க இராசீவ் காந்தி இந்தியப் படையை அனுப்பி ஈழமக்கள் மீது ஒரு போரை
நடத்தினார். அந்த படை தமிழர்களுக்கு உதவி எனும் பேரில் ஈழத்தமிழ் மக்களை நரவேட்டையாடியது. ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை கொன்றொழித்தது. பெண்களை கற்பழித்ததுடன் ஈழத்தை சூரையாடியது. எனவேதான் இப்படையின் தலைவர் என்ற அடிப்படையில் இராசீவ் கொல்லப்பட்டார். எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும். இராசீவ் படுகொலையைக் காரணம் காட்டி, விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதேயாகும்.


விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து அகண்ட ஈழம் உருவாக்கத் திட்டம் வைத்துள்ளது என்று இந்திய அரசு கூறுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். இராசீவ்காந்தி கொலையை மட்டும் வைத்து அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது என்பதால் இந்தியா கூறுகின்ற பொய்யேயாகும். அத்தகைய ஒரு திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருக்கவில்லை என்பதோடு, தாங்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றே கூறிவந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக எந்த ஒரு குற்றத்தையும் இதுவரை புரிந்ததில்லை. தமிழக முதல்வர் தாம்தான் விடுதலைப் புலிகளை தடை செய்யச் சொன்னேன் என்று தற்போதும் கூறுகிறார். இராசபட்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தி பேசியிருப்பது நியாயமற்றது. எனவே மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதானத் தடையை உடனடியாக நீக்கவேண்டும்.

ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய அரசும்  இராசபட்சே ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதை  எதிர்த்துப் போராடாமல் - இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், ஈழத்தமிழர்களின் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்தவும், ஈழமக்களுடைய அரசியல் சுதந்திரம் (சுயர்நிர்ணய உரிமை) மற்றும் வாழ்வுரிமைகளை வெல்வதும் சாத்தியமில்லை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்பது இன்றைய உடனடி தேவையாக உள்ளது.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு

கழகச்செய்திகள்: கறுப்பு ஜூலை 28` கடலூர் ஆர்ப்பாட்டம்

Saturday 23 July 2011

கருப்பு ஜுலை`28 (1983-2011) ம.ஜ.இ.கழக போல்சுவிக் போர்க்குரல்

இந்திய அரசே!

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!

சிங்களப் பேரினவாத, புத்த மதவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அப்போர் மூள்வதற்கு மூல காரணமான தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. தேசிய இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் உலகச் சட்டங்கள் அனைத்தையும் மீறி வன்னி மக்களை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த இனப்படுகொலை பெரும் போர்க் குற்றமாகும். அது மட்டுமின்றி, போர் முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசின் இன ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது. தமிழீழ மக்களுக்கு அரசியல் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதுடன், போரின் கடைசிக் கட்டத்தில் வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேரக்குறைய 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாழ்விடங்களில் அமர்த்தப்படவில்லை.

இந்தச் சூழல், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி உலகமெங்கும் இராசபட்சே கும்பலை போர்க் குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஈழத் தமிழர்களின் அரசியல் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை மீட்கப் படவேண்டும் என்பதற்கான இயக்கமும் வலுத்து வருகிறது.

எனவே, இன்று ஈழத்தமிழ் மக்களின் மூன்று அடிப்படைப் பிரச்சனைகள்
1) இலங்கை அரசும் இராசபட்சே கும்பலும் போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்துதல்
2) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்தை மீட்டெடுத்தல்
3) ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமை மீட்டெடுத்தல்
ஆகியவற்றிற்கு உடனடியாக தீர்வு காண வேண்டியுள்ளது.

முதலாவதாக இலங்கையில் நடந்த முப்பதாண்டு போரையும் போர்க் குற்றங்களையும் எடுத்துக்கொள்வோம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை ஆளும் வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்ட காலம் முதலே ஈழத்தமிழ் தேசிய இனச் சிக்கல் இருந்து வருகிறது. இலங்கையின் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அரசு இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் மீது குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்திவரும் இன ஒடுக்குமுறையை தன் வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமையை பறித்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை தேசிய இனம் என ஏற்க மறுத்தல், தமிழினத்தின் மீது ஒரு திட்டமிட்ட பொருளாதார, சமூக, கலாச்சார ஒடுக்குமுறைகளைத் தொடுத்தல் என்ற சிங்கள பேரினவாத, புத்தமதவாத இலங்கை அரசு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் ஈழத்தமிழ் மக்கள் போராடி வந்தனர். அவர்கள் தங்களது உரிமைகளைக் கோரி பல ஆண்டுகாலமாக இயக்கம் நடத்தினர்.

ஜீ.ஜி.பொன்னம்பலம் தொடங்கி அமிர்தலிங்கம் ஈறாக சமரசத் தலைவர்கள் தலைமையில் ஜனநாயக ரீதியில், அமைதி வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இனியும் இரு தேசிய இனங்களும் இலங்கை அரசமைப்புக்குள் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில்தான் ஈழத் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்ற முடிவு வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை, அடுத்து வந்த தேர்தல் மூலம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து “சுயாட்சி”, “தனி ஈழம்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980களிலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடின.

ஈழத்தமிழர்களின் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுத்து, அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு தமிழீழ இன அழிப்புப் போரை நடத்தியது. அதன் எதிர் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் படையாகத் தோன்றி 30 ஆண்டுகளாக இனத் தற்காப்புப் போரில் ஈடுபட்டனர். சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் ஒரு தேசிய இன விடுதலைப் போரே ஆகும்.

இரண்டாவதாக சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இராசபட்சே கும்பல் செய்த போர் குற்றங்களை எடுத்துக்கொள்வோம்.

ஈழத்தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண இலங்கையின் சிங்கள பேரினவாத அரசும், ஆளும் வர்க்கங்களும் எப்போதும் விரும்பியதில்லை. ஈழத் தமிழினத்தை ஒரு தேசிய இனமாகவோ அதன் சுயநிர்ணய உரிமையையோ அவர்கள் அங்கீகரித்து விடவில்லை.

விடுதலைப் புலிகளுடன் (UPA) அரசாங்கம் செய்துகொண்ட 2002ஆம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தை இராசபட்சே எதிர்த்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் இராசபட்சே அந்த போர் ஓய்வு ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பாசிச இன ஒழிப்புப் போரில் முழு மூச்சாக ஈடுபட்டார். இந்த இனப் படுகொலை யுத்தத்தை நடத்துவதற்கு துணைக்கு வருமாறு இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளை அழைத்தார். இந்த போரை நடத்துவதில் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசுக்கு உற்ற நண்பனாகவும், முதன்மையான கூட்டாளியாகவும் செயல்பட்டது.

2009ஆம் ஆண்டு இறுதியிலும் 2010 மே மாதம் வரையில் நடைபெற்ற கடைசிக் கட்ட ஈழப் போரில் ஏற்பட்ட இன அழிவு குறித்து உலகத் தமிழர்கள் எடுத்துக்காட்டிய சில அடிப்படை உண்மைகளை ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

1) இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டு வீச்சுக்கள் மூலம் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டனர்.

2) மருத்துவ மனைகள் மற்றும் மனித நேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுகளுக்கு இறையாயின.

3) பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்க விடாமல் இலங்கை அரசு தடுத்தது.

4) போரில் உயிர் பிழைத்த மக்கள் குறிப்பாக உள்நாட்டில் இடம் பெயரவைக்கப்பட்ட மக்கள் மற்றும் போராளிகள் என்று சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

5) போர் களத்துக்கு அப்பால் இருந்து போரை எதிர்த்த ஊடகத்துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.


இலங்கையில் நடந்தது இனப் படுகொலையே:

“இனப் படுகொலை” என்பதற்கும் “மனித குலத்திற்கு எதிரானக் குற்றம்” என்பதற்கும் இடையே மயிரிழை வேறுபாடு உண்டு.

பொது மக்கள் மீது திட்டமிட்ட முறையிலோ விரிவான அளவிலோ தெரிந்தே நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானக் குற்றம் எனப்படும். இவ்வாறான படுகொலைத் தாக்குதல் ஒரு தேசிய இனமக்கள் மீதோ, ஒரு மரபினக் குழுவினர் மீதோ, ஒரு பண்பாட்டு இனத்தினர் மீதோ, ஒரு மத்தினர் மீதோ வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டால் அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அது இனப்படுகொலை குற்றமாகும். (இந்திய சூழலில் ஒரு சாதியின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டால் அதுவும் அவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களின் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும் வகையில் நடத்தப்பட்டால் அதுவும் இனப்படுகொலை குற்றமாகும் என்பதையும் இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும் என ஏற்க வேண்டும்)

இங்கு இன அழித்தொழிப்பு என்பதற்கு யூகோஸ்லாவியா தீர்ப்பு குறிப்பான நிபந்தனையை வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உடலியல் ரீதியாகவோ கட்டமைப்பு வகையிலோ அழிக்கப்பட்டால் அந்த அழித்தொழிப்பு இனப்படுகொலை வகைப்பட்ட அழித்தொழிப்பு ஆகும்.

(மனிதகுலப் பகைவன் - கி.வெங்கட்ராமன், என்ற நூலிலிருந்து பக்கம் 21)

நான்காம் கட்ட ஈழப்போர் குறித்து ஐ.நா. பின்வருமாறு கூறுகிறது. “இலங்கைப் படையினர் நடத்திய இத்தாக்குதல் வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனவதை (persecution) நடவடிக்கையாகும்” என ஐ.நா. குழுவினர் வரையறுத்துள்ளனர். (மேற்கூறப்பட்ட நூல் பக்கம் 14)

எனவே ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் தாக்குதல், ஈழத் தமிழின மக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதால், அது இனப் படுகொலை குற்றமாகும்.

இனப்படுகொலைகளுக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இன அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே வழியில்லை என்பது உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

இராசபட்சேவுடன் இணைந்து ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது இந்திய அரசு

போரை தீவிரப்படுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு 1000 கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக அளித்தது. ஏராளமான இராணுவத் தளவாடங்களை வழங்கியது. விடுதலைப் புலிகள் தாக்குதலால் சேதமடைந்த பலாலி இராணுவ விமானப் படைத்தளத்தை சீர்படுத்திக் கொடுத்தது. “சார்க்” மாநாட்டிற்கு ஏராளமான இராணுவத்தினருடன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவுக்கு திரும்பும் போது பெரும்பாலான இந்திய இராணுவ வீரர்களை இலங்கையிலேயே விட்டுவிட்டு வந்தார். அந்த இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவத்தோடு இணைந்து இராசபட்சேவின் இன ஒழிப்புப் போரில் பங்கு கொண்டனர்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகள் அவ்வப்போது இலங்கைக்குச் சென்று இலங்கை இராணுவத்திற்கு ஆலோசனை வழங்கி வழிக்காட்டினர். போர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் வழிக்காட்டவும் இந்திய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை உயர் அதிகாரிகள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இராணுவத் தளவாடங்களை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் கப்பலைத் தாக்கி கடலில் மூழ்கடித்தது. அத்தோடு இந்தோனிசியக் கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதத் தளவாடங்களை இந்திய கடற்படை தாக்கி அழித்தது.

பொருளாதார நிலைமைகள் காரணமாக வெளிநாட்டு வர்த்தக பற்று வரவின் பற்றாக் குறையால், இலங்கை அரசு தத்தளித்துக்கொண்டிருந்த போது, மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டு செலவாணி நிதியம் (IMF) இழுத்தடித்துக் கொண்டிருந்த போது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாக பரிந்துரைத்து வாங்கித் தந்தது.

இவ்வாறு இலங்கை அரசின் கூட்டாளியாக செயல்பட்ட சோனியா மன்மோகன் கும்பல் போர் முடிந்த பின்பும் இராசபட்சேவை காப்பாற்ற சர்வதேச அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும், ஜெனிவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் 2009ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்து காப்பாற்றியது இந்தியாதான். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதாக இராசபட்சேவைப் பாராட்டி அதே மனித உரிமை பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அரும்பாடுபட்டு வெற்றி பெற்றது இந்திய அரசு.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்து மீறி நடந்துகொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானிக்கப்படும் நிலைவந்தால், இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது.

போருக்குப் பின் இலங்கை அரசின் தமிழின ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது

இலங்கையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஐ.நா. விசாரணை ஆணையம் கீழ்வருமாறு கூறுகிறது:

அ) தமிழ் பயங்கரவாதத்தை வீழ்த்தி விட்டதாக ஒரு வகை வெற்றி வெறஇலங்கை அரசால் தொடர்ந்து பரப்பப் படுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டும் போரில் நிகழ்த்திய மனித அழிவு கூட வெற்றியின் அடையாளமாக காட்டப்படுகிறது.

ஆ) இன அடிப்படையில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளியல் ஒதுக்கல்தான் அங்கு நடைபெற்ற இன மோதலுக்கு மைய காரணமாக அமைகிறது. அது தொடர்கிறது.

இ) அவசர காலச் சட்டம், பங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகிய போர்காலச் சட்டங்கள் போர் முடிந்த பிறகும் தொடர்வது மட்டுமின்றி போர் நடந்த பகுதிகளில் படைக் குவிப்பு, தொடர்வதும் இராணுவ ஒட்டுக் குழுக்கள் வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் ஈடுபட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதும் தொடர்கிறது.

ஈ) ஊடகத்துறையின் மீது கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அங்கு அமைதியின்மை நீடித்துக்கொண்டிருக்கிறது.

சிங்களிரிடம் பேரினவாத சிந்தனை பின்வருமாறு வெளிப்படுகிறது. தமிழர்கள் அந்நியர்கள் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது. அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சிங்களரிடம் மேலோங்கி நிற்கிறது.

பலத்த இராணுவ காவலில் முகாம்களில் ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். உணவுகளும், மருந்துகளும், குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் தமிழ் மக்கள் சீரழிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தமிழர்களுடைய விளைநிலங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்படும் நிவாரண நிதிகளும் கட்டப்படும் வீடுகளும் டிராக்டர்களும் சிங்களருக்கு வழங்கப்படுகின்றன. ஈழத் தமிழ் மக்களின் சைவ திருக்கோவில்கள் புத்த கோவில்களாகவும், மடங்களாகவும் மாற்றப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய ஊர் பெயர்களெல்லாம் சிங்களப் பெயர்களாகவும் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் புதிது புதிதாக அமைக்கப்படுகின்றன. சிங்கள இராணுவ குடியிருப்புகளும் கட்டப்படுகின்றன.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதோடு, அவர்களது பகுதிகளெல்லாம் சிங்கள மயமாக்குவதன் மூலம் சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசு தனது இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இராசபட்சே கும்பல் போர்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும்

போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) உறுதிப்படுத்தபட வேண்டும்

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசுக்கும் ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கும் (தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்) இடையில் நடைபெற்ற போர் முடிவடைந்தபிறகு, போரில் இராசபட்சே கும்பல் நிகழ்த்திய போர் குற்றங்களுக்காகத் தண்டனை அளிக்க வேண்டிய பிரச்சனைக்கும்; போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கு அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படவேண்டும்.

முதலாவதாக, ஈழத்தமிழினப் போரில் இராசபட்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றிய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இலங்கையில் இறுதிப் போர்க்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றம்தான் என்று ஐ.நா. விசாரனைக் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கையின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா. பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஏதாவது ஒரு நாடு ஐ.நா. மனித உரிமை மன்றம் அல்லது பாதுகாப்பு குழுவில் இவ்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து, அது நிறைவேறினால்தான் செயலுக்குவரும்.

ஈழத்தமிழின ஒழிப்புப் போரை இலங்கை அரசு இந்தியாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு நடத்தியதால் இந்திய அரசு இராசபட்சேயின் போர்க் குற்றங்களின் ஆதரவாளனாகவே இருந்துவருகிறது. போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அரசுடனும் இராசபட்சேவுடன் இந்திய அரசு கூடிக்குலாவுகிறது. ஐ.நா.வின் மனித உரிமைப் பாதுகாப்பு மன்றத்தில் இலங்கை அரசைக் கண்டித்து “சுவிஸ் நாடு கொண்டுவந்த தீர்மானத்தை” தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் செய்தது.

இறுதிக் கட்ட ஈழப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டது போர் குற்றம்தான் என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவித்திருப்பதை, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனம் செய்வதற்கு மாறாக, இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் இராசபட்சே கும்பலைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்குப் பயன்படுத்த விரும்புகிறது.

‘ஜனநாயகம்’ ‘மனித உரிமை’ என்ற பெயரில் இராணுவ சர்வாதிகார லிபியா-கடாபி மீது தாக்குதல் நடத்துகிறதே தவிர ஈழத்தமிழினப் போரை நடத்திய இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி எனப் பிரகடனப் படுத்தவில்லை.

மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் இராசபட்சே கும்பல் போர்க்குற்றங்களை கண்டிக்காமல் இருந்தன. இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளிதான் என்கிற உண்மை பல நாடுகளில் உணரத்தொடங்கிய நிலையில் அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் விளைவாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. பிரான்சு, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரானத் தீர்மானம் கொண்டுவரப்படும்.

தென்னாசியாவில் செல்வாக்கு மண்டலத்துக்கு அமெரிக்காவுடன் போட்டியிடவும், இலங்கையைத் தங்களுக்கு ஒரு தளமாக பயன்படுத்தவும் இலங்கை அரசுக்கு சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. ஆகையால் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி இராசபட்சேவிற்கு முட்டுக்கொடுத்து தாங்கிப் பிடிக்கின்றன.

இந்தியா இலங்கை மீது தனது துணை மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், இலங்கை அரசு சீன அணிக்குள் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசும் சோனியா-மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளி இராசபட்சேவை ஆதரிக்கின்றன.

அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ அணி நாடுகளுக்கும் சீனா, ரஷ்யா அணிக்கும் இடையிலான முரண்பாட்டையும், இலங்கையின் மீது தனது துணை மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் இந்தியாவுக்கும் இலங்கையைத் தனது தளமாக பயன்படுத்த விரும்பும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் பயன்படுத்திக்கொண்டு இராசபட்சே கும்பல் ஈழத்தமிழின அழிப்புப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களினால் வரும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறது.

இன்றுள்ள சர்வதேச சூழலில், உலக உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும், தங்கள் சொந்த நாட்டு அரசு, இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கவும், இலங்கை மீது பொருளாதாரத் தடைவித்திக்கக் கோரியும் போராடவேண்டும்!

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு

போரில் தோற்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் சுதந்திரம் (சுயநிர்ணய உரிமை) உறுதிப்படுத்தப்பட வேண்டும்

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதல் இனப்படுகொலை குற்றமாகும். இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம் இந்த அழிப்பை ஏற்படுத்தும் மேலாதிக்க தேசிய இனத்தோடு (ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்தோடு) ஓர் அரசமைப்புக்குள் சேர்ந்து வாழவே இடமில்லை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

ஆனால் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதற்கு மாறாக ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்கள இனத்தவருக்கு இணையாக, சம உரிமை கிடைப்பதற்கு இலங்கை அரசமைப்புக்குள்ளேயே, இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஈழத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அம்மக்களின் மறுவாழ்வுக்கு இலங்கை அரசை வலியுறுத்துவது என பசப்பிக்கொண்டிருக்கிறது சோனியா மன்மோகன் கும்பல். இதையே கிளிப்பிள்ளைப் போல் ஜெயலலிதாவும், திருத்தல்வாதிகளும் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இலங்கையில் நிலவிவரும் நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்க்க, அரசியல் அதிகாரம் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது, அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.

அண்மையில் இராசபட்சே, நிலம் மற்றும் காவல்துறையின் மீது மாநில அரசாங்கங்களுக்கு கட்டுப்பாட்டைத் தர இயலாது என்று கூறிவிட்டது. இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது தொடுத்த ஈழத்தமிழின ஒழிப்புப் போருக்குப் பிறகு சிங்களப் பேரினவாத புத்த மதவாத இலங்கை அரசின் அமைப்புக்குள் இரண்டு இனத்தவர்களும் சேர்ந்து வாழ வழியில்லை. ஈழத்தமிழ் மக்கள் சம உரிமை பெறுவது, என்றும் நடவாத காரியம். மேலும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் ஈழத்தமிழின ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்வது, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவது தவிர்க்க முடியாதது என்பது நிரூபணமாகிறது.

ஆகையால்தான் மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என கோருகிறோம்.
ஈழத்தமிழரின் வாழ்வுரிமை

“இன அழிப்புப் போர்” முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேரக்குறைய 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப் படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் தொடர்கிறது. அவர்களுடைய விளைநிலங்கள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும் பகுதியை இராணுவப் பகுதிகளாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழி ஏதுமின்றி ஈழத்தமிழினம் சிதறடிக்கப்பட்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுள்ள இந்த அவலநிலைக்கு முடிவுகட்டப்படவேண்டும்.

ஈழத்தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முகாம்கள் கலைக்கப்பட்டு அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் குடியேறியுள்ள சிங்களர்கள் வெளியேற்றப்படவேண்டும். தமிழ் மக்களுடைய வேளாண் நிலங்கள் திரும்பவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை புனர்நிர்மானம் செய்துகொள்ள பொருளாதார உதவிகள் செய்யப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஈழமக்கள் இவையெல்லாம் பெறவேண்டுமானால், இராசபட்சே கும்பலின் இனவெறிப் பாசிச ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேண்டும். நெருக்கடிக் காலச்சட்டங்கள் மற்றும் பிற அடக்குமுறை சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும். ஈழமக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையேல் ஈழத்தமிழ் மக்களுக்கு செய்யும் உதவியெல்லாம், சிங்கள இனவெறிப் பாசிசத்திற்கே சேவை செய்யும். எனவே, ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கானப் போரட்டங்களை ஆதரிக்க வேண்டியது மிகமிக அவசர அவசியமாக மாறியுள்ளது.

இராசபட்சேவை போர்க்குற்றவளி என அறிவிக்கக் கோரியும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரியும் தமிழக சட்டமன்றத் தீர்மானம்

இராசபட்சேக் கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களாலும் வழிமொழியப்பட்டு, தமிழக சட்டமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் பின்வருமாறு:

“எனவே, மனிதாபிமான மற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லபடுவதற்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்தவேண்டும் என்றும், இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மாற்று வாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி, சிங்களவர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி அரசு சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா பேசினார்.

இத்தீர்மானத்தில் அடங்கியுள்ள முக்கியமான அம்சங்கள்.

1. மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐ.நா. சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்;

2. இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமறுவாழ்வு அளித்து அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்துவது;

3. சிங்களர்களுக்கு உரிய அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பது;

4. அவ்வாறு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவது;

இத்தீர்மானத்தில் இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோருவது, அது ஏற்கப்படாவிட்டால் இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கக் கோருவதும் ஏற்கத்தகுந்தது. ஆனால், மத்திய அரசு இன்று வரை போருக்குப் பிறகும் கூட இராசபட்சேக் கும்பலுடன் கூடிக் குலாவுகிறது. இந்தச் சூழலில் மத்திய ஆட்சியின் கொள்கையை எதிர்த்துப் போராடாமல், இந்த ஆட்சியையே, ஐ.நா.வை வலியுறுத்தக் கோருவது சந்தர்ப்பவாதமே.

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில், இலங்கையில் போர்நிறுத்தம் கோரி மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததைப் போன்றதுதான், தற்போது ஜெயலலிதா மத்திய அரசிடம் கோருவதும்.

போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டில் ஏற்றும் போராட்டம் இலங்கையை எதிர்த்தது மட்டுமல்ல இந்திய அரசை எதிர்த்தும்தான். ஏனெனில் இந்தப் போரை சிங்கள அரசுடன் இந்திய அரசும் சேர்ந்தே நடத்தியது. இத்தீர்மானம் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க் குற்றங்களையும் கருணாநிதி எதிர்த்துப் போராடவில்லை, துரோகம் செய்துவிட்டார் என்று கூறும் அதே வேளையில் போரை நடத்திய மத்தியில் ஆளும் காங்கிரசு கட்சியை விமர்சிக்கவே இல்லை. மேலும் தி.மு.க, அ.தி.மு.க இருக்கட்சிகளுமே இலங்கைப் பிரச்சினையை வாக்கு சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அணுகுகிறார்களே ஒழிய அதில் உளப்பூர்வமாக செயல்படவில்லை என்பதே வரலாறு. எனவே, இக்கட்சிகளின் தீர்மானங்களையும், வார்த்தைகளையும் நம்ப இயலாது. எனவே ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசோடு மேற்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை எதிர்த்துதான் போர்க்குற்றவாளி என்றக் கோரிக்கையை வெல்ல முடியும்.

இந்தத் தீர்மானம் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரவில்லை. ஆனால் சிங்கள பேரினவாத புத்த மதவாத இலங்கை அரசமைப்பிற்குள்ளேயே “சிங்களர்க்குரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கவேண்டும்” என்று கோருவது நிறைவேறாதது. இன அழிப்புப் போருக்குப் பிறகும் கூட இராசபட்சே அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறையைத் தொடர்வது, இலங்கையில் நிலவும் அரசு அமைப்பிற்குள்ளேயே இக்கோரிக்கை நிறைவேற்றப்பட முடியாதது என்பதை நிரூபிக்கிறது.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மாற்றுவாழ்வு வழங்கவேண்டும், அவர்களை சொந்த வாழ்விடங்களிலேயே குடியமர்த்த வேண்டும் என்றக் கோரிக்கையும் கூட, சிங்கள இனவெறிப் பாசிச இராசபட்சே கும்பலின் பாசிச அடக்குமுறைகள் தொடர்வதை எதிர்த்துப் போராடாமல் சாதிக்க முடியாது.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படை பலவீனம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இலங்கை அரசுடன் இந்திய அரசு கூடிக் குலாவுவதை எதிர்த்து ஒரு நிலை எடுக்காததும், இலங்கையில் ஈழத்தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பதும்தான்.

ஈழ அகதிகளின் அரசியல் உரிமை

தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு ஜெயலலிதா இலங்கைப் பிரச்சினையில் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதே அதன் பொருள். அது முடியாவிட்டாலும் கூட, தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளும் சிறை போன்ற வதைமுகாம்களில்தான் வசித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இப்பிரச்சினையில் அவர்களை சுதந்திரமாக அனுமதித்து பிற நாடுகளில் அகதிகளுக்கு உள்ளது போன்ற அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கு

இந்திய அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பை உலகிலேயே கொடிய பயங்கரவாத இயக்கம், இந்திய பிரதமர் இராசீவ் காந்தியை கொலை செய்த இயக்கம், இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து அகண்ட ஈழம் அமைப்பதை திட்டமாக கொண்டுள்ள இயக்கம் எனவே அது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி தடைசெய்துள்ளது.

சிங்களப் பேரினவாத இலங்கை அரசு கடந்த 30 ஆண்டுகாலங்களுக்கு மேலாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போரை நடத்தி பல்லாயிரக்கணக்கான பேரை படுகொலைசெய்து வருகிறது. அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புப் போரையே நடத்தியது. எனவே விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேச விடுதலை இயக்கமே ஒழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல. தற்போது இராசபட்சே கும்பல் ஈழத்தமிழினத்தின் மீது இன அழிப்புப்போரை நடத்தி 40 ஆயிரத்திற்கும் மேலானவர்களை படுகொலை செய்துள்ளது. இராசபட்சே போர்க்குற்றவாளி என்று உலகம் முழுவதும் அம்பலப்பட்டப் பிறகும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடையை நீடிப்பது சிங்களப் பேரினவாதத்திற்கு துணைப்போகும் செயலே.

இராசீவ் படுகொலை என்பது இந்திய ‘அமைதிப்படை’ ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களின் எதிர்விளைவாகும். இந்தியாவின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து, இலங்கை சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க இராசீவ் காந்தி இந்தியப் படையை அனுப்பி ஈழமக்கள் மீது ஒரு போரை நடத்தினார். அந்த படை தமிழர்களுக்கு உதவி எனும் பேரில் ஈழத்தமிழ் மக்களை நரவேட்டையாடியது. ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை கொன்றொழித்தது. பெண்களை கற்பழித்ததுடன் ஈழத்தை சூரையாடியது. எனவேதான் இப்படையின் தலைவர் என்ற அடிப்படையில் இராசீவ் கொல்லப்பட்டார். எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அம்மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும். இராசீவ் படுகொலையைக் காரணம் காட்டி, விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு துணை போவதேயாகும்.

மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து அகண்ட ஈழம் உருவாக்கத் திட்டம் வைத்துள்ளது என்று இந்திய அரசு கூறுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். இராசீவ்காந்தி கொலையை மட்டும் வைத்து அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது என்பதால் இந்தியா கூறுகின்ற பொய்யேயாகும். அத்தகைய ஒரு திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருக்கவில்லை என்பதோடு, தாங்கள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றே கூறிவந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக எந்த ஒருக் குற்றத்தையும் இதுவரை புரிந்ததில்லை. தமிழக முதல்வர் தாம்தான் விடுதலைப் புலிகளை தடை செய்யச் சொன்னேன் என்று தற்போதும் கூறுகிறார். இராசபட்சேவை போர்க்குற்றவாளி என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நியாயப்படுத்தி பேசியிருப்பது நியாயமற்றது. எனவே மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதானத் தடையை உடனடியாக நீக்கவேண்டும்.


கச்சத் தீவை மீட்போம்

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1974, 76ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தோடு செய்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தங்களின்படி தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது.

இந்திய அரசின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்தே இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார். 1971ஆம் ஆண்டு பங்களாதேசப் போருக்குப் பிறகு அண்டை நாடுகளோடு நட்புறவு கொள்ள இந்திராகாந்தி முயற்சித்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல், தமிழக அரசையும் கூட கலந்து கொள்ளாமல், அதன் அனுமதியின்றி எதேச்சாதிகாரமாக கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தார். 1960ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் “பெருவாரி” வழக்கில் நாடாளுமன்றத்தின் ஒப்பதலின்றி ஒரு அங்குல நிலத்தைக் கூட மத்திய அரசு எந்த ஒரு நாட்டிற்கும் வழங்க அதிகாரமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. அதற்குப் பின் தான் இந்திராகாந்தி சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். எனவே சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது. எனவே, அதை உடனடியாக மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க கோருகிறோம்.

கச்சத்தீவை தாரைவார்ததன் விளைவாக இந்திய மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமை பறிபோனது மட்டுமல்ல, அப்பிராந்தியத்தில் உள்ள கடல் வளங்களின் மீதான நமது நலன்களும் பறிபோய்விட்டன. மேலும் கச்சத் தீவுப் பிரச்சினை இராணுவ ரீதியிலும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எதிர்காலத்தில் சிங்கள அரசு வேறு ஒரு நாட்டுடன் உடன்பாடு செய்துகொண்டு அங்கு ஒரு இராணுவத் தளத்தை நிறுவுமானால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் எனவேதான் கச்சத்தீவை மீட்பதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.

எனவே சிங்கள இனவெறி இராசபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம், இராசபட்சேக் கும்பலின் பாசிச அடக்குமுறைகள் நிலவுகின்ற இக்காலத்தில் ஒருபடி முன்னேற்றமேயாகும். எனினும் சிங்களப் பேரினவாத அரசுடன் இந்திய அரசு கூடிக்குலாவுவதை முறியடிக்காமல், தமிழக ஜெயலலிதா ஆட்சி, மத்திய அரசு ஈழத்தமிழினத்திற்கு செய்யும் துரோகத்தை எதிர்த்துப் போராடாதவரை, எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்தியவாதிகள் இராசபட்சே ஆட்சிக்கு ஆதரவு தருவதை எதிர்த்துப் போராடாமல் - இராசபட்சே கும்பலை போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், ஈழத்தமிழர்களின் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்தவும், ஈழமக்களுடைய அரசியல் சுதந்திரம் (சுயர்நிர்ணய உரிமை) மற்றும் வாழ்வுரிமைகளை வெல்வதும் சாத்தியமில்லை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்பது இன்றைய உடனடி தேவையாக உள்ளது. அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கு பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு ம.ஜ.இ.க மக்களை அறைகூவி அழைக்கிறது.


இந்திய அரசே!

* இராசபட்சேவை போர்க்குற்றவாளி என அறிவி!

நடவடிக்கை எடு!

* இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!

* இலங்கை அரசுக்கு அளித்துவரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!

* தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை உடனே நிறுத்து!



* கச்சத்தீவை மீட்கப்போராடுவோம்!

மத்திய, மாநில அரசுகளே!

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!

* விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

* அகதிமுகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்!

அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கு!


* சிங்களக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதமேந்தும் உரிமை கொடு!


* தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக - உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு