Thursday 25 April 2013

சமரன்: 2013 மே நாள் சூளுரை


 
மே நாளில் சூளுரைப்போம்!
 
அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் யுத்தவெறிக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
 
நாடுகளின் விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!

அமெரிக்காவின் ‘ஆசிய பசிபிக் நூற்றாண்டுத் திட்டத்தை’ எதிர்ப்போம்!
 
ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!

இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும், தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
 
தாய்மொழி, தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

தமிழர் நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!

புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

சாதிவாத அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!

அந்நிய மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப் போராடுவோம்!

தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!

உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு


மே 1, 2013

No comments:

Post a Comment