Tuesday 23 November 2010

கருணாநிதி பாசிச நிர்வாகமே நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் ஜீவாவை உடனே விடுதலை செய்!

தமிழக மாநில கருணாநிதி பாசிச நிர்வாகமே,

நக்சல்பாரி புரட்சியாளர் – மக்கள் ஜனநாயக இளைஞர் கழக தோழர் ஜீவாவை உடனே விடுதலை செய்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே! தோழர் ஜீவா மீதான வழக்கினை நடத்திட நிதி தாரீர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை விடுதலை செய்யவும் நிலவுடைமை ஆதிக்கத்தைத் தகர்த்து மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் உதயமானதே நக்சல்பாரிப் புரட்சி இயக்கம். நிலவுடைமைச் சுரண்டல், சாதி தீண்டாமைக் கொடுமை, பெண்ணடிமைத்தனம், கந்துவட்டி, கட்டைப் பஞ்சாயத்து போன்ற நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைகளுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைத்த தொடக்க காலத்திலேயே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்தான் தோழர் ஜீவா என்கிற ஜீவானந்தம். மாணவப் பருவத்திலிருந்து புரட்சிகர அரசியலில் ஊன்றிச் செயல்பட்டு வரும் தோழர் ஜீவா கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அப்புசாமி செட்டியார் என்கிற கொடிய நிலப்பிரபுவை கொன்றொழித்ததாக 1976ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஜீவா கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு 1998லேயே காலாவதியாகி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இந்நிலையில் தோழர் ஜீவாவைக் கைது செய்தது ஏன்?


தன்னியல்பு அரசியல் வழியை நிராகரித்து புரட்சிகர அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் முன்னணிகளை வென்றெடுத்து அமைப்பாக்கும் பாரிய பணியைச் சிரமேற்கொண்டு செயல்பட்டுவரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு முன்னணி ஊழியராய் செயல்பட்டுவந்த தோழர் ஜீவாவை கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க. வின் அரசியல் மீது தொடுக்கப்படும் தாக்குதலே.


1990களில் சர்வதேச அளவில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் தகர்ந்தபின், தனக்குப் போட்டியாளன் இல்லாத நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகைத் தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்ட காலத்தில், அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய அரசை அமெரிக்காவின் புதிய காலனியாக - முழு அடிமை நாடாக ஆக்கும் நோக்கத்தில் உலகமயக் கொள்கைகளை அமூல்படுத்த வேண்டுமென இந்திய அரசை உலக வங்கியின் மூலம் நிர்ப்பந்தம் செய்த காலமுதல் ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் மத்திய, மாநில அரசுகளின் தேசவிரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் மத்திய, மாநில அரசுகளின் தேசவிரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் போராடிவருகிறது (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க.


இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழ் ஈழமே தீர்வு, தமிழீழ விடுதலைப்போரில் ஊன்றி நிற்கும் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம் என்ற நிலையெடுத்து -1983 முதல்- பிரச்சாரம் செய்துவந்த (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க., சிங்கள பேரினவாத இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்தும் பணவுதவி செய்தும் போரில் மறைமுகமாகப் பங்கு கொண்டும் தமிழீழ மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும் பங்காற்றிய இந்திய அரசைக் கண்டித்து பிரச்சார இயக்கம் மேற்கொண்டது.

அத்தோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டை வேடம் பூண்டு இந்தப் போரில் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து தமிழீழ மக்களுக்கு துரோகம் செய்ததை அம்பலப்படுத்தி பிரச்சார இயக்கம் மேற்கொண்டது மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க). முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னரும், “தமிழீழம் வெல்லும்வரை ஓயமாட்டோம்!”, “ஈழ விடுதலைப் போருக்கு துரோகம் இழைத்த இந்திய ஆளும் கும்பலைக் கருவறுப்போம்” என முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டது மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம். (ம.ஜ.இ.க).


ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகத்தை மூடிமறைக்கவும் தமிழினக் காப்பாளன் என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்காகவும் ‘செம்மொழி மாநாடு’ என்கிற பெரும் கூத்தை கோவையில் கருணாநிதியார் அரங்கேற்றியபோது, “பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு! என்றும், அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம் இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியே ஆனாலும் தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது! என்றும், தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும், ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிப்பாட்டு மொழியாய் அன்னைத் தமிழை அரியணை ஏற்றவும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்கிற நிலைபாட்டை முன்வைத்து ம.ஜ.இ.க பிரச்சாரம் மேற்கொண்டதை கருணாநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


தன் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் முரணற்ற ஜனநாயக முழக்கங்களை முன்வைத்துப் போராடும் (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) ம.ஜ.இ.க மீது பாசிசத் தாக்குதலை கூர்மைப்படுத்தியது கருணாநிதி அரசு. செம்மொழி மாநாட்டை அம்பலப்படுத்திய (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.) ம.ஜ.இ.க தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. ம.ஜ.இ.க.வின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கிச் சூறையாடியது கருணாநிதி அரசு, மேற்கூறிய அடக்குமுறைகளால் ம.ஜ.இ.க.வின் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தை கருணாநிதி அரசால் தடுக்க முடியவில்லை. மாறாக ம.ஜ.இ.க.வின் அரசியல் பிரச்சாரம் வேகம் பெற்றது.


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிராக ம.ஜ.இ.க “ஒபாமா வெண்புறா அல்ல, பிணம் தின்னிக் கழுகே!”, “மன்மோகன் கும்பலே ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்காதே!” என முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்தின் யுத்ததந்திரக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றவும், மீளமுடியாத நெருக்கடிச் சூழலில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க அந்த நெருக்கடிகளின் சுமைகளை இந்திய மக்கள் மீது சுமத்த இந்தியாவுடன் இராணுவ, அணுசக்தி, பொருளாதார, அரசியல் ஒப்பந்தங்களைப் போடவே ஒபாமா இந்தியாவிற்கு வருகிறார். அப்படிப்பட்ட ஒப்பந்தங்களை போட்டு நாட்டைக் காட்டிக் கொடுக்காதே என இந்திய அரசை எதிர்த்தும், பிணம் தின்னிக் கழுகு ஒபாமாவே திரும்பிப் போ! என அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நவம்பர் 8ல் அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்தான், தோழர் ஜீவா நவம்பர் 6ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்.


‘பயங்கரவாத ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு’ என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒருபுறம் போலீஸ் பட்டாளத்தைக் குவித்து புரட்சிகர இயக்கங்கள் மீது அடக்குமுறை தொடுப்பதும் மறுபுறம் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களிலும் சில்லரைச் சலுகைகளை வாரி இறைத்து புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கிவிடலாம் என ஆளும் வர்க்கங்களும் மத்திய, மாநில அரசுகளும் பகல்கனவு கண்டுகொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் கைது செய்யப்படும் மார்க்சிய லெனினிய (மா.லெ) புரட்சியாளர்களை, நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தவர்கள் என்ற காரணத்தைக் காட்டி பிணை வழங்காமல் வழக்கை இழுத்தடித்து நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பதை ஒரு கொள்கையாகவே இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. இதுவும், புரட்சிகர இயக்கங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலே.
இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் மக்களின் எல்லா வாழ்க்கைத் துறையிலும் செய்துகொண்டிருக்கும் மக்கள் விரோத, தேசவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஓவ்வொரு அடியிலும் எதிர்த்து சமரசம் இன்றிப் போராடும் ம.ஜ.இ.க. வையும் அதன் அரசியல் கருவையும் அழிக்கும் நோக்கத்திலேயே தனிப்படை அமைப்பு, தேடுதல் வேட்டை, தோழர் ஜீவா கைது!


மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பாசிசத் தாக்குதல்களால் புரட்சிகர இயக்கத்தை, புரட்சிகர அரசியலை புதைத்துவிட முடியாது. விதைக்கப்படும் புரட்சிகர அரசியல் கருத்துக்கள் மக்கள் மனங்களில் முளைத்து தழைத்து மக்கள் விரோத, தேசவிரோத ஆட்சியாளர்களையும் ஆளும் வர்க்கங்களையும் முட்டிச் சாய்த்து புதைகுழிக்கு அனுப்பியே தீரும்,

போலி ஜனநாயகம் பொசுங்கியே தீரும், மக்கள் ஜனநாயகம் மலர்ந்தே தீரும்.
எனவே ம.ஜ.இ.க.வின் மீதான அடக்குமுறைகளுக்கெதிரான கண்டன இயக்கத்திற்கு ஆதரவு அளித்தும், தோழர் ஜீவாவின் மீதான வழக்கினை நடத்தவும், அத்தோழரின் குடும்பத்தைப் பராமரிக்கவும் கணிசமாக நிதி தந்து உதவுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

* காலாவதியாகிப்போன வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையான பிறகு, தோழர் ஜீவாவைக் கைது செய்தது ஏன்?

* அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும்போராடும் ம.ஜ.இ.க வின் மீதான தொடர் அடக்குமுறையின் ஒரு பகுதியே தோழர் ஜீவா கைது !

* கருணாநிதி அரசே! புரட்சியாளர்களைக் கைது செய்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை (ம.ஜ.இ.க) நசுக்க முயலாதே!

* தோழர் ஜீவாவை உடனே விடுதலை செய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு நவம்பர் 2010

================================================

Note:
Maoist cadre held

Special Correspondent The Hindu Monday, Nov 08, 2010
CHENNAI: The Q branch CID police on Saturday arrested a top Maoist cadre in Tiruvallur district.
According to police sources, Natham Jeeva, who remained underground for many years, was nabbed near Thiruninravur by a special team following a specific input.
He was allegedly involved in a murder case.
“Jeeva is a very important Maoist cadre who was wanted by the Tamil Nadu police for about 35 years,” Inspector-General of Police (intelligence) M.S. Jaffar Sait said.

http://www.thehindu.com/news/cities/Chennai/article871126.ece

===========================================================

Tuesday 16 November 2010

பிணந்தின்னி கழுகு ஒபாமாவே திரும்பிப்போ!

பிணந்தின்னி கழுகு ஒபாமாவே திரும்பிப்போ!
அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈராக், ஆப்கனை விட்டு வெளியேறு!
* புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலே, ஒபாமாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காதே!
* இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட துரோக ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

* கள்ளத்தனமாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் வெளியிடு!

* பாராளுமன்ற ஒப்புதல் இன்றி ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள அனுமதிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 184 ஐ ரத்துச் செய்!
* அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!
************************
*அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கப் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்ய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
************************
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு -
======== சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============
<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>

Tuesday 12 October 2010

இந்துதுவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் தீர்ப்பை நிராகரிப்போம்

இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிப்போம்!

* 'பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம் என்ற தீர்ப்பு' இந்துமத நம்பிக்கையின் அடிப்படையிலானதே! அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது அல்ல!

* சேது சமுத்திர மணல் மேட்டை ராமன் பாலம் என்பதுபோல, பாபர் மசூதியை ராமன் பிறந்த இடம் என்பதும் இந்த. இந்து மத நம்பிக்கையிலானதே!

* காவிக் காடையர்கள் பாபர் மசூதியை இடித்ததைக் கண்டிக்காமல் மெளனம் சாதிக்கும் இந்தத் தீர்ப்பு' இந்துத்துவ பாசிசத்திற்கு சேவை செய்யும் தீர்ப்பே!

* பாபர் மசூதியை மூன்றாகப் பிரித்து வழங்குவது இந்து, இஸ்லாமிய, மத நல்லிணக்கத்தை கொண்டுவராது!

மத மோதல்களுக்கே வழிவகுக்கும்!
* மன்மோகன் அரசே மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட அனுமதி வழங்கு!

* மதச்சார்பற்ற மக்கள் ஜனநாயக குடியரசு ஒன்றே மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் உருவாக்கும்!
* மக்கள் ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்.
* மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வாழ்க!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

=================================================

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஒக்ரோபர், 2010

சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள்

==============================================

<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>

Wednesday 15 September 2010

ஒபாமா வெண்புறா அல்ல, பிணந்தின்னிக் கழுகே!


* அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈராக், ஆப்கனை விட்டு வெளியேறு!

* புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலே, ஒபாமாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காதே!

* இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட துரோக ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

* கள்ளத்தனமாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் வெளியிடு!

* பாராளுமன்ற ஒப்புதல் இன்றி ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள அனுமதிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 184 ஐ ரத்துச் செய்!

* அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!

*அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கப் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்ய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு - செப்டம்பர் 2010
======== சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============
<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>

Tuesday 14 September 2010

கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

* 'தமிழ்மாய்க்கும்' உலகமயமாக்கலை எதிர்ப்போம்!

* கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அனுமதி கேட்டது. மேற்கண்ட “பொதுக்கூட்டம் நடந்தால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்றும், தற்போது உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும்” என்று கூறி கூட்டம் நடத்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்துக்கு அனுமதிதர கோவை மாநகர காவல்துறை மறுத்து விட்டது.

இவ்வாறு கருணாநிதி ஆட்சி கருத்துரிமையை மறுப்பது தனி ஒரு நிகழ்வல்ல. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கெதிரான எந்தவொரு ஜனநாயக நடவடிக்கையையும் கருணாநிதி அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மாநாட்டை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்தகைய சுவரொட்டிகளை அச்சடிக்கவேண்டாம் என அச்சக உரிமையாளர்கள் பலருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தம் கண்டனத்தை தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விட்டது காவல்துறை. அரங்க கூட்டங்களை நடத்த முயன்றவர்கள் கூட காவல்துறையினரால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது.

மாற்றுக் கருத்துக்களுக்கான இடத்தை மறுத்து திமுக அரசு போலீஸ் ராஜ்யத்தை நடத்தி வருகிறது. திமுக அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் ஜனநாயக வாதிகளையும் ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்குத் துணைபோக மறுக்கும் அரசு அதிகாரிகளையும் பழிவாங்குகிறது.

ஏன் இந்த பாசிச ஒடுக்குமுறை?

திமுக அரசு பின்பற்றிவரும் தமிழ் தேசிய இன விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை அதனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.

மழை பெய்கிறபோது குடை கிடைக்காவிட்டாலும் மேல்துணியை வைத்துக்கொண்டு பிடித்துக்கொள்வதுபோல் உடனடியாக இந்தி வந்துவிடாமல் ஆங்கிலத்தை வைத்துத் தடுக்கிறோம் என்று அண்ணா சொன்னார். ஆனால் உண்மையில் இந்தியை தடுக்க ஆங்கிலம்தான் நிரந்தர குடை என திமுக நம்பியது. திமுக அரசு இந்தியை தடுக்க ஆங்கிலம் எனச் சொல்லி தமிழகத்தில் ஆங்கிலத்தை மட்டும் கட்டாயப் பாடமாக்கி, தமிழைப் படிக்கலாம் அல்லது படிக்காமலும் இருக்கலாம் என 13 மொழிகளில் ஒன்றாக தாய்மொழியை தடம் மாற்றி தடுமாறவைத்தது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை மையப்படுத்தியே அணுகுமுறைகளும், நடவடிக்கைகளும் முன்வைக்கப்பட்டதே தவிர, தமிழ் மொழி அது சார்ந்த ஆட்சி மொழி சட்டத்திலிருந்த குறைபாடுகளை களைந்து, தமிழ் பயிற்றுமொழி ஆவதற்கான செயல்திட்டம், கால அளவு என்று எதுவும் இல்லை. மத்திய அரசு (இந்திய அரசு) அரசின் நிர்வாக நடைமுறைகளில் இருமொழிக் கொள்கையும், பள்ளிக்கூடங்களில் மும்மொழிக்கொள்கையும் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து தாய்மொழியே - தமிழ்மொழியே ஆட்சிமொழி, பயிற்று மொழி என்ற கொள்கையை திமுக முன்வைக்கவில்லை. இந்தி வராமலிருக்க இருமொழிக் கொள்கை என்றார்கள் திமுக ஆட்சியாளர்கள். இந்தியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இன்று நாட்டிலுள்ள நிலமை என்ன?

தமிழ் நாட்டுத் தெருவெல்லாம் ஆங்கில முழக்கத்தோடு இந்தி முழக்கமும் சேர்ந்து கொண்டது.தமிழ் நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்திக்கு முதலிடம் தந்து ஆங்கிலத்தை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.தமிழ்நாட்டு அலுவலகங்களில் ஆங்கிலத்துக்கு முதலிடம் தந்து தமிழை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.தனியார் நிறுவனங்களும் உலகமயமாக்கலின் விளைவாய் புற்றீசல் போல் புறப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களும் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துள்ளன, தமிழுக்கு அங்கு இடமில்லை.ஒரு பக்கம் செம்மொழி மாநாட்டை நடத்திய தமிழக அரசு மறுபக்கம் மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆங்கில வழி மாதிரிப்பள்ளிகளைத் திறக்கிறது. திமுக ஆட்சியில் இந்த இனமும் மொழியும் தமிழர் வாழ்வியல் அறப்பண்புகளும் மிகக்கேடான வீழ்ச்சியை அடைந்துவிட்டன. இந்த அவலநிலையை மூடிமறைக்கவே உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது தமிழக அரசு. ஆகையால் செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது பாசிசத் தாக்குதலைத் தொடுக்கிறது கலைஞர் கருணாநிதியின் அரசு. தமிழினத்தின் காவலன் என்ற வேடமிட்டு வெறும் மேடைப் பேச்சுகளாலும் பொதுக்கூட்டங்களாலும் மக்களைக் கவர்ந்து இருபதாண்டுக்குள்ளாகவே ஆட்சியை பிடித்து வரலாறு காணாத அறக்கேடுகள், ஊழல்கள், ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ மற்றும் அகில இந்திய ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்து இன்னும் ஆட்சியில் இருக்கமுடிகிறது.

இத்தருணத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழருக்கு விடுத்த பின்வரும் அழைப்பை கருத்தில்கொள்வது அவசியம்;

தமிழருக்குத் தலைவரெனச் சொல்வார் தாமும். தமிழ்மாய்க்கக் காசுபெறத் துடிக்கின்றார்கள் தமிழ்மாய்க்கக் கூலிதரச் சிலரும் உள்ளார். தமிழ்கொல்லும் தலைவர்களைக் காணும் தீய தலைமுறையும் இதுவாகும் ஒன்று சேர்க!”

இந்தி வராமலிருக்க இருமொழிக்கொள்கை என்று சொல்லி ஆங்கிலத்தை நிலைநிறுத்தும் திராவிடக் கட்சிகளின் கொள்கை தமிழ் மாய்க்க வழிவகுக்கும் கொள்கையாக அமைந்துள்ளது. உலகமயமாக்கலின் விளைவாக இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிந்துபோக வாய்ப்புள்ள மொழிகளில் ஒன்றாகத் தமிழ் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான செயல்கள் இன்றி, வெறும் ஆரவார விளம்பரச் செயல்களில் ஈடுபட்டுத் தமிழை காப்பாற்றிவிட முடியாது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன்னையே காவலனாகக் காட்டிக் கொள்ளும் இந்த தலைவர் உண்மையில் தமிழுக்குச் செய்வது என்ன? தமிழ் மாய்க்கும் தமிழ் கொல்லும் உலகமயமாக்கும் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதுதான். தமிழுக்கு வாய்ப்பளிக்காமல் ஆங்கிலத்தை வளர்ப்பவர்கள் அனைவரும் திராவிடக் கட்சிகளின் கல்வி வியாபாரிகளே. அவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களால் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தமிழைப் புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் கலைஞரும் அவருடைய குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களிலும் தமிழ் எப்படி கொல்லப்படுகிறது என்பது அனைவரும் அறிவார்கள். இவற்றையெல்லாம் திருத்துவதற்குச் சற்றும் மனமில்லாத அரசும் அதன் தலைவரும் செம்மொழியை வளர்ப்பதற்காகச் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடு. ஆட்சியிலும் கட்சியிலும் உச்ச அதிகாரம் பெற்றவர்களாக கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நீடித்திருக்க வாக்காளர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது அதனினும் மாபெரும் வெட்கக்கேடு.

இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரிப் போராடிய, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், கூட்டமொன்றில் இலங்கை இராணுவத்தை விமர்சித்து ஆற்றிய உரையின் சில பகுதிகள் இருபிரிவினருக்கிடையே பதற்றத்தைத் தூண்டுவதாகச் சொல்லித் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரைக் கைது செய்தது கருணாநிதி அரசு. சீமான் பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்து கொண்டிருந்தபோது தடுத்தி நிறுத்தி அவரை கைது செய்த காவல்துறை, அச்சம்பவத்தைப் படம்பிடிக்க முயன்ற ஊடகத்துறையினரைத் தாக்கி அவர்களிடமிருந்து காமிராக்களைப் பறித்திருக்கிறது.

திமுக ஆட்சியில் காவல்துறையினரின் அத்துமீறல்களைப் படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது திரும்பத்திரும்ப நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு தருணத்திலும் அரசு காவல்துறையினரின் அத்து மீறலுக்குத் துணைபோய்க் கொண்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய அரசின் அணுகுமுறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நேரடியான தாக்குதலைத் தவிர பொய் வழக்குகள் மூலம் பத்திரிக்கைகளின் குரல்வளையை நெரிக்க அரசு முயல்கிறது. அரசு சகிப்புத் தன்மையற்ற விதத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவருவது கருணாநிதி அரசின் மக்கள் விரோத பாசிசத் தன்மையைத்தான் காட்டுகிறது. சமீபத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டதோடு, வர்த்தகர்களும் தொழில் துறையினரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகச் செயல்படவேண்டாம் என மிரட்டப்பட்டனர். தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியின் கீழ் தமிழரின் நிலை வேதனைக்குரியது. இந்த ஆட்சிக்கு எதிரான எந்த ஒரு ஜனநாயக நடவடிக்கையையும் கருணாநிதி அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

நம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான விடாப்பிடியான போராட்டத்தை மேற்கொள்வது அவசியம்.

ஆகவே, புரட்சிகர ஜனநாயக இயக்கத்தை கட்டியமைக்க பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரள்வோம்:

* ஆங்கில இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்ப்போம்!

* தமிழ் ஆட்சிமொழி பயிற்றுமொழி ஆக்கிட போராடுவோம்!

* கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு - செப்டம்பர் 2010

======= ==== சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============

<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>

Wednesday 1 September 2010

செப்டம்பர்-12 இந்திய புரட்சிகர தேசபக்த தியாகிகள் தினம்!

2010 செப்டம்பர்-12 தியாகிகள் தின நினைவாக,
=============================================
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!
=======================================
* மன்மோகன் கும்பலின் புதிய காலனிய உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!
* நிலச்சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
* தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
* ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!
* தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
* மாவோயிஸ்டுகள் மீதான போர் மக்கள் மீதான போரே, போரை நிறுத்து!
* பேச்சுவார்த்தை தொடங்கு!
*புரட்சியாளர் ஆசாத்திற்கு வீரவணக்கம்!
* அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருணாநிதி ஆட்சியின் பாசிசப் போக்கை முறியடிப்போம்!
=========================================
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு
=========================================

Saturday 7 August 2010

ஆகஸ்ட்-15 யாருக்கு சுதந்திரம்?

''It is a fateful moment for us in India, for all Asia and for the world. A new star rises, the star of freedom in the East, a new hope comes into being, a vision long cherished materializes. May the star never set and that hope never be betrayed! ''
Jawaharlal Nehru : Speech On the Granting of Indian Independence, August 14, 1947
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ஆகஸ்ட்-15
யாருக்கு சுதந்திரம்?

* அணுவிபத்து இழப்பீடு மசோதா – ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்திய மக்களைப் பலிகொடுக்கவே!

* பயங்கரவாத ஒழிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் – அமெரிக்காவின் ஆதிக்க நலனுக்கே!

* ‘பசுமை வேட்டை’ – கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்கவே!

* பன்னாட்டுக் குழும விவசாயமும், மரபணுமாற்றத் தொழில்நுட்பமும் வேளாந்துறையை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தவே!

* சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி, எண்ணெய் நிறுவனங்களுக்கு விலை நிர்ணயிக்க உரிமை – விளைவு விலைவாசி ஏற்றம்! மக்களுக்கோ... பட்டினிச்சாவு!

இதுவா சுதந்திர அரசு?
தொடர்வோம் சுதந்திரப் போரை!


= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஆகஸ்ட், 2010=
======== சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============
<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>

Friday 16 July 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

“பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களிடம் வினியோகம் செய்தது. கோவை செம்மொழி மாநாட்டை எதிர்த்த இந்தப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக
> ம.ஜ.இ.க வின் அமைப்பாளர் உள்ளிட்ட முன்னணியினர் கைது;
> செம்மொழி மாநாடு நுழைவாயிலில் பிரசுரத்தை வினியோகம் செய்த ஞானம் உள்ளிட்ட ஐவர் மீது கொலைவெறித் தாக்குதல்;
> சென்னையில் ம.ஜ.இ.க தலைமை அலுவலகம் சூறையாடல்;
> சுவரொட்டியை அச்சிட்ட அச்சகத்தினர் மீது வழக்கு;
> கோவையில் செம்மொழி மாநாட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்த ம.ஜ.இ.க வினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டுச் சொந்தக்காரருக்கு மிரட்டல்;
> செம்மொழி மாநாட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது;
> அ.இ.அ.தி.மு.க பழ கருப்பையா மீதும் தாக்குதல்;
> தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது;
இவ்வாறு செம்மொழி மாநாட்டை விமர்சிக்கும் உரிமையை பறிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். இந்தத் தாக்குதல் பாசிசத் தன்மை கொண்ட கொடூர தாக்குதலாகும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கும் கருணாநிதி ஆட்சி, ஆங்கிலம் இந்தி மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக ஆக்கக் கோரியும் குரல்கொடுத்தோர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் தொடுத்தது ஏன்?

* இந்தி அல்லது ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த தேசிய மொழியையும் அங்கீகரிக்க, வளர்த்தெடுக்க மத்திய அரசு தயாராயில்லை. இதை எதிர்த்துப் போராட கருணாநிதியின் தமிழக அரசு தயாராயில்லை.
* மத்தியில் அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற இலட்சியங்களையெல்லாம் கருணாநிதியும் திராவிட இயக்கக் கட்சிகளும் இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
* இப்போது கருணாநிதிக்கு உள்ள அக்கறை எல்லாம் மத்திய அமைச்சரவையில் வலுவான துறைகளைக் கைப்பற்றுவது எப்படி? வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பவைதான்.

இந்த சந்தர்ப்பவாத, அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் கருணாநிதியின் அரசியல்தான் தமிழக அரசு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை வழி நடத்தும் அரசியல். எனவே செம்மொழி மாநாட்டை விமர்சிப்பது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தி, அவரைத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும் எனக் கருதியே கருணாநிதியின் அரசு செம்மொழி மாநாட்டை எதிர்ப்போர் மீது இந்த தாக்குதலைத் தொடுத்தது.

செம்மொழி மாநாடு கருணாநிதியின் உட்கிடக்கையை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பழந்தமிழ்ப் பெருமைப் பேசி தமிழ் மக்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஆனால் இன்றைய தமிழின் அவலத்தை அதாவது கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற பழமையான செம்மொழிகள் மக்களால் பயன்படுத்தப் படாமல் செத்த மொழிகளானது போல் தமிழும் (ஆங்கில, இந்தி மொழிகளின் ஆதிக்கம் தொடர்ந்தால்) செத்தமொழிப் பட்டியலில் சேரும் அவலம் விரைவில் நிகழக்கூடும் என்ற அபாயத்தை செம்மொழி மாநாட்டால் மறைக்க முடியவில்லை.
ஈழத் தமிழ் மக்களின் மீதான இன ஒழிப்புப் போர் முடிவுக்கு வந்த பிறகும், ராஜபட்சே அரசு இன ஒழிப்பு பாசிச நடவடிக்கைகள் மூலம் தொடர்கிறது. ராஜபட்சே அரசின் பாசிச தாக்குதலை எதிர்ப்பதற்கு மாறாக, மன்மோகன்சிங் அரசு அத்துடன் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்த்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குரல் கொடுக்காதது செம்மொழி மாநாட்டின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது.
இந்த செம்மொழி மாநாட்டின் மூலம் தனக்கு ஆதரவாக மக்களை திரட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் உட்கிடக்கை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த மாநாட்டின் ஆரவார ஆட்டங்களைக் கண்டு தமிழர்கள் ஏமாறப் போவதில்லை.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! – பாவேந்தர்

ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோதே, இந்தியாவிலுள்ள மொழிகள் எல்லாம் மடிந்துபோய் அவற்றின் இடத்தில் ஆங்கிலம் நிலவிவருமென கருத்து இருந்துவந்தது. படிப்படியாக மெல்ல மெல்ல தமிழ்மொழி இனி செத்துப் போகும். ஐரோப்பிய மொழிகள் இந்த உலகில் உயர்வினை அடையும் என்ற கருத்து இருந்து வந்தது.
“எவ்வாறாயினும் நமது தாய்மொழி சாமானியத்தில் இறந்துவிடக் கூடியதன்று” என்று நம்பிக்கொண்டிருந்தனர் இந்திய தேசியவாதிகள். ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போன பிறகும் கூட, இந்தியா அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ நாடான பிறகும் கூட, இந்திய அரசு கடைப்பிடித்து வந்த தேசிய இன ஒடுக்குமுறைகளாலும், அது கடைப்பிடித்து வந்த ஆட்சி மொழிக் கொள்கையாலும், ‘எவ்வாறாயினும் நமது தாய்மொழி சாமானியத்தில் இறந்து விடக்கூடியதன்று’ என்ற நம்பிக்கை வளர்வதற்கு மாறாக, தேய்ந்து கொண்டே வந்துள்ளது.
இந்திய அரசின் ஆட்சிமொழி, பயிற்று மொழிக் கொள்கையின் விளைவாக இன்று ஆங்கிலம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சிமொழியாக இருக்கின்றன. இன்று அரசின் அனைத்து துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. உயர்நீதி மன்றங்களில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வழக்காட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 348வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளிமுதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. இச்சூழலை மாற்றாமல் – ஆங்கிலத்தை அகற்றாமல் – தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக மாற்ற முடியாது.
இந்திய அரசு கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிப்பதை எதிர்த்துப் போரிடுவதற்கு பதிலாக மாநில தரகு முதலாளியக் கட்சிகளும் திரவிடக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என வலியுறுத்தின. திராவிடக் கட்சிகள் தமிழை ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சி செய்யவில்லை; மாறாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகவே இக்கட்சிகள் பாடுபட்டன. இதன் விளைவாக மத்திய ஆட்சிமொழியாக தமிழில்லை, மாநிலத்திலும் முழுமையான நிர்வாக மொழியாக இல்லை. நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக இல்லை. பயிற்றுமொழியாக தமிழ் இல்லாமல் போகும் அபாயம் எங்கும் எதிலும் ஆங்கிலம் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழ்மொழிக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆங்கிலம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்படியே சென்றால், கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற பழமையான செம்மொழிகள் மக்களால் பயன்படுத்தப் படாமல் செத்த மொழிகளானது போல் தமிழும் செத்தமொழி பட்டியலில் சேரும் அவலம் விரைவில் நிகழக் கூடிய அபாயம் இருக்கிறது.
மேலும், யுனெஸ்கோ நிறுவனம் செய்த ஆய்வின்படி 21ஆம் நூற்றாண்டு இறுதியில் உலகில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்று என்ற செய்தி வந்துள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் விளைவாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் உலக நாடுகளில் எல்லாம் வெகுவாக பரவிவருவதன் தொடர்ச்சியாக இம்மொழிகளின் அழிவை நாம் காணவேண்டும்.
தமிழ்மொழி செம்மொழி என்று அறிவித்து விடுவதால் தமிழ் வழக்கொழிந்த மொழியாக ஆவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. தமிழ் எல்லாத் துறைகளிலும் மக்களின் பயன்பாட்டு மொழியாக ஆக வேண்டும்; எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெற செய்தல்வேண்டும். அதாவது, தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிப்பாட்டு மொழியாக ஆக்குவதன் மூலம்தான் தமிழ்மொழி வாழ்வியல் மொழியாக, வளரும் மொழியாக நிலைநின்று மங்காப் புகழ்பெற்ற மொழியாக ஆக்கமுடியும்.
இப்பணியை, ஏகாதிபத்திய உலகமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவராமலும், இன்று நாட்டில் நிலவும் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆட்சி அமைப்புக்குள்ளேயே சாதித்துவிட இயலாது.

எனவே இப்பணியை நிறைவேற்ற இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசை நிறுவ உறுதிகொள்வோம்!
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் வெற்றிபெற மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம்!
புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை ஒடுக்க கருணாநிதி அரசு போடும் பொய் வழக்குகளை முறியடிக்க தாராளமாக நிதி தாரீர்!

புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்:
* தமிழ்மொழியை செம்மொழி என அறிவித்துவிடுவதால் தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!

* தமிழ்மொழியை ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வழிபாட்டுமொழி ஆக்கிட மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!

ஆதரவு தாரீர்!.................................................... நிதி தாரீர்!
= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜுலை , 2010
========= சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள் !=============
குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்

Tuesday 22 June 2010

நீதிமன்ற மொழியாக தமிழ் வாழ்க! நீதிமன்ற ஊழியர் போராட்டம் வெல்க!

* தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்குவதற்கான வழக்கறிஞர்களின் போராட்டம் வெல்க!

* இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே ஆட்சிமொழி நீதிமன்ற மொழி என்ற சட்டத்தை நீக்கு!

*
அனைத்து தேசிய இனங்களின் மொழிகளையும் ஆட்சிமொழி நீதிமன்றமொழி ஆக்குவதற்காகப் போராடுவோம்!

*
தமிழ்மொழி செம்மொழி பெருமை பேசுவது, அனைத்து தேசியஇனங்களின் மொழியை ஆட்சிமொழி ஆக்காததை மூடிமறைக்கவே!

= மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு ஜூன் 2010 =

Wednesday 16 June 2010

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!-ம.ஜ.இ.க

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுவரை நடத்தப்பெற்று வந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளிலிருந்து வேறுபட்டது. உலகத் தமிழ்பேசும் மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைக்குள் இறங்காமல் தப்பிக்கும் பொருட்டு கலைஞர் கருணாநிதி இம்மாநாட்டை உலகச் செம்மொழி மாநாடாக நடத்த விரும்புகிறார்.

பரிதிமாற்கலைஞர் தொடங்கிவைத்து, தமிழர் அனைவரும் நூற்றாண்டுக்குமேல் நடத்தி வந்த போராட்டத்தின் விளைவாக 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் மத்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்தது. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கொண்ட உலகச் செம்மொழிப் பட்டியலில் தமிழும் சேர்க்கப்பட்டுவிட்டது.

செம்மொழி என்றாலே அது வாழும் மொழி, வளரும் மொழி, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற ஆட்சி மொழி என்று பொருள் அல்ல. தமிழ் மொழியைப் போன்று அடிமைப்பட்டிருக்கும் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிப்பதால் அது விடுதலை பெற்றமொழி ஆகிவிடாது.

இச்செம்மொழிகளுள் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மூன்றும் ‘இறந்தமொழி’ என்பதற்கு எடுத்துக்காட்டு. கிரேக்கம், இலத்தீன் ஆகிய இருமொழிகளுமே வழக்கிறந்ததற்கு அரசியல் முக்கிய காரணம்.

கிரேக்க நாடு அடிமைப்பட்டிருந்ததால் கிரேக்க மொழியும் அழியும் நிலைக்குச் சென்றது. ரோமப்பேரரசின் அழிவுக்குப்பின் பலதேசங்கள் விடுதலைபெற்றதால், இலத்தீன் செம்மொழியாக இருந்தாலும் தேசம் இல்லாததால் இலத்தீன் மொழி அழிந்தது.

ஒரு மொழி வழக்கிறந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக, பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறு வழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்க நேர்கிறது.

தொன்மையான மொழிகள் என்பவை சொல்திறனும் வளமும் சமுதாய வாழ்க்கை முறையில் செயலற்று நிற்பதாலேயே அவை வழக்கிறந்து நிற்கின்றன. தமிழில் இறந்த மொழி எனக் கூறுதல் மரபு அன்று. ஆகையால் ‘வழக்கு அழிந்த மொழி’ என்று குறிப்பிடுவர்.
“தமிழின் வாழும் தன்மையை,
ஆரியம் போல் உலக வழக்கு
அழிந்தொழிந்து சிதையா நின்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே” எனத் தமிழை வாழ்த்தினார், சுந்திரம்பிள்ளை அவர்கள்.

மொழி என்பது மக்கள் தொடர்புக்காக ஏற்பட்டது. சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் பயன்படுத்தப்படாத போது அது இறந்ததாகக் கருதப்படுகிறது.

சமூக உற்பத்தி, வாணிபம், விஞ்ஞானம், கல்வி, கலை, வரலாறு, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலும் மொழி பின்னிப்பிணைந்திருக்கிறது. எனவே மொழியின் வளர்ச்சி இலக்கியத்துறையை மட்டும் சார்ந்ததாகாது. மொழி ஆக்கம் தரவேண்டுமானால், சில காலம் தேங்கிய இடைவெளிக்குப் பிறகு அதனை முன்னேறச் செய்யவேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெறச் செய்தல் வேண்டும்.

தமிழ் செம்மொழி என அறிவித்திருந்தாலும், இந்தியாவின் தரகுப் பெருமுதலாளித்துவ பெருநிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசு ஆங்கிலத்தையும் இந்தியையும் திணித்து எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழியையும் அடக்குகிறது.

இத்தகைய சூழ்நிலையில் செம்மொழி மாநாடு பற்றி தமிழாய்வாளரான மா.இலா.தங்கப்பா பின்வருமாறு கூறுவது மனங்கொள்ளத்தக்கது:

“தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும், ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக்காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு உழலுகின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரை பல்லாண்டு காலமாய்ப் பிணித்துள்ள ஒரு நோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.“

அந்நிய ஆதிக்கமும் ஆட்சிமொழியும்:

தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப் பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ் தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.

1857க்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளை நேரடியாகத் தன் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த பின்னரே, இந்தியா என்ற ஒரு காலனி நாடு உருவானது. அதற்கு முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கத்தில் உள்ளது.

தமிழன் இன்று தமிழகத்தில் மட்டுமில்லை, மொரீஷியஸ், பிஜித்தீவு, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகெங்கும் தமிழர்கள் பரவியுள்ளனர். இலங்கையில் தமிழீழம் உள்ளது, மற்றும் மலையக மக்கள் வாழ்கின்றனர். 18ஆம் நூற்றாண்டு தொடங்கி உலகமெங்கும் பிழைப்பதற்காகப் போன தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கை துயரமானது. இன்று இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, மொழிச் சிறுபான்மையினராகவோ வாழ்கின்றனர். இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைப் பேச அறியாது உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பாடு இன்னும் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது.

இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் இந்தியா போன்ற ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன்அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் புதிய காலனிய ஆதிக்கம் என்ற வடிவில் மறைமுகமாகத் தொடர்ந்து இருக்கிறது.

இத்தகைய புதிய காலனிய ஆதிக்கம், மொழியிலும் காணப்படுகிறது. இந்தநாடுகள் மூலதனத்துக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் கனிவளங்களையும் மனித உழைப்பையும் இந்தச் சார்பு நாடுகளிலிருந்து அபகரிப்பதை இன்றளவும் காண்கிறோம். இத்தகைய பின்புலத்தில் இந்த நாடுகளின் அதிகாரபூர்வ ஆட்சி மொழியாகவோ, அதிகாரபூர்வமற்ற ஆட்சிமொழியாகவோ, முதன்மொழியாகவோ, சமூகக் கௌரவமிக்க மொழியாகவோ ஏகாதிபத்திய நாடுகளின் மொழிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இது மொழி வழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கம். இந்தியாவில் இது ஆங்கில மொழியின் ஊடாகப் பயணம் செய்கிறது.

1802 முதல் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ற விதத்தில் இந்தியப் பகுதிகள் அனைத்தும் நிர்வாக, அரசியல், இராணுவ, பொருளாதார நிலைகளில் வலுக்கட்டாயமாகவும் வன்முறையாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன. இது ஏகாதிபத்திய நலன்களுக்கான அனைத்திந்திய உருவாக்கமாகும். இதற்கு ஒற்றை அரசாங்க வடிவமும் (Unitary state) மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் தேவைப்பட்டன. அனைத்து தேசிய இனங்களும் சம உரிமையைப் பெறாத அனைத்திந்தியப் போக்கு, தேசிய இனங்களின் மொழிகள் ஆட்சி மொழியாவதற்கும் பயிற்று மொழியாவதற்கும் பெரும் தடையாக உள்ளது.

இந்த அனைத்திந்தியப் போக்கு என்பது உள்நாட்டில் இந்தி மொழிக்கான மேலாதிக்கத்துடன் வெளிப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இந்தி மொழிக்கும் சிறப்புத் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பலவழிகளில் தேசிய இன மொழிகளுக்குரிய சமத் தகுதி அரசியல் சட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இது தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவமற்ற நிலையை அடிப்படையாகக் கொண்ட அனைத்திந்தியப் போக்கின் வெளிப்பாடு.

நமக்குத் தேவை தேசிய இனங்களின் சமத் தகுதியும், சம உரிமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட அனைத்திந்தியத் தன்மையாகும். இத்தகைய அமைப்பில் அந்நிய மொழியின் மேலாதிக்கம் ஒரு தேசிய இனத்தின் மீது இராது.

தாய்மொழிதான் என்றும் நம் ஆட்சி மொழி.

நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, இங்கு ஆட்சி மொழியாக, கல்விமொழியாக, தொடர்பு மொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கின்றன.

இன்று அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும் நிலைநாட்டவும், அரசின் போக்கை புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும், அரசியல் அதிகாரத்தில் பங்குகொள்ளவும் ஆட்சிமொழி அம்மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும் என்பது உயிராதாரமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை இங்கு நிறைவேற்றப்படவில்லை. அரசுத் துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும்தான் தமிழ் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலை சரிதானா?

இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில், உயர் கல்வியும் ஆங்கிலத்தில், ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் – ஆங்கிலத்தை அகற்றாமல் – தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சி மொழியாக பயிற்று மொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.

புதிய காலனியும் பயிற்று மொழியும்:

தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.

19.07.1854ல் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய சார்லசு உட் குழுவின் நவீனக் கல்வியின் நோக்கங்களாகவும், பயிற்று மொழி முறைகளாகவும் எழுதிய பரிந்துரைகளில் ஏகாதிபத்திய நலனும் ஆங்கில மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளன. இன்றைய கல்வியிலும் இவை தொடர்கின்றன.

பயிற்று மொழி என்பது கல்வியைக் கற்றுத்தரும் ஊடகம். கல்வியை உற்பத்தி முறையின் தேவையோடு தொடர்புபடுத்திக் காண வேண்டும். இன்றைய ஏகாதிபத்தியச் சார்பான உற்பத்தி முறைக்கு ஏற்பவே நம் கல்வியின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுடனான கூட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியே இன்றைக்கு இந்திய முதலாளிய உற்பத்தியையும் நிலப்பிரபுத்துவ உற்பத்தியையும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் உற்பத்தியில் அந்நிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் உற்பத்தி இன்று அதிகமாக பெருகியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கையும் இப்பொழுது அறிவிக்கப்பட்ட புதிய தொழில்க் கொள்கையும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாக உள்ளன. இது புதிய காலனிய முறை தொடர்வதையே நமக்குக் காட்டுகிறது. இத்தகைய உற்பத்திமுறைக்கேற்ற கல்வியே கீழிருந்து மேல்நிலை வரை அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உற்பத்தி முறைக்குச் சார்பான கல்வியின் சாராம்சம்:

கொடுக்கப்படும் கல்வி ஏகாதிபத்தியச் சார்பானது, பரந்து பட்ட இந்திய மக்களுக்கானதாக இல்லை. இத்தகைய கல்வியின் பயிற்றுமொழி அந்நிய மொழியின் ஆதிக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்று மொழியின் ஆணிவேர் ஏகாதிபத்தியச் சார்புத் தன்மையில் அடங்கியுள்ளது. இந்தக் கல்வியின் பயிற்றுமொழி இந்திய மக்கள்விரோத உள்ளடக்கத்தின் வெளிப்பாடு.

கல்வியின் ஏகாதிபத்தியச் சார்பு உள்ளடக்கத்தை, தாய்மொழியை பயிற்றுமொழியாக ஆக்குவதற்குத் தடையாகக் கருதாமல்; பயிற்றுமொழி என்ற வடிவத்தை மட்டுமே மாற்றக் கோருதல், உள்ளடக்கத்தைப் புறக்கணித்துவிட்டு வடிவத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் நோக்கமற்ற விதத்தில், ஒரு தேசிய மொழியைப் பயிற்று மொழியாக்கிவிட இயலும் என்ற தவறான அரசியல் நம்பிக்கையை ஊட்டுவதற்கு துணைபோவதாகும்.

தாய்மொழிக் கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை

நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லாத ஒன்று. தாய் மொழிதான் சிந்தனையின் மொழி. அதனால் தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கபூர்வமான அறிவு கிட்டும். அந்நிய மொழிக் கல்வி சுமைமிக்கது. மேலும் மக்கள் மயமாவது இல்லை. எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்விதான்.

முன்பு வேதங்களை பார்ப்பனர்களின் ஏகபோகமாக வைப்பதற்காக, பிறர் வேதம் படிக்கத் தடை இருந்தது. பார்ப்பன-சத்திரியன் அரசியல் அதிகாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகச் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என இருந்தது போல, இப்போது உழைக்கும் வர்க்கத்திடமிருந்து கல்வியைப் பறித்து, மேல்தட்டுப் பிரிவினரின் ஏகபோகமாக்கிட அந்நிய மொழிக் கல்வி உதவுகிறது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் எனக் கோருவது நமது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு இருக்கின்றன.

தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சி மொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும், அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய அரசு தடையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.

கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நடந்தது.

தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.

செம்மொழி மாநாடு

தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்கவும் பயிற்றுமொழியாக்கவும் போராடக் கிளந்தெழும் மக்களைத் திசை திருப்புவது இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கான நோக்கங்களில் ஒன்று.

தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி தங்கள் கோரிக்கையை இந்தியாவுக்கு எடுத்துரைத்துப் போராடினார்கள் தமிழ் மக்கள். ஆயினும் சிங்களப் பேரினவாத பவுத்த மதவாத இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்வதற்கு மாறாக, ஆயுதம் கொடுத்தும், பண உதவி செய்தும், போரில் மறைமுகமாகப் பங்குகொண்டு தமிழீழ மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும் பங்காற்றியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டைவேடம் பூண்டு இந்தப் போரில் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவுகொடுத்து தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தார். இந்தத் துரோகத்தை மறைத்தல் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கு மற்றொரு நோக்கமாகும்.

பழந்தமிழ்ப் பெருமை பேசல் இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே!

வேறுவிதமாகச் சொன்னால், பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு. இதுதான் கலைஞர் கருணாநிதியின் தந்திரம். சுந்திரம்பிள்ளை, பரிதாமாற்கலைஞர் ஆகியோர் இவருக்கு வழிகாட்டிகள்.

ஆரியம் வழக்கொழிந்து போகத் தமிழ் இளமை மாறாதிருப்பதகாக் கூறிச் செல்கிறார் சுந்தரம்பிள்ளை அவர்கள். இது பின்னோக்கிப் பார்த்து பழமை பேசும் செயலாகும். சென்ற காலத்தின் சிறப்புப் பற்றிய குரல் இது. அதே தமிழ் மொழி தனது காலத்தில் அறிவியல் துறையில் பின்தங்கி இருப்பதைக் காணவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழ்மொழி அனைத்துத் துறைகளிலும் ஆங்கில மொழி ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதைப் பற்றியும் கவலையில்லை. தமது காலத்து விவகாரங்களில் வெள்ளைக்கார ஆட்சியையும் சமஸ்தான மன்னராட்சியையும் சுந்தரம்பிள்ளை ஏற்றுக்கொண்டார். நிலவிய அரசியல் வரம்பிற்குள் மொழி, இலக்கியம் முதலியவற்றை பேணுவதே இலட்சியமாகக் கொண்டார்.

கலைஞர் கருணாநிதி அவர்களும் பழந்தமிழ்ப் பெருமை பேசுகிறார். ஆனால் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, குறிப்பாகத் தமிழ்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்குவது, பயிற்றுமொழியாக்குவது ஆகியவற்றிற்கான போராட்டத்தைக் கைவிட்டு எங்கும் எதிலும் ஆங்கிலமயப்படுத்துகிறார்.

சுந்தரம்பிள்ளை போன்றோர் மீது பாரதி வைத்த விமர்சனம் கலைஞருக்கும் பொருந்தும்.
“மறைவாகத் தமக்குள் பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை”
அதுமட்டுமல்ல.முக்காலத்தையும் இணைத்துப்பார்க்க வேண்டு மென்றும் கூறுகிறார்.
“முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்திலார்
பேடிக்கல்வி பயின்றுழப் பித்தர்கள்”


கலைஞர் கருணாநிதி, மூண்டிருக்கும் இந்நாளின் நிகழ்ச்சியை நன்கறிந்தவர்தான். ஆனால் கண்முன் கண்ட நிகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் விமோசனம் தேடுவதற்குப் பதிலாக அகில இந்திய தரகுமுதலாளித்துவத்துடன் சமரசப் பாதையைப் பின்பற்றுகிறார். எனவே பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழரின் அவலத்தை மறைக்க செம்மொழி மாநாடு கூட்டுகிறார்.

தேசிய இன விடுதலைக்கு புரட்சிகர ஜனநாயக மக்கள் இயக்கம் தேவை:

காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன் என்பதை ஆளுவோர்தான் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு எது நல்லதோ அதனைச் சமுதாயத்திற்கும் நல்லது எனச் சொல்லித்தான் நிலைநிறுத்துவார்கள். அப்படித்தான் புதிய காலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்திற்கு உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.

சீனமும் செம்மொழிப் பட்டியலில் இருந்தது. அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதும் சீனமொழி உள்ளிட்ட 56 தேசிய இன மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வந்தன.

தமிழ் செம்மொழிப் பட்டியலில் இருந்தாலும் இந்தியத் தரகுப்பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு எல்லாத் தேசிய இனங்களின் மீதும் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறது; எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை (அரசியல் உரிமையை) மறுக்கிறது. எனவே தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ணய உரிமை பெறவும், தமிழ் மொழி ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பண்பாட்டு மொழியாகவும், அதற்குத் தடையாக உள்ள இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு நிறுவப்படவேண்டும்.

இப்பணியை நிறைவேற்றப் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர ஜனநாயக இயக்கம் தேவை. எனவே, அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பது நமது உடனடிப்பணியாகும்.

புரட்சிகர ஜனநாயக இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்வரும் முழக்கங்களின் பின் அணிதிரள்வோம்.

* அரைக்காலனிய-அரைநிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!

* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும்; ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிபாட்டு மொழியாய், அன்னைத் தமிழை அரியணையேற்றவும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்துவிடாது!

* உலகத்தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!!
===========================================================
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு ஜூன் 2010
--------------சமரன்: படியுங்கள்! பரப்புங்கள்!!-------------------
===========================================================
குறிப்பு: தயவுசெய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டுச் செல்லுங்கள்

Tuesday 8 June 2010

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

* அரைக்காலனிய – அரைநிலபிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!

* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும், ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிபாட்டு மொழியாய் அன்னைத் தமிழை அரியணையேற்றவும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்து விடாது!

* உலகத்தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுங்கள்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு ஜூன் 2010

------------------ சமரன்: படியுங்கள்! பரப்புங்கள்!!-----------------------------

Tuesday 18 May 2010

மே -18 முள்ளிவாய்க்கால் தமிழீழ தியாகிகளுக்கு வீரவணக்கம்


* இங்கிலாந்துக்கு அயர்லாந்து, இலங்கைக்கு ஈழம், தமிழீழம் மீண்டும் எழும்!

* ஏகாதிபத்தியவாதிகள், இந்திய-சீன பிரதேச மேலதிக்கவாதிகளின் போட்டிக் களமாக இலங்கையை மாற்றுவதை எதிர்ப்போம்!

* ஈழத் தமிழின அழிப்புக்கான இந்திய-இலங்கை ஆளும் வர்க்க கூட்டணியை முறியடிப்போம்!

* தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக அணிதிரள்வோம்!

* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Tuesday 20 April 2010

மே தினம் 2010-அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்தை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியானது தீர்வுகாணமுடியாமல் நீடித்து வருகிறது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் தாசர்களையும் தூக்கியெறிந்து உலகப் பாட்டாளிகளும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் சோசலிசப் புரட்சிக்கும் தேசிய விடுதலைப் புரட்சிக்கும் போர்ப்பரணி பாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே இம் மே நாள்.

அமெரிக்காவின் உலகமேலாதிக்கம்:
அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது உலகமேலாதிக்கத்திற்காக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர்களை வெறித்தனமாகத் தொடர்கிறது. யுத்தவெறியன் ஜார்ஜ் புஷ்ஷிற்கு மாற்றாக உலக சமாதானம் பேசிய வெண்புறா ஒபாமாவின் ஆட்சி ஆப்கானிஸ்தானுக்கு 30,000 துருப்புக்களை கூடுதலாக அனுப்பி ஒரு கொடூரமான யுத்தத்தை தொடர்கிறது. ஈரான் மீது பொருளாதாரத்தடை விதித்து அந்நாட்டை முற்றுகையிடுவது; ஹைத்தி உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் நேரடியாக தலையிடுவது என அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடர்கிறது.
2007ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவால் மீளமுடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்து விற்பதன் மூலமும், ஆயுதப் போட்டியை உருவாக்குவதன் மூலமும் தமது நாட்டில் காப்புக் கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்கிறது. மேலும் கச்சாப் பொருட்களை சூறையாடவும் மூலதன ஏற்றுமதி மற்றும் மலிவான கூலி உழைப்பைக் கொள்ளையடிப்பதற்காக இந்தியா போன்ற நாடுகளின் மீது இருதரப்பு உடன்படிக்கை மூலம் புதியகாலனி ஆதிக்கத்தை திணித்துவருகிறது.
புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மன்மோகன் கும்பல்:
மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல், அமெரிக்க-இந்திய உறவுகளில் ஒரு ‘புதிய சகாப்தம்’ படைக்கப் போகிறோம் என்று கூறி, நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “புதிய காலனி”யாக மாற்றி வருகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு மன்மோகன் கும்பல் அமெரிக்காவுடன் இராணுவ, அணுசக்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இருதரப்பு உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி செய்துகொண்டது. இதன் மூலம் நாட்டின் அரைகுறை சுதந்திரத்தையும் ஒழித்து, நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் துரோகச்செயலை, மான வெட்கமின்றி செயல்படுத்துகிறது.
மன்மோகன்-சோனியா கும்பல் தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைத்தவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் கட்டுப்பாடற்று கடிவாளம் இல்லாத குதிரை போல் செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவிடமிருந்து பெறுகின்ற தளபாடங்களின் பயன்பாடுகளை கண்காணிப்பதற்காக இருநாடுகளைச் சார்ந்த நிபுணர்குழுவை உருவாக்குவது; போர் ஆயுதங்களையும் மற்றும் ரூ.50,000 கோடிக்கான 126 போர்விமானங்களையும் அமெரிக்காவிடமே வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்; அமெரிக்கா எடுத்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மீதான போர்த்தந்திரத்திற்கு இந்தியாவை இணங்கச் செய்வது; அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவில் அணுஉலை அமைக்கும் போது அதில் விபத்து ஏற்பட்டால் அமெரிக்க கம்பனிகள் பொறுப்பேற்பதிலிருந்து விலக்கு அளிப்பது, குறைந்த இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து சட்டம் இயற்றுதல் போன்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு மன்மோகன் கும்பல் பணிந்து போகிறது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு துணைபோகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மன்மோகனை உலகின் தலைசிறந்த “இராஜதந்திரி” என்று பாராட்டுவதன் மர்மம் என்ன? இந்தியாவை அமெரிக்காவின் ஒரு அடியாளாக மாற்றியமைக்கும் துரோகத்திற்கு அளிக்கும் பரிசுதான் இந்தப் பட்டமும், பாராட்டும்.
அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கம்:
மன்மோகன் கும்பல் பொதுத்துறை-தனியார் பங்கேற்பு (Public Private Participation) எனும் பேரில் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு திறந்துவிடுகிறது. அமெரிக்காவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசுடமையாக்குதல், அரசின் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும்போது, மன்மோகன் கும்பலோ அனைத்துத் துறைகளையும் அன்னிய மூலதனத்திற்கு திறந்துவிடுகிறது.
நவரத்தனா என்றழைக்கப்படும் இந்திய எஃகு குழுமம், ஆயில் இந்தியா, இயற்கை எரிவாயு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் போன்ற இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.40,000 கோடிக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டது. அண்மையில் எஃகு நிறுவனத்தின் பங்குகள் ரூ.16,000 கோடிக்கு விற்க மத்திய மந்திரிசபை முடிவெடுத்துள்ளது.
மேலும் ஆயுள் காப்பீடு, வங்கிகள் போன்ற நிதித்துறைகளில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் திவாலாகிப் போன நிதிநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. பன்னாட்டு வங்கிகளும், டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் வங்கித் துறையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் முழுவதையும் அமெரிக்க நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
இவ்வாறு மன்மோகன் கும்பல் தொழிற்துறை மற்றும் நிதித்துறைகளை அன்னிய நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்படுத்திவிட்டு அவர்களின் இலாபத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு, தொழிலாளிவர்க்கத்தின் மீது ஒரு கொடியத் தாக்குதலைத் துவங்கிவிட்டது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டியடிப்பது, ஒப்பந்த முறைகள் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை பரவலாக்குவது, 8 மணி நேர வேலைநாளை 12 மணி நேர வேலை நாளாக உயர்த்துவது என்று முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு இதுநாள்வரை இருந்துவந்த அரைகுறையான தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.
வேளாண்மைத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்:
மன்மோகன் கும்பல் “முடிவில்லா பசுமைப் புரட்சி” எனும் பேரில் இந்திய வேளாண் துறையை அமெரிக்காவின் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு திறந்துவிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் வேளாண் துறையில் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை கள்ளத் தனமாக ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண்மையில் இலாபமீட்டாத நிலங்களை அமெரிக்க கம்பெனிகளிடம் ஒப்படைப்பது; மரபணு மாற்று மற்றும் வேளாண் ஆராய்ச்சியில் மான்சாண்டோ கார்கில் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளை அனுமதிப்பது; இதை எதிர்த்த மக்கள் இயக்கத்தை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றுவது என அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.
இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளாக நிலச் சீர்திருத்தம் செய்ய மறுத்து அரைநிலவுடமையை பாதுகாத்துவருகிறது. தற்போது இந்திய அரசு நில உச்சவரம்பு சட்டங்களையும் மீறி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அமெரிக்க பன்னாட்டு வேளாண் கம்பெனிகளும்; உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவக் கும்பல்களும் குவித்துக்கொள்ள துரோக ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
ஏற்கனவே இந்திய அரசு வேளாண் துறையில் புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலமும்; தொழில் மயமாக்கம் என்ற பெயரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரிலும் லட்சக் கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களை விவசாயிகளை விரட்டியடித்துவிட்டு கைப்பற்றியுள்ளனர். 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு 300க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு 1,40,000 ஹெக்டர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது.
வேளாண் விளை நிலங்கள் அமெரிக்க வேளாண் கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதோடு, மரபணு மாற்று விதைகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சியையும் அவைகளிடம் ஒப்படைக்கிறது. இதன் மூலம் மரபணுமாற்று மலட்டு விதைகளை உற்பத்தி செய்வதோடு, அதை இங்கேயே பயிர் செய்து இந்தியாவில் இத்தகைய வேளாண் பொருட்களை விற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்று விதைகளை எதிர்த்து விவசாயிகளும், மக்களும், போராடுவதை ஒடுக்குவதற்கு மன்மோகன் கும்பல் உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற ஒரு பாசிச சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. இச்சட்டத்தின்படி சரியான ஆதாரம் அல்லது விஞ்ஞான ஆய்வின்படி அல்லாமல் மரபணு மாற்று விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும்; ரூ.2 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும். தகவலறியும் சட்டப்படி மரபணுமாற்ற ஆராய்ச்சி அனுமதி பற்றிய உண்மைகளை அறிவதற்கும் இச்சட்டம் தடைவிதிக்கிறது. இவ்வாறு மன்மோகன் கும்பல் அடக்குமுறை சட்டத்தின் மூலம் மரபுசார் விவசாயத்தையும், சுயசார்பு விவசாயத்தையும் அழித்து அமெரிக்காவின் மான்சாண்டோ, கார்கில் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது.
இத்துடன் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், வேளாண்துறைக் கடன் ஒதுக்கீட்டை அதிகரித்து ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக மன்மோகன் கும்பல் விவசாயிகளின் நண்பனைப் போல நடிக்கிறது. ஆனால் இந்த கடன் யாருக்கு பயன்படப் போகிறது? விவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருட்களை வாங்கி விற்கும் வேளாண் வணிக நிறுவனங்கள் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கவும், போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கவே இந்தக் கடன் வழங்கப்பட இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு வேளாண் வணிக நிறுவனங்களான கார்கில், ITC, டாட்டா, கோத்ரஜ், நீல்கிரீஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கே விவசாயக் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கோ கந்துவட்டியும், தற்கொலைகளுமே பரிசாகக் கிடைக்கும்.
மன்மோகன் கும்பல், வேளாண் விளைநிலங்களை மட்டும் பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு வழங்கவில்லை. காடுகள் மற்றும் மலைப் பகுதியில் வாழுகின்ற பழங்குடி மக்களின் நிலங்களையும் பறித்து பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து வருகிறது. தண்டகாரண்யா என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரா வரை பரந்து விரிந்துள்ள பகுதிகள் பழங்குடி மக்களின் தாயகமாக விளங்கி வருகிறது. தற்போது இப்பகுதி மிட்டல், ஜிண்டால், டாட்டா, எஸ்.ஆர், போஸ்கோ, வேதாந்தா போன்ற கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாறிவிட்டது. 5 கோடி மலைவாழ் மக்களின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு பழங்குடி மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதற்கான காரணம் என்ன?
இப்பகுதியில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்ற கனிமவளங்களை கைப்பற்றுவதுதான் உண்மையான காரணம் ஆகும். ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட்டின் மதிப்பு சுமார் ரூ.200 லட்சம் கோடியாகும்; அத்துடன் சதீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் கிடைக்கும் தங்கம், வைரம், யுரேனியம் போன்ற 28 வகையான கனிம வளங்களை அளவிடவே முடியாது. மேலும் இப்பிரதேசத்தில் இரும்பு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைப்பது, அணைகள், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் என இப்பிராந்தியம் முழுதும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் மூல வளங்களைக் கைப்பற்ற வெறிபிடித்து அலைகின்றன.
இந்திய அரசோ “காட்டு வேட்டை” எனும் பெயரில் பழங்குடி மக்களின் நிலங்களைப் பறித்து இக் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அம்மக்களின் மீது ஒரு கொடிய யுத்தத்தை தொடுத்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது எனும் பெயரில் பழங்குடிமக்களின் மீது அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுள்ள 5 கோடி பழங்குடி மக்களின் மறுவாழ்வு பற்றி மன்மோகன் கும்பல் வாய்திறக்க மறுக்கிறது. இவ்வாறு மன்மோகன் கும்பல் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறையையும் அமெரிக்காவிற்கு திறந்துவிட்டு புதியகாலனியத்திற்கு சேவைசெய்கிறது.
சமூக நலத்திட்டங்களுக்கு நிதி குறைப்பு:
இந்திய அரசு நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product-GDP) 3 சதவீதமாகக் குறைப்பது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் மன்மோகன் கும்பலோ நிதிப்பற்றாக்குறையை குறைப்பதாகக் கூறிக்கொண்டே, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நெருக்கடியிலிருந்து மீட்பது எனும் பெயரில், நிதி நிலை அறிக்கையில் ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில் கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரி விதிப்பில் ரூ.80,000 கோடி ஆளும் வர்க்கங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் காட்டி கலால்வரி, சுங்கவரி குறைப்பு மூலமும்; ஊக்கத்தொகை, நட்ட ஈடுகளை தொடர்வதன் மூலமும் சுமார் 4,91,000 கோடியை மன்மோகன் கும்பல் வாரிவழங்கியுள்ளது.
மறுபுறம் உணவுக்கான மானியத்தை வெட்டுவது, பெட்ரோல் விலைகளை உயர்த்துவது; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நலன்களுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்து நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகிறது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு இவைகளை தனியார்மயமாக்கி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி வருகிறது. மன்மோகன் அரசு உயர்கல்வியில் பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களை நேரடியாக அனுமதிக்க சட்டம் இயற்ற இருக்கிறது. இதன் விளைவாக ஏழைகளுக்கு உயர்க்கல்வி ஒரு கனவாகக்கூட இருக்கமுடியாது. மேலும் அனைவருக்கும் கல்வி என்ற சட்டத்தை மன்மோகன் அரசு கொண்டுவந்துவிட்டதாக கூறிக்கொள்கிறது. ஆனால் ஆரம்பக் கல்வியில் தனியார் பள்ளிகளை அனுமதித்துவிட்டு, மாவட்ட ஆரம்பக்கல்வி திட்டத்தை உலகவங்கியிடம் ஒப்படைத்துவிட்டு, பள்ளியைவிட்டு இடையில் நின்றுவிடும் (இடைவிலகல்-Dropouts) குழந்தை உழைப்பிற்கு காரணமான அரைநிலவுடைமை முறைகளுக்கு முடிவுகட்டாமல் அனைவருக்கும் கல்வி என்று பேசுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். மருத்துவமும், சுகாதாரமும் இதே நிலைமை தான்.
மாநில உரிமை பறிக்கப்படுதல்:
மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அரசு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதேச்சதிகாரமான முறையில் செயல்படுத்துகிறது. விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறைகளையும் தன்விரும்பம்போல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கிறது. மாநில அரசுகளின் அரைகுறையான தன்னாட்சி உரிமைகளையும் பறித்து அனைத்து அதிகாரமும் வாஷிங்டனிடம் ஒப்படைக்கிறது. மாநில சுயாட்சி பேசும் கருணாநிதியோ மாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை எதிர்க்கத் தயாரில்லை. மாறாக கருணாநிதி அரசாங்கமே புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதற்கு போட்டி போடுகிறது. தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றிவருகிறது.
மன்மோகன்-சோனியா கும்பல் தெலுங்கானாப் போராட்டத்திற்கு பிறகு நாடு முழுதும் மொழிவழி மாநிலங்களை பிளவுபடுத்தும் கோரிக்கைகளை பரிசீலிக்க கமிஷன் அமைப்பதாகக் கூறியுள்ளது. இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன், மொழிவழி மாநிலங்களை சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்துவதன்மூலம் தேசிய இனங்கள் உருவாவதை தடுக்க முயற்சிக்கிறது. மொழிவழி மாநிலங்களை உடைத்து சிறு மாநிலங்கள் உருவாக்குவதன் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் பொம்மை ஆட்சி உருவாக்குவதற்கு எளிமையான வழியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி மற்றும் தீண்டாமையை பாதுகாக்கும் மன்மோகன் கும்பல்:
உலகமய தாராளமயக் கொள்கைகள், கிராமப்புறங்களில் வேளாண்மையை சீரழித்து ஓட்டாண்டித்தனத்தை அதிகரிப்பதோடு, அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளும் சேர்த்துக்கொண்டு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. உயர்சாதி ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ஒடுக்குமுறைகளை தொடுத்து வருகின்றனர். எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பண்ணை அடிமை முறைகளைத் திணிக்க நடத்தும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும். மேலும் சாதித்தீண்டாமையை ஒழிப்பதற்கு உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வது ஒன்றுதான் வழியாகும். மாறாக நிலங்களை பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சமி நிலம் மீட்பாலோ, பொதுத்துறை மற்றும் கல்வியைத் தனியார் மயமாக்கிவிட்டு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று பேசுவதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சாதித் தீண்டாமைக்கு முடிவுகட்டி சமதர்ம சமுதாயத்தை படைக்க முடியாது.
காங்கிரசும், பாஜகவும் புதிய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதில் போட்டி போடுகின்றன. இடது, வலது போலிகள் உள்ளிட்ட நாடாளுமன்றவாத அரசியல்கட்சிகள் அனைத்தும் உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கின்ற கட்சிகளே. மேலும் உலகமய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான களமாக பாராளுமன்றம் பயன்படப் போவதில்லை. மாறாக மக்கள் மன்றம் மட்டுமே இத்தகைய போராட்டக் களதின் மையமாக திகழ்கிறது.
எனவே மன்மோகன் கும்பல் புதிய தாராளக்கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும்; நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதை எதிர்த்தும்; உழவையும், தொழிலையும் பாதுகாக்கும் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள இம் மே நாளில் அறைகூவி அழைக்கிறோம்.
* அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
* அமெரிக்க ஏகாதிபத்தியமே! ஆப்கான், ஈராக்கை விட்டு வெளியேறு!
* புதிய தாராளமயக் கொள்கை எனும் பெயரால் புதிய காலனியத்தைத் திணிக்கும் மன்மோகன் கும்பலை எதிர்த்துப் போராடுவோம்!
* விவசாயத்துறையை - விளைநிலங்கள், ஆராய்ச்சி, வணிகம், கனிவளங்கள் ஆகியவற்றை மான்சாண்டோ, கார்கில் உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்காதே!
* கனிவளங்கள் மற்றும் மூலவளங்களை பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு பழங்குடி மக்கள் மீதும், மாவோயிஸ்டுகள் மீதும் நடத்தும் பாசிச தாக்குதலை உடனே நிறுத்து!
* பன்னாட்டு, உள்நாட்டு வேளாண் நிறுவனங்களுக்கு - லட்சக்கணக்கான கோடிகள் கடனுதவி! விவசாயிகளுக்கோ - கந்துவட்டிக் கடனும், பட்டினியும், தற்கொலையுமே!
* ஏகாதிபத்திய மரபணுமாற்றத் தொழில்நுட்பத்தைத் திணிப்பதற்கான ஒடுக்குமுறைக் கருப்புச் சட்ட மசோதவைத் திரும்பப் பெறு!
* பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஐந்து லட்சம் கோடி - வரிச்சலுகை!
உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கோ - நிதிக்குறைப்பு!
* நாற்பதாயிரம் கோடி பொதுத்துறைப் பங்குகள் - பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்ப்பு!
தொழிலாளருக்கோ - வேலை நேர அதிகரிப்பு, தொழிற்சங்க உரிமைப் பறிப்பு, கொத்தடிமை முறைத் திணிப்பு!
* அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசின் அரைகுறைத் தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசுக்குத் துணைபோகும் கருணாநிதி ஆட்சியை எதிர்ப்போம்!
* நாட்டை புதிய காலனியாக மாற்றுவதையும் தேசிய இனங்களை உடைப்பதையும் எதிர்ப்போம்!
நாட்டின் விடுதலைக்கும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!
* பஞ்சமி நில மீட்பாலோ, இடஒதுக்கீட்டாலோ, மதமாற்றத்தாலோ சாதி தீண்டாமை ஒழியாது!
* சாதி, தீண்டாமையை ஒழிக்க - மனித உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பை எதிர்த்துப் போராடுவோம்!
விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
** உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!
** மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
........ மேதினி போற்றும் மேதினம் வாழ்க!.........................சமரன்: படியுங்கள்! பரப்புங்கள்!!...........

Saturday 23 January 2010

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையைத் தனது வழிகாட்டும் சிந்தாந்தமாக கொள்கிறது. மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். முற்றிலும் நாத்திகவாதமும், எல்லா மதங்களுக்கும் நேர்படித்தான முறையில் பகைமையானதுமாகும்.
எல்லா மதங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவும் அல்ல; இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலகச் சக்திகள் இயல்பிற்கும் மேற்பட்ட (Super Natural) வடிவத்தை மேற்கொள்கின்றன என்பதுதான் மதத்தின் சாரம் என்று மார்க்சியம் கூறுகிறது.


மதம் பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி நின்று அதற்கு மிகவும் அயலானதாகத் தோன்றுகிறது. ஆயினும், மதக் கருத்துக்கள் தம் சொந்த விதிகளின்படி வளர்ந்தாலும், இவ்வளர்ச்சியின் போக்கும் சாரமும் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார வாழ்க்கையின் மாற்றங்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையவை என்று மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.
சமுதாய வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் எதிர் எதிராக நின்று போராடும் வர்க்கங்களின் பொருளாதார் உறவுகள் மற்றும் நலன்களால் கோட்பாடு ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகின்றன என்ற உண்மை மதத்துறைக்கும் பொருந்தும்.

சுரண்டப்படும் மக்களை சுரண்டல்காரர்கள் தமது அடிமைகளாக நீடித்து வைத்திருப்பதற்கு பொருளாதார ஒடுக்குமுறையுடன் கூட அரசியல், ஆன்மீக ஒடுக்கு முறைகள் தேவைப்படுகின்றன. ஆன்மீக ஒடுக்குமுறைகளின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
காட்டுமிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும், சைத்தான்களிலும், அவதாரங்களிலும், அற்புதங்களிலும், பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறதோ, அதுபோல சுரண்டப்படும் வர்க்கங்கள், சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவலநிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறது.

பிறர் உழைப்பில் உண்டு வாழ்வோர் சுகபோகமாக வாழ்வது ஏன்? ஒருவன் மேல் சாதிகாரனாகப் பிறப்பது ஏன்? அது அவன் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என மதம் காரணம் கூறுகிறது. உழைத்து உழைத்து உருக்குலைந்து போன சுரண்டப்படுவோர் இல்லாமையால் துன்புறுவது ஏன்? ஒருவர் தாழ்ந்த சாதிக்காரராக பிறப்பது ஏன்? அது அவர் செய்த பாவம் என மதம் காரணம் கூறுகிறது. இவ்வாறு ஆண்டான் அடிமை முறைக்கு மதம் நியாயம் கற்பிக்கிறது. சுரண்டப்பட்டு அடிமைப்பட்டிருப்போர் இந்தப் பிறவியில் தமது எஜமானர்களுக்கு பயன் கருதாமல் உழைத்தால் அவர்களுக்கு செத்தபின் சிவலோக பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, இந்த வாழ்வில் அவர்களை மன ஆறுதல் கொள்ளச் செய்கிறது மதம். இந்த வாழ்வில் தமது அவல நிலையைப் போக்கவும், ஓரளவேனும் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான கோரிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் இருக்கும் படி அவர்களை ஆன்மீக போதையில் மதம் மூழ்கடித்து விடுகிறது. இதனால்தான் மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் சொன்னார். “மதம் மக்களின் அபின்” என்ற மார்க்சியத்தின் ஆய்வுரைதான் மதம் பற்றிய மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் அச்சாணியாகும்-அடிப்படையாகும் (Corner Stone).
மதமும் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயம் தோன்றும்போது மதமும் ஒழிந்துப்போகும் என்றும் மார்க்சியம் கூறுகிறது.
இயற்கை மற்றும் சமுதாய வளர்ச்சியை ஆளுமை புரியும் புறநிலை விதிகளின் அடிப்படையில் மார்க்சியம் மதத்தின் தோற்றம், அதன் சாரம், மற்றும் வர்க்க சமுதாயத்தில் அது ஆற்றும் பாத்திரம் ஆகியவற்றைக் குறித்து தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவப் புரட்சிகர சகாப்தத்தில், மதத்தை எதிர்த்து புரட்சிகர முதலாளிகள் நிறைவேற்றிய ஜனநாயக பணிகளிலிருந்தும், அதற்குப் பின்னர் அங்கே முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் போராட்ட அனுபவத்திலிருந்தும், மார்க்சியம் மதம் குறித்த கோட்பாட்டு ரீதியான முடிவுகளைக் கண்டது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலம் இறையியலுடன் மற்றெல்லா சித்தாந்த வடிவங்களும் - தத்துவஞானம், அரசியல், சட்டவியல் ஆகியவற்றை ஒட்டவைத்து அவற்றை இறையியலின் துணைப் பிரிவுகளாக ஆக்கிவிட்டது. நிலப்பிரபுத்துவத்தை கத்தோலிக்க மதச்சபை பாதுகாத்து வந்தது. நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை இச்சபை தெய்வீகப் பண்புடையதாக்கிப் புனிதம் பெறச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தை மாதிரியாகக் கொண்டு இது தனது படிநிலை அமைப்பை வகுத்திருந்தது. இந்த மதச்சபை கத்தோலிக்க உலகின் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதிக்குத் தானே உடமையாளனாக இருந்தது. மிக, மிகச் சக்திவாய்ந்த நிலவேந்தனாகச் செயல்பட்டது. லௌகீக நிலப்பிரபுத்துவத்தின் மீது ஒவ்வொரு நாட்டிலும் விவரமான அடிப்படையில் வெற்றிகரத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு அதன் புனித மத்திய நிறுவனமாகிய இந்த மதச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது. திருச்சபை நிலப்பிரபுத்துவ நிலவுடமையுடன் பல நாடுகளுக்கிடையில் உண்மையான இணைப்புச் சங்கிலியாக இருந்தது. நிலப்பிரபுத்துவ திருச்சபை நிறுவனம் நிலப்பிரபுத்துவ அரசு அமைப்புக்கு ஒரு மத ரீதியான புனிதத்தன்மையை வழங்கியது.

மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவ புரட்சி சகாப்தத்தில் மதத்தை எதிர்த்துப் போராடும் பணி புரட்சிகர முதலாளித்துவத்தின் பணியாக இருந்தது. மதத்தை எதிர்த்த பணி பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தினால் நிறைவேற்றப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் நடத்திய நீண்ட நெடும் போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சநிலை வந்தடைந்தது.

1. ஜெர்மனியில் நடைபெற்ற புரோட்டஸ்டண்டு மதச் சீர்திருத்தப் போக்கு எனப்படுவது முதலாவதாகும்.
2. இங்கிலாந்தில் நடந்த கால்வினிச முதலாளித்துவ எழுச்சி இரண்டாவது பெரும் போராகும்.
3. மாபெரும் பிரஞ்சு புரட்சி மூன்றாவது பெரும் போராகும்.
மேற்கூறப்பட்ட மூன்று போர்களில் முதல் இரண்டு போர்கள் மத முகமூடியணிந்து நடத்தப்பட்டவையாகும். மூன்றாவது போரான மாபெரும் பிரஞ்சுப் புரட்சி மட்டும்தான் முதலாளித்துவ வர்க்கம் மத முகமூடியை உதறித் தள்ளிவிட்டு ஒளிவுமறைவின்றி அரசியல் வழிகளில் முடிவுகட்டிய எழுச்சியாக அமைந்தது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த இந்த முதலாளித்துவப் புரட்சியின் சகாப்தத்தில் மேற்கு நாடுகளில் பின்வரும் பணிகள் பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தால் நிறைவேற்றப்பட்டன.

மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட்டன. மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட்டன. (இதற்குப் பின்னர் இக்கோரிக்கைகள் ஜனநாயகப் புரட்சியின் கோரிக்கைகளாகிவிட்டன.) எனினும் பிரான்சு முதலாளித்துவப் புரட்சிக்குப் பிறகு, குறிப்பாக ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தத்தில் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்திற்காகவும், மதச் சார்பின்மைக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் பணியை கைவிட்டுவிட்டது. ருசிய ஜனநாயகப் புரட்சி குறித்து லெனின் பின்வருமாறு சொன்னார்.

“ருசியாவில் நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக இந்த பணியும்கூட ஏறக்குறைய முற்றிலும் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களின் மேல் விழுகிறது”. மேலும் அவர் சொன்னார்; “ருசியாவில் நிலைமைகள் முற்றிலும் வேறானது. நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் தலைமை பாட்டாளிவர்க்கமே ஆகும். அதிகார பூர்வமான மதத்தை உள்ளிட்டு இடைக்காலத்திற்குரிய எல்லாப் பண்புகளுக்கும் (attributes) அதைப் புதுப்பிப்பதற்கோ அல்லது ஒரு புதியதை உருவாக்குவதற்கோ செய்யப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான போராட்டத்திற்குப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி சித்தாந்த தலைவனாக இருக்கவேண்டும்”.

எனவே ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில், ஜனநாயகத்திற்கும் மதச் சார்பின்மைக்கான போராட்டத்தில் பின்வருவன மார்க்சிய லெனினியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினதும் கோரிக்கைகள் ஆகிவிட்டன.

அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது. மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல், நாத்திகராய் இருக்கவும் - பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.

குடிமக்களின் மத நம்பிக்கைகள் காரணமாக அவர்களிடையே எவ்விதமான பாகுபாடுகளுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கம் மதச்சபைக்கு மானியங்கள் வழங்கப்படலாகாது. மதச்சபை, சமயக்கழகங்களுக்கு அரசாங்க உதவித்தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவையாவும் அரசை சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும். ஒத்தமனத்தோராகிய குடிமக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும்.

அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்க கூறுகளில் ஒன்றாய் ஜனநாயகப் புரட்சி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், 1891ஆம் ஆண்டு எர்பர்ட் திட்டத்தில், “மதம் தனிநபரது சொந்த விவகாரமாகும்” என்ற அம்சம் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தின் அரசியல் செயல்தந்திரத்தை வகுத்தளித்தது.

மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாக இருப்பினும், பாட்டாளிவர்க்கம் புரட்சிகர கட்சியின் வேலைத் திட்டத்தில் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது. அவ்வாறு கூறுவதற்குக் காரணங்கள் என்ன?

கட்சியின் வேலைத்திட்டம் முற்றிலும் விஞ்ஞான வழிபட்ட முறையிலும் முற்றிலும் பொருள் முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் அடிபடையிலும்தான் வகுக்கப் படுகின்றது. ஆகையால் அந்த வேலைத் திட்டத்திற்கு விளக்கம் தருவதில் மதத்தினால் ஏற்படும் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளின் மெய்யான வரலாறு மற்றும் அதன் பொருளாதார வேர்கள் பற்றிய விளக்கம் இன்றியமையாதபடி அடங்கியிருக்கிறது. எனவே வேலைத்திட்டத்தைப் பற்றிய பிரச்சாரம் ஒரு நாத்திகப் பிரச்சாரமாகவும், வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி செயல்படுத்துவதாகவும் அமைக்கிறது. இதனால் பாட்டாளி வர்க்கக் கட்சி நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றது எனக் கொள்ளக் கூடாது. நாத்திகப் பிரச்சாரம் செய்வது இன்றியமையாததாகும். எனினும் முதலாளித்துவவாதிகள் நாத்திகத்தைப் பற்றியும், மதத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் முறையிலிருந்து பாட்டாளி வர்க்கம் அதைப் பிரச்சாரம் செய்யும் முறை மாறுபட்டிருக்கிறது. அவர்கள் செய்வதுபோல், மதம் பற்றிய பிரச்சினையை ஒரு அரூபமான, கருத்து முதல்வாத பாணியிலும், வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத ஒரு “அறிவுத்துறை” பிரச்சினையாகவும், முன்வைப்பது ஒரு தவறான பாதையாகும் என மார்க்சியம் கருதுகிறது. மேலும், உழைக்கும் மக்களை ஒடுக்கப்படுவதை அடிபடையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வெறும் பிரச்சார முறைகளைக் கொண்டே மத மூட நம்பிக்கைகளை அகற்றிவிட முடியாது.

மக்களிடம் மத நம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்புமாகும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிற்போக்குச் சக்திகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தாமே போராடுவதின் மூலம் அவர்கள் அறிவொளி பெறாதவரை, எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. ஆகையால், விண்ணுலகச் சொர்க்கம் குறித்து, உழைக்கும் மக்களிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும், மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். வர்க்கங்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மத நம்பிகைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. ஆகையால்தான் தமது தப்பெண்ணங்களை இன்னமும் முற்றாக விட்டொழிக்காமல் வைத்திருக்கும் மக்களை பாட்டாளி வர்க்கக் கட்சி முன்வைக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் திரட்டுவதற்கும், அதன் மூலம் அவர்கள் அறிவொளி பெற்று மத மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கச் செய்யும் பொருட்டும் கட்சித் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதை அதன் அடிப்படையான பணிக்கு - அதாவது சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டப்படும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உட்படுத்தியே செய்யவேண்டும். இதற்கு மாறாக ஒரு பிரச்சினை எழுப்பப்படலாம்.

சிந்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்தவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்குமான எதிரியை எதிர்த்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தை எவ்வாறு வர்க்கப் போராட்டத்துக்கு உட்படுத்த முடியும்? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்துக்கு உட்படுத்த முடியும் என்று கேட்கக்கூடும். இவ்வாறு கேட்பது மார்க்சிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதலின்மையினாலேயாகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யும் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும். அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல.நாத்திகப் பிரச்சாரத்துக்கும் - அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கிடையில் உள்ள மத நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவது இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறாநிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடய, ஒப்புநோக்கு ரீதியலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை) அழிக்க முடியாத முற்றான ஒரு எல்லைக்கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவது ஆகும். இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் ஒன்றை பலவந்தமாகப் பிரிப்பதாகும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திக்கப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டதின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.

இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப் படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச் செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாதத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு - அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினராகிய நாம் மதம் குறித்த பின்வரும் மார்க்சிய கோட்பாட்டு ரீதியான முடிவுகளை, நமது வழிகாட்டும் கோட்பாடுகளாகக் கொள்கிறோம்.

1. மதம் மக்களின் அபின்.
2. மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற ஒரு புதிய சமுதாயம் தோன்றும் போது மதமும் ஒழிந்துபோகும்.
3. (அரசைப் பொருத்தமட்டில்) மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மத நிறுவனங்கள் அரசாங்கத்துடன் எந்தச் சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது.
ஒவ்வொருவரும் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும் எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல் நாத்திகராய் இருக்கவும் பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.
4. அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்கக் கூறுகளில் ஒன்றாக ஜனநாயகப் புரட்சி இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
5. இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக, மதத்தை எதிர்த்தப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி சித்தாந்தத் தலைவனாக இருக்க வேண்டும்.
6. சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. அதன் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள் முதல்வாதமேயாகும். எனினும் ஒருவர் மதத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பினும் அவர் கட்சியின் திட்டத்தை ஏற்று அதை அமல்படுத்தும் தகுதியுடையவராக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் ஆவார்.
7. இயக்கவியல் பொருள்முதல்வாதமே கட்சியின் உலகக் கண்ணோட்டமாக இருப்பினும், கட்சியின் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக்கூடாது.
8. நாத்திகப் பிரச்சாரம் செய்வது கட்சியின் பணியாகும்.
9. நாத்திகப் பிரச்சாரத்தை கட்சியின் அடிப்படைப் பணிக்கு அதாவது வர்க்கப் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யும் பணிக்கு - உட்படுத்தியே செய்யவேண்டும்.
மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை மற்றும் அரசியல் செயல்தந்திரத்தை சாதி முறைக்குப் பொருத்தக்கூடாது:
இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமுதாயத்திற்குள் (ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள்) மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். கத்தோலிக்க மதச் சபையின் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்க வந்த கத்தோலிக்க மதச் சபை, ஒரு நீண்ட நெடிய போரட்டத்துக்குப் பிறகு நிலப்பிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்டதும், அது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு, மீண்டும் புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களுமான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மாறிவிட்டது.

இந்துமதம் இப்போது சாதி மற்றும் தீண்டாமையைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு தரகு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. இதிலிருந்தே மேற்கூறப்பட்ட சாத்தியப்பாட்டை அறியலாம். ஆனால் சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு அவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. இவ்வாறு, மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை என்பதைக் காணலாம்.
மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வாகும். சுரண்டலும். வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம் மதத்தை ஒழிக்க முடியும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்கிடையில், மத ஒடுக்குமுறையிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும் பொருட்டே மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக்கூடாது என்ற ஒரு தீர்வும், வர்க்க முரண்பாடுகள் நிலவும் சமுதாயத்தில் மக்கள் மதநம்பிக்கை கொள்வதற்கான சமூக வேர்கள் இருப்பதால் மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் அதே சமயம் மத மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உரிமை என்ற முறையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதற்கும், நாத்திகனாக இருப்பதற்கான உரிமையும் இருக்க வேண்டுமென்பதற்காகவும் மதம் தனிநபரது சொந்த விவகாரமாக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு தீர்வும் வைக்கப்படுகிறது.
நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும் நிலைத்திருக்கக் கூடிய மதத்திற்கு எதிராக வைக்கப்படும் தீர்வுகள், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படுவதோடு ஒழிந்துவிடக் கூடிய சாதி மற்றும் தீண்டாமைக்கும் பொருந்தாது. ஆகையால் மதத்திற்கு எதிராக வைக்கப்படும் மேற்கூறப்பட்ட இரண்டு தீர்வுகள் சாதி ஒழிப்பதற்கு உகந்ததல்ல.

வேறுவிதமாகச் சொன்னால், சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும், இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதும் ஆகும். ஆகையால் மதத்துறையில் ஜனநாயகத்திற்காக வைக்கப்படும் தீர்வுகளான அரசுத் தலையிடாக் கொள்கையும், தனிநபர் சொந்த விவகாரமாக ஆக்கப்படுவதும் சாதி மற்றும் தீண்டாமைக்கு பொருந்தாது. மேலும் சாதி மற்றும் தீண்டாமையும் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒழிக்கப்படக் கூடியதாகும். ஆகையால் இத்தீர்வுகள் சாதிமுறைக்குப் பொருந்தாது.

அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் தரகுப் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவத்திற்கு ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.
மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.

உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும், சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராகவும், பார்ப்பனிய உயர்சாதி ஆதிக்க முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகவும், பாடுபடுத்தி, உண்மையான முதலாளிய, ஜனநாயக் சீர்திருத்தங்கள் அரசு செய்யக்கோருவது ஒரு முதலாளிய ஜனநாயகக் கோரிக்கை ஆகும்.
இப்பிரச்சினைகளில் அரசு தலையிடக் கூடாது என்பதோ சாதி மற்றும் தீண்டாமை தனிநபரது விவகாரமாக ஆக்கி விடுவதோ எதுவாயினும் சாதி மற்றும் தீண்டாமை தொடர்வதற்கே பயன்படும். ஆகவே இவ்விரண்டு தீர்வுகளும் சாதி மற்றும் தீண்டாமைக்குப் பொருந்தாது. மேற்கூறப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் அவை உண்மையாகவே முதலாளிய ஜனநாயக சீர்திருத்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் நீங்கலாக, பிற சாதிகள் குறிப்பாக பிற்பட்ட சாதிகளிலே கூட வர்க்க முரண்பாடுகள் தோன்றி ஜனநாயகத்திற்கு எதிரான நலன்கள் கொண்ட பிரிவுகள் இருப்பதையும் கணக்கில் கொண்டு, சாதி மற்றும் தீண்டாமைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற வகையில் அவை கோட்பாடு ரீதியில் ஆதரிக்கத் தகுந்தவை ஆகும்.


குறிப்பு: மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்
- “காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்”,
-ம.ஜ.இ.க வெளியீடு, மார்ச் 1993
================================= முற்றும் =============================