Wednesday 10 June 2009

ஈழத்தமிழினப் படுகொலையாளன் இராஜபக்சேயை ஆதரித்த சோனியா-மன்மோகன் அரசு ஒழிக!


ஐ.நா. அவையில் ஈழத்தமிழினப் படுகொலையாளன் இராஜபக்சேயை ஆதரித்த சோனியா-மன்மோகன் அரசு ஒழிக!

* இராஜபக்சேயின் இனப்படுகொலைக்குத் துணைபோகும் ரஷ்ய-சீன (ஷாங்காய்) அணியின் சதிகளை முறியடிப்போம்!
*சீன முதலாளித்துவ கும்பலே! இலங்கை அரசுக்கு அளித்துவரும் பொருளாதார, இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!
* இந்திய அரசே! அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்!

சிங்கள இனவெறி இலங்கை அரசே!

* ஈழ மண்ணிலிருந்து சிங்கள இராணுவத்தைத் திரும்பப்பெறு!
* ஈழ மண்ணில் சிங்களவரைக் குடியேற்றாதே!
* வதைமுகாம்களைக் கலை! தமிழர்களை சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்து!

விஸ்தரிப்புவாத இந்திய அரசே!

* இலங்கை அரசுடனான வர்த்தக, இராணுவ ஒப்பந்தங்களை ரத்து செய்!
* இலங்கைக்கு அளித்துவரும் பொருளாதார, இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!
* தமிழ் ஈழத்தை அங்கீகரி!
* விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!
* ஈழ அகதிகள் இந்தியாவிற்கு சுதந்திரமாக வந்துபோக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கு!
* கண்காணிப்பு என்ற பெயரால் தமிழக மீனவர்களை ஒடுக்கும் கடலோரக் காவற்படையைத் திரும்பப் பெறு!
* கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்!
* சிறைக்கூடங்கள் போன்ற ஈழ அகதி முகாம்களைக் கலை!
* உலக நாடுகளில் ஈழ அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமைகளை வழங்கு!

கருணாநிதி கும்பலே!

* இனப்படுகொலையாளன் இராஜபக்சேவுக்குத் துணைபோகும் சோனியா கும்பலின் மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறு!

உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே!

*ஈழ விடுதலைக்கு ஆதரவாக அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜூன், 2009

Monday 25 May 2009

ஈழ விடுதலைப் போர் வெல்லும் வரை ஓயமாட்டோம்!

ஈழ விடுதலைப் போர் வெல்லும் வரை ஓயமாட்டோம்!

விடுதலைப்போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம்!

* சிங்கள இனவெறி இராஜபக்சே கும்பலை நிர்மூலமாக்குவோம்!

* ஈழவிடுதலைப் போருக்கு துரோகமிழைத்த இந்திய ஆளும் கும்பலைக் கருவறுப்போம்!

* சிங்கள இராணுவமே! ஈழ மண்ணிலிருத்து வெளியேறு!

* ஈழ மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை அனுமதியோம்!

*வதை முகாம்களைக் கலை!
தமிழ் மக்களை சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்து!


* செல்வாக்கு மண்டலங்களுக்காகப் போட்டியிடும் ஏகாதிபத்தியங்களும் அவர்களின் ஏவல் நாய்களும் தமிழீழத்தில் தலையிட அனுமதியோம்!

* அமெரிக்க–இந்திய அணிக்கும், ரசிய-சீன அணிக்கும் இடையிலான செல்வாக்கு மண்டலத்திற்கான போட்டிக்களமாக இலங்கையை மாற்ற அனுமதியோம்!

* போர் நிறுத்தம் காணவும் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவும் “ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஐ.நா குழுவை” அனுப்பு!

இந்திய அரசே!

* அரசியல் கட்சிகள், உழைக்கும் மக்கள் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட உண்மையறியும் குழுவை இலங்கைக்கு அனுப்பு!

*விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

* ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு சுதந்திரமாக வந்துபோக விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கு!

* சிறைக்கூடங்கள் போன்ற அகதி முகாம்களைக் கலை! உலக நாடுகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமைகளை வழங்கு!
* கடலோர கண்காணிப்பு என்ற பேரால் மீனவர்களை ஒடுக்காதே!
* கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்துச்செய்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே!
ஈழவிடுதலைக்கு ஆதரவாக அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு-25-05-2009

Friday 24 April 2009

Indian Parliament Election- May2009

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2009
நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் ஒப்பந்தங்களைத் தடுக்க அதிகாரமற்ற போலிப் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
* உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்குச் சேவை செய்பவையே அனைத்து பாராளுமன்றக் கட்சிகள்!
* ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடிமைப்படுத்தும் அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைத் தடுப்பதற்கு அதிகாரமற்றவையே - அரசியல் சட்டமும் போலிப் பாராளுமன்றமும்!

* ‘தேசிய ஒருமைப்பாடு’, ‘நிலையான ஆட்சி’ பேசும் காங்கிரஸ் அணியும் - ‘இராமன், ரொட்டி’ பேசும் இந்துத்துவா பா.ஜ.க அணியும் ‘மத சார்பின்மை’ பேசும் திருத்தல்வாத அணியும், முதாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்கு சேவை செய்யும் அணிகளே!

* தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகள் ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிப்பது தேர்தல் சந்தர்ப்பவாதமே!

* திருத்தல்வாதிகள் – தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ மத்திய அரசில் பங்கு கொள்வது – பாட்டாளிவர்க்கத்திற்குச் செய்யும் துரோகமே!

* போலிப் பாராளுமன்றத்தேர்தலைப் புறக்கணிப்போம்!

* சோவியத் வடிவ மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு-24-04-2009

Tuesday 21 April 2009

2009 மே நாள் வாழ்க!

அன்பார்ந்த மக்களே,
மே நாள் உலகப் பாட்டாளிவர்க்கத்தின் போர் நாளாகும். இன்று உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியானது வரலாறு காணாத அளவிற்கு தீவிரப்பட்டுவரும் ஒரு சூழலில்; ஏகாதிபத்தியவாதிகள் தங்களது நெருக்கடிளின் சுமைகளை சொந்த நாட்டு மக்கள்மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்கள்மீதும் சுமத்துகிற ஒரு சூழலில்; ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது உலக மேலாதிக்கத்திற்காக யுத்தத் தயாரிப்புகளைச் செய்யும் ஒரு சூழலில்; ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்களின் நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீதும், மூன்றாம் உலக நாடுகள்மீதும் திணிப்பதை எதிர்த்தும், யுத்தத்தயாரிப்புகளை எதிர்த்தும், சோசலிசத்திற்கும், தேசிய விடுதலைப் புரட்சிக்குமான போராட்டத்தில்
உலகப்பாட்டாளிகளும், மூன்றாம் உலக நாட்டு மக்களும் புதிய சாதனைகளை படைக்கும் ஒரு சூழலில் இம் மே நாளை சந்திக்கின்றோம்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி:
உலக முதலாளித்துவத்திற்கு உந்து சக்தியாகத் திகழும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பெரும் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் மூடப்பட்டுவருகின்றன. அந்நாட்டில் நிதித்துறை நெருக்கடி அனைத்துத்துறையும் தழுவிய நெருக்கடியாக மாறிவிட்டது. 1970களில் ஏற்பட்ட முதலாளித்துவப் பொது நெருக்கடியின் தொடர்ச்சியே இன்றைய நெருக்கடியாகும். 80ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ரீகனும், பிரிட்டன் பிரதமர் தாட்சரும் நெருக்கடியிலிருந்து முதலாளித்துவ வர்க்கங்களை மீட்பதற்கு தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தினர். தனியார்மயம்-தாராளமயம் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளை மீட்கவல்ல மாமருந்து அல்ல. மாறாக நெருக்கடி மென்மேலும் தீவிரம் அடைந்து ஏகாதிபத்தியவாதிகளை புதை மணலில் ஆழ்த்துகின்ற ஆலகால விஷம்தான் என்பது தற்போது நிரூபணமாகிவிட்டது.
தாராளமய-தனியார்மயக் கொள்கைகள்தான் வரலாறு காணாத முதலாளித்துவ நெருக்கடிக்குக் காரணமாகும்.
ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தியானது கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது. அது வேலையின்மையைப் பெருக்கி, வாங்கும் சக்தியை குறைத்து, உள்நாட்டுச் சந்தையை சுருங்கச் செய்கிறது. இது வர்த்தகத்தில் வீழ்ச்சியை கொண்டுபோகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அண்மையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள ஆய்வின்படி அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) , (- 2.6 )சதவீதம் எனவும், ஐரோப்பா,(- 3.2 )சதவீதம், ஜப்பான்,(- 5.0) சதவீதம், ஆசியா,(- 0.7) சதவீதம் என எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் வேலையின்மை 8.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது. வர்த்தகப்
பற்றாக்குறையானது ஆண்டிற்கு 1 லட்சம் கோடியாகும். அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சியடைந்து உலக நாணயம் என்ற அந்தஸ்த்தை இழந்துவிட்டது. மேற்கண்ட நெருக்கடியானது உலக அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தி வீழ்ச்சியையும், அந்நிய வர்த்தகத்தையும் சீரழித்து உலக முதலாளித்துவ நெருக்கடியை ஆழப்படுத்திவருகிறது.

மிகு உற்பத்தி நெருக்கடி:
அமெரிக்காவின் நிதித்துறையில் செயற்பட்ட மோசடிகள்தான் நெருக்கடிக்குக் காரணம் என்று முதலாளித்துவவாதிகள் கூறுகின்றனர். ஆனால் இது உண்மையான காரணம் அல்ல. உண்மையான காரணம், முதலாளித்துவப் பொருள் உற்பத்தியின் மிகு உற்பத்தியேயாகும். கூலியைக் குறைத்து, நவீன உற்பத்திமுறையை தொடர்ந்து புகுத்தி பொருள் உற்பத்தியை அபரிமிதமாக பெருக்கி குவிப்பதும், வறுமையையும், வேலையின்மையையும் அதிகரிப்பதும் பொருட்கள் விற்காமல் தேங்கிக்கிடப்பதுமே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும்.
இன்று உலக அளவில் மோட்டார் வாகனத்துறையில் ஆண்டிற்கு 94 மில்லியன் வாகனங்கள் தயாரிக்க முடியும். ஆனால் 34 மில்லியன் வாகனங்கள் மட்டுமே விற்கின்றன. அதேபோலத்தான மின் மற்றும் மின்னனுப் பொருட்களும், நுகர்பொருட்களும் உற்பத்தி செய்து விற்காமல் மிகை உற்பத்தியாய் தேங்கிக் கிடக்கின்றன. உணவு தானிய உற்பத்தியும் கூட ஏகாதிபத்திய நாடுகளில் மணல் மேடுகள் போல் குவிந்துகிடக்கின்றன. மறுபுறம் உலகின் மக்கள் தொகையில் பாதிப்பேர் ஒரு நாளைக்கு இரண்டு-அமெரிக்க- டாலர்கள்- வருமானம் கூட இன்றி வறுமையில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். ஆக இன்று உலகம் மிகு உற்பத்தி நெருக்கடியை சந்திக்கிறது.

நெருக்கடிகளின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறது:
முதலாளித்துவ மிகு உற்பத்தியின் நெருக்கடியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிற ஏகாதிபத்தியவாதிகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களின் மீதும், மூன்றாம் உலக நாட்டுமக்கள் மீதும் திணிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கங்களை பாதுகாக்க பகாசுர நிதி நிறுவனங்களுக்கும், பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் ஒபாமா அரசு 720 மில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குகிறது. தனியார்மயம்தான் தீர்வு என்றவர்கள் இன்று தனியார் நிறுவனங்களை அரசின் நிதி கொண்டு முட்டுக் கொடுக்கின்றனர். அந்தச் சுமைகளை
மக்களின் மீது சுமத்துகின்றனர்.
தங்கள் நாட்டு முதலாளிகளைக் காப்பதற்கு, தாராளமயக் கொள்கைகளை கடைபிடிக்கக் கோரி மூன்றாம் உலக நாடுகளை நிர்ப்பந்திக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகள், அதே வேளையில் தங்கள் நாடுகளில் காப்புக்கொள்கைகளை கடைபிடிக்கின்றனர். அமெரிக்காவின் ஒபாமா தமது நாட்டுத் திவாலாகிப்போன நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவி
செய்யும்போது அந்நிறுவனங்கள் தங்களது வேலைகளை வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். தமது நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது கட்டுப்பாடுகளையும், அதிக வரிவிதிப்புகளையும் செய்து காப்புக்கொள்கைகளைக் கடைபிடிக்கிறார். அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் இதே காப்புக்கொள்கைகளை
கடைப்பிடித்துக்கொண்டே மூன்றாம் உலக நாடுகளின் மீது தங்களது நெருக்கடிகளைத் திணிக்கின்றனர்.
மேலும் காப்புக்கொள்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டியையும் தீவிரப்படுத்துகின்றன. அமெரிக்காவின் டாலரின் ஆதிக்கத்தை பிற ஏகாதிபத்திய நாடுகளும், சீனாவும் ஏற்க மறுக்கின்றன. அமெரிக்காவின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை எதிர்த்து பிற ஏகாதிபத்திய நாடுகள் போட்டி போடுவது அதிகரிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வலிமையைக் கொண்டு ஈடுகட்ட முனைகிறது. தமக்கு அடங்க மறுக்கும் மூன்றாம் உலக நாடுகளை பயங்கரவாத நாடுகள் எனக் கூறி அந்நாடுகள் மீது ஆட்சிக்கவிழ்ப்பு- ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்துகிறது. ஈராக், ஆப்கான் அடுத்து வடகொரியாவை மிரட்டுகிறது. ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு
அமெரிக்காவின் நெருக்கடியைத் தீவிரமாக்கியதே தவிர தீர்க்கவில்லை. தற்போது ஒபாமா ஆட்சி சீனாவோடும், ரசியாவோடும் சமரசம் பேசுகிறது. நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவை மீட்டு மீண்டும் போருக்குத் தயாரிப்பதே ஒபாமாவின் சமரசப் பேச்சு நாடகங்களின் நோக்கமாகும். எனவே அமெரிக்காவின் யுத்திகளை எதிர்த்தும், ஈராக் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறக்கோரியும், அமெரிக்கா உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவியுள்ள இராணுவத்தளங்களை கலைக்கக் கோரியும் உலகப் பாட்டாளிகள் ஓர் அணியில் திரண்டு கோர வேண்டும்.

ஏகாதிபத்திய நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவது உலக அளவில் வர்க்கப்போராட்டத்தின் வளர்ச்சியை தீவிரமாக்கி வருகிறது. உலக பாட்டாளிவர்க்கத்திற்கு புரட்சிகர வாய்ப்புகள் உருவாக வழிவகுக்கிறது. முதலாளித்துவ சர்வாதிகாரமா அல்லது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமா ?; முதலாளித்துவ சுரண்டலுக்கும், அரசியல் பொருளாதார அடிமைத்தனத்திற்கும் முடிவுகட்டுவதா; காலனிய நுகத்தடியும் ஏகாதிபத்திய யுத்தமுமா அல்லது அமைதி மற்றும் மக்களுக்கிடையில் சகோதரத்துவ உறவுகளா ?; முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அராஜகமுமா அல்லது அராஜகமும் நெருக்கடியும் அல்லாத சோசலிசப் பொருளாதாரமா? என்பதுதான் அத்தகைய வாய்ப்புக்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியா:
தாராளமய-தனியார்மயக் கொள்கைகளை இந்திய அரசு 90ஆம் ஆண்டுகளிலிருந்து செயல்படுத்தி நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றி வருகிறது. தற்போது மன்மோகன், சோனியாக் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தமும், அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய இராணுவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் ஒரு அடியாட்படையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள் அமெரிக்காவின் அயலுறவுக்கொள்கைகளுக்கு சேவை செய்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் "பயங்கரவாத எதிர்ப்புப்போர்" எனும் பேரில் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களை இந்திய அரசு ஆதரிக்கிறது. ஈராக், ஆப்கன் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஆதரவளிக்கிறது. இலங்கையில் நடக்கும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக ராஜபட்சே கும்பலுக்கு ஆதரவளிக்கிறது. விடுதலைப்புலிகள்
பயங்கரவாதத்தை
எதிர்ப்பது எனும் பேரில் இலங்கை அரசுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்கிறது. எனவே ஈழவிடுதலைக்கு எதிரான அமெரிக்க, இந்திய, இலங்கைக் கூட்டணியை முறியடிக்க தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஈழவிடுதலைப்போரை ஆதரிக்க வேண்டும்.

ஏகாதிபத்திய நெருக்கடிகள் இந்தியாவின் மீது திணிப்பு:
90ஆம் ஆண்டுகளிலிருந்து இந்திய அரசு செயல்படுத்தி வரும் ஏகாதிபத்திய உலகமய-தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றியதுடன் உள்நாட்டுத் தொழிலையும், வேளாண்மையையும் அழித்துவிட்டது. அந்நிய முதலீடுகளைச் சார்ந்த, ஏற்றுமதியைச்சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே ஊக்கமளிக்கப்பட்டது.
தற்போது உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகு உற்பத்தி நெருக்கடியால் இந்த கொள்கை இந்தியாவை சீரழித்துக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கவைத்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 9 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. 80களில் 12 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி உலகமயக் கொள்கைகளை செயற்படுத்தியபின் தற்போது 5.5 சதவீதமாக சரிந்துவிட்டது. வேளாண்துறையோ 4.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. பங்குச்சந்தையின் வீழ்ச்சியால் கடந்த
ஆறுமாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்ப எடுத்துச்சென்றுவிட்டதால், இந்திய முதலீட்டாளர்கள் 37.6 பில்லியன் டாலர்கள் நட்டம் அடைந்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் 35சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2007 - 08 ஆம் ஆண்டு முதல் மூன்றுமாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து அந்நிய செலாவணிக் கையிருப்பு மட்டும் 10.7 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது.
மன்மோகன் கும்பல் இத்தகைய நெருக்கடிக் காலத்திலும்கூட, நிதித்துறையை அமெரிக்க நிறுவனங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் இந்திய நிதிச்சந்தையை கொள்ளையடிக்க திறந்துவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடி என்பதை மன்மோகன் கும்பல் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது. முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கங்களை மீட்க அரசாங்கம் தரகுப்பெருமுதலாளித்துவக் கும்பல்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கடனை அதிகரித்து வருகிறது. வட்டி விகிதத்தையும், வரியையும் குறைத்து சலுகைகளை
வாரி வழங்குகிறது. ஆனால் நெருக்கடியின் சுமைகளை மட்டும் மக்கள் மீது திணிக்கிறது.
முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக ஏற்றுமதி வீழ்ச்சியின் காரணமாக ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறையில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆபரணத்தங்கம் செய்யும் தொழிலில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மோட்டார்வாகனம், உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறைகளில் மட்டும் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வேளாண்மைத்துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதித்தது, ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி, விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் மூழ்கியது போன்ற காரணங்கள் மூலம் வேளாண்மை அழிந்துவிட்டது. அதைச்சார்ந்த தொழில்களும் அழிந்துவிட்டன. கிராமப்புற வேலையிண்மை
பலகோடியைத் தாண்டிவிட்டன. இவ்வாறு வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, கல்வி-மருத்துவம்-சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்க அரசு மறுப்பது- மேலும் இத்துறைகளை வணிகமயமாக்குவது என்று நெருக்கடிகளின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன.
எனவே நம்நாடு சந்தித்துக்கொண்டிருக்கிற முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரே வழி அந்நிய சார்புப்பாதையை தூக்கியெறிந்து, சுயசார்புப்பாதையைக் கடைப்பிடிப்பதே ஆகும்.
பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனத்தையும், உள்நாட்டுத்தரகு முதலாளித்துவத்தின் நிலங்களையும் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்குவது, நிலப்பிரபுக்கள், மடங்கள், கோயில்களின் நிலங்களை பறித்தெடுத்து புரட்சிகரமான முறையில் நிலச்சீர்த்திருத்தம் செய்வது, அந்நிய வர்த்தகத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது, வேளாண்துறைக்கு மானியத்தை வழங்குவது, வேளாண்மைக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது. உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் சிறு நடுத்தரத்தொழில்களுக்கு அரசாங்கக் கடன்கள் மற்றும் இதர உதவிகளை செய்வது, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் வழங்குவது, இத்தகைய ஒரு சுயசார்புத்திட்டம்தான் நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்கவும், உள்நாட்டுமக்களின் நலன்களைக்காக்கவும் உகந்த திட்டமாகும். மாறாக மன்மோகன்-சோனியாக் கும்பலின் பாதை நாட்டை சுடுகாடாக மாற்றும் தேசத்துரோகப் பாதையேயாகும்.

இந்தியா பாசிசமயமாக்கபடுகிறது:
மத்தியில் ஆளும் மன்மோகன்-சோனியாக் கும்பல் ஏகாதிபத்தியவாதிகளின் நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதோடு நெருக்கடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒழிக்க அந்நாடுகளின் ஜனநாயக உரிமைகளையும் மறுத்து இந்திய அரசை மென்மேலும் பாசிசமயமாக்கி வருகிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது, வேலை நிறுத்த உரிமையைப் பறிப்பது, தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது, விவசாயிகளின் போராட்டத்தை நசுக்கி - புரட்சிகரத் தலைவர்களை போலி மோதல்களில் சுட்டுத்தள்ளுவது, போராடும் தேசிய இனங்களின் மீது இராணுவத்தாக்குதலை கட்டவிழ்த்து விடுவது என ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகிறது.
இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத் திகழ்கிறது. கடந்த 60 ஆண்டு காலமாக காஷ்மீரை வல்லிணைப்பாக இணைத்துகொண்டு, அவர்களின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக் கோரிக்கையை மறுத்து அம்மக்களை இராணுவம் தொடர்ந்து ஒடுக்கிவருகிறது. பீகார், அசாம், வடகிழக்கு மாகாணங்கள் மீது இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இதனால் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தனி நபர் பயங்கரவாதம் வெடிக்கிறது. இந்திய அரசு அதையே காரணம் காட்டி தடா, பொடா போன்ற ஆள்தூக்கிச்சட்டங்களை கொண்டுவந்து, ஜனநாயகத்துக்காகப் போராடும் மக்களின் மீது தாக்குதலைத் தொடுக்கிறது. தற்போது மன்மோகன் கும்பல் 1967ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்தச்சட்டத்தை திருத்தியுள்ளது. இது தடா சட்டத்தைப்போன்றே ஒரு கடுமையான பாசிச சட்டத்திருத்தமேயாகும்.இந்திய நாடாளுமன்றம், மக்களின் மீது பாசிசத்தாக்குதல் அடங்கிய சட்டங்களை திணிக்கிறது என்று சொன்னால், இந்திய அரசியல் சட்டமோ சட்டத்தை செயல்படுத்தும் IAS, IPS அதிகாரிகளுக்கு தனி உரிமை வழங்குவதன் மூலம் மக்கள் மீது பொய்வழக்குப்போட்டு பழிவாங்குவதை உத்திரவாதப்படுத்துகிறது. கடந்த காலத்தில் தடா, பொடா போன்ற சட்டங்களின்கீழ் பதிவு செய்த மொத்த வழக்குகளில் 90 சதவீதம் பொய்வழக்குகளே என்று நீதிமன்றம் தணிக்கை செய்தது. பல ஆயிரம் நிரபராதிகள், பல ஆண்டுகள் சிறையிலடைத்து சித்தரவதை செய்யப்பட்டனர். IAS, IPS அதிகாரிகள் குற்றமிழைத்தால் அவர்க்ளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது. கிரிமினல் சட்ட 197வது பிரிவு அவர்களுக்கு அந்தத் தனி உரிமையை வழங்கியுள்ளது. எனவே இத்தகைய சட்டம். ஒழிக்கப்பட்டால்தான் பொய்வழக்குப்போட்டு மக்களை அடக்கும் காவல்துறையின் அராஜகத்தை முறியடிக்க முடியும்.

சாதித்தீண்டாமைக்கு எதிராக இந்திய அரசியல் சட்டம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
அண்மைக்காலங்களில் மகராஷ்டிராவின் கைலார்ஞ்சி முதல் தமிழகத்தின் உத்தபுரம் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய உயர்சாதி ஆதிக்க வெறியர்கள் தண்டிக்கப்படவில்லை. மாயாவதி ஆட்சியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
'வன்கொடுமைச் சட்டங்களை' காவல்துறை பயன்படுத்துவதே மிகமிகக் குறைவு. எனவே தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாய ஒடுக்குமுறையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதுதான் சாதித்தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்டும்.

ஆளும் தரகுப்பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்காக்கும் காங்கிரசும், பாஜகாவும் இந்திய பாசிசத்தின் இரு முகங்களேயாகும்.
நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதிலும், இந்திய அரசை பாசிச மயமாக்குவதிலும் இரு கட்சிகளும் போட்டிப்போடுகின்றன. இவ்விருகட்சிகளும் நிலப்பிரபுத்துவத்தையும், சாதியத்தையும் பாதுகாக்கின்ற கட்சிகள் தான். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வருவதாக கூறுகிறது. 'தேசிய ஒருமைப்பாடு' பேசி காங்கிரசும், 'இந்துத்துவா' பேசி பாஜகவும் பாசிச ஆட்சிமுறைக்கு அடித்தளமிடுகின்றன. திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகள் மாறி, மாறி இக்கட்சிகளுடன் கூட்டுவைத்து பாசிசத்திற்கு சேவை செய்யும் கட்சிகளாகவே உள்ளன.

எனவே, முதலாளித்துவ நெருக்கடியை மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்தும்; நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்கவும்; பாசிசத்திற்கு முடிவு கட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும் போலிப்பாராளுமன்ற ஆட்சிமுறையைத் தூக்கியெறிந்து “சோவியத் வடிவ ஆட்சிமுறையை” கட்டி அமைக்க வேண்டும். அதற்குத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தேசபக்தர்கள் அனைவரும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள இம்மே நாளில் அறைகூவி அழைக்கின்றோம்.

2009 மே நாள் வாழ்க!

உலக முதலாளித்துவப் பொது நெருக்கடிக்குக் காரணமான தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளை முறியடிப்போம்.!

ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிச் சுமையை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மக்கள் மீதும் சுமத்துவதை எதிர்ப்போம்!
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் யுத்தச் சதிகளை முறியடிப்போம்!அமெரிக்க ஏகாதிபத்தியமே!
ஈராக், ஆப்கனிலிருந்து வெளியேறு!
வடகொரியாவையும், ஈரானையும் மிரட்டாதே!
அந்நிய நாடுகளில் அமைத்துள்ள தளங்களைக் கலை! படைகளைத் திரும்பப்பெறு!

தமிழீழ விடுதலைப் போரை நசுக்கும் - அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளின் பாசிச யுத்தத்தை எதிர்ப்போம்!

இந்திய அரசே!
காஷ்மீர் மீதான யுத்தத்தை நிறுத்து!
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வுகாண்!
தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்திய அரசுக்கு மாற்றாக - பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய இனக் கூட்டாட்சி மக்கள் குடியரசுக்காகப் போராடுவோம்!
இந்திய அரசே!
அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை இரத்துச் செய்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனங்களைப் பறிமுதல் செய்!
அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அளிக்கும் உதவிகளை நிறுத்து!
தேசியத் தொழில்களுக்கும் வேளாண்மைக்கும் பாதுகாப்புக் கொடு!
தொழிலாளர்கள் மீது சுமத்தும் வேலைப்பளு, ஆட்குறைப்பு, ஆலை மூடல் நடவடிக்கைகளை நிறுத்து!
தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளைப் பறிக்காதே!
நெருக்கடியிலிருந்து மீளவும் - உள்நாட்டுச் சந்தையைப் பெருக்கவும் நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
வன்கொடுமைக்கெதிராக தாழ்த்தப்பட்டவர்கள் தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தும் உரிமை கொடு!
ஆளும் வர்க்கங்களை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற சேவை செய்யும், 'இந்துத்துவா', 'ஒருமைப்பாடு' பாசிசங்களை முறியடிப்போம்!
போலிப் பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு மாற்றாக 'சோவியத்வடிவ' மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!

* மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை வெல்க!!

Tuesday 17 March 2009

பிரபாகரன் கிரிமினல் குற்றவாளியோ பயங்கரவாதியோ அல்ல தமிழீழ தளபதியே!

பிரபாகரன் குற்றவாளி அல்ல! விடுதலைப் போராளியே!
இலங்கை அரசு- விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் இந்திய அரசின் இராஜதந்திரத்தை முறியடிப்போம்!
ராவ் கும்பலே!
பிரபாகரன் குற்றவாளி அல்ல! ஒரு விடுதலைப் போராளியே!
அன்பிற்குரிய தமிழக மக்களே! இலங்கையில் புதிதாகப் பொறுபேற்றுள்ள சந்திரிகா அரசாங்கம், விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனச்சிக்கலுக்குத் தீர்வு காணத் தயார் என அறிவித்தது. இலங்கை ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களும், ஏராளமான படையினரும் யுத்தம் தொடர்வதை விரும்பவில்லை என்ற சூழலில், இனச்சிக்கலைப் பேசித் தீர்ப்பேன் என்று கூறி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார் சந்திரிகா, ஆட்சிக்கு வந்ததும் விடுதலை புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், தமிழ் ஈழத் தேசிய இனச்சிக்கலைத் தீர்ப்பதற்குக், தெளிவான ஒரு ஜனநாயகத் திட்டத்தை இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஈழத்தமிழினத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவது - சுயாட்சி வழங்குவது என்ற சீர்திருத்தவாதமும் அமைதி வாதமும் அவருடைய செயல்தந்திரத்தின் முக்கியமான அம்சங்களாக இருப்பதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை, ஏன்?
புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கி வைக்கும் பொருட்டு, போர் ஓய்வை அமல்படுத்தினார். தடை செய்யப்பட்டிருந்த பொருட்கள் சிலவற்றை, யாழ்ப்பாணம் பகுதிக்குக் கொண்டு செல்ல அனுமதித்தார். இலங்கை அரசுக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன. தற்போது பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர முடியாமற் போனதற்குப் புலிகள் அமைப்புதான் காரணம் என்று இலங்கை அரசாங்கமும், இந்திய ஆளும் வர்க்கத்தினரின் ஊது குழல்களும் ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இந்த இழுபறி நிலை ஏற்படுவதற்கு உண்மையான காரணங்கள் என்ன? பின்வரும் கோரிக்கைகளை, இலங்கை அரசு ஏறக வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அமைப்பு வலியுறுத்துகிறது.
யாழ்ப்பானத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடையை முழுவதுமாக நீக்க வேண்டும். எல்லா பொருட்களையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்ல அனுமதிக்கவேண்டும். பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்கவேண்டும்.
சங்குப்பிட்டிப் பாதையின் வழியாக மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கு வகைசெய்யும் பொருட்டு, பூநகரி இராணுவ முகாமை அகற்ற வேண்டும்.
வடக்குக் கடற்கரைப் பகுதியில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தையும் நீக்கவேண்டும்.
வடக்குப்பகுதி புனர்நிர்மாணத் திட்டத்தை அமல்படுத்துவதற்கென, ஒரு பிரதேச வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் விடுதலை புலிகள் அமைப்புக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர் ஓய்வு, ஒரு நிரந்தரமான போர் ஓய்வாக மாற்றப்பட வேண்டும். புலிகள் அமைப்பின் ஆயுதந்தாங்கிய ஊழியர்கள் கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரமாக நடமாட அனுமதி அளிக்க வேண்டும்.
வழக்கம்போல, இலங்கை அரசு இக்கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது. பின்வருவனவற்றை அதற்கான காரணங்களாகக் கூறுகிறது.
இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படக் கூடிய சில பொருட்களை, தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இருந்து நீக்க முடியாது.
இனச்சிக்களுக்கு ஒரு அமைதியான தீர்வு ஏற்படும்வரை இராணுவ முகாமைத் திரும்பப்பெற முடியாது. ஆயினும் மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கு வகை செய்யும் பொருட்டு, இராணுவம் 500 மீட்டர் தூரம் விலகிச் சென்றிருக்கின்றது.
மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. சூழ்நிலை அபிவிருத்தி அடைந்த பிறகு, எஞ்சியுள்ள தடைகள் நீக்கப்படும்.
புனர்நிர்மாணத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒருபிரதேச ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கைக்கு மாறாக, இலங்கை அரசாங்கம் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்திருக்கிறது. அதில் பங்கு கொள்வதற்கு இருவரைப் புலிகள் அமைப்பு நியமிக்க வேண்டும்.
அரசாங்கம் அமைத்திருக்கின்ற போர் ஓய்வுக் கண்காணிப்புக் குழுவில் விடுதலைப்புலிகள் அமைப்பு பங்கு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே ஒரு நிரந்தரமான போர் ஓய்வு குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும்.
ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அவர்களின் இன்னல்களை நீக்குவதற்கு மாறாக, இலங்கை அரசு, புலிகளைச் சுற்றி வளைத்து நசுக்குவதில் கவனமாக இருக்கிறது என்பதைத்தான், புலிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் சந்திரிகா அரசாங்கம் கூறும் காரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
சீர்திருத்தவாதத் தீர்வு இனச்சிக்கலைத் தீர்க்காது!
ஈழத் தமிழினச் சிக்கலை, இராணுவ வழியில் அல்லாமல், அரசியல் வழியில் தீர்க்க வேண்டுமானால், இலங்கையில் இனங்களுக்கிடையில் யுத்தத்தை தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால், அந்த யுத்தம் தோன்றியதற்கான காரணங்களை அகற்றியாக வேண்டும். உண்மையில், யுத்தம் என்பது, அரசியலின் வேறுவழித் தொடர்ச்சிதான். தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும்போர், இலங்கை ஆளும் வர்க்கத்தினர், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட ஒரு பாசிசத் தேசிய ஒடுக்க முறைப்போரேயாகும். இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில், ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் சுதந்திர, ஜனநாயகம் என்ற கோரிக்கை, அந்த ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டது. அப்படியானால், ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் இனத்தின், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதன் அடிப்படையில் நடத்தும் பேச்சுவார்த்தைதான் அமைதியை நிலைநாட்ட உதவுமேயொழிய, வேறு எந்த வழியிலும், ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியாது.
சந்திரிகா அரசோ, ஈழத்தமிழ் இனத்திற்கு, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமலேயே, அதற்கு அதிக அதிகாரம் சுயாட்சி வழங்குவதன் மூலம், அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, பேரம்பேசக்கூடிய ஒன்றல்ல ஏனெனில், சுயாட்சியோ அல்லது அதிகாரங்களைக் கீழ்மட்டங்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் வேறு எந்தவிதமான முறையோ, அந்த நாட்டை ஆளுகின்ற வர்க்கங்களின், அதிகாரத்தின் அஸ்திவாரங்களைச் சிதைக்காமல், அப்படியே வைத்துக் கொள்வது ஆகும். அது பழுதுபடாமல், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கு, சில்லறைச் சலுகைகளை வழங்கும் ஒரு முறையேயாகும். இச்சீர்திருத்த முறை, எல்லா வடிவங்களிலும் நிலவும் தேசிய ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டுவது அல்ல. ஒடு சுயாட்சியைப் (autonomy) பெற்றிருக்கும் ஒரு இனம், ஆளுகின்ற இனத்துடன் சம உரிமையைப் பெற்றுவிட முடியாது. ஒடுக்கும் இனமும், ஒடுக்கப்பட்ட இனமும் சம உரிமை பெற வேண்டுமானால், இரு இனங்களுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டுமானால், அதை நிலைநாட்டுவதற்கான ஒரு புரட்சிகரமான முறை - ஒடுக்கப்பட்ட தேசிய இனம், பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையைப் பெறுவதே ஆகும். இம்முறையினால் தான், இன ஒடுக்கு முறைக்கு முடிவுகட்ட முடியும். இனவிடுதலையையும் வழங்க முடியும்.
எனவேதான், ஈழத்தமிழர்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பேரம் பேசுவதற்குரிய ஒன்றல்ல எனக் கூறுகிறோம். இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகள் மற்றும் பிற ஈழத்தமிழர் பிரதிநிதிகளுக்கும் இடையில் இப்போது நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை மூலம், சுயாட்சி என்ற நிலையையோ, வேறு எந்த அதிகார பகிர்வு முறையையோ ஏற்றுக் கொண்டு இலங்கை ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டாலும், அது பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதாக இருக்காது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடியசுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு, இலங்கை ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொண்டு, ஆயுதங்களைக் கீழேபோட்டாலும், மீண்டும் ஒரு முறை, ஈழத்தமிழர்கள் தங்களது, விடுதலைப் போரை நடத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இத்தகைய சமரசங்கள், ஒடுக்கு முறைக்கு முடிவுகட்டப் போவது இல்லை. ஆனால் அவர்களது விடுதலை தவிர்க்க இயலாதது.
இலங்கையில் வாழும் இரு இனங்கள் ஓர் அரசுக்குள் இணக்கமாக வாழவேண்டுமானால், உண்மையில் இரு இனங்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால், ஈழத்தமிழரின் இனச்சிக்கல் பின்வரும் முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.
அ) ஈழத்தமிழ்இனம் தனித் தேசிய இனம் என்பதை அங்கீகரிக்கவேண்டும்.
ஆ) ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிரதேசக் கட்டுக்கோப்புக்கு, உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இ) ஈழத்தமிழ் இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.ஈழத்தமிழ் மக்கள், இவ்வரசுக்குள் இணைந்து வாழ்வது சகிக்க முடியாது எனக் கருதி, பிரிந்து போக விரும்பினால், அவர்களுக்கிடையில் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையில், தீர்வுகாண, இலங்கை அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
ஈ) இலங்கையைத் தமது தாயகமாகக் கருதும் தமிழருக்கு, குடியுரிமையும், இதர அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
உ) சிங்கள இனத்திற்கு மட்டும் வழங்கப்படும் தனிச்சலுகைகளும், உரிமைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
ஊ) சுயநிர்ணய உரிமை பெற்ற ஈழத்தமிழ் இன அரசாங்கம், தனிப்படைவைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
மேற்கூறப்பட்டவற்றை,பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக ஏற்கும்போதுதான், சந்திரிகா அரசாங்கம் அமைதியை நிலைநாட்ட உண்மையாகவே விரும்புகிறது என நம்பலாம்.
அமைதிவாதம் - ஒரு மோசடியே!
ஆனால் சந்திரிகா அரசாங்கமோ, இனச்சிக்கலைத் தீர்ப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு, மேற்கூறப்பட்ட ஜனநாயக முறையை அடிப்படையாகக் கொள்வதற்குத் தயாராக இல்லை. அதேசமயம், அனைவரும் ஏற்கக்கூடிய, ஒரு கௌரவமான, நீதியான மற்றும் நேர்மையான அமைதியை அடைவதற்கு உறுதி பூண்டிருப்பதாக சந்திரிகா அரசாங்கம் கூறுகிறது.
பல ஆண்டுகளாக, இன ஒடுக்குமுறை யுத்தக் கொடுமைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இந்த யுத்தக் கொடுமைகளிலிருந்து விடுபட ஒரு வழி பிறக்காதா என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பானதே ஆகும். இத்தகைய சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஈழத்தமிழ் இனத்தைத் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தை, நயவஞ்சகமாக அவர்கள் மீது திணித்துவிடுவது என்பதுதான் சந்திரிகா அரசாங்கம் பேசும் அமைதிவாதத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.
உண்மையில், சந்திரிகா அரசாங்கம் ஒரு நிலையான நீதியான, மற்றும் நேர்மையான அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அது ஈழத்தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய அதனால் முடியாது. ஏனெனில், அரைக்காலனிய இலங்கை அரசுக்குத் தேசியம், ஜனநாயகம், மற்றும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் ஆகியன ஒத்துப் போகக்கூடியவை அல்ல. இலங்கையில் நிலவும் அரைக்காலனிய அரசமைப்பிற்குள், ஒரு அரசாங்கத்திற்கு மாறாக, தேர்தல் மூலமாக வரும் வேறு எந்த ஒரு அரசாங்கமும், இலங்கை அரசின் வர்க்கத்தன்மைக்கும், அதன் அடிப்ப்டையான நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவிட முடியாது வேறுவிதமாகச் சொன்னால், சந்திரிகா அரசாங்கம், இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாதத் தரகு முதலாளிகள் மற்றும் அரைநிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்கும் அவற்றினுடைய அரசின் அடிப்படையான நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவிட முடியாது. ஆகையால்தான், சந்திரிகா அரசாங்கம் பேசும் அமைதி ஒரு நிலையான, நியாயமான மற்றும் நேர்மையான அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இல்லாமல் ஒரு சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்தக்கூடிய அமைதிவாதமாக இருக்கிறது.
சந்திரிகா அரசாங்கம், ஒருபுறம் மக்களை அமைதிவாதத்திற்குள் மூழ்கடிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. மறுபுறம் இராணுவ வலிமையைப் பெருக்குவதிலும், மீண்டும் ஒரு இராணுவத் தாக்குதல் தொடுப்பதற்கான தயாரிப்பிலும் கவனம் செலுத்துகிறது. இதுவே, சந்திரிகா அரசாங்கம், சிங்களப் பேரினவாத வெறிபிடித்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலனகளுக்கு, வேறுவழியில் சேவை செய்ய முயல்கிறது என்பதையே காட்டுகிறது. அதன் அமைதிவாத மோசடிகள் தோற்கடிக்கப்படுமானால், அதன் உண்மையான பாசிச முகம் வெளிப்பட்டுவிடும்.
ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை, ஒரு நீண்ட மக்கள் யுத்தப் பாதையைப் பின்பற்றுவதன் மூலமே வென்றெடுக்கக் கூடியது எனக் கடந்த கால அனுபவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இந்தநீண்ட யுத்தகாலத்தின் போது, விடுதலை புலிகள் இயக்கம் தனது எதிரியுடன் ஓரிரு முறைகள் அல்ல; பலமுறை பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. இத்தகைய ஒரு நிலைமையில், விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஆனால், சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத சீர்திருத்தவாதச் செயல் தந்திரத்திற்கு எதிராக, ஒரு சரியான கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரு செயல்தந்திரத்துடன் இப்பேச்சுவார்த்தையில் பங்கு கொண்டால்தான், விடுதலைப்புலிகளால் நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்பது சாத்தியம் ஆகும்.
ஈழத்தமிழர்கள், ஒரு பேரப் பொருளாகக் கொள்ளக் கூடாத கோரிக்கையான சுயநிர்ணய உரிமையை விடுதலை புலிகள் உறுதியாகப் பற்றி நின்று, இப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள வேண்டும். போர் ஓய்வும், பேச்சுவார்த்தையும் இறுதியானது எனக் கருதி விடாமல், ஈழத்தமிழினத்தின் விடுதலையை அடைவதற்கான போரில், இறுதி வெற்றி கிட்டும்வரை, ஆயுதப் போராட்டத்தில் ஊன்றி நிற்க வேண்டும். 'அமைதி', 'அதிக அதிகாரம்', 'சுயாட்சி' என்று ஆளும் வர்க்கங்கள் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தி பரந்துபட்ட மக்களைப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டத் தவறினால், அவர்கள் இதுவரை செய்த தியாகங்கள் வீணாகிவிடும். ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம், ஒரு பின்னடைவைச் சந்திக்க நேரிடும். சந்திரிகா அரசாங்கமோ, இலங்கை ஆளும் வர்க்கத்தினரோ, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பார்கள் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே, ஈழத்தமிழ் மக்களும், விடுதலை புலிகளும் தேசிய இன விடுதலைப் போர் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு உத்தரவாதம் செய்து கொண்டேதான் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளவேண்டும்.
விடுதலைப் புலிகளின் இன்றைய பணி சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்பதே
ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில், சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத சீர்திருத்தவாத செயல்தந்திரத்திற்கு எதிராக, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தின் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டுவது விடுதலைபுலிகள் அமைப்பின் தவிர்க்க முடியாத உடனடிப் பணியாக இருக்கிறது.
ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் சுதந்திரம் மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில் அமைந்த அரசியல், பொருளாதார இராணுவக் கொள்கைகளை உள்ளடக்கமாகக்கொண்ட ஒரு குறிப்பான திட்டத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு முன்வைக்க வேண்டும். இலங்கை, இந்திய அரசுகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளின் அடிவருடிகளாகச் செயல்படும் சிறுகும்பலைத் தவிர, பரந்துப்பட்ட ஈழத்தமிழர்கள் அனைவரையும் மேற்கூறப்பட்ட குறிப்பான திட்டத்திற்கு ஆதரவாகத் திரட்டுவதே இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பு தனது குறிக்கோளை அடைவதற்கும், விடுதலைப் போரில் ஊன்றி நிற்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும்.
விடுதலை புலிகள் அமைப்புடன் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் கொண்டிருப்போர் கூட, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பார்களானால், விடுதலைப் போரை ஆதரித்தால், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் புலிகள் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு, அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கும், ஆயுதம் ஏந்துவதற்கும் உரிமை அளிக்கவேண்டும்.
தங்களது அரசியல் அதிகாரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட பகுதிகளில் மக்கள் கமிட்டிகளை அமைத்து, அவற்றிற்கு, அதிகாரம் வழங்குவதின் மூலமாக, ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
ஈழத்தமிழினத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்காகப் போராட வேண்டியது அவசியம்தான். என்றாலும், ஈழத்தமிழ் இனத்தின் தற்சார்புப் பொருளாதாரத்திற்குத் திட்டமிட வேண்டும். அப்போதுதான், நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்க முடியும். மக்களின் வாழ்நிலையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்து, அவற்றை அமல்படுத்த வேண்டும்.
பாரம்பரியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் மத உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில், அவர்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டும்.
இலங்கைப் பொருளாதாரத்தை, ஏகாதிபத்திய வாதிகளுக்கு அகலத் திறந்துவிடும் இலங்கை அரசின் பொருளாதாரக் கொள்கைக்கும், அதன் பாசிச ஒடுக்கு முறைக்கும் எதிராக, சிங்களத் தேசிய இன மக்கள் நடத்தும் போராட்டத்தை விடுதலை புலிகள் அமைப்பு ஆதரிக்க வேண்டும். சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத, சீர்திருத்தவாத மோசடிகளைச் சிங்கள மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் இன ஒடுக்குமுறை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், இரு இனங்களும் ஒரே அரசமைப்புக்குள் வாழவேண்டுமானால், ஈழத்தமிழ் இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுதான் ஒரே வழி என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் அமைப்பு எடுத்துரைக்க வேண்டும். இதற்கு ஆதரவாகச் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த, ஜனநாயகவாதிகளின் ஆதரவைத் திரட்ட முற்பட வேண்டும்.
போர் ஓய்வுக் கண்காணிப்புக் குழு, செஞ்சிலுவைச் சங்கம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்தல் என்ற பேரிலும் இன்னும் பிற வடிவங்களிலும், ஏகாதிபத்திய நாடுகளின் இராஜதந்திரிகள் இலங்கயிலும் யாழ்ப்பாணத்திலும் வலம் வருகிறார்கள். இலங்கைப் பேரினவாத அரசுடன் ஒத்துப்போகச் சொல்லி, நயமாகவும், மிரட்டியும் விடுதலை புலிகள் அமைப்பை நிர்ப்பந்தம் செய்யும் இராஜதந்திரங்களைத் திரைமறைவில் செய்ய முனைந்துள்ளனர். இந்த நிர்ப்பந்தங்களை எதிர்த்து உறுதியாக நிற்பதுடன், அவற்றிற்கு எதிராகப் பரந்துப்பட்ட மக்களைப் புலிகள் அமைப்பு திரட்டவேண்டும்.
மேற்கூறப்பட்டவற்றைச் சாதிப்பதன் மூலமே, ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவதும் நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்பதும் உறுதிப்படுத்தப்படும்.
மேலாதிக்க நாட்டம் கொண்ட இந்திய அரசு, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, இப்பேச்சு வார்த்தையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, இப்பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்திய அரசின் இந்த இழிவான இராஜதந்திரத்தை முறியடிப்பது, ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப் புலிகளின் பணி மட்டும் அல்ல. இது இந்திய ஜனநாயகவாதிகள், குறிப்பாகத் தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டிய பணியும் ஆகும்.
பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதே இந்திய அரசின் இராஜதந்திரம்
இலங்கையில், சந்திரிகா அரசுக்கும், புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான முயற்சிகள் தொடங்கி இருப்பதைக்கண்டு பொருமுகிறது இந்திய அரசுதான் இல்லாமல் பேச்சுவார்த்தை எப்படி நடக்கலாம் என இறுமாப்புடன் கேட்கிறது. தான் பங்கேற்கக்கூடிய பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டுமென விரும்புகிறது. எனவேதான், பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட எல்லா முயற்சிகளும் செய்து வருகிறது.
இராஜீவ் - ஜெ.ஆர் ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி, இலங்கை விஷயத்தில் தலையிடத் தனக்கு அதிகாரம் உண்டு என டெல்லிசர்க்கார் உரிமை கோருகிறது. முன்பு இரு மேல்நிலை வல்லரசுகளின் அனுமதி பெற்றுத்தான், இந்திய அரசால் இலங்கையில் தலையிட முடிந்தது. இப்போதோ, சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தகர்ந்துவிட்டது. அமெரிக்காவுடன் இப்போது இராணுவ ஒப்பந்தம் வேறு போட்டுக்கொண்டுள்ளது இந்திய அரசு. தென்னாசிய மண்டலத்தில், அமெரிக்க மேலாதிக்கத்தை, நிலைநாட்டும் ஒரு அடியாளாக உருமாறிவரும் இந்திய அரசு, இன்று இறுமாப்புடன் இலங்கை விஷயத்தில் தலையிட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த இலங்கையையும், தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம் ஆகும். அதன் அடிப்படையில்தான், இராஜீவ் கொலையைக் காரணங்காட்டி, பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரித்து, அவர்களைப் பிடித்துக் கொடுக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்தி வருகிறது. இதன்மூலம், பேச்சுவார்த்தக்கு முட்டுக்கட்டை போடவும், முயற்சிக்கிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது, அதன் உள்நாட்டு விஷயமாகும். இதில், இந்தியா தலையிடுவது என்பது, அதன் மேலாதிக்கக் கொள்கையின் வெளிப்பாடாகும். இதன் விளைவு, இந்திய மக்களாகிய நம்மீதான விலங்குகளை இறுக்குவதில் போய் முடியும். நம் நாட்டுப் பிரச்சினையில் இன்னொரு அந்நிய நாடு தலையிடுவது எப்படிச் சகிக்க முடியாததோ, அதுபோல்தான், நம் நாடு பிற நாட்டு விசயத்தில் தலையிடுவதும் சகிக்கமுடியாததே.
ஆகையால், மேலாதிக்க நாட்டத்துடன், இந்திய அரசு இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை எதிர்ப்பது தமது கடமையாகும்.
இன்று உலகில் எண்ணற்ற தேசங்கள் நாடுகள், தங்கள் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வருகின்றன பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்தும், தம் மீதான இராணுவத் தாக்குதல்களை எதிர்த்தும், இன விடுதலைப் போராளிகள் ஆயுதமேந்திப் போராடுகின்றார்கள். இது கிரிமினல் குற்றம் அல்ல. இது விடுதலைப் போர். அதேபோல்தான், ஈழத்தமிழ் இனமும் தனது இன விடுதலைக்காக ஆயுதமேந்தி, சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராடி வருகிறது.
இலங்கையின் உள்நாட்டு விசயத்தில் தலையிட்டு, ஈழத்தமிழ் இனத்தின் மீது ஒரு அநீதியான யுத்தம் தொடுத்தது இந்தியப் படையே. எண்ணற்ற கற்பழிப்புகளையும், கொலைகளையும், கொள்ளைகளையும் இந்தியப்படை செய்ததை உலகே அறியும். இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் போர்க்காலக் குற்றங்கள் ஆகும். அந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு? உண்மையான குற்றவாளிகள் இந்திய ஆளும்வர்க்கங்களும், அவர்கள் அரசின் தலைவர் ராஜீவும்தான், அவர்களே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். அந்தப் போர்க்காலக் குற்றங்களுக்கு இந்திய அரசுதான் நஷ்டஈடு வழங்க வேண்டும். அதைவிட்டுப் பழியைப் புலிகள் மீது போடுவது, இந்திய அரசின் மேலாதிக்க வெறியையும், ஆணவத்தையுமே காட்டுகிறது. பிரபாகரன் ஒரு கிரிமினல் குற்றவாளி அல்ல. தன் சொந்த இனவிடுதலைக்காக, ஆயுதமேந்திப் போராடுகின்ற, ஒரு தேசிய விடுதலைப் போராளியே. மேலும், இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில், பேச்சுவார்த்தை நடை பெறாமல் முட்டுக்கட்டை போடும் நோக்கத் தோடுதான், இந்திய அரசு, பிரபாகரனைப் பிடித்துத்தருமாறு, இலங்கை அரசிடம் கோருகிறது. இந்திய அரசின் இந்த இராஜதந்திரம் முறியடிக்கப்பட வேண்டும். சந்திரிகா!
அடுத்த மாதத்தில், சந்திரிகா இந்தியா வரப் போகிறார். அவருக்கு நெருக்கடிகள் கொடுத்து, இந்தியா இலங்கை விசயத்தில் தலையிட வாய்ப்புக் கோரப்போகிறது. உண்மையில், இனச் சிக்கலைத் தீர்க்க, சரியான தீர்வுடன் சந்திரிகா இருந்தால்தான், இந்தியாவின் மேலாதிக்க முயற்சிகளை முறியடிக்க முடியும். இல்லை யெனில், பிரபாகரனைத் தேடும் சாக்கிலோ, அல்லது புலிகளை எதிர்த்துப் போராடுவதில் உதவும் சாக்கிலோ, இலங்கைக்குள் நுழைய, இந்திய அரசுக்கு இடம் கொடுத்தால், அது ஒட்டு மொத்த இலங்கைக்கே பேராபத்தாக முடியும் என்பதில் அய்யம் இல்லை.
நமதுபணி
இந்திய அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதியே, இலங்கையின் உள்நாட்டு விசயத்தில், இந்தியா தலையிடுவதை எதிர்ப்பதாகும். இந்திய மக்களை பெருந்தேசிய வெறியில் மூழ்கடித்துத் தனது மேலாதிக்கத் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, இந்திய ஆளும் வர்க்கங்கள் முயற்சிப்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். புதியபொருளாதாரக் கொள்கைகள் மூலம், ஏகாதிபத்தியங்களிடம், குறிப்பாக, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடகு வைத்துக் கொண்டிருக்கும் ராவ் அரசு, நம்மை மட்டுமல்ல, தெற்காசியா முழுவது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி, அமெரிக்காவின் சிறந்த ஏவல்நாயகச் செயல்பட முயற்சித்துக்கொண்டிருப்பதை எதிர்த்துப் போராடவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
தமிழகக் கட்சிகள்
தமிழரின் நலன்களைப் பேணிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும், தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க முதலிய கட்சிகள், மேலாதிக்க நோக்கத்துடன், இந்திய அரசு கடைப்பிடிக்கும் இராஜதந்திரத்தைக் கண்டும் காணாதது போல் மௌனம் சாதிக்கின்றன. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில், பேச்சுவார்த்தை நடைபெறாமல் முட்டுக்கட்டை போடும் இந்திய அரசின் இராஜதந்திரத்தை எதிர்த்து இக்கட்சிகள் ஏதும் செய்யவில்லை. பிரபாகரனைப் பிடித்துத் தருமாறு, இந்திய அரசு கோருவதைக் கூட இக்கட்சிகள் கண்டிக்கவில்லை. தமது நாடாளுமன்ற, சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாதகமாக, ஓட்டுப் பொறுக்குவதற்காகத் தமிழக மக்களின் இன உணர்வைப் பயன்படுத்துவது இக்கட்சிகளின் வழக்கமாகி விட்டது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், பாசிச ராவ் அரசு மேற்கொள்ளும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, ஜனநாயக வாதிகளின் கடமையாகும்.
இந்திய அரசே!
இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதே
இந்திய அமைதிப்படையின் போர்க்காலக் குற்றங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்கு!
பிரபாகரன் ஒரு தேசிய விடுதலை போராளியே! கிரிமினல் குற்றவாளி அல்ல!
இலங்கை சந்திரிகா அரசே!
ஈழத்தமிழினத்தின், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
மார்ச்-1995

சந்திரிக்கா ஆட்சியின் ஈழப்படுகொலையை எதிர்த்து!

சந்திரிக்கா ஆட்சியின் ஈழப்படுகொலையை எதிர்த்து!
ஈழப்படுகொலையை எதிர்ப்போம்!
இந்திய அரசே!
இலங்கை அரசுக்கு அளிக்கும் இராணுவ உதவியை நிறுத்து!
அன்பிற்குரிய தமிழக மக்களே, ஈழத் தமிழ் மக்கள் மீது இனவெறி இலங்கை அரசு முப்படைத் தாக்குதலை தொடுத்து உள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், கோவில்கள், மக்கள் வாழுமிடங்களென எல்லா இடங்களின் மீதும், விமானங்கள் குண்டு மழை பொழிந்துவருகின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த இனப்படுகொலைப் பாசிச யுத்தத்தை உலக மக்கள் அனைவரும் ஒரு மனதாகக் கண்டித்துள்ளனர். தமிழகத்திலும் இலங்கை அரசின் இந்த படுபாதகச் செயலைக் கண்டித்து ஜனநாயக உள்ளம் கொண்டோர் எதிர்ப்புக் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்த யுத்தத்திற்கு யார் காரணம்? இலங்கையில் புதிதாகப் பொறுபேற்றுள்ள சந்திரிகா அரசு அமைதியை, ஏற்படுத்துவதே தன் நோக்கம் என அறிவித்தது. ஜனவரி 1 முதல் போர் நிறுத்தம் அமுலாகியது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவில்லை. அதை ஒரு இனமாகக்கூட அங்கீகரிக்க தயாராக இல்லை. போர் ஓய்வு என்று சொல்லிக் கொண்டு ஈழத்தமிழினத் தேசிய விடுதலைப்போரை ஒடுக்குவதற்கு, இலங்கை அரசின் ராணுவ, அரசியல், பொருளாதார வலிமையைக் கூட்டிக் கொள்வதற்கான தாயாரிப்புகளில் ஈடுபடுவது என்று வழக்கமாக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே செயல்தந்திரத்தை சந்திரிகா அரசும் பின்பற்றியது. இடைப்பட்ட நாளில் ஏகாதிபத்திய நாடுகளை அணுகி புலிகளை ஒடுக்க தனக்கு உதவ வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தது. தமது படைகளையும் ஏகாதிபத்தியங்களின் உதவியோடு நவீனப் படுத்திக் கொண்டது. தான் மட்டும் 'அகிம்சா புத்திரி' போலவும், புலிகள்தான் இரத்தவெறி பிடித்தவர்கள் போலவும் வேடம் போட்டது. பிச்சை போல் போட்டதை வரம் எனப் பெற்று, மனநிறைவு அடைந்து அடிமை வாழ்வை அட்டியின்றி தொடரவேண்டுமென ஆதிக்க இனத்திற்கே உரிய ஆணவத்தோடு புலிகளை நிர்பந்தித்தது சந்திர்கா அரசு. அதன் சுயரூபத்தை உணர்ந்த புலிகள், ஏப்ரல் - 19க்குள் தமது நியாயமான கோரிக்கைகளை ஏற்கவேண்டுமெனக் கோரினர். ஆனால் அகிம்சா புத்திரி சந்திரிகாவுக்கோ பாரிசுக்கு பறந்து போவதில் இருந்த ஆர்வம் தனது உள்நாட்டுப் பிரச்சினையை முறையாகத் தீர்ப்பதில் இல்லை. எனவே தான் பயனற்ற பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்தனர் புலிகள். ஏப்ரல் இறுதியில் இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்ட செய்தியினைப் படித்த பின்புதான் பதறியபடி பாரிசிலிருந்து பறந்து வந்தார் சந்திரிகா. பேச்சுவார்த்தையை முறித்தது புலிகள்தான் என ஒப்பாரி வைத்தார். ஒடுக்கப்படும் இனத்தின் எந்தவொரு நியாயமான கோரிக்கையும் சந்திரிகாவிற்கு பேராசையாகவே படுகிறது. இப்படிப்பட்ட இவரா அமைதியை ஏற்படுத்தப்போகிறார்? மாறாக, இவர் போட்ட அமைதிவாத முகமூடி வெகு சீக்கிரமே கிழிந்து, உண்மையான முகமாகிய இனவெறிப் பாசிச முகம் பளிச்சென்று உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டு விட்டது புலிகளால். இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாத நிலையில்தான் பேச்சு வார்த்தை நாடகத்தை சந்திரிகா அரசு தானே முன்வந்து துவக்கியது. அப்படிப்பட்ட இலங்கை அரசுக்கு இப்போது மட்டும் யுத்தம் புரிய எப்படி துணிச்சல் வந்தது?
ஏகாதிபத்தியங்களின் ஆதரவில் துணிச்சல் பெற்ற சந்திரிகா "ஒன்றுக்கும் உதவாத படை சிங்களப் படை" என்று பேட்டிகொடுக்கும் அளவுக்கு நொந்துபோன சந்திரிகா, இன்று புலிகளை கூண்டோடு ஒழிக்காமல் இந்த யுத்தத்தை நிறுத்தப்போவதில்லை என்று முழங்குகிறார். ஏகாதிபத்தியங்கள் தொடுத்த உத்தரவாதத்தால் இவ்வாறு முழங்குகிறார். ஆஸ்திரேலியா நிதி உதவி தருகிறது. கனடா உதவிக்கரம் நீட்டுகிற்து. எல்லாவித உதவிகளையும் செய்யத் தயாரென ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அறிவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக புலிகளை சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள் பட்டியலில் சேர்த்ததின் மூலம் தனிமைப் படுத்தி ஒடுக்க அமெரிக்கா உதவுகிறது. கூடவே ஆயுத உதவி செய்கிறேன் என்றும் அறிவித்து உள்ளது. இத்தனை பெரிய உதவிகள் புடைசூழ, சந்திரிகா ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலைப் பாசிச யுத்தத்தைத் தொடுத்துள்ளார். ஒரு புறம் குண்டு குண்டு மழை பொழிந்துவதும், மறுபுறம் ஈழத் தமிழர் இனப் பிரச்சனைக்கு அமைதி தீர்வு காண இலங்கை அரசின் சமரசத்திட்டம் என்று அரசியல் மோசடி செய்வது என்பது சந்திரிகா அரசாங்கத்தின் இன்றைய தந்திரமாக இருக்கின்றது. எத்தகையது அந்தத் திட்டம். 'அசோசியட்டஸ் பிரஸ்' செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை கிடைத்துள்ள ஆவணம் கூறுகிறது, "கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்ல¦ம்களும் அண்மையில் உள்ள சிங்களர் பெருமபான்மையாக உள்ள மாகாணங்களுடன் இணைக்கப்படுவார்கள். தமிழர் பெரும்பான்மையாக உள்ளபகுதிகள் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படும்.. எட்டு மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்" என்பதாக இத்திட்டம் உள்ளது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களை சிங்கள மக்களுடன் இணைக்கும் திட்டமாக, தமிழ் தேசிய இனத்தைப் பிரித்து, தேசிய இனம் என்ற ஜனநாயக கோட்பாட்டுக்குப் பதிலாக, பாசிச மதவாதக் கோட்பாட்டை பின்பற்றி ஈழத்தமிழ் தேசிய சுய நிர்ணய உரிமை போராட்டத்தை நசுக்கும் சந்திரிகாவின் தந்திரத்தையே இது காட்டுகின்றது. தமிழ்த் தேசிய இனத்தின் ஜனநாயகக் கோரிக்கையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு பதிலாக "அதிக அதிகாரம்" என்ற சமரசத் திட்டத்தை புகுத்துவதின் முலம் பாசிச அரசைக் கட்டிக்காக்க முயல்கின்றது. இத்திட்டமொன்றும் புதுமையானது அல்ல. இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் தேசிய இனப் பிரச்சினைக்கு, ஜனநாயக வழியில் தீர்வு காண மறுத்துக் கடைப்பிடித்த அதே பாசிச வழிமுறையைத்தான் சந்திரிகா அரசும் கடைப்பிடிக்கின்றது என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது.
புலிகள் எதிர்த்துப் போராடுவது சந்திரிகா அரசை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் சேர்த்துத்தான். ற தமிழ் ஈழத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஈழத் தமிழ் இனத்திற்கு தமிழ் ஈழமே சரியான தீர்வு, அதை அடையும் வரை ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் ஓயப் போவதில்லை. பௌத்த மதவாத சிங்கள இன வெறி அரசு, ஈழத் தமிழினத்தின் மீது காலம் காலமாக பாசிசத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இன்றுவரை ஈழத் தமிழினத்தின் வாளும், கேடயமுமாக களத்தில் உறுதியுடன் நின்று எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர் புலிகள். இதற்கு முன், இலங்கை அரசு தொடுத்த யுத்தங்களை விட, இப்பொழுது தொடுத்துள்ள யுத்தம் அளவிலும் பண்பிலும் வேறுபட்டது. முப்படைத் தாக்குதலுடன் பெரிய அளவில் படைகளைக் குவித்து நடத்தப்படும் யுத்தம் என்ற வகையிலும், ஏகாதிபத்தியங்களின் பூரண ஒத்துழைப்போடு நடத்தப்படும் யுத்தம் என்ற வகையிலும் வித்தியாசமானதுதான். இந்த பாசிசப் போரை எதிர்த்து, புலிகள் நடத்தும் நியாயமானவிடுதலைப் போர், சந்திகா அரசை எதிர்த்து மட்டுமல்ல ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துத்தான். உலகமே இன்று கூர்மையாக புலிகளின் தாக்குதலை கவனித்து வருகின்றது. இராணுவ ரீதியில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என புலிகள் நிரூபித்து வருகின்றனர். முப்படைத் தாக்குதல் என்றாலும் புலிகள் அசரவில்லை. கடுமையான பதிலடி தந்துகொண்டிருக்கிறார்கள். புலிகள் கொடுக்கும் இந்த அடி, சந்திரிகா அரசுக்கு மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களுக்கும் தான். குறிப்பாக, அமெரிக்காவின் தெற்காசிய நலன்கள் மீது விழும் அடி இது. நவீனகாலனிய மற்றும் அரைக்காலனிய நாடுகளில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை - அரசியல் சுதந்திரம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் மறுக்கப்படவில்லை. அந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்காகவும் அது மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்நாடுகளில் நவகாலனிய மற்றும் அரைக் காலனிய அரசமைப்பை நில நிறுத்தும் பொருட்டு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு, அரசுகள் மேற்கொள்ளும் பாசிச ஒடுக்கு முறைக்கு ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரவு அளிக்கின்றது. இந்நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்திய ஆதரவு இல்லாமல் தேசிய ஒடுக்கு முறையில் இறங்குவதில்லை. தேசிய விடுதலைக்காகப் போராடுவோர் தனது நாட்டின் ஆளும் வர்க்கங்களை எதிர்த்த மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போரிட்டுத்தான் விடுதலையைப் பெற்வேண்டியுள்ளது என்பதை ஈழ விடுதலைப் போராட்டம் நிரூபித்துக் கொண்டுள்ளது.
இலங்கை அரசின் பாசிச யுத்தத்திற்கு துணை போகும் இந்திய அரசு இலங்கை அரசின் பாசிச யுத்தத்தை எதிர்த்து உலக மக்கள் அனைவருமே ஒருமித்து கண்டித்து வருகிறார்கள். ஆனால் இந்திய அரசோ தனது விஸ்தரிப்பு வாதக் கள்ளக்கனவுகளுடன், இலங்கை அரசின் பாசிச யுத்தத்திற்கு துணையாக பாக் ஜலசந்தியில் போர்க் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளது. தனது விமானங்கள் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் மீது பறந்து போய் புலிகளை வேவு பார்த்து சந்திரிகா அரசுக்கு தகவல் தருகிறது. இலங்கைப் படைக்கு ஆயுத பயிற்சி தர ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகத்தின் தென் எல்லையில் இராணுவத்தை குவித்து வருகின்றது. ஆக இலங்கையின் முப்படைத்தாக்குதல் அங்கே! இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் இங்கே!! மேலாதிக்க வெறியுடன் இந்திய அரசு இலங்கை அரசின் பாசிசயுத்தத்திற்கு தரும் ஆதரவை முழு மூச்சுடன் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். உடனடியாக, குமரி எல்லையில் குவிக்கப்பட்டுள்ள முப்படைகளையும் வாபஸ் பெற வேண்டுமென குரல் கொடுப்போம். இலங்கை அரசுடனான அனைத்து அரசியல் பொருளாதார உறவுகளைத் துண்டிக்கும் படி நிர்ப்பந்திப்போம்.
நீண்ட மக்கள் யுத்தப்பாதையே விடுதலை போராட்டத்திற்கு வெற்றி ஈட்டித் தரும் பாதை இந்திய "அமைதிப்படைக்கே" தண்ணி காட்டிய புலிகள், இன்று இலங்கையின் முப்படைகளுக்கும் மரணஅடி தந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கைப் படையில் சேர்வதற்கு இளைஞர்கள் தயாராக இல்லை. அப்படியே சேர்ந்தாலும் பயிற்சிக்காலத்திலேயே ஓடி விடுகின்றார்களாம். புலிகளை எதிர்த்துச் சென்றால் மரணம் நிச்சயம் என்பதை இலங்கை படையினர் உணர்ந்துள்ளார்கள். ஏகாதிபத்தியங்கள் கொடுத்த நவீன ஆயுதங்களை ஏந்திக் கொண்டு 'யாழ்ப்பாணம்' நோக்கி முன்னேறப் போவதாக பிதற்றுகின்ற இலங்கைப் படையின் தளபதிகளைப் பார்த்து முன்னாள் தளபதி கூறுகிறார், "புலிகளின் தந்திரம் தெரியாதவர்கள் நீங்கள். புலிகளை சுற்றி வளைத்து நசுக்குவதாகக் கூறிக் கொண்டு, நீங்கள் புலிகளின் சுற்றி வளைப்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். முன்னேற விட்டு பின்னர் தீவிரத்தாக்குதல் தொடுப்பார்கள். தகுந்த ஏற்பாடுகள் இன்றியாழ்ப்பாணம் நோக்கி முன்னேற வேண்டாம்" என எச்சரிக்கின்றார். கடைசியாக கிடைத்த தகவல்படி முன்னேறிக் கைப்பற்றிய பகுதிகளையும் கைவிட்டு விட்டு கடுமையான அடி வாங்கி, மீண்டும் புறப்பட்ட இடமான பலாலி தளத்திற்கே இலங்கை படையினர் போய்ச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. இந்த ஒரு யுத்தம் மட்டுமல்ல இது போன்ற பலயுத்தங்களை இன்னும் ஈழத்தமிழினம் காண வேண்டி வரலாம். என்றாலும் இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே. நீண்ட மக்கள் யுத்தப் பாதைதான் விடுதலைப் போராட்டத்திற்கு உகந்த பாதை, வெற்றிக்கு உத்தரவாதமான பாதை என்பதை புலிகள் நடத்தும் இந்த நியாயமான விடுதலைப் போர் மீண்டும் ஒரு முறை எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கை அரசை எதிர்த்து குமுறி எழுகிறது தமிழகம் இலங்கை அரசின் முப்படைத்தாக்குதலை எதிர்த்தும், புலிகளின் தலைமையிலான ஈழ விடுதலைப் போரை ஆதரித்தும், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், கொடும்பாவி எரிப்புகளும் கட்சி ரீதியாகவும், தன்னிச்சையாகவும் நடைபெற்றன. இதை, புலிகள் தடைச் சட்டத்தின் மூலமோ, தேசவிரோத சட்டங்கள் மூலமோ அடக்கி ஒடுக்கிவிட மத்திய, மாநில அரசுகள் சதி ஆலோசனை செய்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள தேசிய இன விடுதலை இயக்கத்தை ஆதரிப்போரும், ஜனநாயக சக்திகளும், குறிப்பாக இளைஞர்களும் இந்திய அரசின் சதிச் செயல்களுக்கு அடங்கிப் போவோர்களாக இல்லை. ஜனநாயக சக்திகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும், கட்சி அணிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவும், தமிழகத்திலுள்ள, தேசிய இன உரிமைக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், ஈழ மக்களின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் யுத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் தமிழீழத்தை ஆதரித்தும், இந்திய தலையீட்டை எதிர்த்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாட்டாண்மையை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தூதரகத்துக்கு முன்னால் ம.தி.மு.க, பா.ம.க, தி.க போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி சந்திரிகா அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளன. அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் கூட கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது பா.மா.க ஈழ விசயத்தை எவ்வளவுதான் தவிர்க்க பார்த்தாலும் தவிர்க்க முடியாமல் இலங்கை அரசின் முப்படைத் தாக்குதலைக் கண்டித்து தி.மு.க கூட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழகமெங்கும் நடத்தியது. இவையெல்லாம் நல்லதுதான். எனினும் நாடாளுமன்ற சந்தர்ப்ப வாதத்திலும் சீர்திருத்தவாதத்திலும் மூழ்கிக் கிடக்கும் இக்கட்சிகள், தனது சொந்த தேசிய இனமான தாய்த் தமிழகத்தின் சுய நிர்ணய உரிமையை அடைவதை நோக்கமாகக் கொள்ளாத இக்கட்சிகள், ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்தும், ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பு செயல்களை எதிர்த்தும் உறுதியாகத் தொடர்ந்து போராடுமென்று சொல்வதற்கில்லை. ஈழத்தமிழின பிரச்சினை குறித்து அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை வெளியிட்டுள்ள கருத்துக்கள் அது, தான் எப்போதும் பெரும் தேசிய வெறியின் காவலன் என்பதை உறுதிப்படுத்துகிறது. இலங்கை ஒற்றுமையின் அடிப்படையில்தான் ஈழத் தமிழின பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கூறுகிறார். எத்தகைய சூழ்நிலையிலும் ஒரு தேசிய இனம் தனிநாடு அமைத்துக்கொள்வதற்கு போராடக்கூடாது என மார்க்சியம் கூறுகிறதா? திருமணமான பிறகு கணவன் பெண்பித்தனாக, குடிகேடனாக, துன்புறுத்துபவனாக, ஒடுக்கு முறையாளனாக இருந்தாலும், எத்தகைய ஒரு நிலைமையிலும் ஒரு பெண் விவாகரத்து கோரக் கூடாது என்று சொல்வதுபோல்தான் அதன்வாதம் இருக்கிறது. நூறு ஆண்டுகளானாலும் ஈழத் தமிழினப்போர் வெல்லாது என்று வாதிடுகிறது. ஆனால் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் நூறு ஆண்டுகளானாலும் பிரச்சினை தீராது. நூறு ஆண்டுகளானாலும் ஈழ விடுதலைப்போரை ஒடுக்க முடியாது. இதனால் அந்நாட்டில் வர்க்கப்போராட்டத்திற்கான சிறந்த நிலைமைகள் உருவாகாது என்பது மட்டுமல்ல, அது பின்னுக்குத் தள்ளப்படும். மார்க்சு காலத்தில் எழுந்த அயர்லாந்து விடுதலைப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. "ஈழத்தமிழின பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பிரபாகரன் அழிக்கப்பட்டாலும் வேறு ஒருவர் தோன்றுவார், எனவே இதற்கு அரசியல் ரீதியில் தீர்வு கண்டாகவேண்டும்" என்று கூறும்படி சந்திரிகாவே நிர்பந்திக் கப்பட்டிருக்கிறார். இந்த வரலாற்று உண்மை 'மார்க்சிஸ்ட்' கட்சிக்கு எங்கே புரியப்போகிறது. திருத்தல்வாதிகளுக்கே உரிய 'வரலாற்றுக் கடமையை' ஆற்றி அது மடியவேண்டும் என்பது ஒரு நியதி. இந்த நியதியை 'மார்க்சிஸ்ட் கட்சி' யால் மீற முடியாது.ஈழத் தமிழினத்தின் சுய நிர்ணய உரிமையை நசுக்குவதற்கு துணைபோகும் இந்திய அரசையும், ஏகாதிபத்தியவாதிகளின் சதிச் செயலையும் எதிர்த்துப் போராடுவது தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளின் தவிர்க்க இயலாத கடமையாகும். புலிகளை ஆதரிப்பது துரோகம், ஈழ விடுதலையை ஆதரிப்பது பாவம் என மத்திய, மாநில அரசுகளும், அவைகளின் கைக்கூலிகளும் எழுப்பியிருக்கும் தடைச்சுவரை தூள்தூளாக்கிவிட்டு, ஈழமக்களின் விடுதலைப் போர் வெல்கவென்றும், இனவெறி அரசு ஒழிகவென்றும், தமிழீழம் மலர்கவென்றும் தமிழகமெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். ஈழப் போருக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.ஈழ மக்களின் தேசிய விடுதலைக்கெதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதிகளை முறியடிப்போம்!இந்திய அரசே! இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து!விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கு!பிரபாகரனை கைது செய்யும் நடவடிக்கையை கைவிடு!
என்ற முழக்கங்களின் பின் அணிதிரளுமாறு தமிழக மக்கள் அனைவரையும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்! 1992

ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!

அன்பார்ந்த தமிழக மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

இலங்கையில் ஜூன் 11ம் தேதியிலிருந்து மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தம் துவங்கிவிட்டது. இப்போர் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் அகம்பாவம், அடாத செயல்களால் இப்போர் நடைபெறுவதாக இங்கே ஆளும்வர்க்க அரசியல் கடசிகளால் பேசப்படுகிறது.
இப்போர் மூளுவதற்கான காரணம் என்ன? இந்திய ஆக்கிரமிப்பு படையை இலங்கையை விட்டு வெளியேற்றுவது என்ற கோரிக்கையின் மீது இலங்கை அரசுக்கும் புலிகள் அமைப்பிற்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பொம்மை வடகிழக்கு மாகாண கவுன்சிலை கலைத்துவிடுவது, அதற்குத் தேர்தல் நடத்துவது, பிரிந்து செல்லும் உரிமை கோருவதை தேச விரோதம் என்று கூறும் அரசியல் சட்ட 6-வது திருத்தத்தை ரத்துச் செய்வது, வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிங்களர் குடியேற்றத்தை கைவிடுவது ஆகிய கோரிக்கைகளை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவதாக ஒப்புக்கொண்டது. இலங்கை அரசு அவற்றை நடைமுறைப்படுத்தியதா? இல்லை. ஒப்பந்தத்திற்கு மாறாக, பொம்மை வடகிழக்கு மாகாண கவுன்சிலை எப்படியாவது நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் பிற அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. தேர்தல் நடத்துவதாக வாக்குறுதி கொடுத்த இலங்கை அரசு, புலிகள் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் தேர்தல் நடத்துவதாக இப்போது கூறுகிறது. இவ்வாறு அரசு கொடுத்த வாக்குறுதிகளை இப்போதுதான் முதன்முறையாக மீறுகிறதா? இல்லை. அதன் வாடிக்கையான பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் இப்போது விடுதலைப் புலிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறுவதும்கூட, இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி உருவான மாகாண கவுன்சிலுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கவுமில்லை, அந்த பொம்மைக் கவுன்சிலைகூட செயல்பட அனுமதிக்கவில்லை. இது ஒன்றே போதும் இலங்கை அரசின் யோக்கியதாம்சத்தைப் புரிந்து கொள்வதற்கு. ஏன் போர் மூண்டது? போர் நிறுத்த ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை இராணுவம் புலிகளின் அனுமதிபெற்றுத்தான் வெளியில் வரவேண்டும். ஆனால் ஒப்பந்தத்திற்கு மாறாக, இலங்கை இராணுவம் முகாமைவிட்டு வெளியே வந்தது. புலிகளின் எச்சரிக்கையை அது அலட்சியப் படுத்தியது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இது ஏதோ ஓர் தனிச் சம்பவம் அல்ல. சிங்களத் தீவிரவாத அமைப்பான ஜெ.வி.பி.யை நசுக்கி விட்டதைப்போல் விடுதலைப் புலிகளையும் அழித்து விடலாம் என்று எண்ணி இலங்கை அரசு யுத்தத்திற்கான ஏற்பாடுகளை துவங்கியது. வடகிழக்கு மாநிலத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது. இலங்கை அரசு போருக்கான ஆயத்தங்களை செய்யத் துவங்குவது தெரிந்தவுடன் விடுதலைப் புலிகள் எச்சரிக்கையாயினர். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து விடுதலை புலிகள் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் பெரும்போர்மூண்டது.
இது ஒரு தேசிய இன ஒடுக்குமுறை யுத்தமே விடுதலை புலிகளைத் தேடி அழிப்பது என்ற பெயரில் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை அரசு ஒரு இனவெறி பாசிச யுத்தத்தை ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. சர்வதேச விதிகளையும் போர் ஒழுக்க நெறிகளையும் மீறி இலங்கை இராணுவம் விமானத்திலிருந்து தீக்குண்டுகளை வீசுகிறது. எந்திரத் துப்பாக்கிகள் மூலம் சூட்டுத் தள்ளுகிறது. முதியவர், பெண்டிர், குழந்தைகள் என்று வித்தியாசம் பாராமல் ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கிறது. சுமார் எட்டு லட்சம் மக்கள் வீடுகள் இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். மக்களின் உடமைகள் நாசமாக்கப்பட்டன. எந்த நேரத்தில் மரணம் நேருமோ என மக்கள் அஞ்சி வாழ்கின்றனர். மக்களின் சமூக வாழ்வு இராணுவ பயங்கர நடவடிக்கைகளால் சின்னாபின்னமாக்கப் பட்டிருக்கிறது. புலிகளைச் சுற்றி வளைத்து நசுக்கும் யுத்தத்தை அது நடத்துகிறது. 'இனிப்போர் நிறுத்தம் இல்லை. புலிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம்' என இராணுவ அமைச்சர் முழங்குகிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பாகிஸ்தானிடமும், இஸ்ரேலிடமும் இராணுவ உதவி கேட்டுள்ளார். பிரேமதாசா, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வியட்நாம் மக்களுக்குச் செய்த போர்க் கொடுமைகளுக்கு இணையாக இலங்கை அரசு தனது சொந்த நாட்டு மக்களுக்கு கொடுமை இழைக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கான ஒரு தேசிய ஒடுக்குமுறைப் போராகவே இப்போர் இருக்கிறது.
விடுதலை புலிகளின் நீதி யுத்தம், ஒரு நீண்ட யுத்தமே இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்று ஒரு சுதந்திரமான தேசமாக வாழ்வதா? அல்லது பணிந்து அடிமைப்பட்டு அவதியுற்றுக் கிடப்பதா? என்பதுதான் இன்று ஈழத் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சினை. விடுதலை புலிகள் அமைப்பு இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்து ஒரு தேசிய விடுதலை யுத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. புலிகளை அழித்துவிட்டு சில நாட்களுக்குள் ஈழத்தமிழ் நிலத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுவோம் என இலங்கை அரசு கூறுகிறது. கிழக்கு மாகாணத்தில் சில நகரங்களை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், புலிகளின் முற்றுகையை உடைத்துவிட்டு யாழ் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டாலும், ஏன் யாழ் தீபகற்பத்தையே இப்போது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் வெற்றிபெற்று விடுமானாலும்கூட, கிராமங்களும், காடுகளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இலங்கை அரசு ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்தும், அயல் நாட்டு பிற்போக்கு அரசுகளிடமிருந்தும் எவ்வளவுதான் இராணுவ உதவி பெற்று வலுக் கொண்டு தாக்கினாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தையும் அதனால் எளிதில் அடக்கிவிட முடியாது. ஏனெனில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு நீண்டகால யுத்தத்திற்கு தயாராகி உள்ளது. கிராமங்களிலும், காடுகளிலும் பதுங்கி, மக்களையே தனது அரணாகக் கொண்டு போரிடுமானால், ஒரு நீணடகாலத்திற்கு போராடுவது சாத்தியம். இந்திய ஆக்கிரமிப்புப்படையை எதிர்த்து விடுதலை புலிகள் அமைப்பு நடத்திய யுத்தத்தை ஒரு அனுபவமாகக் கொண்டு பார்ப்போமானால் விடுதலைப் புலிகளால் ஒரு நீண்டகால யுத்தத்தை நடத்துவது சாத்தியமானதுதான் என்ற முடிவிற்கு ஒரு நியாயபுத்தி உடைய எவரும் வரலாம். எனவே புலிகளை எதிர்த்து இலங்கை இராணுவம் நடத்தும் யுத்தம் ஐந்து பாண்டவரை ஒழிக்க நூறு கௌரவர்கள் நடத்திய பாரதப் போர் கதையைப் போன்றுதான் இருக்கும்.
ஈழத்தனிநாட்டிற்கான போரும் ஜனநாயக வாதிகளின் நிலைபாடும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் 1983ல் ஒரு தேசிய விடுதலை யுத்தம் என்ற வடிவம் எடுத்ததிலிருந்து, அது பல்வேறு கட்டங்களைக் கடந்து, இன்று இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஓர் உள்நாட்டு யுத்தம் என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்தப் போர் ஏதோ இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தனிப்பட்ட நலன்களுக்காக நடத்தப்படும் ஒரு போரைப் போலவும், இந்தப் போர் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்குத் தொடர்பு இல்லாததைப் போலவும் ஆளும் வர்க்கங்கள் இப்போரைச் சித்தரிக்கின்றன. இப்போரில் பிற அமைப்புகள் பங்கு கொள்ளவில்லை. புலிகள் அமைப்பு மட்டுமே தனியாக நடத்துகிறது என்றும், அவை கூறுகின்றன. இப்போரில் இலங்கை அரசை எதிர்த்து புலிகள் அமைப்பு தனித்துப் போரிடுகிறது என்பது உண்மையே. இவ்வாறு அது தனித்து நின்று போரிடுவது இந்த தேசிய விடுதலை யுத்தத்தின் பலமும், பலவீனமும் ஆகும்.
விடுதலை புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடும் நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன? இந்திய 'அமைதிகாக்கும் படை'யை எதிர்த்து யுத்தம் நடந்த போதே ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, பிளாட் ஆகிய அமைப்புகள் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் சேர்ந்து கொண்டன. இவ்வமைப்புகள் இந்திய படையுடன் சேர்ந்து விடுதலை புலிகள் அமைப்பை அழிக்கவும், ஈழத்தமிழ் தேசிய இன விடுதலை இயக்கத்தை நசுக்கவும் முயன்றன. ஆகையால், இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர் நடந்தபோதே தனித்து நின்று போராட வேண்டியதாயிற்று. இன்றைய உள்நாட்டு யுத்தத்தில் இவ்வமைப்புகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் - நீங்கலாக பிற அமைப்புகள் பிரேமதாச அரசுடன் நேரடியாக சேர்ந்துக்கொண்டு ஈழ தேசிய விடுதலைக்கு எதிராகச் செயல்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப்-பின் கொள்கைகள் புலிகளை ஒடுக்குவதற்கு மறைமுகமாக சேவை செய்கின்றன. இவ்வாறு இப்போரில சில அமைப்புகள் நேரடியாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் மறைமுகமாகவும் பிரேமதாசா அரசுக்குத் துணைபோவதால் இவ்வமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு சிதறுண்டு போயின. எனவே இன்றைய யுத்தத்தில் விடுதலை புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிட வேண்டியுள்ளது. இவ்வமைப்புகளிடமிருந்து வேறுபட்டும், அவற்றை எதிர்த்தும், அது தனித்து நின்று போரிடுவது ஈழத் தமிழின விடுதலை யுத்தத்திற்கு பாதகமானது அல்ல. சாதகமானதும்கூட. விடுதலைப்புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் உண்டு. அதைப் பின்னர் எடுத்துக் கொள்வோம். இப்போது நடைபெறும் யுத்தத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு இரு தரப்பினரையும் எதிர்த்துப் பேசுகிறது. தான் நடுநிலை வகிப்பதாகக் கூறிக்கொள்கிறது. இவ்வமைப்பு முன்வைத்துள்ள பத்தொன்பது கோரிகைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்குப் பிறகு சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. இவ்வாறு தேசிய சுயநிர்ணய உரிமையை ஒரு பேரப் பொருளாக மாற்றுகிறது. போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இராணுவ வழியில் ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாதென்றும், அரசியல் வழியில் தான் தீர்வுகாண முடியுமென்றும் அது கூறுகிறது. அவ்வமைப்புக் கூறும் அரசியில் தீர்வின் உண்மையான பொருள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு, வடகிழக்கு மாநில கவுசிலுக்கு அதிக அதிகாரத்துடன் திருப்திக் கொள்ள வேண்டும் என்பதுதான், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையில்லாமல், மாநில கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டாலும் இலங்கை அரசமைப்பிற்குள் ஈழத்தமிழ் தேசிய இனம் இன ஒடுக்கு முறையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. ஆனால் இரு தேசிய இனஙகளும் இலங்கை அரசுக்குள் சேர்ந்து வாழ முடியாது என்பதை இப்போது இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன ஒடுக்குமுறை யுத்தம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. வரதராஜப் பெருமாள் தலைமையில் அமைந்த மாநிலக் கவுன்சிலை கூட இலங்கை அரசு செயற்பட அனுமதிக்கவில்லை. இவ்வமைப்புக்கூட பத்தொன்பது கோரிக்கைகளை ஓராண்டிற்குள் ஏற்கப்படாவிட்டால் தனிநாடு எனப்பிரகடனப்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகும்கூட "மாநிலக் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம்" என்ற கேடுகெட்ட சீர்திருத்த முறையிலான தீர்வைத்தான் திரும்பத் திருமபக் கூறுகிறது. "அதிக அதிகாரம்", "அரசியல் தீர்வு", "போர் நிறுத்தம்" என்பதெல்லாம் தேசிய விடுதலை யுத்தத்திலிருந்து மக்களை சீர்திருத்தப்பாதைக்கு திசை திருப்புவதுதான். விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களைத் தேசிய ஒடுக்குமுறையாளர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற பழைய பல்லவியைப் பாடுவதத் தவிர இது வேறு ஒன்றுமில்லை. இலங்கை - இந்திய அரசுகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கே இது பயன்படும். ஆகவே இப்போக்கு நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர ஏற்க வேண்டியதல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் உண்டு என்று முன்பே குறிப்பிட்டோம். அவ்வமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்கும், ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரங்களையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற அதன் பாசிசக் கொள்கையே அந்த இரண்டாவது காரணமாகும். இக்காரணத்தால் பாசிசப் பிரேமதாசா அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்க்கும் அனைத்து தேசிய விடுதலை ஆதரவு சக்திகளையும், அவ்வரசின் பாசிச ஒடுக்குமுறையால் ஒடுக்கப்படும் இலங்கை வாழ் ஜனநாயக சக்திகளையும் தேசிய இன விடுதலைப் போருக்கு ஆதரவாகத் திரட்ட இயலாது. தேசிய விடுதலைப் போரில் ஊன்றி நிற்பதற்கு தடையாகி, போராளிகள் சமரசப்போக்கிறகு இரையாகி பணிந்து போவதற்கான நிலைமைகளை உருவாக்கக் கூடியதாகவும் இருகிறது. எனவே விடுதலைப் புலிகளின் இப்போக்கை எதிர்த்துப் போரிடாமல் ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கொள்ள முடியாது. சுருங்கக்கூறின் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத்தமிழின தேசிய விடுதலைக்காக விடாப்பிடியாகப் போராடுகிறது. அதே நேரத்தில் அது ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளைக் கடைப்பிடிக்கிறது. விடுதலை புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்கின் காரணமாக, பாட்டாளி வர்க்க இயக்கத்தினரும், ஜனநாயக சக்திகளும் இன்றைய ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போரில் புலிகள் அமைப்பின்பால் என்ன அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரச்சினை. ஈழத்தமிழ் தேசிய இனப்போராட்டத்தில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் முன்னேற்றம் - ஜனநாயகம் மற்றொன்று தேசிய இன விடுதலை யுத்தத்தில் விடாப்பிடியாக இருப்பது. இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. அரசியல் முன்னேற்றம்-ஜனநாயகம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமாக விடுதலைப் புரட்சி சக்திகள் யுத்தத்தில் விடாப்பிடியாக இருக்க முடியும். யுத்தத்தில் எந்த அளவிற்கு விடாப்பிடியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அரசியல் முன்னேற்றம் - ஜனநாயகத்தின் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். ஆனால், அடிப்படை எல்லாமே விடுதலைப் புரட்சி சக்திகள் யுத்தத்தில் விடாப்பிடியாக தங்கியிருப்பதில்தான் உள்ளது. எனவே விடுதலை புலிகள் அமைப்பு தேசிய விடுதலை யுத்ததில் விடாப்பிடியாக இருக்கும் வரையில், தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையும், அவர்களின் ஜனநாயக மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்த போராட்டமும்தான் ஈழத்தமிழ் பாட்டாளி வர்க்க இயக்கத்தினர் மற்றும் ஜனநாயகவாதிகளின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறைப் போராட்டத்தில் ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை அனைத்து ஜனநாயகவாதிகளும் தமது செயல்தந்திரமாக கொள்ள முடியும்.
ஈழவிடுதலைப் போரும், நமது பணிகளும் இந்திய அரசு, 1983லிருந்து 1987ல் இந்தியப்படை இலங்கையில் தலையிட்ட காலம் வரையிலான ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலிருந்து தற்போது நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை வேறுபடுத்திப் பார்க்கிறது. முன்கூறப்பட்ட காலப் பகுதியில், இலங்கை அரசை எதிர்த்த தமிழீழ தேசிய இன உரிமைப் போராட்டத்தில் சமரசப் போக்குடைய, பாராளுமன்றவாத டி.யூ.எல்.எப் முதல் எல்.டி.டி.இ வரையிலான பல்வேறு வகைப்பட்ட சக்திகள், அரசியல் சக்திகள் பங்குகொண்டன. ஆனால் இப்போது இலங்கை அரசை எதிர்த்து நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை எல்.டி.டி.இ (விடுதலைப் புலிகள் அமைப்பு) மட்டுமே தனியாக நடத்துகிறது. அன்று 1983 - 1987 போராட்டத்தின்போது அதில் பங்கு கொண்ட அரசியல் சக்திகள் மற்றும் குழுக்கள் அனைத்தும் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தவை அல்ல. டி.யூ.எல்.எப் அமைப்பு 1983 ஜூன் கலவரத்திற்கு முன்பே தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டது. எல்.டி.டி.இ (விடுதலைப் புலிகள்) தவிர பிற போராளி அமைப்புகள் தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பதில் ஊசலாட்டம் அல்லது கைவிடும் நிலையில் இருந்தன. ஆனால் இப்போது எல்.டி.டி.இ மட்டும் தனியாக நின்று யுத்தம் நடத்துகிறது. அதன் குறிக்கோள் தனிநாடு காண்பதுதான். 1983-1987ஆம் ஆண்டுகளின் போராட்ட காலத்தில் அதில் பங்குகொண்ட சக்திகளை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை கைவிடச்செய்து, தமிழ்ழீழ மாநிலம் அமைப்பதுடன் திருப்திக்கொண்டு' இலங்கைமீது தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அதே போல், இப்போது யுத்தத்தை நடத்தும் எல்.டி.டி.இ ஐ - தற்போது ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது என இந்திய அரசு கருதுகிறது. ஆகையால் 1983 - 1987 காலத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்திற்காக, மறைமுகத் தலையீடு என்ற கருவியை பயன்படுத்தும் பொருட்டு தமிழகத்தைப் போராளிகள் தமது பின்புலமாகப் பயன்படுத்துதல் என்ற கொள்கையை இப்போது நடைபெறும் யுத்தத்தின் இன்றைய கட்டத்தில் பயன்படுத்த முடியாது என இந்திய அரசு கருதுகிறது. எனவே எல்.டி.டி.இ யினர் தமிழகத்தைப் பின்புலமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய அரசு 1987ல் இலங்கைக்கு இந்திய 'அமைதிகாக்கும் படையை' அனுப்பியது. ஆனால் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு படையை அனுப்பும் வாய்ப்பு இப்போது இல்லை என இந்திய அரசு கருதுகிறது. என்றாலும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இப்போது நடைபெறும் யுத்தம் ஒரு நீண்டகால யுத்தமாகவே இருக்கும். ஒருவரை யொருவர் தோற்கடிக்க முடியாமல் இதே யுத்தம் ஒரு நீண்ட காலத்திற்கு நீடித்தால் இரண்டுவிதமான நிலைமைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இந்த யுத்ததில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பினருமே அன்னிய இராணுவ உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படலாம். யுத்தத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தைக்கான ஒரு வாய்ப்பு தோன்றலாம்.இவ்விரு வாய்ப்புகளைக் கருதியே இந்திய பிரதமர் வி.பி.சிங் "இந்திய - இலங்கை ஒப்பந்தம்" இன்னும் அங்கே அமலில் இருக்கிறது" என்று சொல்கிறார். "இலங்கையின் உள் விவகாரங்களில் மூன்றாம் நாடுகள் தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது" என இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் குஜ்ரால் கூறுகிறார். பிணம் தின்னும் கழுகைப் போல், இந்திய அரசு இலங்கையில் நேரடியாகத் தலையிடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்திய அமைச்சர்களின் பேச்சுகள் காட்டுகிறது. ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி இந்திய அரசுக்கும் கவலையில்லை. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையில் தலையிட்டு எப்படியாவது அதன்மீது தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதுத்தான் இந்திய அரசின் நோக்கம். பாகிஸ்தானுடன் யுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் நீங்காத நிலைமையில் கடல் கடந்த நடவடிக்கையில் இந்தியப் படையை இப்போது ஈடுபடுத்த முடியாது. ஆகையால் தலையீட்டிற்கான வாய்ப்புக்காக அது காத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு சூழ்நிலைமையில்தான் இந்திய அரசு நடுநிலை வகிப்பதுபோல் பாசாங்குச் செய்கிறது. அதேநேரத்தில், இலங்கை அரசுக்கு உதவத் தயார் எனவும் வி.பி.சிங் கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியோ தனது உண்மைச் சொரூபத்தை மூடிமறைத்துக் கொள்வதற்காக ஈழத்தமிழருக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி பந்த் நடத்துகிறார். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து கொண்டு தமிழகத்தில் ஈழத்தமிழ் விடுதலைப் போரில் ஈடுப்படுவோரை நடமாடக் கூட அனுமதிப்பதில்லை. இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் கட்சிகளும், திருத்தல் வாதக் கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய அனைத்தும் தற்போது நடைபெறும் யுத்தம் ஈழத்தமிழினத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கின்ற ஒரு பாசிச இன ஒடுக்குமுறை யுத்தம் என்பதை மூடி மறைக்கும் பொருட்டு, இந்த யுத்தம் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தமாக மட்டுமே சித்தரித்துக் காட்டுகின்றன. இந்த யுத்தம் ஈழத்தமிழினத்தை ஒடுக்கும் ஒரு யுத்தம் என்ற உண்மையைச் சொல்ல மறுக்கின்றன. சிவிலியன்கள் - சாமானியர்கள் கொலை செய்யப்படக் கூடாது என குரல் எழுப்பி விடுதலைபுலி அமைப்பினர் கொல்லப்படுவதை நியாயப் படுத்துகின்றனர். இந்திய ஆக்கிரமிப்பு படையை எதிர்த்து விடுதலை புலிகள் போராடி அதை இலங்கையை விட்டு வெளியேறச் செய்ததற்காக, இக்கட்சிகள் இப்போது அவர்களை பழிவாங்க முயல்கின்றன.இந்தப் போரில் ஈழத்தமிழ் தேசிய இனம் வெற்றி பெற்றுவிட்டால், அதைக் கண்டு இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வீறு கொண்டு எழுந்து போராட்டப் பாதையில் இறங்கிவிடுமோ, ஏற்கெனவே தனிநாடு கோரி போராடும் காஷ்மீர் மக்கள் இறுதிவரை போராடுவோம், என்று உறுதி கொள்வார்களோ என அஞ்சி, இந்திய அரசு ஈழத்தமிழரின் தனிநாட்டிற்கான போராட்டத்தை ஒடுக்குவதற்காக இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கிறது. தமிழின ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கருணாநிதி, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைப் பற்றி கவலைப்படாமல் "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்" என்ற சில்லரைக் கோரிக்கையுடன் திருப்தி கொண்டுவிட்ட கருணாநிதி, இந்திய அரசின் இலங்கைக் கொள்கைக்கு துணை போவது இயல்பானதே. எனவே மத்திய - மாநில அரசுகளின் சதிச் செயல்களை முறியடித்து, ஈழத் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போர் வெற்றி பெறச் செய்யும் பொருட்டு.
இந்திய அரசே!
இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்!
ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
தமிழக மக்களே!
ஈழத்தமிழரின் விடுதலைப் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்!
தமிழகத்தை ஈழத் தமிழின விடுதலைப் போருக்கு பின்புலமாக்குவோம்!
என்ற முழக்கங்களின்பின் அணி திரளுமாறு அறைக்கூவி அழைக்கிறோம்.
செப்டம்பர், 1990.

தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும்

தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையும் முதலாளித்துவ தேசிய வாதமும்
திருச்சி மாவட்ட முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் "இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தமிழீழ நாடு பெறுவது! தமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!" என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் வைக்கப்படுள்ளன. குறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை புரட்சிக்கு புதிய எல்லைகளை வகுத்து தருவதாகவும், எனவே ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசாக பிரிவதும், தொழிலாளர் வர்க்க கட்சி, இன அடிப்படையில் தனித்தனியாக கட்டப்படுவதும், இச்சகாப்பத்தத்தில் செய்யப்பட வேண்டியவை என்றும் அது கூறுகிறது. இக்கருத்துக்கள் மார்க்சிய - லெனினியத்திற்கும் முற்றிலும் புறம்பானவை. பாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமானவை இது எவ்வாறு என்று பரிசீலிக்கும் முன்பாக தேசிய இனப் பிரச்சனை பற்றியும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுவான மார்க்சிய - லெனினிய கண்ணோட்டம் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் தேசம், தேசிய இனப் பிரச்சனை என்றால் என்ன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஏன் எழுகிறது, அதன் பொருளென்ன என்பவற்றைப் பார்ப்பது அவசியம் அடுத்து தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இப்பிரச்சனை என்ன வடிவம் எடுக்கிறது, அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது, இப்பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும், பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு கட்டப்பட்ட வேண்டும் என்பனவற்றையும் மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனை வெளிச்சத்தில் பார்ப்போம். இறுதியாக திருச்சி முற்போக்கு இளைஞர் அணி பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் காணப்படும் தவறான கருத்துக்களை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

தேசம், தேசிய இனப்பிரச்சனை என்றால் என்ன? தேசம், தேசிய இனம் என்றால் என்ன?
ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன. அவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களீன் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர். தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றன. தேசிய இயக்கங்கள் முதலாளித்துவத்துடனும் சரக்கு உற்பத்தியுடனும் தொடர்புடையது என்றும் தேசம் என்பது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்த வகையினம் என்றும் ஏன் கூறுகிறோம்? சரக்கு உற்பத்தியும் சரக்கு பரிவர்த்தனையும் துரிதமாக நடந்தேறுவதற்கு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும், ஸ்தல சந்தைகள் ஒன்றோடொன்றுடன் பிணைக்கப்படுதலும் அவசியம். மனித உறவுகளுக்கு மிக முக்கிய சாதனம் மொழியாதலால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே பரிவர்த்தனை உறவுகள் மிக விரைவில் வளர வாய்ப்புள்ளது. எனவே சரக்கு உற்பத்தி வளரத் தொடங்கியதும் அது ஒரு மொழிப் பகுதியில் பற்றி படர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழிப் பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாக வழியிருந்தால் சரக்கு உற்பத்தியின் பெருக்கத்திற்கும் அப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்ட வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் அபிவிருத்திற்கும் மிகவும் உகந்தது. எனவே முதலாளித்துவம் தனது சந்தை நலன்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்ற விரும்புவதுடன் அப்பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாகவுமிருக்க விரும்புகிறது. அம்மொழியின் ஐக்கியத்தையும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியையும் விரும்புகிறது. ஆகவேதான் எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களும் தேசிய அரசு அமைத்தலுக்கான முயற்சிகளும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. தேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்."உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்."(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)

இனி தேசிய இன பிரச்சனை என்றால் என்ன? அது ஏன் எழுகிறது என பார்ப்போம். ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன. இம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம். எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும். வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையா, அந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.

தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்த காலகட்டம். இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதை தடுக்கின்றன. தேசிய இன ஐக்கியத்தை தடுக்கின்றன. ஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளை தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவின. இந்நிகழ்ச்சிப்போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தன. இவ்வாறு இப்பிரச்சனை பழையவகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டன. ஒரே அரசின் எல்லைக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போதுகூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் அமைதியாக சேர்ந்து வாழ முடியும் அல்லது அமைதியாக பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உம். சுவிட்சர்லாந்து, நார்வே) அடுத்து தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகபுரட்சிகள் நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புமுறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்துவந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது (உ.ம். ஜாரிச ரஷ்யாவில் போலந்து, உக்ரேன்) இம்முரண்பாடுகள் தேசிய இனப் பிரச்சனையாக உருவெடுத்தன. அதே சமயம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்துவிட்டபடியால் முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவ புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கட்டம் தொடங்கிவிட்டது. எனவே பழைய வகை முதலாளித்துவ புரட்சி கட்டத்தின் போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக்கடமைகளை பாட்டாளிவர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது. ஆகவே தேசிய இனப்பிரச்சனைகளும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக மாறுகின்றன. அக்டோபர் புரட்சியினால் தீர்த்துவைக்கப்பட்டன. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமை உத்திராவாதம் செய்யபடுகின்ற ஜனநாயக அமைப்பில் பல தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ முடியும், இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. முன்பு முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்காகயிருந்த இன சமத்துவ அரசுகள் தற்போது பொது விதியாக மாறுகின்றன.

அடுத்து ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமதுகாலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அக்காலனி, அரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும், பொருளாதார, சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும், ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனி, அரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றின. ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தமாக இருப்பதால் அந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே இவ்வியக்கங்கள் உலக பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகமாறின, இப்புரட்சி முற்றுப் பெற்ற இடங்களில் இத்தேசியயின பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டன. (உ-ம். மக்கள் சீனம்) இந்த மூன்றாவது காலகட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.

இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் - மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை, மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்.

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் அத்துடன் இது ஏகாதிபத்திய சக'ப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

இந்த கண்ணோட்டம் மேற்குறிப்பட்ட திருச்சி முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் வெளியிடப் பட்டுள்ள பிரசுரத்தில் தென்படவில்லை, அது தேசிய இன பிரச்சனைகளை தனித்துப் பார்ப்பதுடன் ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவது மட்டுமே ஒரே தீர்வாக கருதுகிறது. ஒவ்வொரு நாடுகளுக்குமுள்ள சிறப்பியல்புகளைக் கணக்கில் கொள்ளாமல் தனித்தேசிய அரசுகள் என்பதை உலகப்பொது விதியாக்குகிறது. ஆகவே இது பற்றிய லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் அப்பிரசுரம் ஏகாதிபத்திய சகாப்த்திற்கான தீர்வாக பேசுவதால் அச்சகாப்த்தத்தில் இப்பிரச்சனையின் தீர்வு பற்றிய மார்க்சிய லெனினிய கருத்தோட்டத்தையும் பார்ப்போம்.

தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறைமுதலில் எந்த ஒரு நாட்டின் இனச்சிக்கலையும் பற்றி ஆராயும்போது அதைத் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் வைத்து அதாவது அந்தநாடு எந்த வரலாற்றுக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என்ற பின்னனியில் ஆராயவேண்டும். ஒரு நாட்டிற்கு ஒரு கட்டத்தில் பொருந்திய தீர்வு இன்னொரு கட்டத்தில் பொருந்திவராது.ஒரே வரலாற்றுக் கட்டத்திலுள்ள இரு நாடுகளில் ஒரு நாட்டை இன்னொரு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.தேசிய இயக்கங்களை பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் இரு காலக்கட்டங்களை வேறு படுத்தி பார்க்க வேண்டும்.பல்வேறு நாடுகளின் தேசிய சிக்கல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சிக் கட்டங்கள் ஒப்பிடக் கூடியவைதானா என பார்க்க வேண்டும். ஒரு நாட்டுக்கு பொருந்திய தீர்வு அப்படியே வேறொரு நாட்டுக்குப் பொருந்தாது.
ஏகாதிபத்திய சகாப்த்தத்தில் தேசிய இன பிரச்சனைமுதலாளித்துவம் ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின் முதலில் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளே பிறநாடுகளை ஒடுக்கும் ஏகாதிபத்தியங்களாக மாறிவிட்டன. ஆகவே உலகம் முழுவதும் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் பிரிந்து விட்டன. ஆகவே காலனி, அரைக்காலனி நாடுகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடையும் பிரச்சனையும் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையே.தேசிய விடுதலை யுத்தங்கள் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தை மட்டுமின்றி ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.எந்தகாலனி, அரைக்காலனி நாடுகளிலும் நடக்கும் புரட்சிகளும் பழையவகைப்பட்ட பூர்சுவா ஜனநாயகப் புரட்சியல்ல. புதியவகைப்பட்ட ஜனநாயக்ப் புரட்சியே பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் உலக சோசலிச புரட்சியின் பகுதியே. எனவே காலனி, அரைக்காலனி நாட்டு தேசிய இனப்பிரச்சனைகள் புதிய ஜனநாயகப் புரட்சியின் பிரச்சனையாக அதன் பகுதியாக மாறி விடுகின்றன.காலனி, அரைக்காலனி நாடுகளின் தேசிய இனப்பிரச்சனைகள் இரு அம்சங்கள் கொண்டவையாக மாறுகின்றன. அந்த குறிப்பிட்ட நாடு முழுவதும் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைவதும் அந்நாட்டு எல்லைக்குள் உள்ள அனைத்து தேசிய இனங்களும் சமத்துவம் அடைவதும் என்பவையே அந்த இரு அம்சங்கள். லெனின் ஏகாதிபத்தியத்தின் விதிகளைப் பற்றி ஆய்வுகளை முடிக்கும் முன்பாக போல்சுவிக்குகள் தேசிய இனப்பிரச்சனையை பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக பாராமல் பழைய பூர்சுவா - ஜனநாயக புரட்சியின் பகுதியாகப் பார்த்தனர் என்றும், ஏகாதிபத்திய யுத்தமும் ருசியாவில் அக்டோபர் புரட்சியும் தேசிய இனப் பிரச்சனை பழைய பூர்சுவா ஜனநாயகப் புரட்சியின் பகுதியாகயிருந்த நிலையை மாற்றி பாட்டாளிவர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக ஆக்கிவிட்டன என்றும் ஸ்டாலின் 'மீண்டும் தேசிய இனப்பிரச்சனை குறித்து' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அக்டோபர் புரட்சியானது "தேசிய இனப் பிரச்சனையின் எல்லையை விரிவுபடுத்திற்று. ஐரோப்பாவில் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்தல் என்ற குறிப்பான பிரச்சனையாக இருந்ததை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்கள், காலனிகள், அரைக்காலனிகளை ஏகாதிபத்திடமிருந்து விடுவிக்கும் பொதுவான பிரசனையாக ஆகிவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார்.
மேற்கூறிய லெனினதும் ஸ்டாலினதும் ஆய்வுகளின் அடிப்படையில் மாவோ சீனாவில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றி ஒரு திட்டவட்டமான கொள்கையை உருவாக்கினார். சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏகாதிபத்தியத்திடமிருந்து சீனாவை விடுவித்தல் என்ற தேசிய வடிவத்தை எடுப்பதை அவர் பார்த்தார். அத்துடன் சீன நாட்டினுள் சிறுபான்மை தேசிய இனங்கள் சிறு அளவிலே இருப்பினும் அவற்றின் பிரச்சனையையும் அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. சீனாவின் தேசியத்திற்கு இரு அம்சங்கள் உண்டு என அவர் கூறுகிறார். "ஒன்று சீன தேச விடுதலை, இரண்டாவது சீனாவிலுள்ள தேசிய இனங்கள் அனைத்தின் சமத்துவம். சீனாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சுதந்திர ஐக்கியப்பட்ட சீனக் குடியரசு (அனைத்து தேசிய இனங்களின் சுதந்திர ஐக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்த பிரபு - எதிர்ப்பு புரட்சியின் வெற்றிக்குப்பின் ஸ்தாபிக்கப்படும் என்ற சன்யாட்ச்சனின் விளக்கத்தை அப்படியே மாவோ ஏற்றுக்கொள்கிறார்) (மாவோ தேர்வு நூல் - முன்னுரை பகுதி கூட்டணி அரசாங்கம் பற்றி பக்கம்225) சீனாவிலுள்ள அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களின் விடுதலையும் சீனத்தேசத்தின் ஒரு அம்சமாகயிருப்பது எவ்வாறெனில் ஏகாதிபத்தியத்திற்கும் காலனி நாடுகளுக்கும் உள்ள முரண்பாடு என்பதும் ஒரு தேசிய இனப் பிரச்சனையாக விளங்குவதால்தான் சாரமாக கூறுவதெனில் ஏகாதிபத்திய காலத்தின் ஆளும் விதிகளை லெனின் முழுமையாக ஆய்வு செய்து வகுத்தபின் அதாவது 1916க்கு பின் இரு முக்கிய முடிவுகளுக்கு வந்து சேருகிறார்.ஏகாதிபத்தியத்திற்கும் காலனி, அரைக்காலனி நாடுகளுக்குமுள்ள முரண்பாடு தேசிய இனப்பிரச்சனையே அந்நாடுகள் விடுதலையடையும் பிரச்சனை சுயநிர்ணய உரிமை பிரச்சனையே (சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்)மேற்கூறிய தேசிய இனப் பிரச்சனை உட்பட உலகின் அனைத்து தேசிய இனப்பிரச்சனைகளும் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளும் உலகப் பாட்டாளிவர்க்க புரட்சியின் ஒருங்கிணைத்த பகுதிகளே பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்தான் தீர்க்கப்பட முடியும் ஆகவே பாட்டாளி வர்க்கம் இனங்கள் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமைக்காகவும் இன சமத்துவத்திற்காகவும் போராட வேண்டும். 'சுயநிர்ணயம் உட்பட பற்பல ஜனநாயக கோரிக்கைகளும் சார்பற்ற முழுமையல்ல; பொதுவான - ஜனநாயக (தற்போது - பொதுவான சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியே" (சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத் தொகுப்பு). ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒவ்வொரு தேசிய இனவாரியாக தனித்தனி அணி கட்டுவதே பாட்டாளி வர்க்க கடமையாக திருச்சி பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதால் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளாக லெனினியம் போதிப்பது என்ன என்பதையும் பார்ப்போம்.
பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி முற்றுப் பெறாத நாடுகளில் பாட்டாளி வர்க்க கடமை பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி முற்றுபெறாத நாடுகளில் அரசமைப்பு ஜனநாயக ரீதியில் சீரமைக்கப்படாத நாடுகளில் அதாவது கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவிலும் தேசியக் கொள்கை விஷயத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பணி இருவகைப்பட்டதாக இருக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.எல்லாத்தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது, பூர்ஷ்வா வர்க்கம் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடாது. தொழிலாளி வர்க்க ஜனநாயகமாவது முரண்பாடற்ற முறையில் மனப்பூர்வமாக இனசமத்துவத்திற்காகப் போராட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக பிரிக்க முடியாது ஒன்றுபடுவது. அவ்வரசின் வரலாற்றில் எம்மாறுதல் நிகழ்ந்தாலும், பூர்ஷ்வாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் இந்த ஒற்றுமை நீடிப்பதாக இருக்க வேண்டும். இந்த லெனினிய நிலை ஒவ்வொரு இனமும் தனித்தனியே பிரிதல், தனித்தனி அணி என்ற கருத்துகளை மறுக்கிறது. ஏகாதிபத்திய சகாப்த விதிகளைப் பற்றி லெனின் முழுமையாக ஆய்வு செய்தபின் இந்த மேற்கூறிய கடமைகள் மாறிவிட்டதாகக் கூற முடியுமா? ஒடுக்கும்தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் ஒடுக்கப்படும் தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் லெனின் கூறுவது என்ன? 1916ல் லெனின் எழுதிய சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் ஒடுக்கப் பட்ட தேசங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகப் பாட்டாளிவர்க்கத்தால் போராடமல் இருக்க முடியாது. அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடமல் இருக்க முடியாது. மற்றொரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஒற்றுமையை நிறுவன ஒழுங்கமைப்பு உட்பட ஆதரித்துக் காத்து செயல் படுத்துவது ஒடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்த சோசலிஸ்டுகள் குறிப்பாக செய்ய வேண்டியதாகும் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார். ஒடுக்கும் தேசிய இனத்தைச்சார்ந்த பாட்டாளிவர்க்கம் தமது இன சுரண்டும் வர்க்கங்களின் பேரினவாதத்தையும் பிற இனங்கள் மீதான அடக்குமுறையையும் பிற இனங்களை கட்டாயமாக ஒரு அரசில் பிடித்து வைத்திருப்பதையும் பிரதேச விஸ்தரிப்புகளையும் விட்டுக்கொடுக்காது எதிர்க்க வேண்டும். அந்த அரசு எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை கோரவேண்டும். இதைச்செய்யாத ஒரு மார்க்சியவாதி சர்வதேசியவாதியல்ல. அதேசமயம் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி தனது கிளர்ச்சிகளில் தேசங்களின் மனப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்த வேண்டும். தனது தேசத்தின் அரசில் விடுதலையை ஆதரித்துக் கொண்டே அருகாமையிலுள்ள அரசுடன் ஐக்கியப் படுவதையும் ஆதரிப்பது சாத்தியமே அவர் சிறு தேசிய குறுகிய மனப்பான்மையும், தனித்துவப் போக்குகளையும் எதிர்த்துப் போராடவிட்டால் அவரும் ஒரு சர்வதேசிய வாதியல்ல. "ஒடுக்கும் தேசத்தின் சமூக - ஜனநாயகவாதி பிரிந்து செல்லும் சுதந்திரத்தையும் ஒடுக்கப்பட்ட தேச சமூக ஜனநாயகவாதி ஐக்கியப்படும் சுதந்திரத்தையும் வலியுறுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால் சர்வதேசத்திற்கும் தேசங்களின் ஒன்றினைப்பிற்கும் வேறெந்த பாதையும் கிடையாது. இருக்க முடியாது என்பது புரியவரும். (லெனின் - சுயநிர்ணய உரிமைப்பற்றி விவாதத்தொகுப்பு) திருச்சி பிரசுரம் பிரிவினை மட்டுமே ஒரே தீர்வாக பேசுகிறது தனித்தனி அணிகளைப்பற்றி பேசுகிறது தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளி வர்க்கம் எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து மாறுபட்ட விதத்தில் அணுகவேண்டும் என்ற பாகுபாட்டை மறந்துவிட்டது. ஆகவே தேசிய இனப் பிரச்சினையில் பாட்டாளிவர்க்க கண்ணோட்டமும் பூர்ஷ்வா கண்ணோட்டமும் பற்றி பிரிவினை எந்த சூழ்நிலையில் ஆதரிக்கலாம் என்பதுபற்றி பாட்டாளிவர்க்கக்கட்சி எவ்விதம் கட்டப்படவேண்டும் என்பதுபற்றி லெனினியக் கோட்பாடு களையும் கூறிவிட்டால் தேசிய இனப்பிரச்சனைப்பற்றிய முக்கியமான கருத்துக்களை விளக்கியவர்களாகி விடுவோம்.
தேசிய இனப்பிரச்சனையில் முதலாளித்துவ கண்ணோட்டமும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டமும் ஒடுக்கப்பட்ட இனங்களில் முதலாளிவர்க்கம் முதல் பாட்டாளிவர்க்கம் வரை பலவித வர்க்கங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றன. முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளிவர்க்கமும் இருவேறு நலன்களிலிருந்து இப்பிரச்சனையை அணுகுகின்றன. தத்தமது வர்க்க அபிவிருத்திப்போக்கில் இதற்கான தீர்வுகளை முன்வைக்கின்றன.எல்லாத்தேசிய விருப்பங்களையும் ஆதரிப்பதுதான் செயல் பூர்வமானது என பூர்ஷ்வா வர்க்கம் கூறுகிறது ஆனால் பாட்டாளிவர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் பூர்ஷ்வாக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஆதரிப்பதில்லை தேசிய அமைதியைப் பெறுவதற்காக (இந்த அமைதி பூர்ஷ்வாக்களால் பூரணமாக ஏற்படுத்த முடியாது முழு ஜனநாயகம் மூலமே அடைய முடியும்). சம உரிமைகள் பெற வேண்டிவர்க்கப் போராட்டத்திற்கு சிறந்த நிலமைகள் தோற்றுவிக்க வேண்டி தொழிலாளிவர்க்கம் பூர்ஷ்வாக்களை இப்பிரச்சினையில் ஆதரிக்கிறது.தமது தேசிய இனத்திற்கு விசேஷ உரிமைகள், விசேஷ ஆதாயங்கள் இவைதாம் பூர்ஷ்வாவர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் அடைய விரும்புவது பாட்டாளி வர்க்கம் எந்த இனமாயினும் அது ஒடுக்கும் இனமாயினும் ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் விசேஷ உரிமைகள் தனிச் சலுகைகள் அனைத்தையும் எதிர்க்கிறது.பூர்ஷ்வா வர்க்கம் தனது தேசிய கோரிக்கைகளுக்கு எப்போதும் முதலிடம் அளிக்கிறது தமது சொந்த இனத்து குறிக்கோள்களை பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோள்களுக்கு மேலானதாக வைத்து அந்த வர்க்கத்து அபிவிருத்தியை தடைசெய்யப் பார்க்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான பாத்திரத்தை தனது தேசிய கோரிக்கைகளுக்கு கீழ்ப்படுத்தப் பார்க்கிறது பாட்டாளிவர்க்கத்திற்கு தேசிய கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு கீழ்ப்பட்டவைதாம் ஜனநாயகப் புரட்சியானது ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒடுக்கும் இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அதனுடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா என முன்கூட்டியே கூற முடியாது. முடிவு இரண்டில் எதுவானாலும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் தனது வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழி செய்வதுதான் பாட்டாளிவர்க்கத்துக்கு முக்கியமானது ஆகவே பாட்டாளிவர்க்கம் எந்த இனத்திற்கும் உத்திரவாதம் அளிக்காமல் இன்னொரு தேசிய இனத்திற்கு பாதகமான முறையில் எதையும் செய்யாமல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறது.எந்த ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் மற்ற தேசிய இனங்களின் நிலைமை (அல்லது அவர்களுக்கு நேரக்கூடிய பாதகம்) எதுவாயினும் தனது சொந்த நலன்களுக்கு வேண்டிய உத்திரவாதங்கள் மட்டும்தான் தேவை பாட்டாளி வர்க்கத்திற்கு அனைத்து இனங்களின் சமத்துவமும் அனைத்து இனங்களின் விடுதலையுமே குறிக்கோள் சுயநிர்ணய உரிமை என்ற தீர்வுதான் மிகவும் ஜனநாயகமானத் தீர்வைபெற சிறந்த உத்திரவாதமளிக்கிறது. வேறு எந்த குறிப்பிட்ட வளர்ச்சிப் பாதையைப் பற்றியும் உத்திரவாதமளிக்க முடியாது ஏனெனில் சாத்தியமான எல்லாப்பாதைகள் வழியாகவும் பாட்டாளிவர்க்கம் தனது வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது.பூர்ஷ்வாக்கள் பாட்டாளிகளுக்கு குந்தகமான முறையில் பிற தேசிய இன பூர்ஷ்வாக்களுடன் உடன்பாட்டுக்கு வர தயாராக இருப்பார்கள் ஆனால் தமது இன பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது இன பாதகையின் கீழ்தான் அணிதிரளவேண்டும் பிற இன பாட்டாளிகளுடன் ஒன்றுபடக் கூடாது என்பது பூர்ஷ்வாக்களின் நிலை ஒரு முதலாளியுடன் வேறொரு இன முதலாளிக்குள்ள முரண்பாட்டில் அவர்களது கருவியாக செயல்பட பாட்டாளி வர்க்கம் தயாரில்லை தேசிய ஒடுக்கு முறைகளை விட்டுக் கொடுக்காது எதிர்க்கின்ற அதே நேரத்தில் பூர்ஷ்வாக்களுக்கெதிராக அனைத்து இன பாட்டாளி வர்க்க ஒற்றுமையை பலப்படுத்தி முரண்பாடற்ற ஜனநாயகம் சோசலிசம் ஆகிய உணர்வுகளை ஊட்டுகிறது, பாட்டாளி வர்க்கத்திற்கு ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெற வேண்டுமென்பது மட்டுமல்ல அந்த ஜனநாயக புரட்சி சோசலிச புரட்சிக்கு அஸ்திவாரமாக விளங்கவும் வேண்டும் அனைத்து இன பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்துவதாக பூர்ஷ்வாக்களின் சதிகளையும் தனித்துவ போக்குகளையும் முறியடித்து சோசலிசத்தை நோக்கி முன்னேற உத்திரவாத மளிக்கிறது.பூர்ஷ்வா வர்க்கத்திற்கு பிற இனங்களின் மீதான அடக்கு முறையைப்பற்றி கவலையில்லை என்பது மட்டுமல்ல தமது இனம் மீதான அடக்குமுறைக்குப் பிரிவினை தனியரசு என்பது மட்டுமே ஒரே தீர்வாக இவர்கள் வைப்பர். ஒரு குறிப்பிட்ட இனம் பிரிந்து போவதற்குச் சரி என்று தெளிவாகப் பதில் சொல்லும்படியும் இதுதான் செயல் பூர்வ நடவடிக்கை எனவும் பூர்ஷ்வாக்கள் கூறுவர் ஒரு குறிப்பிட்ட இனம் பிரிந்து போவது சரி என்று சொல்வதுதான் செயல்பூர்வமான தீர்வு எனக்கூறப்படுவதை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிர்ந்துபோகும் உரிமை உண்டு என மட்டும் அது கூறுகிறது பாட்டாளி வர்க்கம் அனைத்து இனங்களினதும் விடுதலைக்காக நிற்கிறது பிரிவினை மட்டுமே ஒரே தீர்வு என பாட்டாளி வர்க்கம் கருதவில்லை எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகின்ற உரிமையை ஒப்புக்கொள்வது குறிப்பிட்ட இனம் பிரிந்து போகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேஷ உரிமைகளையும் எல்லாத் தனித்துவ போக்குகளையும் நீக்கும் நோக்கத்துடன் அணுகி சீர்தூக்கிப் பார்ப்பது இதுதான் பாட்டாளி வர்க்க நிலைபாடு.
பிரிவினை என்ற திட்டவட்டமான கோரிக்கை எழும்போது என்ன நிலை மேற்கொள்வது சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையும் பிரிவினை என்ற கோரிக்கையும் ஒன்றல்ல. தேசிய இனங்கள் ஒரு குறிப்பிட்ட அரசு எல்லைக்குள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பிரிந்து சென்று தனியரசு அமைத்து கொள்வதற்கு அரசியல் சுதந்திரம், பிரிந்து செல்லும் உரிமை என்பதே சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்லும் உரிமை இருக்கிற தென்பதாலேயே பிரிந்துதான் சென்றாக வேண்டு மென்பதில்லை. ஒரு தேசம் விரும்பினால் இவ்வுரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம், தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உத்திரவாதம் இது பாட்டாளி வர்க்கம் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கும் அந்த ஒடுக்குமுறைகள் தனது அணியின் ஒற்றுமையைச் சிதைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் இந்த உரிமைக்காகப் போராட வேண்டும் அது மட்டுமின்றி பாட்டாளிவர்க்கம் தன் தலைமையிலான அரசை நிறுவிய பின்பும் அரசமைப்பை ஜனநாயக ரீதியில் சீரமைக்கவும் முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் அந்த அரசின் எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமையை அளிக்க வேண்டும். இதுதான் இன அடக்கு முறைக்கு முடிவுகட்டி இன சமத்துவத்தை நிலைநாட்டும் வழி. ஆனால் ஒடுக்கப்பட்ட இன முதலாளி வர்க்கம் எல்லா நேரங்களிலும் பிரிவினை ஒன்றே இன ஒடுக்குமுறைக்கு ஒரே தீர்வாக வைக்கிறது. இன விடுதலை என்றாலே தனியரசுதான் என கூறுகிறது. இதுதான் ஒரே தீர்வு என்பதை பாட்டாளிவர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. சில குறிப்பிட்ட நேரங்களில் ஓர் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட இனத்தில் பிரிவினைக் கோரிக்கை எழும்போது அவ்வாறு பிரிவது அவ்வினத்து பரந்துபட்ட மக்களின் நலனுக்கும் பொதுவான ஜனநாயக புரட்சி நலனுக்கும் உகந்ததாக இராது என கருதினால் அக்கோரிக்கையை நிராகரிக்கும் அதே சமயம் அந்த இனத்திற்கு பிரிந்து செல்ல உரிமை உண்டு என்பதையும் விடாது முன் வைக்கும். எச்சூழ்நிலையில் பிரிவினைக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கலாம் இவ்விஷயத்தில் சர்வதேச அனுபவமும் லெனினியமும் போதிப்பது என்ன? பூகோள பொருளாதார உறவுகளின் முக்கியத்து வத்தையும் பெரிய மார்க்கெட்டில் பெரிய அரசின் அனுகூலங்களையும் பொதுமக்கள் தமது அன்றாட அனுபவத்திலிருந்து நன்கறிவர். எனவே எப்போது தேசிய ஒடுக்கு முறைகளும் தேசிய தகராறுகளும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையைச் சகிக்க முடியாத தாக்குகின்றனவோ எந்தவிதப் பொருளாதாரத் தொடர்புகளையும் தடை செய்கின்றனவோ அப்போது மட்டுமே மக்கள் பிரிவினையைக் கையாள்வார்கள். அப்போது பிரிவதனால் முதலாளித்துவ வளர்ச்சியின் நலன்களும் வர்க்க போராட்ட சுதந்திரத்தின் நலன்களும் சிறந்த பயன் பெறுகின்றன. (லெனின் - தேசங்களின் சுயநிர்ணய உரிமை) "வர்க்கப் போராட்டத்தைத் தடையின்றி நடத்துவதற்கு நார்வேயின் சுயநிர்வாக உரிமையானது எந்த அளவுக்கு வகை செய்தது என்பதைப் பற்றியும் அல்லது ஸ்விஷ் உயர்குடி மக்கள் ஆட்சியுடனான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் எந்த அளவிற்குப் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாக விளங்கின என்பது பற்றியும் லெனின் நார்வே சுவிடனிலிருந்து பிரிந்தது பற்றி பேசும் போது குறிப்பிடுகிறார். (தேசங்களின் சுயநிர்ணய உர்மை) அயர்லாந்தைப்பற்றி மார்க்ஸ் குறிப்பிடும்போது ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தின் நேரடியான, நிச்சயமான நலன்களுக்கேற்றது அயர்லாந்துடனான தனது இன்றையத் தொடர்ப்பை அது அறுத்துக் கொள்வதுதான் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் கை ஓங்கி வந்தால் ஐரிஸ் ஆட்சியை ஒழித்துக்கட்டுவது சாத்தியம் என்று நீண்டகாலம் நான் நம்பி வந்தேன் உண்மை இதற்கு நேர் எதிரானது என்று ஆழ்ந்த ஆராய்ச்சி இப்போது என்னைத்திடமாக நம்பச்செய்து விட்டது. அயர்லாந்தை விட்டுத்தொலைக்கும் வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது எனக் கூறுகிறார். இந்த மார்க்சிய - லெனினிய கருத்துகளிலிருந்தும் சர்வதேச அனுபவங்களிலிருந்தும் பின்வரும் முடிவுகளுக்கு செல்ல முடியும். தேசிய இன ஒடுக்கு முறையும் தேசிய தகராறுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்வையே சகிக்க முடியாததாக்கிவிடும் போது, ஒடுக்கும் இன அரசுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்திற்குமான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் ஒடுக்கப்பட்ட இனத்தின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் தடைசெய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டபோது,அனைத்து இன பாட்டாளி, பிறமக்களும் ஒன்றுபட்ட வர்க்க போராட்டம் நடந்த இயலாத அளவிற்கு அரசமைப்பு இடையூறாக உள்ளபோது, அதாவது பிரிவதுதான் வர்க்கப்போராட்டத்தின் நலன்களுக்கு சிறந்த பயனளிப்பதாக மாறிவிட்டபோது. இந்த மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது தான் நாம் பிரிவினையை ஆதரிக்க முடியும், அத்துடன் வேறொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் சுயநிர்ணய உரிமை உட்பட எத்தேசிய இனக் கோரிக்கையும் சார்பற்ற முழுமை அல்ல சுயநிர்ணயம் உட்பட பற்பல ஜனநாயக கோரிக்கைகளும் சார்பற்ற முழுமையல்ல பொதுவான ஜனநாயக (தற்போது பொதுவான - சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியே. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பகுதியானது முழுமைக்கு முரணாக நிற்கலாம் அவ்வாறெனில் அது நிராகரிக்கப்பட வேண்டும் ஒரு நாட்டின் குடியரசு இயக்கம் பிற நாடுகளின் புரோகித அல்லது நிதிக்கும்பலின் கருவியாகமட்டும் இருக்கக்கூடும், அவ்வாறெனில் அக் குறிப்பிட்ட இயக்கத்தை நாம் ஆதரிக்ககூடாது ஆனால் அதற்காக சர்வதேச - சமூக ஜனநாயகத்தின் வேலைத் திட்டத்திலிருந்தே குடியரசுக்கான கோரிக்கையை எடுத்துவிடுவது நகைபிற்குறியது அல்லவா? (லெனின் - சுயநிர்ணய உரிமை விவாதத்தொகுப்பு) இதிலிருந்து என்ன தெரிகிறது? பொதுவானதத்திற்கு குறிப்பானது உட்பட வேண்டும் பொதுவான உலக ஜனநாயக இயக்கத்தின் பல கோரிக்கைகளுள் ஒன்றுதான் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையும் எனவே குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்து பிரிவினைக் கோரிக்கை பொதுவான ஜனநாயக புரட்சி நலனுக்கு முரண்படுமேயானால் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது அவ்வாறு மார்க்ஸ் செக்கோஸ்லேவேகியாவின் தனி நாட்டுக் கோரிக்கையை எதிர்த்தார். போலந்து ஜாராட்சியிலிருந்து பிரிவதை ஆதரித்தார். பின்னர் வரலாற்று நிலைமைகள் மாறிவிட்டபின் லெனின் போலந்து பிரிவினையை எதிர்த்தார் இவை பிரச்சனையை வரலாற்று ரீதியில் ஸ்தூலமாக ஆய்வு செய்ததிலிருந்து பெறப்பட்ட முடிவுகள். அவ்வாறே பாட்டாளிவர்க்கம் ஒவ்வொரு தேசிய இனப்பிரச்சனையையும் வரலாற்று ரீதியில் ஆய்வுசெய்தல் என்ற லெனினிய அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும்.
பல இன அரசின் எல்லக்குள் பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வாறு கட்டுப்பட வேண்டும்? நிச்சயமாக ஒரு அரசின் எல்லைக்குள் ஒரே பாட்டாளி வர்க்கக்கட்சி கட்டும்போதுதான் புரட்சியின் வெற்றியை உத்திரவாதம் செய்ய முடியும். அப்போது வெவ்வேறு இன முதலாளிகளும் ஜனநாயக புரட்சியை இறுதிவரை செல்லாமல் தடுக்கச் செய்யும் முயற்சிகளை முறியடிக்க முடியும். அத்துடன் இது சமூக வளர்ச்சியின் தேவையுமாகும் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பல இன மக்களையும் ஒன்று கலக்கச் செய்கிறது. பெரு நகரங்களில் ஏராளமான எண்ணிக்கையில் பல இன பாட்டாளிகள் ஒன்று குவிக்கப்படுகின்றனர். சமூகத்தின் இயல்பான வளர்ச்சி தேசிய இன தடை மதில்களை தகர்ப்பதாக உள்ளது இந்த இயல்பான போக்கிற்கு முட்டுக்கட்டையாக உள்ளது ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனம் உட்பட அனைத்து இனங்களையும் சேர்ந்த முதலாளிகளே பிரிந்துபோகும் உரிமையையும் இன சமத்துவத்தையும் உயர்த்தி பிடிக்காவிடில் பேரின பாட்டாளிவர்க்கம் தமது இன ஆளும் வர்க்கங்களின் வாலாகவே முடியும். தனது சுயேச்சைப் பாத்திரத்தை இழந்துவிடும். அதுபோல ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி கட்சிகள் என்ற கொள்கையை ஒடுக்கப்பட்ட இன பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ளுமேயானால் அதுவும் கட்டாயம் தமது இன முதலாளிகளுக்கு வாலாகவே முடியும். சுயேச்சையான பாத்திரத்தை ஆற்றமுடியாது புரட்சியின் கட்டம் சோசலிசப் புரட்சியாகவோ, ஜனநாயக புரட்சியாகவோ எதுவாக இருப்பினும் கட்சியானது பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் கட்டப்படுகின்றது. உண்மையான பாட்டாளிவர்க்க கட்சி அனைத்து பாட்டாளிகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஒரு கட்சி எனும் போது அதன் மையம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? தனித்தனி தேசிய உறுப்பு கட்சிகளின் ஒருங்கினைப்பு மையமாகவா? கூடாது. கட்சி அவ்வாறு ஒரு சமஷ்டியாக இருப்பது சோசலிசத்தையும் தேசிய வாதத்திற்கு கீழ்ப்படுத்துவதே (லெனின் நூல் தொகுப்பு - 18 பக் 411, 12) "ரஷ்யாவின் பொருளாதார அரசியல் நிலைமைகள் முழுமையும் கோருவது என்னவெனில் சமூக - ஜனநாயகம் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளிகளை விதிவிலக்கின்றி (அரசியல்) தொழிற்சங்கக் கூட்டுறவு, கல்வி நிறுவனம், இன்னும் இது போன்ற அனைத்து பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களிலும் நிபந்தனையின்றி ஐக்கியப்படுத்த வேண்டும். கட்சியானது கட்டமைப்பின் சமஷ்டி முறையைக்கொண்டிருக்கக்கூடாது தேசிய - சமூக ஜனநாயக குழுக்களைக் கொண்டதாக இருக்கக் கூடாது.(லெனின் - தேசிய இனப்பிரச்சனை ஆய்வுரைகள்) இவ்வாறு சமஷ்டியாக கட்சியை ஆக்குவது பாட்டாளிகளின் முழுமையான ஐக்கியத்தை விடதமது சொந்த பூர்ஷ்வாக்களுடனான ஐக்கியத்தை மேலானதாக வைப்பதாகிறது. ஆகவே பாட்டாளிவர்க்க கட்சியானது ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது கட்டப்பட வேண்டும். இதுகாறும் கூறியவையே தேசிய இனப்பிரச்சனையை பற்றிய முக்கிய மார்க்சிய லெனினிய கருத்தோட்டங்கள் ஆகும். இவற்றின் வெளிச்சத்தில் திருச்சி மு.இ.அ என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள முக்கிய தவறுகளை முதலிலும் சிறிய தவறுகளை அடுத்ததாகவும் எடுத்துக்கொண்டு பரிசிலிப்போம்.
திருச்சி மு.இ.அ பிரசுரத்தில் காணப்படும் சில முக்கிய பகுதிகள்"இன்றுள்ள இலங்கை அரசு என்பது ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்டு உலக ஏகாதிபத்திய அமைப்பினுள் நிலவுகின்ற அரசு எல்லையே என்பதையும் இதைப்பகுதி பகுதியாக அழித்து விடுவதற்கான புரட்சிகர நடைமுறைகள் புதிய புதிய வளர்ச்சிகளை பெற்று வருவதையும் அவர்கள் காணத்தவறினர் முதலாளி - தொழிலாளி நிலக்கிழார் - உழவர் என்ற முரண்பாடுகள் எல்லா வர்க்க சமுதாயத்திலும் அடிப்படை முரண்பாடுகளாக இருக்கும் என்றாலும் இன்றைய உலக ஏகாதிபத்திய அமைப்பினுள் உலக ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட அரசு எல்லைகளுக்குள் அந்த அரசு எல்லைகளுக்குள் ஏற்றத் தாழ்வான வளர்ச்சிகளும் பல்வேறு தேசிய இனங்களும் நிலவுகையில் இந்த அடிப்படை முரண்பாடுகள் வர்க்கங்கள் இடையே உள்ள முரண்பாடுகளாகவே அப்படியே வெளிப்படும் என்பதும் மார்க்சிய - லெனினியத்திற்கு முற்றிலும் மாறானது. உலக ஏகாதிபத்தியத்தால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட அரசு எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குமிடையே உள்ள அடிப்படையான முரண்பாடு கூர்மையடைந்து முதன்மையான முரண்பாடாக மாறி புரட்சிகர போராட்டம் நடத்துவதற்கு புதிய எல்லைகளை வகுத்து கொடுத்துள்ளது. இப்புதிய எல்லைகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமைதாங்கி ஒடுக்கும் தேசத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து விடுதலையைப் பெறுவதுதான் உண்மையிலேயே ஒடுக்கும் தேசத்தின் உழைக்கும் மக்களுக்கு ஒடுக்கப்படும் தேசத்தின் உழைக்கும் மக்கள் சாட்டுகின்ற உண்மையான புரட்சிகரமான ஒருமைப்பாட்டு உணர்வும் சர்வதேச புரட்சிகர கடமையாகும். "ஏகாதிபத்திய வல்லரசுகளையோ ஏகாதிபத்திய படைகளையோ நேரடியாக எதிர்த்து நின்றால்தான் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும் என்று நினைக்கின்ற அரை வேக்காட்டு மார்க்சிய - லெனினியவாதிகள் உண்மையில் புரட்சிகர மக்களின் கடும் பகைவர்கள். ஏகாதிபத்தியம் என்பது உலக அமைப்பு என்பதை எள்ளளவும் புரிந்துகொள்ளத் தவறியவர்கள். ஒரே அரசு எல்லைக்குள் வாழும் தேசிய - இனங்கள் வெவ்வேறு அணிகளை கட்டுவதன் மூலம் ஒருமைப்பாட்டை பேண முடியும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை." இவையே பிரசுரத்தின் அடிப்படையாக விளங்கும் கருத்தோட்டத்திற்கு இன மாதிரியான எடுத்துக்காட்டுகள் இக்கருத்துக்களின் சாரம் என்ன?இது ஏகாதிபத்திய சகாப்தமாக இருப்பதால் ஏகாதிபத்தியம் உலக அமைப்பாக இருபதால் பல இனங்களைக் கொண்ட காலனி, அரைக்காலனி நாடுகளில் ஒடுக்கும் தேசத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலைக்காகப் போராடுவதுதான் முதன்மையான சர்வதேச புரட்சிகர கடமை.அப்படிப்பட்ட பல இன அரசின் எல்லைக்குள் வாழும் தேசிய இனங்கள் வெவ்வேறு அணிகளைக் கட்ட வேண்டும் அதன் மூலமே ஒருமைப்பாட்டை பேண முடியும்.பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வலுக் கட்டாயமாக ஏகாதிபத்தியத்தால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மிடையேயுள்ள முரண்பாடு ஓர் அடிப்படையான முரண்பாடு அந்த அடிப்படை முரண்பாடு கூர்மையடைந்து முதன்மையாக மாறியுள்ளது. அதனால் புரட்சிகர போராட்டத்திற்கு புதிய எல்லைகள் தோன்றியுள்ளன. அடிப்படை முரண்பாடுகள் வர்க்கங்களிடையேயுள்ள முரண்பாடுகளாக அப்படியே வெளிப்படும் என கருதுவது தவறு. இக்கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசீலிப்போம்.1. ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவதுதான் சர்வதேச புரசிகர கடமை என்பது பற்றி; பிரிவினை என்பதை முதலாளி வர்க்கம் மட்டுமே ஒரே தீர்வாகக் கருதும் பாட்டாளிவர்க்கம் பிரிந்துபோகும் உரிமைக்காக போராடவேண்டும். சில குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் மட்டுமே பிரிவினையை ஆதரிக்க வேண்டுமென்பது மார்க்சிய - லெனினியத்தாலும் சர்வதேச அனுபவத்தாலும் திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்ட பின்பும் இக்கருத்தை ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான புதியதோர் கண்டுப்பிடிப்பாக ஆரவாரத்துடன் வைத்துள்ளனர். லெனினியம் என்பது ஏகாதிபத்திய சகாப்தத்தின் மார்க்சியமே குறிப்பாக லெனின் ஏகாதிபத்தியக் காலத்தின் ஆளும் விதிகளை ஆய்வு செய்து தொகுத்ததன் பின்பே பாட்டாளி வர்க்க புரட்சிகர நடைமுறைக்கு உகந்த விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தார், ஏகாதிபத்திய சகாப்தத்தில் உலகம் ஒடுக்கும் ஏகாதிபத்திய தேசங்களாகவும் ஒடுக்கப்படும் காலனி, அரைக்காலனி தேசங்களாகவும் பிரிந்து நிற்கின்றது என்பதும் இம்முரண்பாடு தேசிய இன பிரச்சனையின் ஒரு வடிவமே என்பதும் லெனினாலும் ஸ்டாலினாலும், மாவோவாலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோ காலனி அரைக்காலனி நாடுகளின் தேசியம் என்பது அந்த குறிப்பிட்ட நாடு ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதும் அந் நாட்டினுள் அடங்கியுள்ள தேசிய இனங்கள் விடுதலைப் பெற்று அங்கு இன சமத்துவம் நிலை நாட்டப்படுவதும் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டது என சுட்டிகாட்டுகிறார். அத்தகைய காலனி நாடுகளில் பல இனங்கள் வாழும்போது பல சிறுபான்மை இனங்கள் பெருபான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றன என்பது உண்மையே எனவே ஒடுக்கப்படும் இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டியுள்ளது. அதே சமயம் அந்நாடுகளில் ஒடுக்கும் இனங்களே கூட ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுகின்றன. அந்த இனங்களின் விடுதலையும் கூட சேர்ந்ததே அந்த நாட்டுப்புரட்சியாகும். இதைவிடுத்து ஒடுக்கும் தேசத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசத்தின் விடுதலையே புரட்சியாகப் பேசுவது உண்மையில் புரட்சியை திசைதிருப்புவதாகும். அத்தகைய நாடுகளில் ஒடுக்கப்பட்ட இனங்களின் மீது இரு சுமைகள் உள்ளன என்பது உண்மையே இரு சுமைகள் உள்ளதால்தான் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை அந்நாட்டிலிருந்து விரட்டியடித்து அந்நாட்டின் அரசமைப்பை ஜனநாயக ரீதியில் சீரமைப்பதும் அதற்காக அனைத்து இனங்களுடன் ஒன்று படுவதும் ஒடுக்கப்பட்ட இனத்தின் கடமையாகின்றது. ஏனெனில் அந்த நாட்டில் இன ஒடுக்கு முறை நிலவுவதற்கு ஏகாதிபத்திய ஆதிக்கமும் ஒரு முக்கிய காரணம். ஏகாதிபத்தியத்தால் செயற்கையாகத் தோற்றுவிக்கபட்ட அரசு எல்லைகள் பற்றியெல்லாம் இப்பிரசுரம் பேசுகிறது. இன ஒடுக்கு முறைக்கு ஏகாதிபத்தியமே ஒரு முக்கிய காரணம் என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டாலும் அதிலிருந்து என்ன முடிவுக்குச் செல்கின்றனர்? ஏகாதிபத்திய நுகத்தடியை உடைத்தெறிகின்ற புதிய ஜனநாயக புரட்சியின் பகுதியாகத்தான் தேசிய இன ஒடுக்குமுறை முடிவுக்கு வரும் என்ற முடிவுக்குச் சென்றார்களா? இல்லை! ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவது தான் புரட்சியாம்!!? சில சூழ்நிலைகளில் ஒரு இனத்தின் பிரிவினை கூட புரட்சியாகவிளங்கக்கூடும். ஆனால் இவ்வாறு தனித்தனியாகப் பிரிவதுதான் புரட்சி என்று பொது விதியாகக் கூறுவது எவ்வாறுசரியானது? அரைக்காலனி அரைநிலபிரபுத்துவ நாட்டில் ஒடுக்கப்பட்ட இனத்தில் தேசிய முதலாளி வர்க்கமும் உள்ளது. அது புற நிலையில் தேசிய விடுதலையில் பங்கு கொள்ளும் அவசியம் உள்ளது. அதே சமயம் ஒவ்வொரு கட்டத்திலும் புரட்சியை பாதியிலேயே தடுத்து நிறுத்தவும் புரட்சிக்கு துரோகம் விளைவிக்கவும் பார்க்கும். ஏனெனில் இது பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தமாக இருப்பதால் புரட்சிகர இயக்கங்கள் பாட்டாளி வர்க்க ஆட்சியில் போய் முடிந்துவிடும் என்ற உண்மையான அச்சமே காரணம். குறிப்பாக தேசிய முதலாளி வர்க்கத்தின் பிற்போக்கான வலது பகுதி புரட்சிகர இயக்கங்களை பயன்படுத்தி ஆளுகைபுரியும் ஏகாதிபத்தியத்திட மிருந்து பேரம் பேசி தனக்கு அதிக சலுகைகள் பெறுவதற்கும் அல்லது வேறொரு ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாகி தனியரசு அமைத்துக் கொள்ளவும் முயலும். அத்தகைய ஒடுக்கப்பட்ட இனங்களில் தரகு முதலாளி வர்க்கமும் உண்டு. அவ்வர்க்கம் எப்போதுமே எந்த மக்கள் இயக்கத்தையும் காட்டி ஏகாதிபத்தியத்திடமிருந்து சலுகைகள் பெற முனைப்பாக இருக்கும். ஏதாவது ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் தனியரசு அமைத்துக் கொள்ளவும் மிகவும் தயாராக இருக்கும். இத்தகைய தரகு முதலாளித்துவ சக்திகள், தேசிய முதலாளிகளின் வலது பகுதி இவர்களின் முயற்சிகளுடன் தேசிய முதலாளிகளின் தனிச்சலுகை விருப்பங்களும், குறுகிய தேசிய வாத கண்ணோட்டமும் சேர்ந்து கொண்டால் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான சக்திகளின் ஒற்றுமை முயற்சி தடைப்படும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் திசை திருப்பப்படும், பாட்டாளி வர்க்கக் கட்சியின் தந்திரம் இவற்றை கணக்கிலெடுத்துக் கொண்டதாக இருத்தல் வேண்டும். எனவே தனித்தனி இனப்பிரிவினை என்ற முழக்கம் அது பாட்டாளி வர்க்கத் தலைமை எனக் கூறிக் கொண்டாலும் மேற்கூறப்பட்ட தரகு முதலாளிகளின் வலது தேசிய முதலாளிகளின் துரோக முயற்சிகளுக்கும், அவர்களை தத்தமது பிடியில் வைத்துக் கொண்டு வெவ்வேறு ஏகாதிபத்தியங்களும் வெவ்வேறு தேசிய இன அடிமை அரசுகளை ஸ்தாபித்து நாட்டை கூறுபோட்டுக் கொள்ள செய்யும் சக்திகளுக்குமே மிகவும் உகந்த முழக்கமாகும். ஆகவே இது மீள முடியாதபடி ஏகாதிபத்திய பிடியில் நாட்டை அடிமை படுத்தும் முழக்கமே தவிர வேறல்ல. இது எவ்விதத்திலும் புரட்சியாகாது. பல இனங்களை கொண்ட நாட்டில் ஒரு புரட்சிகர கட்சி அந்த அரசை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் ஆளும் வர்க்கங்கள் வர்க்க நலன்களிலிருந்து தனது கொள்கைகளை உருவாக்கி மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தின் மூலம் நாடு முழுவதையும் ஆண்டு வருகின்றன. ஆகவே அந்தகுறிப்பிட்ட நாடு முழுவதும் ஆளுகை புரியும் சமூக விதிகளைப் புரிந்துக் கொண்டு பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியானது அந்நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த புரட்சிகர யுத்த தந்திரத்தை (strategy) வகுத்து நிறைவேற்றும் போதே வெற்றி காண முடியும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ ஆட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்ட இனங்கள் அனைத்தையும் 'தனித்தனி நாட்டு' முழக்கத்தால் ஒன்று படுத்த முடியாது. 'சுயநிர்ணய உரிமை' அனைத்து இனங்களின் சமத்துவம் என்ற முழக்கத்தால் தான் ஒன்றுபடுத்த முடியும். பொதுவான வர்க்கப் போராட்டத்திற்கு தேசிய இனப் பிரச்சனையை உட்படுத்தும் போதுதான் அதாவது புதிய ஜனநாயக புரட்சியின் அச்சாணியாக விளங்கும் விவசாய புரட்சிக்கு தேசிய இனப் பிரச்சனையை உட்படுத்தும் போதுதான் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கப்படும் இனமக்களையும் வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடியும். ஆகவே தான் காலனி அரைக்காலனி நாடுகளுக்கு பூர்ஷ்வாஜனநாயக புரட்சி நிறைவு பெறாத நாடுகளுக்கு - இருவகை கடமைகளை லெனின் முன் வைக்கிறார். ஒன்று எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக் கொள்வது. இரண்டாவது குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக ஒன்றுபடுவது. இக்கடமைகளை ஏகாதிபத்தியத்தின் விதிகளை ஆய்வு செய்து தொகுத்தப் பின்னரும் 1916 கட்டுரையிலும் முன் வைக்கிறார். எனவே இப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள தீர்வு ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான 'புதிய புரட்சிகர எல்லைகள்' பகுதி பகுதியாக அழிக்கும் புரட்சிகர நடைமுறையின் 'புதிய வளர்ச்சி' என்றெல்லாம் கூறிக் கொண்டாலும் உண்மையில் இது ஏகாதிபத்திய சகாப்தத்தில் வாழும் மக்களின் புரட்சிகர கடமைகளை திசை திருப்பும் 'புதிய வாதத்திற்கு இரையாவதே, ஏனெனில் இவர்கள் ஏகாதிபத்திய சகாப்தத்தின் இரு முக்கிய கூறுகளை மறந்து விட்டனர். அவையாவனஇச்சகாப்தத்தில் புரட்சிகளுக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமைதாங்க முடியாது, பாட்டாளி வர்க்கம் மட்டுமே தலைமை தாங்க முடியும். முதலாளித்துவ வர்க்கத்தால் பூர்த்திச்செய்ய முடியாது விடப்பட்டுள்ள ஜனநாயக பணிகள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் மட்டுமே பூர்த்தியாகும். பாட்டாளி வர்க்கம் ஜனநாயக புரட்சியை எடுத்து செய்வதன் நோக்கம் ஏகாதிபத்திய அடிவருடிகளை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு அதற்குபதில் 'தேசிய முதலாளி'களிடம் ஆட்சியை ஒப்படைத்து ஒரு முதலாளித்துவ சமூகத்தை கட்டி வளர்க்க வேண்டுமென்பதல்ல, மாறாக இந்த ஜனநாயக புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சிக்கு மாறிசெல்ல வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையில் தான் பாட்டாளி வர்க்கம் இதில் இறங்குகிறது. இதெல்லாம் எவ்வாறு இருப்பினும் சரி, ஒவ்வொரு இனத்தின் தனித்தனி விடுதலை பற்றி மட்டுமே பேச வேண்டும். ஏனெனில் அந்தந்த இனத்தின் விடுதலை என்பது அந்தந்த இனத்துப் பணியே, இதில் ஒரு இனத்திற்காக இன்னொரு இனத்தின் பாட்டாளி வர்க்கம் பாடுபட முடியாது. என்று பிரசுரத்தை எழுதியவர்கள் கருதி கொண்டிருப்பார்களேயானால் அது பச்சையான இனவாதமே தவிர, முதலாளித்துவ சித்தாந்தமே தவிர வேறல்ல.பல இனங்களைக் கொண்ட நாட்டில் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அணிகட்ட வேண்டும் என்பது பற்றி: முதலில் வெவ்வேறு அணிகள் என்று இவர்கள் எதைக் கூறுகிறார்கள்? தொழிற்சங்கங்கள், மக்கள்படை போன்ற மக்கள் திரள் அமைப்புகளையா? பாட்டாளிவர்க்க கட்சியையா? "கோபன்ஹேகன் மாநாடு தொழிற்சங்கங்களை தேசிய இன வாரியாக பிரிப்பதை திட்டவட்டமாக கண்டித்துள்ளது. அத்துடன் ஆஸ்திரியாவின் அனுபவம் காட்டுவது என்னவெனில் இவ்விஷயத்தில் தொழிற்சங்கங்களுக்கும் பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிக்குமிடையே' ஒரு வேறுபாட்டை வகுப்பது சாத்தியமற்றது என்பதையே. (லெனின் நூல்திரட்டு 20, பக்.76) ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க கட்சி அனைத்து இன பாட்டாளிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும் என்பது மார்க்சியம் - லெனினியத்தால் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அனுபவமும் எங்கெல்லாம் அவ்வாறு கட்டபடவில்லையோ அங்கெல்லாம் புரட்சிகர சக்திகள் சீர்குலைக்கப் படுவதை எடுத்துக் காட்டுகிறது. ரஷ்யாவிலும் யூத தொழிலாளர்களுக்கு தனி அமைப்பு கட்ட முயன்ற மார்க்சிய வாதிகள் என்ற பெயர் தாங்கிய யூத தேசிய வாத குழுக்கள் இருந்தன. லெனினும் போல்ஷ்விக் கட்சியும் இந்த நச்சுக்கருத்தை எதிர்த்து விடாது போரிட்டு வந்தனர். ஒரு நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் ஒற்றுமை புரட்சியின் வெற்றிக்கு மட்டுமல்ல அன்றாட போராட்டத்தை தொடர்வதற்கே கூட இன்றியமையாததாகும். "பாட்டாளிவர்க்கம் அனைத்து தொழிலாளிவர்க்க ஸ்தாபனங்களிலும் விதிவிலக்கின்றி அனைத்து தேசிய இன தொழிலாளிகளும் நெருங்கிய முழுமையான கூட்டு இல்லாமல் சோசலிசத்திற்கு தனது போராட்டத்தை தொடருவதோ தனது அன்றாட பொருளாதார நலன்களை பாதுகாப்பதோ இயலாது" "அனைத்து தேசிய இன பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான ஐக்கியத்தை விட "தம் சொந்த" பூர்சுவா வர்க்கத்துடனான அரசியல் ஐக்கியத்தை மேலானதாக வைக்கின்ற தொழிலாளர்களே தமது சொந்த நலன்களுக்கு எதிராகவும், சோசலிசத்தின் நலன்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்தின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் எனப்து தெளிவு என்று லெனின் திட்டவட்டமாக கூறியுள்ளார். (தேசிய இன பிரச்சனைகள் - ஆய்வுரைகள்) இவ்வாறு இருப்பினும் வெவ்வேறு தேசிய இனங்களும் வெவ்வேறு அணிகளை கட்டவேண்டும் என்ற கருத்து ஏகாதிபத்திய சகாப்தத்திற்கான புதிய கண்டுபிடிப்பு என்பதுபோல் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய சகாப்தமாக இருப்பதால்தான் அனைத்து இன மக்களதும் ஒற்றுமை மிகவும் அவசியப்படுகிறது. காரணங்கள் என்ன?1. ஏகாதிபத்தியம் எனபது காலனி, அரைக்காலனி நாடுகளில் உள்ள பல இனங்களையும் மக்களையும் ஒரு சேர அடக்கி ஆளும் உலக அமைப்பு எனவே இதனை எதிர்த்து பல இன மக்களும் இன்னும் சொல்லப் போனால் பல நாட்டு மக்களுமே கூட ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா போன்ற நாட்டின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக நின்று அனைத்து இனங்களின் சுயேச்சையான வளர்ச்சியையும் தடுத்துக் கொண்டிருப்பதாலும் அவர்கள் கையில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ளதாலும் அந்த அதிகாரத்தை வீழ்த்துவதற்கு ஐக்கியப்பட்ட பாட்டாளிவர்க்க கட்சித் தேவை, இவ்வாறு கூறும்பொழுது நாடு முழுவதும் கட்சி கட்டப்பட்டப்பின்தான் புரட்சியென்றோ அனைத்து மூலைகளிலும் ஒரே நேரத்தில் மக்கள் போராடினால்தான் அரசை வீழ்த்த முடியமென்றோ பொருள் கொள்ளக் கூடாது. இங்கு தேசிய இனங்களின் வளர்ச்சியில் சமச்சீரற்ற நிலை உள்ளது போலவே பாட்டாளி வர்க்க உணர்வு மட்டத்திலும் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஆகவே கட்சியில் பலத்திலும் வளர்ச்சியிலும் கூட சமச்சீரற்ற நிலை இருக்கும். ஆனால் இதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்துவதை பாட்டாளி வர்க்க கட்சியின் குறிக்கோளாக வைக்க மறுப்பது என்பது புறநிலை அவசியத்திற்கு எதிரானது ஆகும்.2. முதலாளித்துவ வளர்ச்சி விதிப்படி பெருநகரங்களில் பல இன மக்களும் ஒன்றுகுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு குவியும் மக்கள் ஒன்றுபட்டு விடாதபடிக்கு ஆளும் வர்க்கங்கள் இன அடிப்படையில் பிரித்து மோதவிடுகின்றன. இச்சதிகளை முறியடித்து பல இன மக்களை ஒன்றுபடுத்தி ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடுவது அவசியம் அப்போதுதான் பாட்டாளி வர்க்கம் தேசிய வாதத்தில் மூழ்கிவிடாமல் வர்க்க உணர்வையும் சர்வதேசிய உணர்வையும் பெறமுடியும்.3. ஒவ்வொரு இனத்தையும் சேர்ந்த முதலாளிகள் அனைத்து இன மக்களது ஒற்றுமையை குலைப்பதற்காக தமது இன மக்களுக்கு பிற இனங்கள் மீது அவ நம்பிக்கையையும் வெறுப்பையும் விதைக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தி தேசிய வாதத்தை அவர்கள் மத்தியில் புகுத்துகின்றனர். அத்துடன் ஒடுக்கப்பட்ட இன முதலாளிகள் இன ஒடுக்குமுறைக்கெதிரான மக்களது போராட்டத்தில் பங்கு பெற்றாலும் அதனைக் காட்டி ஆளும் வர்க்கங்களிடமிருந்து பேரம் பேசி சில சலுகைகள் பெறவும், ஏகாதிபத்தியங்களுக்கு நேரடியாக ஊழியம் புரியவ்ம், வாய்ப்பு ஏற்பட்டால் ஆதிக்கத்தில் இல்லாத வேறொரு ஏகாதிபத்தியத்தின் துணையுடன் அதற்கு அடிவருடியாக தனியரசு அமைத்துக் கொள்ளவும் முயலுவர். குறிப்பாக ஆதிக்கத்தில் இல்லாத தரகு முதலாளிகளும், தரகர்களாக வளர ஏங்குகின்ற தேசிய முதலாளிகளும் இதற்கு முயலுவர். இவர்களது முயற்சிகள் முறியடிக்கப்படவிடில் புதிய ஜனநாயக புரட்சி இடைவழியிலேயே நின்றுவிடும். எனவே அனைத்து இனமக்களையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையில் அணிதிரட்ட மறுப்பது இந்த பூர்ஷ்வாக்களின் சூழ்ச்சிக்கே இரையாவதாகும். இது புரட்சியை சீர்குலைத்து விடும். எனவே தேசிய இன ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டவும் உதாவாது, ஏனெனில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு இச்சகாப்தத்தில் முதலாளிகள் தலைமையில் தீர்வுகாண முடியாது. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சியின் பகுதியாகத்தான் தீர்வுகாண முடியும். புதிய ஜனநாயகப் புரட்சி என்பது முதலாளி வர்க்கங்கள், அனைத்தையும் ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டதில்லை. எனினும் முதலாளி வர்க்கங்களில் புரட்சிகர பங்காற்ற முன் வருகின்றவர்களையும் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் இணைத்துக் கொள்வதை நோக்கமாக கொண்டதெனினும், அது முதலாளி வர்க்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்து ஒரு முதலாளித்துவ சமூகத்தை கட்டி வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டதல்ல என்பதையும் சோசலிசத்திற்கு முன்னேறிச் செல்வதை நோக்கமாக கொண்டது என்பதையும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இவ்விடத்தில் வேறொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும். இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து இன மக்களின் ஒருமைப்பாடு என்பது பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் கூறுகின்ற 'தேசிய ஒருமைப்பாடு' அல்ல அது அனைத்து தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதற்கான ஏகாதிபத்திய தேசியவாதமே இந்தியாவிலுள்ள அனைத்து இனங்களும் வலுக்கட்டாயமாக ஒரே அரசின் கீழ் பிடித்து வைகப்பட்டிருப்பதை நாம் எதிர்க்கிறோம். அதற்காக அனைத்து இன மக்களும் தமது ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றுபடக் கூடாது என்பதல்ல. பிற்போக்கு 'தேசிய ஒருமைபாடு' பற்றிய அச்சக் கண்ணோட்டத்திலேயே அனைத்து இன உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும் ஒரு இன ஆதிக்கமாகவே இருக்கும் என்று சிலர் பார்க்கக்கூடும். இன அடக்குமுறைக்கு ஒரு வர்க்க அடிப்படை எப்போதும் உண்டு. சுரண்டும் வர்க்கங்களின் ஆதிக்கத்திலிருந்தே, ஜனநாயகமற்ற அரசமைப்பு முறையிலிருந்து இன அடக்கு முறை ஏற்படுகிறது. முரண்பாடற்ற ஜனநாயகம் மட்டுமே இன பாரபட்சங்களுக்கும் இன அடக்குமுறைக்கும் எதிரான உத்திரவாதமாகும். ஆகவேதான் பாட்டாளி வர்க்கம் எப்போதும் முரண்பாடற்ற முழு ஜனநாயகத்திற்காகவும் இனங்களின் சமத்துவத்திற்காகவும் நிற்கவேண்டும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப்பிடிக்க வேண்டும் இன பாரபட்சம் தனது அணிகளில் அல்லது தனது தலைமையிலான சமுதாயத்தில் ஏற்பட்டுவிடாமல் உத்திரவாதம் செய்வதற்குத்தான் பாட்டாளி வர்க்கம் தனது கட்சியை ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது கட்டவேண்டும், தனது தலைமையிலான அரசமைப்பை பிரிந்துபோதல் உட்பட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஜனநாயக அரசாக கட்டவேண்டும். இது தேசிய இன ஒடுக்கு முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மட்டுமல்ல, சோசலிசத்தை கட்டி வளர்க்கவும் தேசங்களின் பரிபூர்ண ஐக்கியத்திற்கும் கூட அவசியமாகும். இந்தியா போன்ற ஏகாதிபத்தியத்தால் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட நாடுகளில் அனைத்து இன மக்களது ஒற்றுமையின் அவசியத்தைப்பற்றி இதுகாறும் கூறினோம். இந்த ஒற்றுமை சாத்தியமா? குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் ஒடுக்கும் இனமே ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் இனமாக இருப்பதால் இத்தகைய ஒற்றுமைக்கு புறநிலை ரீதியான வாய்ப்புகள் உள்ளன. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய மக்களது போராட்டம் இதற்கு ஓர் உதாரணமாகும். அப்போராட்டம்கூட அனைத்து இன மக்களும் சேர்ந்து நடத்தியபோதுதான் முன்னேற முடிந்தது என்பதையும் அவ்வாறு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அன்றைய போராட்டத்தலைமை இன சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிவந்தது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது மற்றோர் உதாரணம் பார்ப்போம் கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினரான தமிழரின் மொழி உரிமைகளும் பிற உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து அவர்கள் போரிட வேண்டியுள்ளது. அதேசமயம் கன்னட மொழியும்கூட மும்மொழித் திட்டத்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்பை எதிர்த்து கன்னடமக்கள் போர்குரல் கிளப்பியதால்தான் அவர்களை ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு தமிழர் மீது திருப்பிவிட்டுவிட்டனர். ஆகவே தமது உரிமைகளுக்காக போராடுகின்ற சிறுபான்மைத் தமிழர்கள் இந்தி ஆதிக்கத்திற்கெதிராக கன்னட இனத்தவருடன் ஒன்றுபட வேண்டிய அவசியம் இருப்பது போலவே வாய்ப்பும் ஏற்படுகிறது. அதேபோல ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தி இனத்தவருடன் ஒன்றுபடவும் வாய்ப்பு உள்ளது. இந்த புறநிலை வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அகநிலைச் சக்திகள் உள்ளனவா என்பதே பிரச்சனை, அதாவது சரியான தேசியக்கொள்கைத் திட்டத்தைக்கொண்ட பாட்டாளிவர்க்க கட்சி அனைத்து இன மக்கள் மத்தியிலும் கட்டப்படுகிறதா என்பதே பிரச்சனை அத்தகைய அகநிலைச்சக்திகள் நீண்டகாலத்திற்கு தவறிவிடும்போது அத்தகைய வாய்ப்புகள் பின்னுக்குப்போய்விடலாம் என்பது உண்மையே. இலங்கையில் தற்போதுள்ளது போன்ற சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அத்தகைய வாய்ப்புகள் அற்றுப்போய் விடலாமென்பது உண்மையே. அதற்காக தேசிய இன முரண்பாடுகள் நிலவும் நாட்டில் எச்சூழ்நிலையிலும் உழைக்கும் மக்களின் அனைத்து இன ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவே முடியாது எனக் கருதுவது அறியாமை மட்டுமல்ல, அத்தகைய வாய்ப்புகளுக்காக முயலவும் தயாரின்மையும் ஆகும். விஷயங்கள் இவ்வாறிருக்கையில் அனைத்து இன மக்களது ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் "வெவ்வேறு அணிகள்" கட்ட வேண்டும் என்று கூறிவிட்டு திருச்சி பிரசுரம் அதுதான் ஏகாதிபத்திய சகாப்தத்தில் பல இனங்களிடையே ஒருமைப்பாட்டை பேண உதவும் என்று ஒருமைபாட்டுக்கே புது இலக்கணம் தந்துள்ளது. கார்ல்மார்க்ஸ் அயர்லாந்து இங்கிலாந்திலிருந்து பிரிவதை ஆதரித்த நேரத்தில் கூட அதனை அயர்லாந்து தொழிலாளர்களுக்கு மட்டுமான ஆலோசனையாக வைக்காமல் குறிப்பாக ஆங்கிலத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆலோசனையாக வைக்கிறார். அவர்களின் சர்வதேச ஒருமைப்பாட்டுணர்வுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இதுதான் தேசியவாதக் கண்ணோட்டத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வ தேசிய கண்ணோட்டத்திற்குமுள்ள வேறுபாடு. ஒவ்வொரு இனமும் தனித்தனியே அரசமைத்துக் கொள்வதுதான் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே தீர்ப்பு எனக் கருதுபவர்கள் தனித்தனிப் பாட்டாளிவர்க்க கட்சி, தனித்தனி அமைப்புகள் என்று சிந்திப்பது தவிர வேறென்ன செய்வார்கள்? தொகுத்து கூறுவோம்;ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்தால் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பல இன அரசின் கீழுள்ள அனைத்து இன மக்களும், புறநிலை அவசியம் உள்ளபடியாலும், இயல்பான சமூக வளர்ச்சிப் போக்கின்படியும், புரட்சிக்கு துரோகம் செய்ய முயலும் பூர்ஷ்வாக்களின் சதிகளை முறியடிக்கவும் இம்மூன்று காரணங்களாலும் ஒரே பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையில் அணிதிரள வேண்டும்.இத்தகைய நாடுகளில் ஒடுக்கும் இனமே கூட ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் இனமாக இருப்பதால் ஒற்றுமைக்கான புறநிலை வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் மக்கள் திரட்டப்பட்டிருக்கும் போது இன பாரபட்சங்களுக்கு எதிரான உத்திரவாதம் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையும், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் நிபந்தனையின்றி கடைப்பிடிப்பதே. இன ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் போன்ற ஜனநாயக விரோத அமைப்பு முறைகளிலிருந்தே உருவாகிறது. ஆகவே ஓர் இனம் தனியாகப் பிர்ந்து சென்றுவிட்டாலும், ஜனநாயக புரட்சியைத் தொடர்ந்து எடுத்துச் சென்று சோசலிசத்தை கட்டி அமைக்காவிடில் ஏகாதிபத்தியம் (சமூக ஏகாதிபத்தியம் உட்பட) வேறொரு வழியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். இன ஒடுக்குமுறை முடிவு பெறாது. ஆகவே பாட்டாளி வர்க்கத் தலைமையில் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் சென்று சோசலிசத்தையும் கம்யூனிஸத்தையும் நிறுவுவதைப் பொறுத்ததே பெரும்பான்மை இனத்தாரின் ஆதிக்கம் ஏற்படாமல் தடுக்கும் விஷயம். அதேசமயம் இன ஒடுக்குமுறையை ஒழிக்கின்ற ஜனநாயக அரசை கட்டியமைப்பதும் சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு ஒரு முன் நிபந்தனையாகும். உலகு தழுவிய சோசலிச வெற்றிக்குப் பிறகு வர்க்கங்கள் ஒழியும்போது அரசுகளும் ஆட்சிகளும் கூட ஒழிந்துவிடும். அப்போது தேசங்களும் கூட ஒழிந்துவிடும். அப்போது தேசங்களும் ஒழிந்து அனைத்து இனங்களும் சங்கமித்துவிடும். ஆனால் வர்க்கங்கள் ஒழியும்வரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற முழுமையான ஜனநாயகம் ஓர் இடைப்பட்ட கட்டமாக உள்ளது. அதேபோல் இனங்கள் ஒழிவதற்கும் இன சமத்துவம் என்பது ஒரு இடைக்கட்டமாக உள்ளது. எனவே தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இடைக்கட்டம் தேசங்களின் சமத்துவம் சுயநிர்ணய உரிமை இவற்றின் அடிப்படையில் நிறுவப்படுகிறது, நிறுவப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கும் தேசிய இனங்களுக்கு மிடையேயுள்ள முரண்பாடு அடிப்படையான முரண்பாடு என்பது பற்றியும் அடிப்படை முரண் பாடுகள் வர்க்க முரண்பாடுகளாக அப்படியே வெளிப்படாது என்பது பற்றியும்: முதலில் ஒரு பொருளின் வளர்ச்சியில் குறிப்பான முரண்பாட்டை எவ்வாறு பார்ப்பது என்பது பற்றியும் அடிப்படை முரண்பாடு என்பது என்ன, அதன் தன்மை முதன்மை முரண்பாடு என்பது என்ன. அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பவை பற்றியும் மாவோவின் ஆய்வு முறைகளை சுருக்கமாக பார்ப்போம். பின்னர் தேசிய இனப் பிரச்சனையை எத்தகைய முரண்பாட்டில் வைப்பது எனப்து பற்றியும் அதனை எவ்வாறு வர்க்க கண்ணோட்டத்தில் அணுகுவது என்பது பற்றியும் பார்ப்போம்:
முரண்பாட்டைப் பற்றி மாவோவின் ஆய்வு முறையிலிருந்து பெறப்படும் முடிவுகள்:
1. ஒவ்வொரு இயக்க வடிவத்திற்கும் அதற்கேயுரிய குறிப்பான முரண்பாடு தான் ஒரு பொருளை வேறொன்றிலிருந்து வேறுபடுத்தி காட்டும் சாரமாக உள்ளது. அவ்வாறு வெவ்வேறு இயக்க வடிவத்தின் குறிப்பான முரண்பாட்டைப் பற்றி ஆய்வதே வெவ்வேறு விஞ்ஞானமாகும். சமூக விஞ்ஞானத்தின் குறிப்பான ஆய்வுக்குறிய குறிப்பான முரண்பாடு உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடும் வர்க்கங்கள் வர்க்க போராட்டம் இவையுமே ஆகும். அதாவது சமூக வளர்ச்சியின் சாரமாக அமைந்திருப்பவை, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமுள்ள முரண்பாடும் வர்க்கங்களூக்கிடையேயுள்ள முரண்பாடும் (முரண்பாடு பற்றி)
2. ஒரு சமூக புரட்சி போன்ற சிக்கலான நீணட நிகழ்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றுள் அந்நிகழ்ச்சிப்போக்கின் சாரத்தை தீர்மானிப்பவையே அந்நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையான முரண்பாடாக விளங்குகின்றன. (உ.ம) சீன பூர்ஷ்வா ஜனநாயக புரட்சியில் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்கும் உள்ள முரண்பாடு, நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்கள் திரளுக்கும் உள்ள முரண்பாடு, ஆளும் வர்க்கத்திற்கிடையே உள்ள முரண்பாடு இன்னும் இதுபோன்ற பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்கும் உள்ள முரண்பாடும், நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்கள் திரளுக்குமுள்ள முரண்பாடும் அடிப்படையான முரண்பாடாக விளங்குகின்றன. (Basic) (சீன புரட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும்).
3. ஒரு நிகழ்ச்சிப்போக்கு முடிவுக்கு வரும்வரை அந்நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையான முரண்பாடும் அதனால் தீர்மானிக்கப்படுகின்ற அப்போக்கின் சாரமும் மாறுவதில்லை. அது மாறாமலிருக்கும் போதே அந்நிகழ்ச்சிப் போக்கு பல உள்கட்டங்களை கொண்டதாக இருக்கிறது.
4. உள்கட்டங்கள் ஏற்படுவதற்குக் காரணம் அந்நிகழ்ச்சிப் போக்கில் காணப்படும் பல பெரிய, மற்றும் சிறிய முக்கிய முரண்பாடுகளில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு நேரத்தில் முதன்மையாகிறது. வேறொன்று தற்காலிகமாகத் தீர்க்கப்படுகின்றது. அல்லது தணிக்கப்படுகின்றது அல்லது இன்னும்மொன்று புதிதாகத் தோன்றுகின்றது.
5. இவ்வாறு முக்கிய முரண்பாடுகளில் ஒன்று ஒரு நேரத்தில் முதன்மையாவது 4 விதங்களில் நடந்தேறுகிறது.அ) அடிப்படையான முரண்பாட்டில் ஒன்று முதன்மையாக விளங்குவது.(உ.ம்) நிலப்பிபிரபுத்துவத்திற்கும் மக்கள் திரளுக்குமுள்ள முரண்பாடுஆ) அடிப்படையான முரண்பாட்டில் ஒன்று குறிப்பான கூர்மையான வடிவத்தில் முதன்மையாவது, சீனா மீது ஜப்பான் ஆக்கிரமித்தபின் (உ.ம்) பொதுப்படையாக ஏகாதிபத்தியத்திற்கும் சீன மக்களுக்குமுள்ள முரண்பாடு குறிப்பாக ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்குமுள்ள முரண்பாடு என்ற வடிவத்தில் முதன்மையானது போல,இ) ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியம் உள்நாட்டு பிற்போக்காளர்கள் இவை ஒரு புறமும் பரந்துபட்ட மக்கள்திரள் மறுபுறமும் என்ற வடிவத்திலும் பல முக்கிய முரண்பாடுகளின் கூட்டுத்தொகுப்பு கூடவும் முதன்மையாக வரும்.(உ.ம்) 1917ல் சியாங்கைஷேக் ஏகாதிபத்திய திட்டப்படி புரட்சிகர சக்திகள் மீது நேரடியுத்தம் தொடங்கியதுபோல, 1927 ரஷ்ய புரட்சிக்கு பின் சோவியத் அரசை கவிழ்க்க பல ஏகாதிபத்தியங்களும் உள்நாட்டு பிற்போக்கு கும்பல்களும் ராணுவ தலையீட்டை செய்ததுபோல.
ஈ) அடிப்படையேயில்லாத முக்கிய முரண்பாடுகூட முதன்மையாக வரும்.(உ.ம்) சீனாவில் யுத்தபிரபுக்களுக்கிடையேயான யுத்தம், உலகளவில் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான யுத்தம்.
தேசிய இனப்பிரச்சனையை எந்த இனத்தில் வகைப்படுத்துவது? இவைகளையும் இவைபோன்ற மற்ற வாதங்களையும் சோதித்துப் பார்ப்பதற்கு சிறந்தவழி இப்பிரச்சனை பற்றி சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களின் கொள்கையை ஆராய்வதுதான். மார்க்சிய வாதத்துக்கு இந்த சோதனை கட்டாயமானது புறநிலையை எடுத்துக்கொண்டு நாம் பிரச்சனையை அணுகவேண்டும், இவ்விஷயத்தில் வர்க்கங்களுக்கிடையேயான உறவுகளை நாம் ஆராய வேண்டும் என லெனின் தேசிய இனப் பிரச்சனையை அணுக வேண்டிய வரம்பு பற்றி பேசும்போது குறிப்பிடுகிறார்.(தேசியங்களின் சுயநிர்ணய உரிமை) இந்தியாவில் இன ஒடுக்கலின் வர்க்கத்தன்மை என்ன? இன ஒடுக்கல் ஏன் தோன்றுகிறது? இங்குள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்கிடுவதற்காக தேசங்கள் உருவாக்கம் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் எல்லா ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அக்கறையுள்ளது. இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடமாக ஆக்கியதே ஒரு ஏகாதிபத்திய ஆட்சிதான். இந்தியாவிலுள்ள அனைத்து இனங்களையும் சுரண்டுவதற்காக அவற்றை அடக்கி ஒடுக்கி வைக்கவேண்டிய தேவை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுகிறது. இது சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மை இனத்தை ஏவி விடுவதன் மூலமே சிறப்பாக செய்யமுடியும். பெருதரகு முதலாளித்துவ வர்க்கங்கள் இந்தியாவின் சந்தை முழுவதையும் தமது கையில் வைத்திருப்பதற்காகவும் பிற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுக்கு சந்தை உறுதிப்படாமலும் அவற்றையும் சேர்த்து சுரண்டுவதற்காக இந்தி மொழி பேசும் இனம் தவிர்த்து பிற இனங்களின் உரிமைகளை நசுக்குகிறது. அந்த இனங்களின் சுதந்திரமான வளர்ச்சியைத் தடுக்கின்றது. நிலப்பிரபுத்துவ உறவுகள் கூட தேசங்கள் உருவாவதற்கு இடையூறாக உள்ளது. இவ்வாறு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் தரகு முதலாளித்துவம் இம்மூன்றுமே தேசிய இன ஒடுக்குமுறைக்கு காரணிகளாக விளங்குகின்றன. இம்மூன்று சக்திகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஏகாதிபத்தியத்திற்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடு நிலபிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடு என்ற இரு முரண்பாடுகள் இவ்வாறு இம்மூன்று சக்திகளும் இரண்டு முரண்பாடுகளும் சேர்ந்து பரஸ்பர செயல்பாட்டினால் தேசிய இனப்பிரச்சனை தோன்றுகிறது. அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ நாட்டில் பல்வேறு முரண்பாடுகள் பரஸ்பர வினை புரிவதால் ஏற்படுகின்ற சிக்கலானத் தோற்றத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை தனியாக பகுத்தாயவும் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தாய்வதும், தொகுத்தாய்வதும் என்ற பார்வையில்லாததால்தான் அடிப்படை முரண்பாடுகளோ முதன்மை முரண்பாடோ வர்க்கங்களுக் கிடையேயுள்ள முரண்பாடுகளாக அப்படியே வெளிப்படாது என்ற இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் தோன்றுகின்றது. முரண்பாடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து சிக்கலாக தோன்றினாலும் அடிப்படை முரண்பாடும் முதன்மை முரண்பாடும் வர்க்கமுரண்பாடுகளே, ஒரு சமூகத்தின் முரண்பாடுகளை பார்ப்பது அதன் சாரத்தை தீர்மானிக்கின்ற உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளுக்கிடையேயுள்ள முரண்பாடு, வர்க்கபோராட்டம் இவற்றை வைத்துத்தான் என்று மாவோ சிந்தனை நமக்கு புலப்படுத்துகின்றது. இந்தியாவில் தேசிய இன ஒடுக்கு முறையின் சாரம் என்ன? இந்தியாவை ஆளுகின்ற அரைக்காலனித்துவ அரை நிலப்பிரபுத்துவ அரசு தேசிய இனங்களுக்கு சமத்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கிறது. இதன் விளைவாக, இந்திமொழி பேசும் இனங்களைத் தவிர்த்த பிற இனங்கள் பல்வேறு வகையான இன ஒடுக்குமுறைகளுக்கு ஆட்படுகின்றன. அவற்றின் மொழி பண்பாட்டு மற்றும் பிற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு அவை இரட்டைத் தளைகளால் கட்டுண்டு கிடக்கின்றன. அதிகார வர்க்க தரகுபெரு முதலாளித்துவமே இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் அதன் எப்பகுதியிலும் முதலாளித்துவ வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான ஒரு சக்தியாக விளங்குகின்றது. இதன் விளைவாக இவ்வினங்களின் தொழில் வளர்ச்சியின் தேவைகள் பாதிக்கப்பட்டு உற்பத்தி சக்திகள் விலங்கிடப்படுவதற்கு ஓர் அடிப்படையான காரணமாக இருக்கிறது. இவ்வினங்களின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சி மேலும் குறுக்கப்படுகிறது. இவ்வாறு கூறுவதால் இந்தி மொழி பேசும் இனங்களின் உள்ளார்ந்த சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சி தங்குதடையின்றி நடை பெறுகிறது என பொருள் கொள்ளலாகாது. ஏனெனில் அவற்றின் வளர்ச்சியும் அரைக்காலனித்துவ அரைநிலப்பிரபுத்துவ அரசால் தடைப்படுகிறது. ஆயினும் இந்திமொழி பேசும் இனங்களைத் தவிர்த்த பிற இனங்கள் இரட்டைத் தளைகளால் கட்டுண்டுகிடப்பதால் அவற்றின் வளர்ச்சி மென்மேலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்திமொழி பேசும் இனங்களுக்குள்ளேயும் கூட வளர்ச்சி சம சீரற்றதாகவே இருக்கின்றது. இவையாவும் ஒரு அரைக்காலனித்துவ அரைநிலப்பிரபுத்துவ நாட்டின் அரசியல் பொருளாதார வளர்ச்சி சமசீரற்றதாயிருப்பதன் விளைவேயாகும். இவை ஏகாபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்தும் நிலப்பிரபுத்துவ ஆட்சியிலிருந்தும் தரகு முதலாளித்துவத்திலிருந்தும் தோன்றுகின்றன. எனவே தேசிய இனப் பிரச்சனைக்கு கூட அடிப்படையாக விளங்குவது வர்க்க முரண்பாடே தேசிய இனப் பிரச்சனையின் சாரம் எந்த வர்க்கங்கள் கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது. எவ்விதமான அரசுமுறை நிலவுகிறது, எந்தெந்த இனங்கள் ஒடுக்கப் படுகின்றன. சுரண்டப்படுகின்றன. என்ற பிரச்சனையே ஆகமுன்பு கூறியது போல இந்தியாவில் ஏகாதிபத்தியம் தரகு முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவம் ஆகிய மூன்று சக்திகளுக்கும் பரந்துபட்ட இந்திய மக்களுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் கூட்டு விளைவுகளின் ஒன்றுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இடையேயும், தேசிய இனங்களுக்கிடையேயும் தோன்றுகின்ற முரண்பாடு, இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் உள்ள, ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் உள்ள இரு அடிப்படை முரண்பாடுகளே. தொகுத்துக் கூறினால் மாவோவின் ஆய்வு முறைப்படி இந்திய சமூகத்தின் வளர்ச்சியின் சாரத்தை தீர்மானிக்கின்ற இரு முரண்பாடுகளான நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்கு முள்ள முரண்பாடும், ஏகாதிபத்தியத்திற்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடுமே இந்தியாவின் அடிப்படை முரண்பாடுகளாகும். ஒடுக்கும் தேசத்தின் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்குமுள்ள முரண்பாடு " என்ற திருச்சி பிரசுரம் வரையறுத்துள்ள முரண்பாடு ஒரு தனி வகைப்பட்ட வர்க்க முரண்பாடாக அமையாது; அடிப்படை முரண்பாடாகவோ அல்லது ஒரு குறிப்பான முரண்பாடாகவோ கருத முடியாது. இவ்வாறு சொல்லும்போது ஏகாதிபத்தியம் ஒரு தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்கள் என்ற கூட்டணிக்கும் மக்களுக்குமுள்ள முரண்பாடு கூர்மையான வடிவத்தில் ஒரு தேசிய இன முரண்பாடக்கூட கடுமையாக உருவெடுத்து முதன்மையாக வரக்கூடும் என்பதை மறுக்கவில்லை. அதேசமயம் அவ்வாறு முதன்மையாக வருவதென்பது குறிப்பான சூழ்நிலையை வைத்து முடிவுக்கு வரும் விஷயமே தவிர அக்கட்டத்தில் வருமென்றோ அல்லது கட்டாயம் வந்தே தீருமென்றோ ஆரூடம் கூறமுடியாது. அத்துடன் மாவோவின் ஆய்வுமுறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றோர் விஷயம் புதிய ஜனநாயகப்புரட்சி என்பது ஒரே நிகழ்ச்சிப்போக்கு. அது ஒரு புரட்சியின் கட்டம். அதாவது. இக்கட்டம் முடியும் வரைக்கும் அதன் சாரத்தை தீர்மானிக்கின்ற அடிப்படை முரண்பாடுகள் தீருவதில்லை. இதில் பல உயர்கட்டங்கள் இருக்கலாம். அக்கட்டங்களின்போது பல புதிய முரண்பாடுகள் உதிக்கலாம், மறையலாம். முதன்மை அடையலாம் ஆயின் அந்நிகழ்ச்சிப்போக்கின் சாரம் அக்கட்டம் முழுவதும் மாறுவதில்லை. இவ்வாறு பார்காமல் அடிப்படை முரண்பாடுகளைத் தனித்தனியாகவும் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு முரண்பாடு தீர்க்கப்படுவதாகவும். அதாவது ஒவ்வொன்றிற்கும் ஒரு புரட்சி நடத்த வேண்டும் என்று பார்ப்பது இயக்கவியல் சிந்தனையல்ல. ஏகாதிபத்திய வல்லரசுகளையோ ஏகாதிபத்திய படைகளையோ நேரடியாக எதிர்த்து நின்றால்தான் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும் என்று நினைகின்ற அரைவேக்காடு மார்க்சிய லெனினியவாதிகள் உண்மைதான்!, உலகில் எந்தமூலையில் நடக்கும் புரட்சிகர போராட்டங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள்தான் அவை ஏகாதிபத்திய அமைப்புகெதிரான போராட்டங்களாக இருக்கின்றனவா என்ற அளவுகோல்தான் அவற்றை புரட்சிகர போராட்டம் என்பதை சோதிப்பதற்கான அளவுகோலாகும். அதேசமயம் ஒரு நாட்டை ஏகாதிபத்தியம் மறைமுகமாக ஆளுகின்றதா அல்லது நேரடியாகவோ ஆக்கிரமிப்பு மூலமோ ஆளுகின்றதா என்ற வேறுபாடு பாட்டாளி வர்க்க கட்சியில் செயல்தந்திரத்தின் எம்மாறுதலையும் கொண்டுவராதா? ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட நாட்டை நேரடியாக ஆளும்போதோ இராணுவத்தை அனுப்பும்போதோ அந்த குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கும் அந்த குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கும் உள்ள முரண்பாடு முதன்மையாகிறது. பிற ஏகாதிபத்தியங்களுக்கும், அந்நாட்டு மக்களுக்குமுள்ள முரண்பாடுகளும் பிற உள்நாட்டு முரண்பாடுகளும், இரண்டாம் நிலையடைகின்றன, அப்போதுகூட ஒரு இனப்பிரிவினை அல்லது அனைத்து இனங்களும் தனித்தனியே பிரிதல் என்பது கட்டாயமாக புரட்சிகர முழக்கமாக இருந்தாக வேண்டுமென்பதில்லை. அம்முழக்கம் பிற ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியாக கூட இருக்கும். ஏகாதிபத்தியம் மறைமுகமாக ஆளும்போது உள்நாட்டுப் பிற போக்கிற்கும், மக்களுக்குமுள்ள முரண்பாடு முதன்மையாகின்றது. இப்போதுகூட எல்லா சூழ்நிலைகளிலும் பிரிவினை என்ற முழுக்கம் புரட்சிகரமான முழக்கம் என்று சொல்ல முடியாது. இதை பார்க்க மறுப்பது இந்தியா போன்ற நாடுகளில் தற்போது முதன்மையாக உள்ள நிலப்பிரபுத்துவத்திற்கும் இந்தியமக்களுக்குமான முரண்பாட்டை கூர்மைப் படுத்துவதுதான் அதாவது விவசாயப் புரட்சியை முன் எடுத்து செல்வதுதான் தற்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு பணியாகும் என்பதை பார்க்க மறுப்பதாகும். இது விவசாயப்புரட்சியை சீர்குலைத்துவிடும் இப்பிரசுரத்தில் விவசாயப்புரட்சி புறகணிக்கப்படுவதை பற்றி மேலும் பிறகு பார்ப்போம். இவையே திருச்சி பிரசுரத்தில் காணப்படும் முக்கியமான தவறுகள் இவையெனில் பிரசுர நெடுகிலும் ஏராளமான மார்க்சிய லெனினியத்தின் ஆய்வு முறைக்கு விரோதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலையில் லெனினிய அணுகுமுறைப்படி ஆய்வு செய்து தமிழீழக் கோரிக்கை சரியானது என நமது கட்சி ஆதரிக்கிறது. ஆனால் திருச்சி பிரசுரத்தில் ஸ்தூலமான ஆய்விலிருந்து தொடங்காமல் பிரிவினைதான் உலக பொது விதி என்ற நோக்கில் இப்பிரச்சனை அனுகப் பட்டுள்ளது. அதே சமயம் சிங்கள இன உழைக்கும் மக்களிடையே சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள கூடிய இயக்கம் தோன்றினால் ஒன்றுபட்டு போராட வாய்ப்பு ஏற்பட்டால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய ஜனநாயக அரசை நிறுவ போராட வேண்டும் என்ற நிலையெடுப்போம் இக்கண்ணோட்டம் அப்பிரசுரத்தில் இல்லவேயில்லை. சிங்களவர்க்கும் தமிழருக்கும் தற்போதைக்கு ஒற்றுமைக்கு வாய்ப்பில்லையெனினும் அவர்களை ஒன்றுபடுத்துவது பற்றி எந்த சிந்தனையுமே பிரசுரத்தில் காணப்படவில்லை. இலங்கை வரலாற்றைக் கூறும் போது எவ்வாறு ஆங்கில ஏகாதிபத்தியம் திட்டமிட்டு தமிழர் சிங்களவர் இனமோதல் ஏற்படுத்தினான் என்பதுபற்றி பிரசுரம் கூறவில்லை. அத்துடன் தற்போதைய ஈழத்தமிழ் தேசிய வாதத்தின் குறுகிய வெறி சந்தர்ப்பவாத சரணாகதி வாதங்களை இதில் அம்பலப்படுத்தவில்லை. அடுத்து இந்தியாவை பற்றி பேசும்போது இந்திய ஒடுக்குமுறை அரசுக்கும் தேசிய இனங்களுக்குமிடையேயான அடிப்படை முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகிறது. எந்த எல்லைக்குள் உலக ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கையும் ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியான தரகு முதலாளிய நிலவுடமையரின் செல்வாக்கையும் வீழ்த்தமுடியுமோ அந்த எல்லைகளுக் குள்ளேயே புரட்சிகர போராட்டத்திற்கான அணிகளை திரட்டுவதும் இயக்கத்தை கட்டுவதும் உடனடித் தேவையாகின்றது எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியே பிரிவதற்கான போராட்டம் தொடுப்பது உடனடி தேவை. ஒரே வரலாற்று கட்டத்திலுள்ள இரு நாடுகளில் ஒரு நாட்டை இன்னொரு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் விசேஷ அம்சங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் எனற லெனினிய அணுகுமுறை இது விஷயத்தில் கைவிடப்பட்டு விட்டது. இவர்களுக்குத்தான் தனித்தனியே பிரிவது என்பது ஏகாதிபத்திய சகாப்தத்தின் பொதுவிதியாயிற்றே. இந்தியா ஆளும் வர்க்கங்களைப் பற்றி குறிப்பிடுபோது இந்தியும் அதற்கு உறவுடைய மொழிகளையும் பேசிவருகின்ற இனங்களை சேர்ந்த நிலவுடமையர்கள் வர்த்தகர்கள் வங்கித் தொழில் செய்வோர் ஆகியோரையும் சிறுமுதலாளி வர்க்கத்தையும் சேர்த்துக் கொண்டு இத்தரகு முதலாளிவர்க்கம் ஆண்டுவருகிறது. இந்தியாவை ஆளுகின்ற தரகு முதலாளிய நிலவுடைமை வர்க்கங்கள் எல்லா தேசிய இனங்களிலிருந்தும் வந்தவர்கள் என்பதையும் ஆனால் இவர்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள் வடநாட்டு குஜராத்தி, மார்வாடி பணியா பார்சி தரகுமுதலாளிகளும் வடமாநில நிலக்கிழார்களும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் பொருளென்ன? தமிழ் நாட்டு பெரு நிலப்பிரபுக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதே வட இந்தியாவில் உள்ள சிறு முதலாளிவர்க்கத்துக்கு கூட ஆட்சியில் பங்கு உண்டாம் ஆனால் தென்னிந்திய நிலப்பிரபுக்களுக்கு இல்லையாம் இந்திய அரசு என்பது இந்தியா முழுவதுமுள்ள நிலவுடமை உறவுகளை பாதுகாத்து வருகின்ற அரசாகும். பெருநிலப்பிரபுக்களின் பிரதிநிதியாகாவும் செயல்படுகின்ற அரசாகும் என்பதை பார்க்க மறுப்பது தமிழின பெருநிலப்பிரபுக்களைக்கூட தேசிய இனப் பிரச்சனையில் இவர்கள் கூறும் தனி அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக் கேட்டுச் செல்லும் அதாவது அவர்கள் எதிரிகள் இல்லை. தேசிய விடுதலைக்கு அச்சாணி உழவர் புரட்சியே என இப்பிரசுரம் கூறிக் கொண்டாலும் அது நிலபிரபுத்துவ எதிர்ப்பு விவசாய புரட்சியை திருப்பவே உதவும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.
மார்ச், 1984.