Sunday 29 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(4)

கனுசன்யாலின்
வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடும்
கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான வரலாற்று ரீதியான காரணங்கள்.
இ.க.க. ( மா.லெ ) -வை சார்ந்த கனுசன்யால்,  
“சாருமஜும்தாரும் இ.க.க ( மா.லெ ) மத்தியக் கமிட்டியும் இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தி கட்சிக்கு பெரும் தோல்வியைக் கொண்டு வந்தனர்”   என்றும், “கட்சியில் தோன்றிய பிளவுகளுக்கெல்லாம் சாருமஜும்தாரே காரணம்“ என்றும் கூறி தனது வலது சந்தர்ப்பவாத வழியை முன் வைத்தார். அதே வழியில் மா.லெ குழுக்களின் ஐக்கியத்திற்கான முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 
தற்போது “பச்சோந்தி” கோவை ஈஸ்வரன் தலைமையில் நம்மிடம் இருந்து ஓடிப்போன கலைப்புவாதிகளையும் பிழைப்புவாதிகளையும்,ஓடுகாலிகளையும் வைத்துக்கொண்டு கனுசன்யால் கட்சியின் தமிழ் மாநிலக் கமிட்டியை உருவாக்கியுள்ளனர். கனுசன்யால் போன்ற சிறந்த தலைவரை நாம் இருட்டடிப்பு செய்துவிட்டதாக நம் மீது குற்றம் சுமத்துகின்றனர். மேலும் தாம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டோம், அகில இந்திய கட்சியைக் கட்டிவிட்டோம் என்று கூறி அணிகளைக் குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். 
கனுசன்யால் வழி மற்றும் அவர் எடுத்த ஐக்கியத்திற்கான முயற்சிகளின் தோல்விக்கான காரணங்களை ஆய்வுசெய்வதற்கு முன்னர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றியுள்ள பிளவுகள் குறித்த வரலாற்று ரீதியிலான காரணங்களைக் காண்போம்.
( 1 )
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான
வரலாற்று ரீதியான காரணங்கள்

1) சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பிளவு

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தில்
அக்கட்சியின் தலைவர் குருச்சேவ் தாக்கல்செய்த அறிக்கையில்
மார்க்சிய-லெனினியத்தை நிராகரிக்கும் விதமாக சில கோட்பாட்டு வரையறைகளை முன்வைத்தார்.

அனைத்து மக்களுக்குமான கட்சி, அனைத்து மக்களுக்குமான
அரசு ஆகிய முழக்கங்களோடு, கட்சி என்பது பாட்டாளிவர்க்கத்தின்
முன்னணிப்படை மற்றும் சுரண்டும் வர்க்கத்தின் மீதான பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் போன்ற கோட்பாடுகள் கைவிடப்பட்டன.
ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை
குருசேவ் நிராகரித்தார். தற்போதுள்ள சூழலில் “பாராளுமன்றவாத
வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை
நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்” என்று கூறினார்.

ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதது என்ற
மார்க்சிய-லெனினிய வரையறையை குருச்சேவ் தலைமையிலான
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு நிராகரித்தது.
இன்றைய சகாப்தம் ஏகாதிபத்திய மற்றும் பாட்டாளிவர்க்கப்
புரட்சிகளது சகாப்தம் என்ற கருத்தாக்கங்களை நிராகரித்ததன் மூலம் சரணாகதிக்குப் பலியாகி மார்க்சியத்தைத் திருத்தும் வகையில் சமாதானப்பூர்வமான மாற்றம், சமாதான சகவாழ்வு, அமைதிவழிப் போட்டி என்ற கோட்பாடுகளை அது அறிமுகப்படுத்தியது. இந்த நவீன திருத்தல்வாதக் கோட்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் வலது சந்தர்ப்பவாதத்தைப் பலப்படுத்தியது.

குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு மாறாக மார்க்சிய-
லெனினியத்தை பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை
எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு சீன
கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது. குருசேவ்வின் திரிபுவாதக்
கோட்பாட்டை நிராகரித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு
கூறியது.

“சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும்
பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது
என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது
மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது
ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு
அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.
அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள்
உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின்
ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள்
தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.
இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமான
சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்” திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி போரைத்
தடுப்பதற்கான சாத்தியமான கூறுகளைப் பொருத்தமட்டில்,
`ஏகாதிபத்தியப் போர்களும் தலையீடுகளும் தவிர்க்க இயலாததாகும்` என்ற லெனினியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது. போருக்கு எதிராகப் போர்தொடுப்பதன் மூலமாகவும், மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறையை ஒழிப்பதன் மூலமாகவும் போரை ஒழித்துவிட முடியும் என்று கூறி குருச்சேவ்வின் திருத்தல்வாதத்தை மறுதலித்தது. மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு
மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை
ஏற்றது.

1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி
வெளியிட்ட கடிதமும், அதற்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் “ஜூன்-14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமை
இயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு” என்ற கடிதமும்
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்குக் காரணமாயிற்று.
இந்த முன்வரைவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒன்பது
விமர்சனங்களை முன்வைத்தது. இந்த ஆவணங்கள்தான் “மாபெரும் விவாத ஆவணங்கள்” என்று அறியப்படுகின்றன.

“ஏகாதிபத்தியம் பலமிழந்துவிட்டது, காலனிய முறை
முடிவுக்கு வந்து விட்டது” என்ற ஒரு புதிய முடிவுக்கு சோவியத்
கம்யூனிஸ்ட் கட்சி வந்துவிட்டது. குருசேவ் தலைமையிலான
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைபாட்டிலிருந்துதான்
சமாதான சகவாழ்வு, ஏகாதிபத்தியவாதிகளுடன் சமாதான வழி-
யிலான போட்டி, சமாதானமாக சோஷலிசத்திற்கு மாறுவது என்ற
குருசேவ்வின் திரிபுவாதம் தலையெடுத்தது. சர்வதேச கம்யூனிஸ்ட்
இயக்கம் சோவியத் திருத்தல்வாதத்திற்கு எதிராக சமரசமின்றிப்
போராட வேண்டிய நிலைவந்தது. ஆனால் சோவியத் ரஷ்யாவில்
திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல்
வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங்
தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு
எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்
இயக்கம் பிளவுகளை சந்தித்தது.

2) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு

இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின்
திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில்
உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது
பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது
பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று
போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம்
குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய -
லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது
பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அதில்
அவர் கூறியதாவது:

“இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின்
வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன.
தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்,
வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்
முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச்
செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய
கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.

அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றிய பெரும்பாலான
சி.பி.ஐ. தலைவர்கள் எப்போதும் மார்க்சியவாதிகளாகவும்
இருந்ததில்லை, கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததில்லை. இப்போது
அவர்களுக்கு நவீன திரிபுவாதத்தை அரவணைப்பது குறித்தும்,
மார்க்சிய-லெனினியத்தைக் கைவிடுவது குறித்தும் கூரைகளின்
மீதேறிக் கூவுவதற்கான வாய்ப்புக் கிட்டியது.

பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்
தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதை
பின் வருமாறு கூறியது:
“அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம்வாய்ந்த கூறாக விளங்குகிறது” .
சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம் ஒன்று ஏப்ரல் 1958-ல்
அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும்
நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது
அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும்
சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்” என்று அந்தத்
திருத்தம் கூறியது.

சி.பி.ஐ-யைகட்சியானது “மார்க்சிய-லெனினியத்தின்
அடிப்படைக் கோட்பாடுகளால்” வழிநடத்தப்படுவதாக பேராயம்
கூறியது. உண்மையில் அக்கட்சியோ நவீன திரிபுவாதத்திற்கு
ஆதரவான நிலையை எடுத்தது. அதனுடைய முன்னேற்றத்தைத்
தடுக்கும் “தடைக்கற்களாக” கருதி மார்க்சிய-லெனினிய
கோட்பாடுகளை நிராகரித்தது. கேரளாவிலும் இன்னும் பிற
மாநிலங்களிலும் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. அவர்களுக்கு
தெலுங்கானா அல்ல; கேரளாதான் முன்மாதிரியாக விளங்கியது.

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60-ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது. கொடூரமான அடக்கு- முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்குமுறை -களைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என
எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை.

நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும்
சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது.
தெலுங்கானாவிற்கு ஆதரவாக நகர்ப்புற பகுதிகளிலும் கிராமப்புறப்பகுதிகளிலும் முதலில் ஆதரவு தளத்தைக் கட்டியெழுப்பி, பின்னர் இதுபோன்ற பல தெலுங்கானாக்களை உருவாக்குவதற்காக மக்களுக்கு எழுச்சியூட்டி, அவர்களை ஒருங்கிணைப்பதற்கான பணியை பொறுமையுடன் மேற்கொள்வதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் உடன்பாடு எட்டப்பட்ட பிறகு தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என
ஜுன் - 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.

“தெலுங்கானா போர்” நேரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காகத்
தொடங்கப்பட்ட போராட்டமோ அல்லது தொடர்கின்ற
போராட்டமோ அல்ல. மாறாக நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கான போராட்டமாகவே நடைபெற்றது என்று நேரு அரசாங்கத்துக்கு மையக்குழு உறுதியளித்தது. மையக்குழுவின் சார்பாகவும், சி.பி.ஐ. மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951-அன்று ஏ.கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அவ்வறிக்கையானது 
“அனைத்துப் போராட்டநடவடிக்கைகளையும்
நிறுத்துமாறும் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில்
ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி அவர்களைத் தீவிரமாக
பங்கேற்கச் செய்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்குமாறும்
தெலுங்கானா விவசாயிகளையும், போராளிகளையும் கேட்டுக்
கொண்டது”. 
காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:
 “கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.
சி.பி.ஐ. கட்சியானது 1951- மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய
குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பிவைத்தது.
அக்குழுவின் நோக்கம் “கட்சியானது புரட்சிகர வழியை
கைவிட்டுவிட்டது என்றும், நேருவின் அயலுறவுக் கொள்கையில்
உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் - அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம், அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.

3) சி.பி.எம் - க்குள் புரட்சியாளர்களின் போராட்டம்

சி.பி.ஐ-யின் திருத்தல்வாதத்தை எதிர்த்து சி.பி.ஐ.யிலிருந்து
பிளவுப்பட்ட பின்பும் கூட சி.பி.ஐ(எம்) தலைமை குருச்சேவின்
நவீன திருத்தல்வாதம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க
மறுத்தது. மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968-ல் நடைபெற
உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளிப்போட்டது.
ஆனால் இக்கட்சி சோவியத் திருத்தல்வாதத்திற்கு அடிப்படையில்
எதிரான ஒன்று அல்ல என்பது 1968-ல் பர்துவான் சிறப்புக் கூட்டத்தில் நிரூபணமானது.

சி.பி.ஐ (எம்) கட்சியின் தலைமையானது உண்மையில் ஒரு
மையவாத நிலைப்பாட்டை எடுத்தது. இது வலது பாதையிலிருந்து
அடிப்படையில் வேறான ஒன்று அல்ல. சி.பி.ஐ. போலவே
இந்தியா தேசிய சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற நிலையை
எடுத்தது. இதற்காக இந்தியா அரசியல் ரீதியாக சுதந்திரமானது,
ஆனால் பொருளாதார ரீதியாக சார்புடையது என்ற புதுமையான
வாதத்தை முன்வைத்தது.

சி.பி.ஐ(எம்)-இன் கட்சித் திட்டம் கூறியதாவது: 

“அமைதியான வழிகளின் ஊடாக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காகவும் சோசலிச மாற்றத்தை அடைவதற்காகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்தை துறப்பதற்குத் தாமாகவே முன்வரமாட்டார்கள். அவர்கள் மக்களின் விருப்பத்தை நிராகரிப்பதற்கு - சட்டம் ஒழுங்கைக் குலைப்பதன்
மூலமாகவும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன்
மூலமாகவும் பின்னடைவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிப்பார்கள்.
எனவே புரட்சிகர சக்திகள் விழிப்புடன் இருப்பதும், நாட்டின்
அரசியலில் ஏற்படும் திடீர் திருப்பங்களை நேர்கொள்வதற்கு
ஏற்றவகையில் தங்களுடைய பணியினை ஒருமுகப்படுத்துவதும்
அவசியமான ஒன்றாக விளங்குகிறது.”என்று கூறியது. 

இவ்வாறுஅது அமைதிவழிப் பாதையை முன்வைத்தது. இதையே சி.பி.எம்.கட்சி வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது என நேரு அரசாங்கம் குற்றம் சுமத்தியது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், ``தங்களுடைய கட்சித்
திட்டத்தின் 113-வது பிரிவும், ஏறத்தாழ இதே காலகட்டத்தில்
பம்பாயில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் (டாங்கே வாதிகளின்)
ஏழாவது பேராயத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டத்தின் 99-
வது மற்றும் 102-வது பிரிவுகளும் ஒன்று போலவே இருந்ததோடு,
அவ்விரண்டு திட்டங்களில் இடம் பெறுள்ள “சொற்றொடர்களும்,
பத்திகளும்” ஏறத்தாழ ஒன்றுபோலவே இருந்துங்கூட,
இந்தியாவின் அந்நாளைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா மார்க்சிஸ்டுகள் வன்முறைப் பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள்” என்ற “கீழ்த்தரமான அவதூறை” பரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள் என நந்தாவுக்கு எழுதப்பட்ட கடிதம் என்ற தலைப்பில் சி.பி.ஐ.(எம்) தலைமைக்குழு உறுப்பினரான பசவப்புன்னையா புலம்பினார்.

முன்னதாக, சி.பி.ஐ (எம்)-வன்முறைப் புரட்சிக்கான தயாரிப்பை
மேற்கொள்ளும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருந்த
குல்சாரிலால் நந்தாவின் எண்ணைத்தை மாற்றுவதற்காக
கட்சிப் பேராயம் நிறைவு பெற்றவுடன் குல்சாரிலால் நந்தாவை
சந்திப்பதற்காகக் கட்சியின் பொதுச் செயலாளர் சுந்தரய்யா
புது தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். நந்தாவைச் சந்தித்த
சுந்தரய்யா தாங்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற முழக்கத்தை
மட்டுமே வைத்திருப்பதாகவும், தங்களுடைய கட்சி “சட்ட
ரீதியாகவும், வெளிப்படையாகவும்தான் செயல்படும்” என்றும்
அவரிடம் உறுதிமொழி அளித்தார். தாங்கள் ஆயுதப் போராட்டம்
போன்ற எந்த ஒரு போராட்டத்தைக் குறித்தும் சிந்தித்தும் கூட
பார்த்ததில்லை என்று சுந்தரய்யா கூறினார். “இந்திய அரசால்
வழங்கப்பட்டுள்ள அனைத்து “ஜனநாயக உரிமைகளையும்” (! )
நிராகரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு தாங்கள் ஒன்றும்
குழந்தைகள் அல்ல” என்றார் அவர்.

தெலுங்கானா வகைப்பட்ட போராட்டத்தைக் கட்டி அமைப்பதற்காக, தலைமறைவாக இயங்குவதற்கான தயாரிப்புகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்தார். தெலுங்கானாவின் ஆயுதந்தாங்கிய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சி.பி.ஐ.யின் நிலையையே சி.பி.ஐ ( எம் )-உம் எடுத்தது. அதாவது தெலுங்கானா போராட்டம் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல நிலத்திற்கான போரட்டமே என்ற வரையறையையே மேற்கொண்டது.

தொகுத்துக் கூறினால்:
அமைதிவழி மாற்றம், ஆயுதப் புரட்சிஅல்ல! நிலத்திற்கான போராட்டம், அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல! 
என்ற நிலைப்பாட்டைத்தான் சி.பி.ஐ ( எம் )-கட்சி எடுத்தது.
இவ்வாறு சி.பி.ஐ ( எம் ) கட்சி மையவாத நிலைப்பாட்டிலிருந்து
திரிபுவாதத்திலும் வலது சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கியது. இத்தகைய நிலையில்தான் சி.பி.ஐ ( எம் )-க்குள் இருந்த புரட்சியாளர்கள் சி.பி.ஐ ( எம் )இன் திரிபுவாத நிலைபாட்டை எதிர்த்தும் வர்க்க சமரசப்பாதையை எதிர்த்தும் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தனர்.
___
2. நக்சல்பாரி எழுச்சியும் மா.லெ. கட்சியும்
(தொடரும்)
----------)
தொடர்ச்சிகளுக்கு:
நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்
-சமரன் தொடர் 1

Saturday 21 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(3)


கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்

முன்னுரை-பகுதி 3

குருச்சேவின் திருத்தல்வாதமும் கோர்பச்சேவின் கலைப்புவாதமும்



ருஷ்யாவில் குருச்சேவின் திருத்தல்வாதமானது கோர்பச்சேவின் கலைப்புவாதமாக முடிவுற்றது. குருச்சேவின் திருத்தல்வாதம் ரஷ்யாவில் நடைமுறைப்  படுத்தப்பட்டதால் அங்கு சோஷலிச ஆட்சி ஒழித்துக்கட்டப்பட்டது. முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது. நவீனத் திருத்தல்வாதிகள் அரசியல் ரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தனர்.
     பின்பு பிரஷ்னேவ் காலத்தில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக மாறி உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போட்டிபோட்டு பனிப்போரில் ஈடுபட்டது.  அதனால் சோவியத் சமூக எகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியின்  தொடர்ச்சியாக கோர்பச்சேவ் கலைப்புவாதத்தைக் கொண்டு வந்தார். கோர்பச்சேவ் கும்பல் “கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது” என்றும் வரலாறு முடிந்துவிட்டது (end of history) என்றும் பிரச்சாரம் செய்தது. அரசு முதலாளித்துவத்திற்குப் பதிலாக மரபுவழியிலான தனி உடமை முதலாளித்துவத்தைக் கொண்டுவந்தது. ரஷ்ய ஒன்றியும் கலைக்கப்பட்டது.

விஞ்ஞான சோஷலிசம் என்ற ஒன்றில்லை, ஆனால் கற்பனா சோஷலிசம் மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற சோஷலிச மட்டுமே உள்ளது. சமூக அக்கறையைவிட தனிநபர் பேராசையே சமூக சமநிலையையும் (equilibrium) முன்னேற்றத்தையும் உருவாக்குகின்றன; வரலாறு முடிந்துவிட்டது, வரலாறு முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு (liberal democracy) அப்பால் செல்லாது; ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சிகர சகாப்தமும் முடிந்துவிட்டது; புதிய தாராளமய, உலகமயமாதலே உலக முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழியாகும். தேசிய விடுதலை, ஜனநாயகம் மற்றும் சோஷலிசத்திற்கான மக்களின் போராட்டங்கள் பயனற்றது என்ற கருத்து பரப்பப்பட்டது.

இவ்வாறு கோர்ப்பச்சேவும் எல்சினும் குருச்சேவின் திருத்தல்வாதத்தை அதனுடைய இறுதி நிலைக்கு உந்தித்தள்ளி, கலைப்புவாதக் கொள்கைகளை அமல்படுத்தினர் - ரஷ்ய ஒன்றியம் சிதறுண்டுபோனது. வெளிப்படையான தனியுடைமை முதலாளிய ஏகாதிபத்தியம் நிறுவப்பட்டது. எனவே ரஷ்யாவிலும் பிற ஐரோப்பிய  நாடுகளிலும் கம்யூனிஸ்டுக் கட்சி கலைக்கப்பட்டன. அத்துடன் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் கம்யூனிஸ்டுக் கட்சிகளைக் கலைப்பதற்கு திட்டமிட்டது.

  கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதன் அவசியம் பற்றி கோர்பச்சேவ் துருக்கியின் அங்காரா நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் அளித்த பேட்டியில் கூறுவதாவது:
“ என்னுடைய உள்ளார்ந்த நோக்கம், இறுதி லட்சியம் கம்யூனிசத்தை கலைத்துவிடுவது (ஒழித்துக்கட்டுவது). ஏனெனில் கம்யூனிசமானது அனைத்து மக்களின் மீதும் சர்வாதிகாரத்தைச் செலுத்துகிறது. எனக்குத் தெரியும் இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேண்டுமானால் ரஷ்யநாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த இடத்திற்கு நான் செல்ல வேண்டும். ஆகவே எனது மனைவி அத்தகைய  உயர்ந்த அதிகாரம் படைத்த பொறுப்பிற்கு நான் செல்லவேண்டும் என்று அவசரப்படுத்தினார். நான் உண்மையில் மேற்கு உலக நாடுகளோடு தொடர்பு கொண்டு பல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப எனது மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டேன். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் சோஷலிசக் குடியரசு அமைப்பின் அனைத்து இயந்திரங்களையும் அழிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். மேலும் இதே காரியத்தை மற்ற சோஷலிச நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும்  என்றும் தீர்மானித்தேன். எனது கண்ணோட்டமானது சமூக ஜனநாயகப் பாதையாகும். இதன் மூலம் மட்டுமே உலகிலுள்ள அனைத்து மக்களும் பயன்பெறுவர். இதனைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.” 
 
மேலும் அதே பேட்டியில் கூறும்போது:
 “... ரஷ்யா உடைந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேனா? என்று பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் இதற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில் ரஷ்யாவில் மட்டுமல்லாது அனைத்து சோஷலிச நாடுகளிலும் கம்யூனிசத்தை அழிப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் நான் ஏற்கனவே செய்து முடித்துவிட்டேன். நான் அழவில்லை. ஏனெனில் ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எனது உள்ளார்ந்த இறுதி இலட்சியத்தை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டேன்.  ஆனால் நீங்கள் ஒன்றைப்  புரிந்துகொள்ள வேண்டும். ஆசியாவிலும் கம்யூனிசத்தை ஒழிப்பதன் மூலமாகத்தான் உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்த முடியும்.” என்று கூறினார்.

நவீனத் திரிபுவாத குருச்சேவ் கும்பல் அன்று அமெரிக்க ஏகதிபத்தியத்தோடு உறவு கொண்டுதான் ரஷ்யாவில் சோஷலிசத்தை அழித்து முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது.  கோர்பச்சேவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியுடன்தான் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளை  அழிப்பதற்கு திட்டமிட்டுச் செயல்பட்டார் என்பதை வாக்குமூலமாகவே வெளிப்படுத்திவிட்டார்.  அமெரிக்காவின் தலைமையில் உள்ள ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச ஏகபோக மூலதனம் ஆகியவற்றின் விளைபொருளே நவீன திரிபுவாதமும் கலைப்புவாதமும் ஆகும். நவீன திரிபுவாதிகளும் கலைப்புவாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகடைக்காய்களாக செயல்படுவதோடு, புரட்சியை எதிர்ப்பதில் அதன் அடிமைச் சேவகர்களாகவே உள்ளனர்.

நவீன திருத்தல்வாதத்தின் எழுச்சி மற்றும் சோஷலிச நாடுகளில் முதலாளித்துவம் முழுவதுமாக மீட்கப்பட்டப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலகம் முழுவதும் திணித்துவரும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற புதியகாலனிய தாராளக் கொள்கைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதும் சுரண்டுவதும் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமடைந்து வருகின்றன.  ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகள் முதலாளித்துவ நெருக்கடியைத் தீர்க்கவிலலை. அக்கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி மென்மேலும் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்கள் உலகம் முழுவதும் எழுச்சி பெற்று வருகின்றன. அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிகத்திற்காக இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் ஈராக், லிபியா, எகிப்து மற்றும் சிரியா போன்ற அரபு நாடுகளில் உருவாக்கியுள்ள பொம்மை ஆட்சிகளை எதிர்த்தும் மக்கள் எழுச்சியுடன் போராடிவருகிறார்கள். இத்தகைய மக்களின் எழுச்சி புரட்சியாக மாறிவிடும் என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுகின்றனர். எனவே இத்தகைய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அழித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். அதற்கு நவீன திரிபுவாதிகள், கலைப்புவாதிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர்.

ஏகாதிபத்திய முதலாளித்துவக் கும்பலகள் பலவகைப்பட்டக் கருவிகளைக் கொண்டு (கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள், தேர்தல் நடவடிக்கைகள், அறிவாளி குழாம்கள், கோட்பாட்டு உருவாக்க நிறுவனங்கள், கார்ப்பரேட் காருண்ய நிறுவனங்கள் (Ford, Rockefeller Foundation, Bill gates Foundation), மத நிறுவனங்கள் புத்துயிர்ப்புப் பெற்றுவரும் பாட்டாளிவர்க்க புரட்சிகர சித்தாந்தங்களையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சோஷலிசத்திற்கு ஆதரவாகவும் மக்கள் மத்தியில் தோன்றிவரும் எழுச்சிகளையும் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளை அழித்துவிடவோ அல்லது அதனிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒன்றை வைக்கவோ முயற்சி செய்கின்றனர்.

இவ்வாறு ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க எகாதிபத்தியவாதிகளின் ஆதரவோடு கோர்பச்சேவின் கலைப்புவாதம் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஊடுருவி பெரும் தாக்கத்தையும் பிளவுகளையும் கொண்டு வந்தது. அதன் பாதிப்புகள் இந்தியாவிலும் கடுமையாக பிரதிபலித்தது.

இந்தியாவில் கலைப்புவாதம்

மேற்கண்ட சூழ்நிலைமகளின் கீழ்தான் இந்தியாவில் தோன்றிய திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதப் போக்குகளை ஆய்வு செய்யவேண்டும். இந்தியாவில் ஏற்கனவே நவீன திரிபுவாதிகள் கம்யூனிஸ்ட் கட்சியை வெளிப்படையாகமாற்றி ஆளும் வர்க்கங்களின் தொங்குசதையாக மாற்றி விட்டனர். தற்போது மா.லெ. புரட்சிகரக் குழுக்களைச் சீரழிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கோர்பச்சேவ் கும்பலின் கலைப்புவாதத்தின் தொடர்ச்சியாகவே அந்தோணிசாமி மார்க்ஸ் தலைமையிலான பு.ப.இ.கும்பல் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்றும், வரலாறு முடிந்துவிட்டது என்றும்  பிரச்சாரம் செய்தது. ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவிலும் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியைக் காரணம் காட்டி தனது கலைப்புவாதக் கருத்துக்களை மெல்ல மெல்ல கொண்டுவந்தது. கம்யூனிசத்திற்கு எதிராக கடும் தாக்குதல்களை நடத்தியது. கட்சியைப் பிளவுபடுத்தி வெளியேறியது. நிறப்பிரிகை மற்றும் மக்கள் கல்வி இயக்கத்தைத் துவங்கி கலைப்புவாதக் கருத்துக்களைப் பரப்பியது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தவறு என்றும், பாட்டாளி வர்க்கத் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல் வாதத்தையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் மறுத்ததோடு பாட்டளிவர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர்.

 ஆரம்பத்தில் அவர்கள் மார்க்சியத்தின் குறை நிறைகளை இட்டு நிரப்புவது என்று பேசினர். மார்க்சியம் முழுவதும் தவறு என்று பேசவில்லை. மார்க்சியத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்று அவர்கள் கூறியபோதிலும், மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை பலவீனப்படுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். மார்க்சிஸ்ட் என்ற முகமூடியுடன் நடமாடுவதை நிறுத்தவில்லை. கட்சியின் சாதாரண உறுப்பினர்களை ஏமாற்றுவதற்காகவே அவர்கள் இத்தகைய “விமர்சனங்களை” மேற் கொண்டனர். பின்னர் படிப்படியாக மார்க்சிய விரோதக் கலைப்புவாதக் கருத்துக்களை  முன்வைத்தனர்.

அந்தோணி மார்க்ஸ் கும்பல் மார்க்சியத்தை எதிர்த்து ஃபூக்கோ, தெரிதா, ஃப்ராய்டு போன்றவர்களின் பின்நவீனத்துவக் கருத்துக்களை முன்வைத்தது. பின் நவீனத்துவத்துடன் பொருட்களை அறியமுடியாது என்ற அறியவொண்ணாவாதத்தையும் முன்வைத்தது. பின்நவீனத்துவத்தின் கட்டுடைத்தலின் சாரம் பின்வருமாறு கருத்தொருமிப்பா கூடவே கூடாது. அது வன்முறை அதிகாரத்திற்கே வழிவகுக்கும். அது ஆதிக்கத்திற்கு ஆதரவான கருத்தொருமிப்பானாலும் சரி, எதிரான கருத்தொருமிப்பானாலும் சரி, எதுவுமே வேண்டாம்.பகுத்தறிவே பயங்கரம். இந்தப் பகுத்தறிவால் வந்ததே அத்தனைக் கேடுகளும். தர்க்கமே வன்முறை. இந்தத் தர்க்கத்தினால் வந்ததே அத்தனைத் தொல்லைகளும். அறிவியலே வேண்டாம். இந்த அறிவியலால் நேர்ந்ததே அத்தனை இடர்ப்பாடுகளும். ஆகவே இது எதுவும் வேண்டாம். விதியொழுங்குகளா வேண்டவே வேண்டாம். அது ஆதிக்கம் ஏற்படுத்தும் விதியொழுங்கானாலும் சரி, எந்த விதியொழுங்குமே வேண்டாம். விதியே அதிகாரம்தான். அறிவா வேண்டாம். அறிவியலா வேண்டாம். அதுமட்டுமல்ல அறிவுக்கோ அறிதலுக்கோ எந்தப் பொதுத்தன்மையும் கிடையாது. அவரவர்கள் கண்டதே அறிவு. அறிவோ அறிதலோ எல்லாம் அவரவர்க்கு தனித்தனி.சமூகத்தின் மையச்சக்திகள் இருக்கிறார்களே, வரலாற்றின் உந்து சக்திகள், வரலாற்றை உருவாக்குகிற சக்திகள் அவற்றை ஒன்று திரட்ட வேண்டாமா? அவர்களை வைத்துதானே ஆதிக்கத்தை எதிர்க்கமுடியும். வேண்டாம், அவர்களைத் திரட்டுவது இன்னொரு வன்முறை அமைப்பையே உருவாக்கும். சரி, உதிரிகளையாவது திரட்டலாமா?. கூடாது எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.சரி, அறிவு வேண்டாம், தருக்கம் வேண்டாம், கருத்தொருமிப்பு வேண்டாம், விதியொழுங்கு வேண்டாம், அறிவியல் வேண்டாம் அப்புறமெந்த நோக்கில் எதைவைத்து அமைப்புக் கட்டுவது என்றால் அமைப்பும் வேண்டாம். காரணம் அமைப்பு என்பதே அதிகாரமுடையது, ஆதிக்கத்தன்மை உடையது. அது ஆதிக்கத்தை ஆதரிக்கிற அமைப்பாயிருந்தாலும் சரி எதிர்க்கிற அமைப்பாயிருந்தாலும் சரி, அது வேண்டவே வேண்டாம்.தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள ஒரே ஆயுதம் அமைப்பு மட்டுமே, அது சார்ந்த ஒற்றுமை மட்டுமே. அதுவும் வேண்டாம் என்றால், வேறு எதை வைத்துத்தான் ஆதிக்கத்தை எதிர்ப்பது? . சும்மா தனித்தனியாக எதிர்த்துக் கொண்டிருப்பதா? அப்படி எதிர்த்தால் ஆதிக்கம் எல்லோரையும் அழித்துவிடாதா என்றால் அதனாலென்ன செத்துத் தொலையுங்கள், வாழ்ந்து என்ன வாரிக் கொள்ளப் போகிறீர்களென்கிறது பின் நவீனத்துவம்.
இதுதான் பின் நவீனத்துவ அரசியலின் சாரம். 

பொதுவாக தத்துவங்கள் மனிதன் வாழ வழிகாட்டும் என்று சொல்வார்கள். ஆனால் பின்நவீனத்துவம் சாக வழிகாட்டும் தத்துவமாக இருக்கிறது என்பதே உண்மை.
பின்நவீனத்துவம் கட்டுடைத்தல் என்பதன் பேரால் எல்லாவற்றையும் கலைத்துபோட்டு மாற்று என எதையுமே உருவாக்காமல் விடுவது, வெறுமையை ஏற்படுத்த முயல்வது. இத்துடன் புதிதாக உருவாகும் எதையும் இதே கட்டுடைத்தல் என்கிற அணுகு முறையால் கலைத்துப்போட்டு மாற்று எதுவும் உருவாகவிடாமல் தடுப்பது. இதில் இரண்டாவது காரியத்தை மட்டுமே செய்துவருகிறது பின்நவீனத்துவம்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் அ. மார்க்ஸ் கும்பல் கட்டுடைத்தல் என்ற பேரில் சோஷலிசத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் கலைப்பதை நியாயப் படுத்தி கலைப்பு வாதத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைக்கும் வேலையைச் செய்தது. 
   
பொருட்களின் சாரம், மொத்தத்துவம் போன்ற கருத்தாக்கங்களை பின் நவீனத்துவம் மறுத்தது. மொத்தத்துவம் என்பது எதேச்சதிகாரத்துக்கே வழிவகுக்கும் என்பதால் சிதறுண்டபோதலை ஆதரித்தது. மொத்தத்துவம், பொதுமைப்படுத்துதல் தரப் படுத்துதல் என்பதெல்லாம் தனித்துவமான அடையாளங்களை அழித்தொழிக்கும் வன்முறைகள் என்பதால் சிறு குழுக்கள், தனித்துவங்கள், தல அளவிலான செயல்பாடுகள் ஆகியவற்றை வரவேற்றதுடன் மொத்தத்துவத்தை அதாவது பேருரு அரசியலை எதிர்ப்பது என்ற பேரில் சோஷலிசத்தை எதிர்த்து சிற்றுரு அரசியலான “தலித்தியம், பெண்ணியத்தை” முன்வைத்தனர்.

கட்டுடைத்தலை குடும்பத்திற்கும் விரிவுபடுத்தியது அ.மார்க்ஸ் கும்பல். குடும்பமே அதிகார நிறுவனம், குடும்பத்தை உடைப்பதன் மூலமே பெண்விடுதலை என்று பேசியது. ஆணாதிக்கத்தை எதிர்த்து யோனி மையாவாதம் பேசி வரைமுறையற்ற பாலுறவை முன்வைத்தது. பாலியல்சீரழிவுகளையும் ஓரினச் சேர்க்கையையும் குடிப்பழக்கத்தையும் அறிமுகப்படுத்தி புரட்சி இயக்கத்தில் செயல்பட்ட இளைஞர்களை 90களில் சீரழித்தனர். மக்களிடம் செல்வாக்கு செலுத்திய தமிழ்த் தேசிய உணர்வு, ஈழ விடுதலை ஆதரவு, கம்யூனிச ஆதரவு என அனைத்துக்கும் எதிராக அ.மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

ஈழ விடுதலைப் போரின் இறுதிக் காலத்தில் அ.மார்க்ஸ் போன்றவர்கள் இழைத்த துரோகம் மோசமானது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது இவர், இசுலாமியர் மீது புலிகள் தாக்குதல் நடத்திய பழைய கதைகளை மேடைகள் தோறும் பேசினார். இதன் மூலம் இசுலாமியர்களை ஈழப் போராட்டத்தின் மீது வெறுப்படையச் செய்ய முயன்றார். இலங்கை, இந்திய அரசுகளின் இன அழிப்புப் போருக்குத் துணைபோனார். இங்கு தலித்துகள் மீது கரிசனம் காட்டுவதாகக் கூறும் இவர், ஈழத்தில் கொல்லப் பட்ட தலித்துகள் குறித்து கவலையே படவில்லை.

சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவில் செயல்படும் சிறீலங்கா டெமாக்ரடிக் ஃபாரம் (SLDP), லிட்டில் எய்ட் போன்ற தன்னார்வக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் சுசீந்திரன்,சுகன்,ஷோபா சக்தி உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள். இவர்கள் ஈழ விடுதலைப் போருக்கு எதிராகப் பரப்பும் கருத்துக்களை தமிழகத்தில் பரப்பும் வேலையைத்தான் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோர் செய்கிறார்கள். ஈழ இனப் படுகொலைக்குத் துணைபோன இவர்கள்தான் இன்றளவும் மனித உரிமை ஆர்வலர்களாக அறியப்படுகிறார்கள்.

நிறவாதம், சாதியம், மத அடிப்படைவாதம், பெண்ணடிமைத்தனம், சுற்றுபுறச் சூழல் அழிவு, தேசிய இனப் பிரச்சினை போன்றவைகளுக்கான தீர்வாக வர்க்கப் பார்வையற்ற நிலைப்பாடுகளை முன்வைத்தனர். வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய-லெனினிய அடிப்படை போதனைகளை எதிர்த்தனர்.

மார்க்சியத்துக்கு மாற்றாக பெரியாரியத்தையும் அம்பேத்காரியத்தையும் நிறுத்தினர். வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக தலித்தியத்தையும் அடையாள அரசியலையும் முன்வைத்தனர். இவ்வாறு கம்யூனிஸ்ட்  கட்சியை ஒழிப்பதற்கும், எதிர்ப் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியமைக்கவும் இவர்கள் கட்சியை பிளவுபடுத்தி வெளியேறினர். ஆனால் தலித் அரசியல் பேசி அவர்களே இறுதியில் கட்டுடைந்து பிளவுபட்டனர்.
அந்தோணிசாமி மார்க்ஸ் கும்பலின் கலைப்புவாதக் கருத்துக்களின் செல்வாக்குக்கு கட்சியிலுள்ள, குறிப்பாக புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் இருந்த குட்டிமுதலாளித்துவ அறிவாளிகள் இரையானார்கள். மார்க்சியத்தின் மீதும் புரட்சியின் மீதும் நம்பிக்கை இழந்து கட்சியை விட்டு வெளியேறினார்கள்.
அந்தோணி மார்க்சும் அக்கும்பலைச் சார்ந்தவர்களும் அந்நிய நிதி உதவி பெற்ற தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் ஏகாதிபத்திய நிதி ஆதரவுடன் - ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஏகாதிபத்தியவாதிகள் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு வெளியீடுகளை உடனுக்குடன் கொண்டு வந்தனர். அந்தோணிசாமி மார்க்ஸ் கும்பலைச் சார்ந்தவர்கள் ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுவைச் சேர்ந்த பலரை இணைத்து பெரும் நிதி தளத்துடன் இலங்கையிலும் இந்தியாவிலும் செயல்படத் துவங்கினர். ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன்  கோவை சிவா மூலம் விடியல் பதிப்பகத்தைத் துவங்கி பாட்டளிவர்க்க இயக்கத்திற்குள் ஊடுருவி சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

சித்தானந்தம் கும்பல், ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்கும்  அந்தோணிசாமி மார்க்ஸ், விடியல் சிவா போன்றவர்களின் உதவியோடும், பல்வேறு ஏகாதிபத்தியத் தொண்டு நிறவனங்கள் நடத்தும் புத்தக நிறுவனங்களின் உதவியோடும் சேலத்தில் அகிலம் புத்தகக் கடையைத் திறந்தது. முற்போக்குப் புத்தகங்களை விற்பது எனும் பேரில் அம்பேத்காரிய,பெரியாரியக் கருத்துக்களையும் அடையாள அரசியல் கருத்துக்களையும் பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடனேயே அகிலம் புத்தகக் கடை திறக்கப்பட்டது. அதன் மூலம் கட்சிக்குள் அந்நிய சக்திகள் ஊடுருவ திட்டமிட்டு அக்கடை திறக்கப்பட்டது. அதை எதிர்த்து கட்சி முழுவதும் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அவ்வாறு கடைதிறந்தது கலைப்புவாதம்தான் என ஒத்துக்கொண்ட சித்தானந்தம் முறையாக சுயவிமர்சனம் செய்துகொள்ள மறுத்து போலீசில் சரணடைந்து கட்சியைப் பிளவுபடுத்தினார். இத்தகைய கலைப்புவாதக் கருத்துகளுக்கு ஒத்து ஊதித்தான் சேலம் செல்வராசுவும் சின்னுவும் கட்சியைவிட்டு வெளியேறினர்.

தமிழ்வாணனும் ஏலகிரி ராமனும் சித்தானந்தம் வெளியேறும் வரை கலைப்புவாதத்தை எதிர்த்தப் போராட்டமே முதன்மையானது என்று ஏற்றுக்கொண்டனர். சித்தானந்தம் வெளியேறிய பிறகு கலைப்புவாதத்தை எதிர்த்த போராடத்தைக் கைவிட்டதோடு  தங்களது பாலியல்சீரழிவு மற்றும் பிழைப்புவாதப் போக்குகளுக்கு சுயவிமர்சனமாக வர மறுத்து கட்சியைவிட்டு வெளியேறினர். ஆனால் வெளியேறிய பின்பு கலைப்புவாதி சித்தானந்தனுடன் கூட்டுச் சேர்ந்தனர். தமிழ்வாணனோ இந்தியாவில் நிலப் பிரபுத்துவமே இல்லை என்றும் ஆசிய உற்பத்திமுறை என்றும் கூறி தொண்டு நிறுவனங்களின் கலைப்புவாத அரசியலை முன்வைக்கிறார். ராமனோ 88-ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தின்போது 70- திட்டம் சரியா தப்பா என்று சொல்லத் தெரியாது என்று சொன்னவர். இன்று ஸ்டாலினையும் மாவோவையும் ஏற்கமுடியாது என்று கூறிக்கொண்டு திரிகிறார்.

இறுதியாக தஞ்சை குணாளன் கட்சியைவிட்டு வெளியேறி கலைப்புவாதிகளிடம் சரணடைந்துள்ளார். கலைப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் தான்தான் தளபதியாக செயல்பட்டேன் என்று உரிமை கோரினார். ஆனால் இரகசியக் கட்சி மற்றும் முழுநேர ஊழியர் கோட்பாட்டை ஏற்கமறுத்து பெயரளவுக்கு இரகசியம் பெயரளவுக்கு முழுநேர ஊழியராக இருந்து கொண்டு தமது குடும்பத்தின் நலன்களை முதன்மைப் படுத்திச் செயல்பட்டார்.  உள்ளடக்கத்தைக் கைவிட்டு வடிவத்தைக் கொண்டு கட்சி மாநாடு கூட்டுவது, கொள்கைக் கோட்பாடுகளின்றி நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே சிறப்புக்கூட்டம் கூட்டுவதன் மூலம் தலைமையைக் கைப்பற்றி கட்சியை வலது சந்தர்ப்பவாதத்திற்குள் இழுத்துச் சென்று சீரழிப்பதுடன் கலைப்புவாத ஊடுருவலுக்கும் திறந்துவிட திட்டம் போட்டார். அவரது திட்டம் நிறைவேறாததால் அமைப்பைவிட்டு வெளியேறினார். கலைப்புவாதத்தை எதிர்த்த போராட்டத்தின் தளபதி என உரிமை கோரியவர் அந்தக் கலைப்புவாதத்திற்கே பலியானார்.

இவ்வாறு கலைப்புவாதிகளும் பிழைப்புவாதிகளும் சேர்ந்துதான் கனுசன்யால் கட்சியின் தமிழ் மாநிலக் கமிட்டியை உருவாக்கியுள்ளனர். கனுசன்யால் கட்சியின் பொருளாதாரவாதம் தொழிற்சங்கவாதம் மற்றும் பாரளுமன்றவாதம் எனும் வலது  சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளும், கட்சி ஐக்கியம் பற்றிய பிரச்சினையில் கோட்பாடற்ற ஐக்கியம் போன்ற சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளும், வெளிப்படையான கட்சி என்ற கலைப்புவாத நிலைப்பாடும் இத்தகைய கலைப்புவாதிகளும் பிழைப்புவாதிகளும்  அடைக்கலம் புகுவதற்கு வசதியாக இருக்கிறது. எனவே சந்தர்ப்பவாதமாக இவர்கள் உருவாக்கியுள்ள கனுசன்யாலின் மா.லெ.கட்சி, கட்சிக்குள்ளோ கட்சிகளுக்கிடையிலோ ஒற்றுமையைக் கொண்டுவராது. மாறாக பிளவுகளையே கொண்டுவரும்.

கலைப்புவாதத்தை முறியடிப்போம்

சர்வதேசப் பொதுவுடமை இயக்க வரலாற்றைப் பரிசீலிக்கும் போது ரஷ்யா, சீனாவிலுள்ள சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டு பலம்வாய்ந்த ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைப்பதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள பலம் குன்றிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுக்களைக் கலைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தியாவில் போலி முதலாளித்துவ நாடாளுமன்றமுறை (நிறுவியிருப்பது) - ஏகாதிபத்தியத்துடனும் நிலப் பிரவத்துவத்துடனும் ஆயிரம் வழிகளில் பின்னிப் பிணைந்துள்ள (போலிப் பாராளுமன்ற முறை) நிறுவியிருப்பது திரிபுவாதமும் கலைப்புவாதமும் விரிவடைவதற்குக் கூடுதலான உதவியை வழங்கியுள்ளது. திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் புரட்சியாளர்கள் தோற்கடிக்காவிட்டால் இந்த நாட்டில் புரட்சி பல ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்படும்.

ஆயுத பலத்தோடு மக்கள் செல்வாக்குப் பெற்ற சில மா.லெ.குழுக்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ.) இன்னமும் கட்டப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. குழுக்கள் மட்டுமே நீடிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பலம்வாய்ந்த கட்சிகளையே கலைப்பதில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களைக் கலைப்பதற்கு எந்த அளவிற்குச் செயல்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ளத் தவறுகின்ற எந்த ஒரு குழுவும் கலைப்புவாதத்திற்குப் பலியாகி அழிவதைத் தவிர வேறுவழியில்லை.  எனவே கலைப்புவாதமே இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னுள்ள மாபெரும் சவாலாகும். அந்தச் சவாலை எதிர்கொண்டு நவீன திரிபுவாதத்தையும்  கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணியில் திரளுவது அனைத்து மார்க்சிய லெனினியவாதிகளின் முதன்மையான கடமையாகும்.

இப்படிக்கு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
(மார்க்சிஸ்ட்----லெனினிஸ்ட்) மக்கள்யுத்தம் - போல்ஷ்விக், 
தமிழ் மாநில குழு

குறிப்பு:
கனுசன்யால் கட்சி குறித்த இந்த விமர்சன ஆவணம், கட்சி முழுவதும் விவாதிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்று மாநிலக்குழுவின் முன்னுரையோடு வெளியிடப்படுகிறது.
___________________
முன்னுரை முற்றும்.
(தொடர்க)
நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர் (1)

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர் (2)
_____________________
நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(3)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான வரலாற்று ரீதியான காரணங்கள்.
(தொடரும்)


Thursday 19 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர் (2)


கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்
முன்னுரை-பகுதி 2
================
கலைப்பு வாதம் என்பது என்ன?

கருத்தியல் முனையில் கலைப்புவாதம் என்பது
மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகள் மீதும் -
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப்
பொருள்முதல்வாதத்தின் மீதும் - தாக்குதல் தொடுப்பதாகும்.
மார்க்சியத்தை வளப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு மார்க்சியத்தின்
அடிப்படையான சித்தாந்தங்களில் (கோட்பாடுகளில்), சிலவற்றை ஒழித்துக்கட்ட
முயல்வதும்; மார்க்சியம் குறையுள்ளதாகக் கூறி அதை நிறைவு செய்வதற்கு மார்க்சியத் தத்துவ ஞானத்துடன் ‘கான்ட்’ தத்துவஞானம் மற்றும் பிற கருத்துமுதல்வாதப் பிற்போக்கு தத்துவஞானங்களைக் கலப்பதன் மூலம் நிறைவு செய்யவேண்டும் என்றும்; மார்க்சியத் தத்துவ ஞானத்திற்கும் அதனுடன் வேறுபட்டுள்ள எதிரெதிரான தத்துவஞானத்திற்கும் இடையில் ஏதாவது ஒரு பொது உடன்பாட்டுக் கூறு ஒன்றைக் காண்பதும்; அவ்வாறு பல்வேறு எண்ண-கருத்து-முதல்வாதத் தத்துவங்களைக் கலப்பதன் மூலம் மாயாவாத
இறையியல் தத்துவத்துக்கு மார்க்சியத்தை மாற்றியமைத்துக்
கொள்வதும் ஆகிய அனைத்தும் கலைப்புவாதமாகும்.

மார்க்சியத்தின் குறையை நிறைவு செய்யும் பொருட்டு கருத்து
முதல்வாதத்தைக் கலப்பதன் அவசியத்தைக் காட்டுவதற்காக
முன்கொணரப்பட்ட எல்லாக் ‘காரணங்களும்’ அடிப்படையற்றவை
என்பதை `மார்க்சியத்தின் அடிப்படைகள்` என்ற நூலில் பிளக்கானவ் எடுத்துக்காட்டினார்.

மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகள் மீது அதாவது
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மீதும், வரலாற்றை விஞ்
ஞான ரீதியாக ஆராய்ந்து கண்ட அடிப்படையான மார்க்சிய
சித்தாந்தங்-கோட்பாடு - கள் மீதும் அவர்கள் தாக்குதல் தொடுத்ததை லெனின் கடுமையாக எதிர்த்தார். ரஷ்யாவில் 1905 புரட்சியின் தோல்விக்குப் பிறகு ரஷ்யாவில் கலைப்புவாதம் தலைதூக்கியது.

கலைப்புவாதத்தை எதிர்த்த போராட்டம் பற்றி லெனின்
பின்வருமாறு கூறுகிறார்.

கலைப்புவாதம் என்பது தத்துவ ரீதியாக ஓடுகாலித்தனத்துடன்
சம்பந்தப்பட்டது. கட்சியின் செயல் திட்டங்கள்,
தந்திரோபாயங்களைத் துறந்துவிடுவதுடன் சம்பந்தப்பட்டது.
சந்தர்ப்பவாதத்துடன் சம்பந்தப்பட்டது. கட்சி அமைப்புத்துறையில், கலைப்புவாதத்தின் சாரம் தலைமறைவு இயக்கத்தைத் துறந்துவிடுதல் - அதைக்கலைத்துவிடுதல், எப்படியாவது அதற்குப் பதிலாக சட்டப்படியாக இயங்கும் அரூபமான ஒரு குழுவை நிர்மாணித்தல்.எந்தவிலையைக் கொடுத்தாகிலும் - கட்சியின் செயல்திட்டங்கள், தந்திரோபாயங்கள், மரபுகள் ஆகியவற்றை விலையாகக் கொடுத்தாவது - வெளிப்படையான, கட்டுப்பாடற்ற முறையில் செயல்படும் ஒரு குழுவாக மாற்றியமைக்கும் ஒரு முயற்சிதான் கலைப்புவாதம். கலைப்புவாதத்தின் உள்ளார்ந்த பொருள் என்பது உழைக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்தையே அழித்தல். முதலாளித்துவ சிந்தனைகள் வாயிலாக உழைக்கும் வர்க்க சிந்தனையை அழித்துவிடுதல் ஆகும். தலைமறைவு வேலைகளை எதிர்ப்பதும், வெளிப்படையான கட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியும் பாட்டாளிவர்க்க கட்சியை சீர்குலைப்பதுமாகும்.

சமூக ஜனநாயக (பாட்டாளி வர்க்க) இயக்கங்களின் வரலாற்றுக்
காலப்போக்கில், அதுவும் முதலாளித்துவ எதிர்ப்புரட்சிக்
காலகட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் மேல் முதலாளித்துவத்
தாக்கங்களின் வெளிப்பாடாக பின்வருவன மேலோங்கி எழும் என
லெனின் கூறுகிறார்:

“சட்டவிரோதமான சமூக ஜனநாயகக் கட்சியை துறத்தல், அக்கட்சியின் பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும்
சிதைத்தல், சமூக ஜனநாயக முழக்கங்களின் அழுத்தத்தைக்
குறைக்கும் முயற்சி” ஆகியவையே கலைப்புவாதத்திற்கும்,
அதனால் கட்சியில் தோன்றும் நெருக்கடிகளுக்குமான முக்கிய
காரணங்களாகும் என்கிறார் லெனின்.

இதற்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் உறுதியற்ற ஊசலாடும்
தன்மையுடைய அறிவு ஜீவிகளும், குட்டி முதலாளித்துவ சக்திகளும்
ஆவர். இந்தச் சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி விரைவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உழைக்கும் வர்க்க இயக்கத்தில் சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் இவர்களால் எதிர்ப்புரட்சிக் காலக்கட்டத்தைக் ‘தாங்கிக்’ கொள்ள முடிவதில்லை.

இந்த மாதிரியான நபர்களின் உறுதியற்ற தன்மை சித்தாந்த
ரீதியிலும், செயல்தந்திர ரீதியிலும் கட்சி அமைப்புக்குள்ளும்
வெளிப்படுகின்றன. இயல்பாகவே தலைமறைவுச் செயல்களை
எதிர்ப்பது என்பது புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்ப்பது என்று
பொருள்படும். இவர்கள் (தரகு) முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவச்
சர்வாதிகார ஆட்சி அமைப்பின் கீழ் சீர்திருத்தங்கள் செய்துவிட
முடியும் என்ற கேடுகெட்ட கருத்துடையவர்கள்.

நம்முடைய செயல்தந்திரங்கள் வேறானவை. நாம் ஒவ்வொரு
சீர்திருத்தத்தையும், ஒவ்வொரு சட்டப்பூர்வ அமைப்பையும்
உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் அவற்றை மக்களிடையே
புரட்சிகர உணர்வுகளைப் பரப்பவும் புரட்சிகரப் போராட்டத்தை
நடத்தவும் உபயோகிக்கிறோம். இதுவரையில் அரசியல் சுதந்திரம்
என்பதையே அறியாத ஒரு நாட்டில் இந்த நடைமுறை நமக்கு
நேரடியான முக்கியத்துவம் உடையதாகும். மார்க்சியவாதிகள்,
கலைப்புவாதம் என்பது தொழிலாளிகளிடையே முதலாளித்துவத்
தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே என்பதை உழைக்கும்
வர்க்கத்துக்கு உணர்த்துவார்கள்.

கலைப்புவாதம் பற்றிய மேற்கண்ட மார்க்சிய லெனினிய
வரையறைகளிலிருந்து கலைப்புவாதப் போக்குகளை பின்வருமாறு
தொகுத்துக் கூறலாம்.

1) தத்துவத் துறையில் கலைப்புவாதம்: 

மார்க்சிய லெனினியதத்துவத்தைச் செழுமைப் படுத்துவது அல்லது மார்க்சியத்தின் போதாக்குறயை இட்டு நிரப்புவது எனும் பேரில், இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும் பதிலாக எண்ண-கருத்து முதல்வாதத்தை முன்வைப்பது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களை - எண்ணமுதல்வாதக் கருத்துக்களை மார்க்சியத்துடன் கலப்பது. மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் என்று பேசி மார்க்சியத்தின் ஆன்மாவை அழிப்பது.

2) திட்டத்துறையில் கலைப்புவாதம்: 

அரசியல் துறையில், ஏகாதிபத்தியம் - பாட்டளிவர்க்க புரட்சிகர சகாப்தம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் பொருந்தாது என்று கூறி அதீத ஏகாதிபத்தியம் என்ற காவுத்ஸ்கி நிலைபாட்டை முன்வைப்பது. ஏகாதிபத்தியங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. உலக மறுபங்கீட்டீற்கான போர் இல்லை என்று கூறி திட்டத்தையும் போர்த்தந்திரங்களையும் துறப்பது. பாட்டாளிவர்க்க இயக்கத்தின் குறிக்கோள்களைச் சீர்குலைப்பது.

3) செயல் தந்திரத்துறையில் கலைப்பு வாதம்: 

இலக்கு அற்ற தன்னியல்பு செயல் தந்திரத்தை முன் வைப்பது. ஒரு புரட்சியின் கட்டம் முழுவதும் பொதுத் திட்டம் மாறாமல் இருக்கும்போதே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மாறும்போது சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பான திட்டத்தை முன்வைத்து மக்களைத் திரட்ட மறுப்பது. அத்துடன் இந்தியா போன்ற அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டில், ஏற்றத்தாழ்வான சமூகப் பொருளாதாரம் நிலவுகின்ற ஒரு நாட்டில், புரட்சிகர சூழ்நிலைமைகளும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கும் எனவே இது போன்ற நாடுகளில், முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியது போன்ற செயல்தந்திரத்தைச் செயல்படுத்த முடியாது என்பதை மறுப்பது.
மாறாக நாடாளுமன்ற வழி முறைகள் மூலமே மாற்றம் கொண்டு
வந்துவிடமுடியும் என்ற நாடாளுமன்றவாதத்தை முன்வைத்து
கட்சியை நடாளுமன்றவாதக் கட்சியாக மாற்றிவிடுவது.

4) அமைப்புத்துறையில் கலைப்புவாதம்:

அமைப்புத்துறையில் கலைப்புவாதத்தின் சாரம் கட்சிக்குள் இருவழிப் போராட்டம், ஜனநாயக மத்தியத்துவத்தை மறுப்பது; தலைமறைவுக் கட்சியைத் துறந்துவிடுதல் - அதைக் கலைத்துவிடுதல். எப்படியாவது அதற்குப் பதிலாக சட்டப்படியாக இயங்கும் அரூபமான ஒரு குழுவை நிர்மாணித்தல். அதாவது கம்யூனிஸ்டுக் கட்சியை ஒரு வெளிப்படையான முதலாளித்துவக் கட்சியாக மாற்றிவிடுதல். இவை அனைத்தும் கலைப்புவாதமே ஆகும்.

இன்றைய கலைப்புவாதம் என்பது கோர்பச்சேவ் கலைப்பு
வாதத்துடன் சம்பந்தப் பட்டதாகும். பிற்போக்குத் தாக்குதல்கள்,
நெருக்கடிகள் மற்றும் பின்னடைவுக் காலங்களில் திரிபுவாதம்
மற்றும் கலைப்புவாதப் போக்குகள் தலைதூக்குகிறது என்றார்
லெனின். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு சோவியத்
ரஷ்யாவில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பயன்படுத்திக்
கொண்டு ஸ்டாலினின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது
என்ற பேரில் குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ மீட்சியைக்
கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் கோர்பச்சேவ் கும்பல் கலைப்புவாதத்தைக் கொண்டுவந்தது.
___
குருச்சேவின் திருத்தல்வாதமும்
கோர்பச்சேவின் கலைப்புவாதமும்
(தொடர்க)

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்(1)

Saturday 14 September 2019

நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்-சமரன் தொடர்

கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்
முன்னுரை-பகுதி1
===============
மது அமைப்பு கலைப்புவாதப் போக்குகளின் காரணமாக கடந்த 20
ஆண்டுகளில் நான்கு பிளவுகளைச் சந்தித்துள்ளது. இவ்வாறு எமது அமைப்பிலும் பிற மா.லெ.புரட்சிகர அமைப்புகளிலும் கலைப்புவாதம்
தோன்றுவது என்பது ஒரு தனித்த நிகழ்வு அல்ல. சர்வதேசிய அளவில்
கோர்ப்பச்சேவ் துவக்கி வைத்த கலைப்புவாதப் போக்கு ஏற்படுத்திய உலகுதழுவிய நிகழ்வுப் போக்கின் ஒரு பகுதியேயாகும். கலைப்புவாதப்
போக்குகளால் அமைப்பு பிளவுபடுவது என்பது எமது அமைப்புக்கு மட்டுமே உரியதல்ல.இது ஒரு உலகு தழுவிய போக்காகும்.

பிற்போக்குத் தாக்குதல், நெருக்கடிகள், பின்னடைவுக் காலங்களில்
திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதப் போக்குகள் தோன்றுகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உலகக் கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளன. இன்று உலகு தழுவிய (world wide) எதிர்ப் புரட்சி மீண்டும் ஒரு முறை உலகெங்கும் கம்யூனிஸ்டு இயக்கத்தில், திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதம் தோன்றுவதற்கான செழுமையான விளை நிலத்தை (fertile land) வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த காலத்தில் புரட்சியாளர்களாக இருந்தவர்கள் பலர் உலகெங்கும் நிகழ்வதைப் போலவே - நமது நாட்டிலும் குட்டி முதலாளித்துவச் சிந்தனையாளர்களாக இருந்தவர்கள் - இன்று
திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதத்தை வழிபடுவோர்களாக -
தொழுவோர்களாக மாறியுள்ளனர். புரட்சிகரமான கம்யூனிஸ்டு
கட்சிகளைவிட்டு வெளியேறுகின்றனர். அவ்வாறு வெளியேறுவதால் அமைப்பு கலைந்து போவதைக்காட்டி அமைப்புத் தலைமைதான் கலைப்புவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே எமது அமைப்பிற்குள் தோன்றியுள்ள கலைப்புவாதப் போக்குகளை ஆய்வு செய்வதற்கு முன்னால் கலைப்புவாதம் என்றால் என்ன, கலைப்புவாதம் பற்றி மார்க்சியம் லெனினியம் பொதுவாக எவ்வாறு வரையறை செய்கிறது என்பதையும், குறிப்பாக இன்றைய கட்டத்தில் கோர்ப்பச்சேவ் கலைப்புவாதம் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.

அதுவே எமது அமைப்பிற்குள் தோன்றிய கலைப்புவாதம் பற்றி ஆய்வு செய்வதற்கும், அது குறித்த தெளிவு பெறுவதற்குமான தத்துவ அடிப்படையாக அமையும்.
___
தொடர்ச்சிகளுக்கு:

கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான
முயற்சிகளும் பிளவுகளும்


நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்துப் போராட ஓரணி திரள்வோம்!
சமரன் தொடர்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


Thursday 12 September 2019

2019 தியாகிகள் நாள் கழகக் காட்சிகள்

செப்டம்பர் 12
இந்திய விடுதலைப் புரட்சித் தியாகிகள் தினம்.


நக்சல்பாரிப் போராளி, மார்க்சிய லெனினிய போல்சுவிக் புரட்சியாளர், கம்யூனிச ஆசான்,கழகத் தலைவர் தோழர் ஏ.எம்.கே.நாமம் நீடூழி வாழ்க!







வீடியோக் காட்சிகள்

























திடல் நோக்கிய ஊர்வலம்


ஓடுகாலிகளை அம்பலப்படுத்தி, தோழர் ஏ.எம்.கே வழி நடக்க சபதமேற்ற தோழர் சோமு, தோழர் ரணதீபன் அவர்களின் உரை


தோழர் சேல் முருகன் மோடிப் பாசிச எதிர்ப்புரை 


விடுதலைத் தியாகிகள் வீர வணக்கப் பாடல்


அப்பு பாலன் சிலைக்கு மலர் மாலை அணிவிப்பும் வீர வணக்க முழக்கமும்.


மக்கள் கலைமன்ற பண்பாட்டு பறை

Monday 2 September 2019

தியாகிகள் நினைவு நாள்- மலர் மாலை அணிவிப்பும், அரங்கக் கூட்டமும்.

செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

ஏகாதிபத்திய நிதிமூலதன நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

அப்பு-பாலன் சிலைக்கு மாலை அணிவித்தல்

தருமபுரி, நாயக்கன்கொட்டாய், மதியம் 2 மணி
தலைமை : தோழர் மாயக்கண்ணன்
ம.ஜ.இ.க., தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்
கொடியேற்றுதல்: தோழர் சோமு
ம.ஜ.இ.க., சேலம்-நாமக்கல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்
சிறப்புரை: தோழர் குணாளன், 
ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்

அரங்கக் கூட்டம்

RK திருமண மண்டபம், வார சந்தை அருகில், தருமபுரி,
மாலை 4 மணி
தலைமை : தோழர் முருகன், ம.ஜ.இ.க., பென்னாகரம்

சிறப்புரை:

தோழர் சோமு, ம.ஜ.இ.க., சேலம்-நாமக்கல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்
தோழர் குணாளன், ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்
தோழர் சின்னவன், ம.ஜ.இ.க., பாலக்கோடு
தோழர் ரணதீபன், ம.ஜ.இ.க., தஞ்சை மாவட்ட அமைப்பாளர்
தோழர் ஆறுமுகம், ம.ஜ.இ.க., ஈரோடு
தோழர் சசிகுமார், ம.ஜ.இ.க., கடலூர்-விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்
தோழர் பூபதி, ம.ஜ.இ.க., கோவை,
தோழர் சேல் முருகன், வழக்கறிஞர், ம.ஜ.இ.க., சென்னை
தோழர் தங்கமணி, பாப்பாநாடு, தஞ்சை மாவட்டம்

நன்றியுரை: 
தோழர் மாதையன், தருமபுரி.

                           மக்கள் கலைமன்ற கலை நிகழ்ச்சி நடைபெறும்

தியாகிகள் நினைவு நாள் முழக்கங்கள்!
  • ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பனிப்போரால் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியின் விளைவே பாசிசம்!
  • ஏகாதிபத்திய நிதிமூலதன நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
  • நாட்டை அந்நிய நிதிமூலதனத்திற்கு திறந்துவிட்டதன் எதிர்விளைவே…மோட்டார் வாகன தொழிற்துறை வீழ்ச்சி!  
  • ஆலைமூடல்! ஆட்குறைப்பு!!       தலைவிரித்தாடும் வேலையின்மை!
  • ஏகாதிபத்திய நலனுக்காக காஷ்மீர் உள்ளிட்ட தேசிய இனங்கள் துண்டாடப்படுவதை எதிர்ப்போம்! தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
  • என்.ஐ.ஏ., உபா, தேசிய பாதுகாப்புச் சட்டம், இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டங்கள் உள்ளிட்ட பாசிச அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
  • குருகுலக் கல்வி மற்றும் மெக்காலே கல்வியின் ஒருங்கிணைந்த அழுகிய புதிய காலனிய வடிவமான தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!
  • சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி, மதவெறி பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவோம்!
  • வேளாண் நெருக்கடிக்கும், விவசாயிகளின் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!
  • மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மீது தாக்குதல் நடத்தும் எதிர்புரட்சிகர, கலைப்புவாத டிராட்ஸ்கியத்தை முறியடிக்க புரட்சிகர சக்திகள் ஒன்றுபட்டு போராடுவோம்!
  • மீளவே முடியாத நெருக்கடியில் செத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவோம்! சோசலிசத்தை படைப்போம்!!


அனைவரும் வருக!                                                  ஆதரவு தருக!!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு